Dinesha Ravichandran

18 posts

Dinesha Ravichandran

Dinesha Ravichandran

@DirDinesha

Traveller, Listener, Film maker & society freak 🤩

Chennai, India Katılım Haziran 2022
135 Takip Edilen16 Takipçiler
Dinesha Ravichandran retweetledi
Grey
Grey@jgreyfriend·
In 1983, Steve Jobs predicted the next 50 years of technology. His predictions: • iPhone • Internet • Softwares • App stores • Artificial Intelligence 10 futuristic predictions from this talk that came true: 1. Every major revolution starts ugly
English
261
7K
22.5K
1.2M
WWE
WWE@WWE·
One final goodbye. Thank YOU, @JohnCena. 🫡
English
7.4K
92K
444K
8.9M
Nordnomad
Nordnomad@arcot2arctic·
விடாமுயற்சி - சொல்ல வந்த கதையை மிக சிறப்பாக எந்த cringe/ தேவையில்லாத மாஸ் பில்ட் அப்/ சீன்ஸ் என்று எதுவுமே இல்லாமல் பண்ணி இருக்காங்க. அஜித் தன்னுடைய zone விட்டு தொடர்ச்சியாக பெண்கள்/ judgemental கலாச்சாரம்/ குடும்பம் சார்ந்து என்று எல்லாவற்றையும் தூக்கி போட்டு ஒரு விசாலமான வெறுப்பை கக்காத படங்களை கொடுக்க விரும்புகிறார் என்று புலப்படுகிறது. எந்த இடத்திலும் அஜித் நாயக பிம்பம் தெரியல. வணிக காரணங்களுக்காக மாற்றி கொள்ளாமல் எடுத்து இருக்காங்க. அஜித் தன்னுடைய திரை வாழ்க்கையில் 2ஆம் கட்டத்தில் நெறய விஷயம் செய்யணும் என்று முயற்சி செய்வது புலப்படுகிறது. இன்னும் 2-3 வருஷத்துக்குள்ள ஜெய் பீம் மாதிரியான சீரியஸ் படங்களில் கூட நடிக்க வாய்ப்பு இருக்கு. நாயக பிம்பம் இல்லாமல் கதை கொண்டு வாருங்கள், நான் நடிக்க தயாராக இருக்கேன். அப்படி இல்லை என்றால், நானே கூட suggest செய்கிறேன் என்று முயற்சிக்கிறார். அனிருத் BGM படம் முழுக்க அட்டகாசம். அஜர்பைஜான் ரோடுகள், அந்த நிலப்பரப்பு நமக்கு முழுக்க சிறப்பான அனுபவத்தை தருகிறது. படத்தில் எல்லாரும் சிறப்பாக பண்ணி இருக்காங்க. இந்த படத்தையும் கடிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவங்க கடிப்பதை தவிர வேற வேலை இல்லாதவர்கள் என்றே சொல்லணும். ஒரு urban women crowd பெரிய லெவல்ல படத்திற்கு வரும். இது ரசிகனாக எனக்கு திருப்தி தான். ஆனா அஜித் என்கிற அந்த மாஸ் ஸ்டாருக்கு பத்தாது. அதை கண்டிப்பாக good bad ugly பூர்த்தி செய்யும். கண்டிப்பாக அஜித் அடுத்த படத்தை மகிழ் திருமேனியுடன் செய்யணும், அதுவும் மகிழ் திருமேனியின் கதையாக இருந்தால் அது தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட மிக சிறப்பான மாஸ் படங்களில் ஒன்றாக இருக்கும்.
