𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️
20.6K posts

𝒮𝓉𝒶𝓁𝒾𝓃𝑨𝑵𝑻𝑶𝑵𝒀ᴰᴹᴷ🖤❤️
@martiin_DMK
திமுக தகவல் தொழில்நுட்ப அணி/ Civil Engineer/Belongs to the Dravidian Stock/Member of DMK🌅🖤❤️/Suriya Fan💎🖤






தோழர்களுக்கு வணக்கம், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் தமிழ் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அமைப்பாகத் திரட்டி, அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் அண்ணன் எழுச்சித்தமிழர். புரட்சியாளர் அம்பேத்கரின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு, சாதி வெறி மற்றும் மத வெறி சக்திகளை அடையாளம் கண்டு அவர்களைச் சமரசமின்றி எதிர்ப்பதில் இந்திய அரசியல் களத்திலேயே அவருக்கு நிகர் யாருமில்லை என்றுதான் நான் முழுமையாக நம்பினேன். என்ன நெருக்கடி வந்த போதிலும், பதவிகளோ பரிசுகளோ ஆசை காட்டப்பட்ட போதும், ஏற்றுக் கொண்ட கொள்கையில் மலை போல் உறுதியாக இருப்பார் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே லட்சோப லட்சம் சிறுத்தைகளைப்போல் நானும் அவரை எனது தார்மீக தலைவராக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிவகுத்தேன். கடந்த 2007-ஆம் ஆண்டு முதன்முதலில் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு அறிமுகமானேன். அப்போதிருந்து எனது அரசியல் பயணம் அண்ணனோடு தொடங்கியது. வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருந்த 5000-க்கும் மேற்பட்ட தம்பிமார்களை ஒருங்கிணைத்து, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தேன். இயக்கத்தில் நான் ஆற்றிய பணியை அங்கீகரித்து, 2009-ஆம் ஆண்டு ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் துணை செயலாளர் பொறுப்பை அண்ணன் அவர்கள் எனக்கு வழங்கினார்; அந்தப் பணியைத் திறம்படச் செய்தேன். ஊடகங்கள் நமது இயக்கத்தையும், நமது தலைவரின் குரலையும் இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டப் பார்த்தபோது, இதனை எதிர்கொள்ள இயக்கத்திற்கென்று ஒரு தனி ஊடகம் உருவாக வேண்டும் என்ற சிந்தனை உருவானது. அப்போது, ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியை நிறுவும் முக்கியப் பொறுப்பைத் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று, அதன் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து, அனைத்து ஒளிபரப்புத் தளங்களிலும் அது தடையின்றி வெளிவரச் செய்து, வெளிச்சம் தொலைக்காட்சியைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தேன். இதனை தொடர்ந்து 2016-ல் ‘ஊடகப் பிரிவின்’ முதன்மைச் செயலாளர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது; அதிலும் சிறப்பாகப் பணியாற்றினேன். அதன் தொடர்ச்சியாக, 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. நான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்திலும், எனது செய்யூர் தொகுதியிலும் மக்கள் பணிகளைத் திறம்படச் செய்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டமன்றத்திலும் தொகுதியிலும் நான் நிறைவேற்றிய எண்ணற்ற மக்கள் பணிகளில், வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில முக்கியச் சாதனைகளை மட்டும் இங்கே நினைவுகூர விரும்புகிறேன். சட்டமன்றத்தில், ஆதி திராவிடர் மக்களின் உரிமைக்காக நமது இயக்கத்தின் சார்பாக நான் முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகள் செயல்வடிவம் பெற்றுள்ளன. பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரன் அவர்களுக்கு மணிமண்டபம், ஆதி திராவிடர் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிய அடையாளங்களை நீக்கியது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம், அய்யா பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் மற்றும் சர்வதேச தரத்தில் எம்.சி. ராஜா மாணவர் விடுதி புதிய கட்டிடம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எமது இக்கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து, அவற்றை அரசாணைகளாக மாற்றித் தந்த மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். @nakkheeranweb @ThanthiTV @polimernews @sathiyamnews @bbctamil @news7tamil @NewsTamilTV24x7 @NewsJTamil @News18TamilNadu @vikatantv


















