Milton@Milton_Off
சுத்த அரை வேக்காட்டு தனமான அறிவிப்பு…!
அமைச்சர், முதலமைச்சர் என பெரிய புள்ளிகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை என வந்தால், சிகிச்சைக்கு வரும் எளிய மக்கள் எவ்வளவு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடும் தெரியுமா?
Metal Detector வரும், பொருட்கள் Complete Scanning செய்யப்படும், முடியாதவருக்கு ஆப்பிள் வெட்டிக் கொடுக்க 5ரூபாய் கத்தி வச்சு இருந்தாக்கூட பறிக்கப்படும்.
யார் யார் உள்ளே வரணும், என்ன எடுத்துட்டு வரணும், எத்தனை பேர் வரணும், என்ன கலர் சட்டை போட்டு உள்ளே வரணும் என எல்லாம் சோதிக்கப்படும்.
இதெல்லாம் கூட “பாதுகாப்பு காரணங்களுக்காக தான்” என புரிந்து கொள்வோம். அவர்களுக்கு அது அவசியமும் கூட, அதை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை.
ஒரு நாளில் பல ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கும் ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள
மருத்துவர்கள் செவிலியர்கள் என மொத்த இயந்திரமும் எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாவார்கள் தெரியுமா?
இந்த சம நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவிக்காகவும், உடனடி அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கும் சாமியனுக்கு என்ன நடக்கும்? எதார்த்தத்தை பேசுங்கள்.
தவெக விவகாரத்தில் இன்னும் நிறைய Practical சிக்கல்கள் வரும்,
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக MLAகள் என்ன கம்யூனிஸ்ட் லீடர்களா?! சிகிச்சையை மட்டும் பெற்றுக்கொண்டு கிளம்ப….?
இவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கே சாலையை மறித்து போக்குவரத்து விதிகளை மீறி Traffic jam ஆக்கி, கூட்டம் கூட்டி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி Public Nuisance செய்தவர்கள். (தலைவரே கூட்டம் கூடுன பிறகு தான் வண்டிக்கு மேலயே ஏறுவாரு)
இவர்கள் வந்து அறுவை சிகிச்சை என படுத்தால், GH எப்படி இருக்கும்? என்ன ஆகும்?
“தெய்வத்துக்கு மனிதன் வைத்தியம் பார்ப்பதா?!” என 100 பேரை இவர்களே வாசலில் திரட்டி நிற்க வைத்து முழக்கமிடுவார்கள்.
இதற்கிடையில் ஆப்பரேசன் தியேட்டருக்குள் தவெக மருத்துவர் அணியின் 50 பேர் ஆய்வு செய்ய வருவார்கள். “முகமூடி அணிந்து கத்தியோடு சிலர் உள்ளே நிற்பதாக” வெளியே வந்து பேட்டி அளிப்பார்கள்.
ஆக புரட்சிகர தவெக தலைவர்களே உங்களுக்கு எங்கு விருப்பமோ, எங்கு வசதியோ, அங்கே சென்று ஒரு Floorஐ மொத்தமாக கைப்பற்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். எந்த தவறும் இல்லை. எளியவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.