Nordnomad tweet media
தமிழ்
58
627
2.4K
91.2K
Dinesha Ravichandran retweetledi
Suresh balaji
Suresh balaji@surbalutwt·
#SuperstarRajinikanth ‘s #Jailer SONG TURNS INTO A TITLE! The crew of "Rathamaarey" applauded by #Superstar @rajinikanth "Rathamaarey" is a story of the lives of three individuals viewed from three different angles. “ We met #Rajinikanth sir in person and he congratulated us for the title, #Rathamaarey. We think it is the biggest recognition for our crew “ - director Dinesha Ravichandran. #Coolie | #Vettaiyan | #Manasilaayo | #Manasilayo
Suresh balaji tweet media
English
1
94
259
4K
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
SUPER STAR' S SONG TURNS INTO A TITLE! The crew of "Rathamaarey" applauded by Superstar Rajinikanth! "Rathamaarey" is a story of the lives of three individuals viewed from three different angles. The title has been adapted from Superstar Rajinikanth's "Rathamaarey"song! We met Superstar Rajini sir in person and he congratulated us for the title, #Rathamaarey. We think it is the biggest recognition for our crew, said the director Dinesha Ravichandran. @ProBhuvan
Ramesh Bala tweet media
English
2
81
318
9.9K
Dinesha Ravichandran retweetledi
VijaySethupathi
VijaySethupathi@VijaySethuOffl·
VijaySethupathi tweet media
English
24
59
666
45.9K
Dinesha Ravichandran retweetledi
We Dravidians
We Dravidians@WeDravidians·
The Biological disconnection explained!! ROFL
English
27
1K
3.6K
116.7K
Dinesha Ravichandran retweetledi
A.R.Rahman
A.R.Rahman@arrahman·
Chennai concert highlights!
English
0
1.9K
14.7K
3M
Dinesha Ravichandran retweetledi
டீ
டீ@teakkadai1·
#Kapildev கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டிற்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில்  இந்திய அணி  நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ்மென்கள் கணவர்களைப் போல. வேலைக்குப் போய் வருவது மட்டுமே அவர்கள் வேலை மற்றவை அல்ல என்பதைப் போல ரன் எடுப்பதை மட்டுமே அவர்கள் வேலையாகச் செய்வார்கள். பீல்டிங் என்பதையே செய்ய மாட்டார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் சிறு அழுக்குப் பட்டாலும் அது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவார்கள். பந்து வீச்சாளர்கள் அந்தக்கால மனைவி போல. பந்து வீசி பீல்டிங் செய்வார்கள். ஆனால் ரன் எடுக்கமாட்டார்கள். அந்த சமயத்தில் வேலைக்கும் போய், வீட்டு வேலையும் செய்யும் நவநாகரீக மங்கையைப் போல் அணிக்குள் வந்தவர் தான் இந்தியாவின் இணையற்ற ஆல்ரவுண்டர் கபில்தேவ். கபில்தேவ் தன் 16 வயதில் ஹரியானா அணிக்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியபோதே பலரது கவனத்தை ஈர்த்தார். அவரின் பந்து வீச்சு வேகமும், பேட்ஸ்மென்களை திணறடிக்கும் லைன் அண்ட் லெங்த்தும் பேசு பொருளானது. பெரிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஐந்து விக்கெட் சாதனையை அனாயாசமாக செய்து வந்தார். அவரை அணிக்குள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு வந்தது. தேசிய அளவிலான பயிற்சி முகாமில் காலையில் மாங்கு மாங்கென்று 20 ஓவர்களுக்கு மேல் வீசி விட்டு வந்தவருக்கு நான்கு சப்பாத்தியும் சப்ஜியும் காத்திருந்தது. நான் ஒரு வேகப்பந்து வீச்சாளன் எனக்கு இது எப்படி போதும்? என கேட்டதற்கு அதிகாரிகள் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளன் என்ற ஜாதியே இல்லை என்று பதில் அளித்தார்கள். பொறுங்கள் அப்படி ஒரு ஜாதியை உருவாக்குகிறேன் என்று மனதிற்குள் சூளுரைத்திருப்பார். அந்த வெறி தான் இந்திய அணி கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாற காரணமாக அமைந்தது. 