agarathi ☭

3K posts

agarathi ☭ banner
agarathi ☭

agarathi ☭

@hello_agarathi

As a storyteller called a agarathi(dictionary), my job is to bring the writings of Tamil writers to people in some way!!

Tirunelveli شامل ہوئے Aralık 2023
619 فالونگ101 فالوورز
agarathi ☭ ری ٹویٹ کیا
Pragash Nandhan ⭐
Pragash Nandhan ⭐@PragashNandhan·
நேரடியாகவே RSS பெற்றெடுத்த இந்த மூன்று பிள்ளைகளுக்கும் பிரச்சாரம் போறோம்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கும் சந்தனபிரியா பாண்டியனுக்கும் பிரச்சாரம் பண்ணா என்ன தப்பு! எந்த கூட்டணியோ கட்சியோ என்பது எனக்கு முக்கியமில்லை என் சமூக நலனே எனக்கு முக்கியம் 💙 கடைசியா அந்த Discovery சேனல் 🤣🔥
தமிழ்
8
31
113
3.8K
agarathi ☭ ری ٹویٹ کیا
young communist
young communist@YoungcommunistT·
ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப் போகிறோமா? மோடி அரசின் சர்வதிரகார நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! தோழர் உமர் காலித் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்! 1/2 #UmarKhalid #FreeUmarKhalid #RepealUAPA
young communist tweet media
தமிழ்
2
11
20
213
agarathi ☭ ری ٹویٹ کیا
Ravi Parmar
Ravi Parmar@raviparmarIN·
If you want to build a successful business in India, you don’t need investment. you just need to know how to fool people. 🔥🔥🔥
English
58
321
897
20.4K
agarathi ☭ ری ٹویٹ کیا
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
மதூர் சத்யா மீது பாலியல் குற்றச்சாட்டு வந்த போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கியது மட்டுமின்றி கட்சியே காவல்துறையில் புகார் செய்து கைதும் செய்யப்பட்டான்.. ஆனால்‌பாஜக தலைவர் கரு நாகராஜன் மீதான பாலியலா பூகாரை பிரதமருக்கே அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜக கட்சிக்கு பெண்கள் ஒரு பாலியல் பொருள் மட்டுமே.
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet media
தமிழ்
43
502
1K
29K
agarathi ☭ ری ٹویٹ کیا
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்… பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை….. வாழ்க்கையில் அன்றுவரை மீனை சுவைத்தறியாத ஒரு நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர்களுக்குத் தெரியாது…! பொக்கனின் குடிசையில் பெரும்பாலும் மீன்கறி தான் இருக்கும்…சிலவேளைகளில் கருவாட்டுக் குழம்பு இருக்கும்… தோழர்.இ.எம்.எஸ் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கிய முதல்நாள் சோறும் மீன்கறியும் அவருக்கு பொக்கனின் குடும்பத்தினர் உணவாகக் கொடுத்தார்கள்… இ.எம்.எஸ் எந்த தயக்கமும் காட்டவில்லை…ரொம்பகாலம் பழகிய ஒருவரைப் போல மீன்கறியுடன் உணவு உண்டார்… சிலநாட்கள் கழித்து…. இ.எம்.எஸ் பிறப்பால் நம்பூதிரி என்று அறிந்த பொக்கனும் அவரது மனைவியும் மிகவும் வருத்தப்பட்டார்கள்….தாங்கள் பெரிய தவறிழைத்து விட்டதாகவே கருதினார்கள்… குற்றவுணர்வு மேலிட, இ.எம்.எஸ்-சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்கள்… எனினும், மெதுவாக தயங்கித் தயங்கி பொக்கன் இ.எம்.எஸ்-ன் முன்னால் குற்றமிழைத்தவரின் உணர்வுடன் தலையைக் குனிந்தவாறு நின்றார்… “என்ன விஷயம் பொக்கன் அண்ணா…?” என்று வயதில் பெரியவரான பொக்கனிடம் இ.எம்.எஸ் வினவினார்…! அவருக்கு மீன் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார்…”நீங்கள் ஒரு நம்பூதிரி என்று தெரியாமல் நடந்து விட்டது” என்று விளக்கமளித்து இ.எம்.எஸ்.-சை குற்றவுணர்வுடன் ஏறிட்டு பார்த்தார்… மென்மையாக புன்னகை புரிந்த இ.எம்.எஸ், “மீன்கறி மிகவும் சுவையாக இருந்தது. எனக்கு மீன்கறி ரொம்ப பிடித்திருக்கிறது. இனி அடிக்கடி மீன்கறி சமைத்துத் தாருங்கள்…” என்றார். பொக்கனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை…தான் பெரிய தவறிழைத்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இ.எம்.எஸ் இப்படி ஒரு பதிலைக் கூறுவார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை… பொக்கன் இ.எம்.எஸ்-க்கு மீன்கறி மட்டுமல்லாது வேறு என்ன உணவளித்தாலும் அதை அன்புடன் மிகுந்த சிரத்தை எடுத்து வழங்கி வந்தார்… மிகுந்த ஏழ்மையிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் தனக்கு சிரத்தையுடன் உணவளிக்கும் பொக்கனின் குடும்பத்தினரின் அன்பில் தோழர். இ.