DMK IT WING

66.5K posts

DMK IT WING banner
DMK IT WING

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India Katılım Şubat 2018
142 Takip Edilen350.5K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va… #DMK
DMK IT WING tweet media
தமிழ்
123
287
529
123.2K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஊழலற்ற அரசியல், தூய சக்தி என்றெல்லாம் வாய் சவடால் அடித்தவர்களின் வேஷம் கலைந்தது. Party Fund என்ற பெயரில் கல்லா கட்டும் தவெக நிர்வாகியின் இலட்சணம் இதோ. தமிழ்நாட்டில் உங்கள் ஊழல் நாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது விஜிமா
தமிழ்
2
94
140
3.4K
DMK IT WING retweetledi
Govi Lenin
Govi Lenin@lenin_govi·
பாஜக ஆட்சியில் அயோத்தியில் 200 கோடி ரூபாய் அளவுக்கான காணிக்கை மோசடியும், பெரிய அளவில் நிலமோசடியும் நடந்துள்ளது. தவெக ஆட்சியில் பழனி கோயில் நிலத்தில் 100 கோடி ரூபாய் மோசடி. அயோத்தியில் காணிக்கை பணத்தை எண்ணுபவர்களை கைது செய்து சீன் போட்டு இருக்கிறார்கள். பழனியில் அதிகாரிகள் சஸ்பெண்ட் என்று ரீல்ஸ் போடுகிறார்கள். நீ அங்கே பார்த்துக்க.. நான் இங்கே பார்த்துக்குறேன் என்ற அக்ரிமெண்டில் கொள்ளை அடிக்கிறார்கள் ஊழலை ஒழிக்கப் போவதாக சொன்ன உத்தமர்கள்.
Govi Lenin tweet media
தமிழ்
1
27
46
713
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தினமும் ஒரு ஊழல், தினமும் ஒரு அராஜகம் - இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை! "யார் லஞ்சம் கேட்டாலும் என் பெயரைச் சொல்லுங்கள்" என்று மேடையில் உத்தமர் வேடமிட்டு நாடகமாடிய விஜய், இன்று தனது கட்சியின் ஊழல்களைக் கண்டு மௌனம் காப்பது அவரது போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 1. செங்கல் சூளைகளில், மணல் அள்ள என மிரட்டிப் பணம் பறிப்பது. 2. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 30 ரூபாய் கமிஷன் வசூலிப்பது. 3. விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவது. 4. நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு 20 முதல் 30 லட்சம் வரை Party Fund வாங்குவது! 5. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு தனிநபருக்கு விற்பனை செய்வது. இதற்கெல்லாம் CM Uncle என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என கேட்டால் டேஷ் கொத்து பரோட்டா என கண்டதை வாந்தி எடுப்பார். மேடைகளில் தூய சக்தி என்று புளுகித் தள்ளும் தவெக, உண்மையில் விஷவாயு நிரம்பிய ஊழல் சாக்கடையாகச் சீரழிந்து கிடக்கிறது.
DMK IT WING tweet media
தமிழ்
2
93
137
3.7K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஐந்து அரசுப் பள்ளிகள் மூடிவிட்டு, 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றிதழும், 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணையும் வழங்கியுள்ளது த.வெ.க அரசு. குதிரைப் பேரம் மூலம் ஆட்சியமைத்து, கள­வா­ணித்­த­னம் செய்வதையும், தனியார்மயத்தை ஊக்குவிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள த.வெ.க அரசும், மகா யோக்­கி­ய­ரைப்­போல பேசும் விஜயும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? இது தூய ஆட்சியென்றா? இல்லை துயர ஆட்சியென்றா?
DMK IT WING tweet mediaDMK IT WING tweet media
தமிழ்
8
131
218
13.4K
DMK IT WING retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு! ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் UDISE+ 2025–26 அறிக்கையில், 94.4% ஒருங்கிணைந்த மதிப்பெண்ணுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கட்டமைப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு. மாணவர்களுக்கான தரமான கல்வி, நவீன டிஜிட்டல் வசதிகள், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் எனப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் நவீன வசதிகளுடன் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு தேசிய அங்கீகாரம் இது. இந்தியாவின் கல்வி வளர்ச்சிப் பாதையை வழிநடத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு மீண்டும் தனது முத்திரையைப் பதித்துள்ளது! @mkstalin
NDTV Education@ndtveducation

Tamil Nadu Leads In School Infrastructure; Check The List Of Top 10 States ndtv.com/education/tami…

