Gowrishankar | We the leaders | follow back u retweetet

1970-ல் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என, சாதி, மதங்களைக் கடந்து தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று அத்தியாயம்.
அந்தப் போராட்டத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த மூன்று விவசாய தியாகிகளுக்கும் எங்களது வீரவணக்கங்கள்.
விவசாயிகளின் ஒற்றுமைக்கு அடையாளமான அவர்களின் தியாகம் வீணாகாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
பெருமாநல்லூரில் இன்று (19.06.2026) நடைபெற்ற விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை வரவேற்று, அதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாயிகளின் வளமே நாட்டின் பலம்.
தமிழ்
















