விஜய் திராவிட ஆலமரத்தின் ரெண்டு மூணு எலய புடுங்குவார்னு நெனச்சாங்க .
மொத்த மரத்தயும் வேரோட புடுங்கி , சுத்தி வீசிட்டு இருக்காப்ல !
எவனும் யோசிக்காத தேர்தல் இந்த தேர்தல் !
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்.
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம்.
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கை வழியில் சமரசமில்லாமல் பயணிப்போம்.
#ambedkar
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளிப் பரவி வருகிறது. மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் வினோத், பரப்புரைக் கூட்டத்தில் விஜய் பேசும் வீடியோவை ஹலோகிராம் மூலம் தனக்கு அருகில் நின்று விஜய் பேசுவதுபோல் ஏற்பாடு செய்து வித்தியாசமான முறையில் பரப்புரை
#Kumbakonam | #TVK | #Vijay | #ElectionWithPT
Perambur - let me be the first one to announce .
Annan @actorvijay winning the seat with minimum 25,000 vote margin !
Numbers from a reputed survey team !
#TVK
என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தலைவருக்காகவும்,
கட்சிக்காகவும் உண்மையாக உழைப்பதே என் கடமை.
தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு கடுமையாக உழைப்பதையே என் முதற் பணியாக கருதுகிறேன்.
என் வெற்றியை விட தலைவரின் வெற்றியும், கட்சியின் வெற்றியும் மிக மிக முக்கியம். நம்மை நம்பி வரும் அண்ணன் விஜய் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்காமல் யார் இருக்க போகிறார்கள். யார் எங்கு சென்றாலும் கவலை வேண்டாம். நாம் அண்ணனுடன் இருக்கிறோம் என்று பெருமையாக களப் பணி செய்வோம்.
அந்த பணியை என்னால் முடிந்த வரையில் செய்து வருகிறேன்.
என்றும் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். அவர் கையை
இறுகப் பற்றிக்கொண்டு நடப்பேன்.
விட்டு போவதற்கு நான் சுயநலவாதி இல்லை.விட்டுக்கொடுக்காமல் இருக்கும் அண்ணனின் கோடி தம்பிகளில் நானும் ஒருவன்.
தயவு செய்து யாருடனும் என்னை ஒப்பிட வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.