எம்.எஸ் நெகிழ்ந்து போனார்…அவர்கள் தரும் உணவை மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டார்… ஏனெனில் பொக்கன் தரும் உணவிற்கெல்லாம் உண்மையான கள்ளங்கபடமற்ற மனித அன்பின் சுவை இருப்பதாக இ.எம்.எஸ் கூறி தனது அன்பை வெளிபடுத்துவார்… இவ்வாறு இரண்டு வருடங்கள் அங்கேயே தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்தது… இதற்கிடையே வேறொரு சம்பவம் நடந்தது… ஒருநாள் பொக்கனின் மகன் குஞ்ஞிராமன் மாத்ருபூமி மலையாளப் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார்…. பத்திரிகையில் ஒரு விளம்பரம்… 100 ரூபாய் வெகுமதி…என்ற தலைப்பில்…… இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்படி கீழே குறிப்பிட்ட நபரை கைது செய்ய காவல்துறைக்கு தகவல் தருபவர்களுக்கு 100 ரூபாய் சன்மானமாக வழங்கபடும்… அவரது பெயர்…ஏலங்குளம் மனைககல் சங்கரன் நம்பூதிரிப்பாடு என்று குறிப்பிட்டு படமும் வெளியிடப்பட்டிருந்தது…. அதன் பிறகு இந்த விளம்பரம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது…. சன்மானத்தொகை 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரித்தது….அன்றைய 1000 என்பது இன்றைய கோடியையும் தாண்டும் பெரிய தொகையாகும்… பொக்கனும் குஞ்ஞிராமனும் பயத்தில் இ.எம்.எஸ்-ன் முன்னாள் வந்து நின்றார்கள்…”தோழர்..! பத்திரிகை விளம்பரத்தை பார்த்தீர்களா?” “பார்த்தேன்…உங்களுக்கு என்ன தோன்றுகிறது…? இப்போது என்னைப்பற்றிய தகவல் கொடுத்தால் 1000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்” என்று சிரித்தவாறே கூறினார்… ஐயோ தோழர்…இப்படியொன்றும் சொல்லாதீர்கள் தோழர்…ஆயிரமல்ல லட்சம் கொடுத்தாலும் பொக்கனின் மனது மாறாது…நான் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்..”என்று பொக்கன் பதறினார்… ஏழ்மையுடன் பிறந்து, ஒவ்வொரு நாளும் வறுமையுடன் போராடிகொண்டிருக்கும் பொக்கன் அவ்வாறு கூறியபோது இ.எம்.எஸ்-ன் கண்கள் அன்பினால் நிறைந்தன… பொக்கனை கட்டியணைத்தார்… தன்னுடைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை துச்சமென துறந்த இ.எம்.எஸ்-ம்….தான் நினைத்தால் தனது ஏழ்மையை விரட்டி சுகபோகத்துடன் வாழக் கிடைத்த வாய்ப்பை புறந்தள்ளிய பொக்கனும் தாங்கள் கொண்ட சித்தாந்தத்தை பெரிதாக மதித்தவர்கள்… அவர்கள் தான் கம்யூனிஸ்டுகள்… அப்படித்தான் கம்யூனிஸ்டுகள் இருப்பார்கள்… இ.எம்,எஸ் போன்ற தலைவர்கள் காட்டிய பாதையில் கம்யூனிஸ்டுகள் அந்த தியாக வாழ்க்கைத் தான் வாழ்கிறார்கள்… #EMS - தீக்கதிர் - 2018.
கொக்கி tweet media
தமிழ்
2
9
30
780
agarathi ☭
agarathi ☭@hello_agarathi·
ஹலோ சார் @rparthiepan நான் கூட உங்களுடைய படைப்புகளை பார்த்து வியந்தவன்.உங்களது ஒவ்வொரு வித்தியாசமான முயற்சியும் என்னை அடுத்தடுத்த படத்தை பார்க்க தூண்டியது.‌ ஆனால்,உங்களின் சாதிவெறி அதனை சுக்குநூறாக உடைத்துவிட்டது.இனி இதுபோல் சாதி வெறியர்களின் படைத்தை முற்றிலும் தவிர்க்கிறேன்.
தமிழ்
0
0
0
9
agarathi ☭
agarathi ☭@hello_agarathi·
பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை - சீமான்.‌ எப்படியாச்சும்.. நாதக ஜெயிக்க வச்சி, அக்கா விஜயலக்ஷ்மியின் ஆசையை நிறை‌வேற்றுவோம்.‌
தமிழ்
0
0
1
7
agarathi ☭ ری ٹویٹ کیا
Milton
Milton@Milton_Off·
மொழி எங்கள் உயிருக்கு நேர் வீரவணக்கம் தோழர் 🥺🙏
Milton tweet media
தமிழ்
165
239
1.1K
18.4K
agarathi ☭ ری ٹویٹ کیا
balaji
balaji@prakashbalaji2k·
ஏகாதியபத்திய நாடான அமெரிக்க நடத்தும் போர் ! ஏழை மக்களுக்கு எதிரானது! அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் போர் வேண்டாம்!* ஒன்றிய RSS, BJP அரசே*! *கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்! கேஸ் விலையை குறைக்க சொல்லி திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பாக மாதர் சங்கம்* நடத்திய நூதன ஆர்ப்பாட்டம் .
தமிழ்
0
5
8
211
agarathi ☭
agarathi ☭@hello_agarathi·
வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள காவலர்களுக்கு முதலில் பாடம் எடுத்தால் நல்லது. இன்றுவரையில் கவின் கொலையில் கொலைகாரன் சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்படவில்லை. இன்றுவரையில் அவர்களுக்கு சாதி தான் பாதுப்பு கொடுக்கிறது.
News Tamil 24x7@NewsTamilTV24x7

