

Mask of Zorro TN
16.7K posts











அதே அதிகாரிகள் தான் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சவுக்கு சொல்றாரே..அதிகாரிகள் 2sideum play பண்றாங்க பாருங்க.






நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @TNHealthDept @Chief_Secy_TN @CmcellTamilNadu
