
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து சாதி பெயர்களை நீக்கும் அரசாணை வெளியிட்டதற்காக நன்றி கூறினோம். சில சாதிகளின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கிவிட்டு 'ர்' சேர்க்க வலியுறுத்தினோம். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.