Awareness is being created | சாதி... வழக்குப்பதிவு... சாதி பெயரை சொன்னாலே வழக்குபதிவு செய்கிறோம்; அடித்து தாக்கியிருக்க வேண்டும் என்று இல்லை போக்சோ வழக்குகள் பற்றி தைரியமாக புகாரளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது சிறிய, பெரிய குற்றம் என எதுவாகினும் புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் கூறுகிறோம் - பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் Vankataraman | DGP #Police #Vankataraman #DGP #TamilNews #NewsTamil24x7

தமிழ்
0
0
0
1
agarathi ☭ ری ٹویٹ کیا
Nehr_who?
Nehr_who?@Nher_who·
- This is a six-lane section of the NH-19 expressway - Built by the Modi Govt costing 2000 crore - The Contractor including the procurement of material was Adani Group -The flyover wall collapsed 10 months after its completion If this is not Corruption,I don't know what it is
English
155
2.4K
6.5K
136.5K
agarathi ☭ ری ٹویٹ کیا
Left view
Left view@left__view·
மலைவாழ் மக்களின் 200 ஏக்கர் நிலங்களை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம் 20 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், உறுதியான நெடிய போராட்டம் வெற்றி நிகழ்வு..!
தமிழ்
0
32
92
860
agarathi ☭ ری ٹویٹ کیا
கொக்கி
கொக்கி@Kokki_Boys·
மு.க ஸ்டாலின்: எனக்கு பிடித்த தலைவர்....தோழர் நல்லகண்ணு ஆக... அவங்க கட்சிக்கு 2 சீட்டு.... மு.க ஸ்டாலின்: எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த் ஆக அவங்க கட்சிக்கு 10 சீட்டு.... தலைவர்களே சினிமா மோகத்தில் ஆழ்ந்து உள்ளார்களா ?
தமிழ்
3
13
33
1.4K
agarathi ☭ ری ٹویٹ کیا
Alíén 👽
Alíén 👽@Alien18R·
உள் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. விநியோகம் தடைபட்டிருக்கிறது. பிரச்சனை தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்றைக்குதான் விளைவுகளைச் சந்திக்கிறோம். நாளைக்கே போர் நின்றாலும் கூட விநியோகச் சங்கிலி சரியாக குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகலாம். இந்தியாவிலேயே மிகப்பெரிய, நாளொன்றுக்கு 1.24 மில்லியன் பேரல் கச்சா எண்ணையைச் சுத்திகரிக்கக்கூடிய ரிலையன்ஸ் ஜாம் நகர் ரீஃபைனரி, மலிவு விலைக்கு எண்ணெய் வாங்கி சுத்திகரிப்பு செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்திய மக்களின் அடிப்படைத் தேவைகள் பட்டியலில் உள்ள ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ECA 1955இன் கீழ் சாதாரண குடிமகன் கூட பதுக்கலுக்குத் தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் அதை குஜ்ஜு கார்ப்பரேட் ஒன்று அதனை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை என்றால் மோடி யாருடைய பணியாள்? ஜனநாயகத்தில் இதைக் கேட்கவேண்டிய ஆட்களும் விலை போய்விட்டனரா என்பது அடுத்த கேள்வி.
தமிழ்
27
704
1.6K
57.5K
agarathi ☭
agarathi ☭@hello_agarathi·
சமையல் எரிவாயு பிரச்சினை சங்கிகளுக்கு இல்லையாம். மாட்டு சாணம் மற்றும் கோமியம் இருந்தால் போதுமானதாம்.
agarathi ☭ tweet media
தமிழ்
0
1
1
9
agarathi ☭
agarathi ☭@hello_agarathi·