தமிழ்
1
80
197
4.9K
DMK IT WING retweetledi
விமலிசம்
200 யூனிட் மின்சாரம் இலவசம்ன்னு அடித்த விபூதி
தமிழ்
10
388
837
18.7K
DMK IT WING retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டம் - இலவச சீருடை - பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சி - அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை. சென்னை மெரினா சாலைக்கு காமராசர் அவர்களின் பெயரை சூட்டியது - குமரியில் நினைவு மண்டபம் அமைத்தது - காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைமுறைப்படுத்தியது என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காமராசருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தார்கள். கலைஞர் அவர்கள் வழியில், நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது, காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததற்காக காமராசர் அவர்களுக்கு திருவுருவச்சிலை - திருச்சியில் காமராசர் பெயரில் மாபெரும் அறிவுலகம் என காமராசரின் புகழை மென்மேலும் போற்றினார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்! #Kamarajar
Udhay tweet media
தமிழ்
49
311
1K
24.6K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவறு நடந்துள்ளது! New Template Unlocked!
10
173
389
7.4K
DMK IT WING retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர். பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர். உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர். காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும், *காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், *பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை, *திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர் எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்! தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
M.K.Stalin tweet media
தமிழ்
64
769
2.3K
45.1K
DMK IT WING retweetledi
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
Fastest 100cr ஊழல் in 2 months Vijay அண்ணா mass..🔥
Joel Miller tweet media
Eesti
5
612
2.2K
20K
DMK IT WING retweetledi
விமலிசம்
ப்ரண்ட்ஸ் ஒரு சின்ன மேட்டரு..ஒரு நூறு கோடிக்கு தப்பா டாக்குமென்ட் ரிஜிஸ்டர் பண்ணிட்டோம்..
விமலிசம் tweet media
தமிழ்
19
275
1K
32.7K
DMK IT WING retweetledi
தல அரவிந்த்
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ … ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக தவெக தற்குறிகள் இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
தமிழ்
29
1.2K
1.9K
51.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவெகவினர் என்றால் ஒரு நீதி, மற்றவர்கள் என்றால் ஒரூ நீதியா? - திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள் #ரீல்ஸ்வேண்டாம்_நீதிவேண்டும்
தமிழ்
7
226
415
7.4K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடும் மாடல் அரசு! - திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள் #ரீல்ஸ்வேண்டாம்_நீதிவேண்டும்
தமிழ்
3
147
264
5.9K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இது ஓடும் மாடல் அரசு! 👊 ~ @iparanthamen
தமிழ்
22
207
533
43.5K
DMK IT WING retweetledi
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
"நலம் TN எங்கள் கனவுத் திட்டம்" என்று @arunraajkg அவர்கள் பேசுகிறார். நலம் TN என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட இணையதளம் Tamil Nadu Health Foundationக்கு ஆனது. இந்த நிறுவனத்தை அமைத்து முந்தைய திமுக அரசு ஆகஸ்டு 2025இல் வெளியிட்ட அரசாணை மார்ச் 2026இல் திமுக அரசு இணையதளம் தொடங்க அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை
Indra Kumar Theradi tweet mediaIndra Kumar Theradi tweet media
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR

இதுவும் ஸ்டிக்கர் தான். தனியார் நிறுவனங்களின் Corporate Social Responsibility Fundஐ பெறுதற்கான முன்னெடுப்பு கடந்த ஆட்சியிலேயே தொடங்கப்பட்டு Tamil Nadu Health Foundation தொடங்கப்பட்டது. இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டுள்ள கட்டுரை: newindianexpress.com/states/tamil-n…

தமிழ்
9
348
556
19.7K
DMK IT WING retweetledi
Udhay
Udhay@Udhaystalin·
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும். சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். #நீதி_வேண்டும் #Custodial_Death
Udhay tweet media
தமிழ்
105
1.9K
3.6K
124.3K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கத்தி படத்தை recreate செய்த சிறார்கள்! செங்கல்பட்டு ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு மையத்தில் இருந்து 12 சிறார்கள் காவலர்களை தாக்கி கதவை உடைத்துத் தப்பி ஓடியதும், வெளியே வந்து அப்பாவி பொதுமக்களைத் தாக்கி பைக், செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்ததும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம்! பாதுகாப்பு இல்லத்தில் இருக்க வேண்டியவர்கள், இன்று பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியிருப்பது அரசின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. கடந்த வாரம் இதே சீர்திருத்தப் பள்ளியில் மோதல் நடந்தும், நிர்வாகம் எந்தப் பாடமும் கற்காமல், இன்று 12 பேர் தப்பிக்கும் அளவுக்குப் பாதுகாப்பைத் தளர்வாக வைத்திருந்தது ஏன்? இவ்வளவு அராஜகங்கள் நடந்தும், வெறும் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. இந்த அவல நிலை தொடர்ந்தால், தமிழகம் கிரிமினல்களின் கூடாரமாக மாறிவிடும்! #ரீல்ஸ்வேண்டாம்_நீதிவேண்டும்
DMK IT WING tweet media
தமிழ்
2
112
177
6.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கைதி த.வெ.க என்றால் பெயில் - மற்றவர்கள் என்றால் மரணமா? விளம்பர வெறி பிடித்த தவெக ஆட்சியின் நீதி, கட்சிக்கு ஒரு நியாயம் - சாமானியர்களுக்கு ஒரு நியாயம் எனத் தரம் தாழ்ந்துவிட்டது! நாகர்கோவிலில் குட்கா வழக்கில் சிறையிலிருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், காவல்துறை சித்திரவதையால் உடல் முழுவதும் காயங்களுடன் மர்மமாக உயிரிழந்துள்ளார். ஆனால், ஈரோடு பவானியில் 8 கிலோ குட்காவுடன் சிக்கிய தவெக நிர்வாகி அருண், இரவோடு இரவாக காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அதே அருண், இப்போது தவெக என்ற ஒரே காரணத்திற்காகத் தப்பித்தது எப்படி? சபரிவர்மனின் உறவினர்கள் நீதிக்காகப் போராடும் நிலையில், 'ரீல்ஸ்' உலகத்தை விட்டு வெளியே வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தாருங்கள் மிஸ்டர் விஜய்! #ரீல்ஸ்வேண்டாம்_நீதிவேண்டும்
தமிழ்
9
328
471
8.6K
DMK IT WING retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! #DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை! மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்! #தென்காசி #மலையடிப்பட்டி
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@TThenarasu

தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன். மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களின் கண்டுபிடிப்பு, இப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் நிலப்பரப்பின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தின் வரலாற்றையும் அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

தமிழ்
53
1.2K
3.1K
174K