1978ல் தன் பத்தொன்பதாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவ் அறிமுகமானபோது, இந்திய ரசிகர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். இவ்வளவு வேகமாக துல்லியமாக பந்து வீச நம்மிடமும் ஆட்கள் உள்ளனரா என்பதே அனைவரின் ஆச்சரியமும். பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் பந்து வீச்சைப்பார்த்த உடன் பத்திரிக்கைகள் அவருக்கு வைத்த பெயர் ஹரியானா எக்ஸ்பிரஸ். போதாக்குறைக்கு அற்புதமான க்ளீன் ஹிட்டிங் வேறு. அதற்கு முன் நம் இந்திய பேட்ஸ்மென்கள், தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் கிளாசில் தவறு செய்தால் பட்டும் படாமல் அடிப்பார்களே சில ஆசிரியர்கள் அதுபோலத்தான் அடிப்பார்கள். பவுண்டரி என்பதே குறைவாகத்தான் இருக்கும். ஓங்கி அடித்தாலும், எப்படியும் தடுத்து விடலாம் என எதிரணி வீரர்கள் நம்பிக்கையோடு விரட்டுவார்கள். ஆனால் கபில்தேவோ தன் மகளுக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை ஆசிரியர் அடிப்பது போல் பளார் என்று அடிப்பார். அடித்த உடனே பவுண்டரி எனத் தெரிந்து எதிரணி வீரர்கள் பந்தைத் துரத்த மாட்டார்கள். இதனால் மக்களிடம் பெரும் அபிமானம் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறினார் கபில்தேவ். எண்ணி நான்கே ஆண்டுகளில் 82ல் அப்போதைய கேப்டன் கவாஸ்கர் ஓய்வு எடுத்த ஒரு தொடரில் கேப்டனாக பதவியேற்றார். பின்னர் அந்த ஆண்டு மேற்கிந்திய தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1983 உலக கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த கோப்பையை வென்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவ காரணமானார். சூட்டோடு சூடாக மேற்கிந்திய அணி, இந்திய சுற்றுப்பயணத்திற்கு வந்து, பைனலில் தோற்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்துவிட்டுப் போனது. அந்த படுதோல்வியின் காரணமாக கபில்தேவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கவாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் 1986ல் கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் அந்நாட்டை டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் தொடரை வெல்லும் வரை சென்றார். பின் 1987 ரிலையன்ஸ் உலககோப்பையில் அரை இறுதி வரை அணியை இழுத்துச் சென்றார். அதனால் மீண்டும் கேப்டன்சியை இழந்து 93-94 சீசன் வரை விளையாடி ஓய்வு பெற்றார். யோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்த பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை. எவ்வளவு வெறி கொண்டு போட்டாலும் முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளங்கள் மட்டும் இருக்கும் நாட்டில் யார்தான் வேகப்பந்து வீச்சாளராக வர விரும்புவார்கள்? அப்படி ஒரு தன் முனைப்போடு வந்தவரை முடிந்தவரை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள். வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னொரு முனையிலும் நல்ல துணை இருந்தால் தான் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியும். உதாரனத்திற்கு டென்னிஸ் லில்லி – ஜெப் தாம்சன் முதல் வாசிம் அக்ரம்-வக்கார் யூனூஸ், அம்புரோஸ்- வால்ஷ், அலன் டொனால்ட் – ஷான் போலக், மெக்ராத் – ப்ரெட் லீ என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கபில்தேவ் தன் உச்சக்கட்ட பார்மில் இருந்த போது அப்படி ஒரு துணை அமையவே இல்லை. மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் போன்றவர்கள் தான் அவருக்கு அடுத்த ஓவரை வீசுவார்கள். ஒரு முறை விவியன் ரிச்சர்ட்ஸ், மதன்லாலிடம் சென்று, ஆப் ஸ்பின் போடுவதற்கு எதற்கு இவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள் எனக் கேட்டதாக