பழனிசாமி அவர்களே, குலத்தொழிலை ஊக்குவிக்கலாமா?
'விஸ்வகர்மா' திட்டத்தின் நோக்கமே ஜாதி ரீதியான குலத்தொழில் முறையும், ஜாதிய அமைப்பும் தொடர வேண்டுமென்பதுதான்; அதனை நிறைவேற்றுகிறேன் என்கிறார் பழனிசாமி.
பா.ஜ.க.வின் அடிமையாக இருந்து தற்போது ஆர்.எஸ்.எஸ்.காரராக மாறியிருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்.
மேலும், குடும்பத் தொழில், குலத் தொழில் அடிப்படையில் அல்லாமல், சமூகநீதியோடு 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் அரசு ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கும் பழனிசாமியை தமிழ்நாட்டு மக்கள் என்றும் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு அவரின் தொடர் தோல்விகளே சான்று!
அந்த தோல்வி இந்த முறையும் தொடரும்! 🔥