Maharashtra Civil Engineering Cut-off: OBC: Dinesh Yadav – 63 Marks (Failed) SC: Ravi Jatav – 63 Marks (Failed) ST: Vivek Meena – 61 Marks (Failed) EWS: Narendra Mishra – 21 Marks (Passed) the unconstitutional “Sudama (EWS) quota” should be abolished at once.
agarathi ☭ tweet media
English
0
0
0
8
agarathi ☭ ری ٹویٹ کیا
தோழர் சிவா தாழை ★
விசிக மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் களத்தில். #நாங்குநேரி
தமிழ்
2
54
210
2K
agarathi ☭ ری ٹویٹ کیا
விடுதலை இராசேந்திரன்
சட்டங்களை விட ஆகமங்கள் தான் வலிமையானது; ஆகமங்கள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி, ஏற்கனவே அரசு பயிற்சி பெற்ற இரண்டு அர்ச்சர்கள் நியமனத்தை வயலூர் முருகன் கோயிலில் ரத்து செய்து, குல வழி வந்த பிராமண அர்ச்சகர்களையே மீண்டும் நியமிக்கச் செய்தவர் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். இப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆகம விதிப்படி கருவறைக்கு கீழே இருக்கும் தீபத்தூணில் காலம் காலமாக ஏற்றப்பட்டு வந்த தீபத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறார். ராஜா பட்டர் உள்ளிட்ட முருகன் கோயில் அர்ச்சகர்கள் இதுதான் ஆகம வழிபாட்டு முறை என்று வலியுறுத்துவதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்க தயாராக இல்லை. கோயிலுக்கு வெளியே சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் எல்லைத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கெடு நிர்ணயித்து உத்தரவிட்டார். ஆகமக் காவலர்கள் எவரும் இப்படி ஆகமத்தை நீதிபதியே மீறலாமா? என்று கொந்தளிக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே வெளியிட்ட உத்தரவை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் கோர்ட் அவமதிப்பு செய்து விட்டது என்று நீதிபதி இப்போது கூறுகிறார். ஆகமங்களை விட தான் பிறப்பித்த உத்தரவே மேலானது என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார். கார்த்திகை தீப நட்சத்திரத்தில் பிரம்மயோக தினத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது கோயில் வழிபாட்டு முறை. இப்போது தீபம் ஏற்ற நீதிமன்றம் நாள் குறிக்கிறது. தீபத்தை யார் ஏற்ற வேண்டும் என்ற பட்டியலையும் கையில் வைத்திருக்கிறது. இப்படி தீபத் திருநாளை நீதிமன்றம் தீர்மானிக்கலாமா? என்று வேத பண்டிதர்கள் வாய் திறக்கவில்லை. இது யோசனைதான் ; உத்தரவு அல்ல! என்று கூறுகிறது நீதிமன்றம். சரி அதோடு நிற்கவில்லை! ஆலோசனையை செயல்படுத்தினால் பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என்று மறைமுக எச்சரிக்கையும் விடப்படுகிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் அது ஆகம விதி மீறல் என்பார்கள். இவர்களே ஆகம விதிகளுக்கு புறம்பாக கோயில் வளாகத்துக்குள் கொடியேற்றலாம் என்று உத்தரவுகளை போடுவார்கள்; அதை செயல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள். சனாதனத்தை பாதுகாக்க ஆகமங்களையும் பயன்படுத்துவோம்! நீதிமன்ற அவமதிப்புகளையும் கையில் எடுப்போம்! என்பதுதான் வேதம் கற்றுத்தந்த தர்மத்தின் அற நெறியா ? சனாதன காவலர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். விடுதலை இராசேந்திரன் முகநூல் பதிவு 03.03.2026.
விடுதலை இராசேந்திரன் tweet media
தமிழ்
20
239
463
15.1K