Senthilkumar SK retweetledi

அம்மாவின் திண்ணை! நவீனம் தேவை எடப்பாடியாரே!
தோற்றதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா உண்மை என்ன தெரியுமா? ட்விட்டர்ல ஆயிரம் புருடாக்கள் விடுறதும், 'ஐடி விங் சரியில்லை'னு புலம்புறதும் தான் இன்னைக்கு நம்ம அரசியலா போச்சு. புரட்சித் தலைவர், அம்மா காலத்து 'திண்ணை அரசியல்' காணாமல் போயிருச்சுனு நினைக்கிறீங்களா?
அந்த திண்ணை அரசியல் அழியல; அது இன்னைக்கு ஒவ்வொரு வீட்டோட பாத்ரூம் வரைக்கும் நுழைஞ்சிருச்சு. நான் போட்டுருக்கிற இந்த போஸ்ட எத்தனை பேர் டாய்லட்ல உக்காந்து பாத்திருப்பீங்க.
அதுக்கு நீங்க இன்ஸ்டா, ட்விட்டர், சோசியல் மீடியான்னு என்ன பேரு வேணா வச்சுக்கங்க. அன்னைக்கு ஊர் பெருசுங்க டீக்கடையிலயும் தெருக்கோடியிலயும் பேசுன 'தெரு அரசியல்' தான் அன்னைக்கு அதிமுகவோட அஸ்திவாரம்! அச்சம்புதுர் முக்கு கடையிலையும், தென்காசி தேவர் கடையிலும் பேசாத அரசியலா இந்த டுவிட்டர்/ இன்ஸ்டா பசங்க பேசிட போறாங்க.
அன்னைக்கு மாவட்ட செயலாளரை எப்ப வேணா கூப்பிடலாம்னு இருந்தது 2010 அரசியல். இன்னைக்கு இருக்குறவனுங்க பூத் கமிட்டில யாரு இருக்கான்னே தெரியாம, 'மினி பண்ணையார்' மாதிரி சுத்துனா எவன் திண்ணை அரசியல் பேசுவான்? இன்னைக்கு இன்னோவா காரை விட்டும், பவுன்சர்களை தாண்டியும் சாமானியன் வர முடியுறதில்ல!
ஆனா விஜய் இத ரொம்ப சிம்பிளா செஞ்சிருக்காரு. திண்ணையையும் தெருவையும் ஒன்னாக்கிட்டாரு. தவெக தென்காசி மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷோட ஆபீஸ் அவரோட இரும்பு கடையில நடக்குது. பாவூர்சத்திரம் டீக்கடையில சாதாரணமா உட்கார்ந்து டீ குடிக்கிறாரு. அங்க ஈகோ இல்ல, இடைத்தரகர்கள் இல்ல
தலைமையில இருக்குற ஜெகதீஷ்ல இருந்து அடிமட்ட பூத் லெவல் தொண்டன் வரைக்கும் நேரடி காண்டாக்ட் இருக்கு. எம்ஜிஆரும் அம்மாவும் அன்னைக்கு செஞ்ச அதே 'மக்களோடு மக்கள்' அரசியலை தான் விஜய் இன்னைக்கு மாடர்னா கையில் எடுத்திருக்காரு. நாம நம்ம வழிமுறைகளை மாத்திக்கலனா... ஆபத்து நமக்கு தான்!
@AIADMKITWINGOFL
@AIADMKOfficial
@EPSTamilNadu
தமிழ்






























