ஒரு தமிழன் தனித்து கட்சி தொடங்கி முன்னிலை பெறுவது அசாத்தியமானது...
வாழ்த்துக்கள் திரு விஜய்!
தமிழர்களின் நலன் கருதி திராவிட சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தமிழனாக நின்று அறத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
திமுகவின் அழிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பலமுறை உள்ளத் தூய்மையுடன் நான் கொடுத்த தமிழ்த் தேசிய வெற்றிக்கான பரிந்துரைகளை அரசியல் வியூகங்களாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததோடு, நான் விலை போய் விட்டேன் என்று என்னை இழிவாக விமர்சித்த சில புரிதலற்ற தம்பிகளே நான் கூறிய வழிகாட்டலை இம்முறை பின்பற்றியிருந்தால், நீங்கள் அதிகாரத்தில், மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்கள்.
எப்படியோ தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை, சிறிதளவு மனநிறைவை தருகிறது.
ஆணவமும் அகம்பாவமும் தமிழருக்கு என்றும் நன்மை தராது என்பதை இம்முறை அனைவரும் உணர வேண்டும்!