கூடச் சொல்வார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரோஜர் பின்னி, சேட்டன் சர்மா என வந்தாலும் அவர்களும் தங்கள் சிறப்பை தொடர்ச்சியாக கொடுக்கவில்லை. ஒற்றை ஆளாக தொடர்ந்து பந்து வீசி, காலில் அறுவை சிகிச்சை வரை போனது. அதனால் அவர் வேகம் குறைந்த போது அவுட் ஸ்விங்கர் என்னும் ஆயுதத்தை எடுத்தார். இந்திய மைதாங்களில் அது பெரும் பலனை அளிக்காவிட்டாலும் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல பலனைத் தந்தது.1991-92ல் அவரது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தில் கூட அலன் பார்டர் போன்ற முண்ணனி வீரர்கள் அலறும் படி இருந்தது அவரது பந்து வீச்சு. கபில்தேவ் ஓய்வு பெறும் போது டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் (434) எடுத்த பந்து வீச்சாளராக ஓய்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் கழித்தே அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் பாதிக்கு மேலான விக்கெட்டுகளை உயிரற்ற இந்திய ஆடுகளங்களில் தான் வீழ்த்தினார். சக வீரர்களின் ஒத்துழைப்பின்மை, உடன் வீச தகுதியான பந்துவீச்சாளர் இல்லாதது, கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சம் இத்தனையையும் தாண்டித்தான் அவர் இந்த சாதனையைச் செய்தார். 434 விக்கெட்டுகள் மட்டுமல்ல ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் டெஸ்ட் மேட்சுகளில் அவர் குவித்திருந்தார். எப்பொழுதெல்லாம் இந்திய அணி தடுமாறுகிறதோ அப்பொழுதெல்லாம் தன் பங்களிப்பை சரியாக செய்து விடுவார். 1986ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அவர்கள் இமாலய ஸ்கோரை குவிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாறியது. கபில்தேவ், மனீந்தர் சிங் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை அடுத்த முனையில் நிறுத்தி 119 ரன்களை குவித்து பாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். 91ல் இந்தியா, இங்கிலாந்திற்கு சென்றிருந்த போது,  பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம். அந்த ஒவரின் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து பாலோ ஆனில் இருந்து இந்தியாவை காப்பாற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மறுமுனையில் நின்றவர் அவுட். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த ஒரு சம்பவமே அவர் பெயரை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும். கபில்தேவின் பௌலிங், பேட்டிங் போல குறிப்பிட வேண்டிய ஒன்று அவரது பீல்டிங். 1983 உலக கோப்பை பைனலில் அவர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிடித்த ரன்னிங் கேட்ச் உடனடியாக எல்லோரது நினைவுக்கும் வரும். அவுட்பீல்டில் சிறப்பாக பீல்ட் செய்யக்கூடியவர் கபில்தேவ். அப்போதைய இந்திய அணி வீரர்கள் பவுண்டரி லைனில் இருந்து பந்தை எறிந்தால் அது விக்கெட் கீப்பரிடம் வரும் பொழுது, ஸ்டேசனில் வந்து நிற்கும் பேசஞ்சர் டிரெய்னின் வேகத்தில் தான் வந்து சேரும்.  ஆனால் கபில்தேவ் ஒன் பவுன்ஸில் விக்கெட் கீப்பரின் இடுப்புக்கு வந்து சேரும் படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் எறிவார். கபில்தேவ் ஓய்வு பெற்ற பின்னும் அவருக்கு எந்த வித கவுரவும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை. தன் முனைப்பாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ சி எல்) என ஒன்றில் ஈடுபட்டு 20-20 போட்டிகளை நடத்தினார். அதற்கு மைதானங்கள் கிடைக்க விடாமல் இடையூறு செய்ததோடு, அதில் விளையாடும் வீரர்களுக்கும் எதிர் காலத்தில் வாய்ப்பு இல்லை என மிரட்டியது இந்திய கிரிக்கெட் வாரியம். பின் தானே இந்தியன் பிரிமியர் லீக்கைத் தொடங்கியது. 1983க்குப் பின் மூலை முடுக்கெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் ஆட ஒரு காரணமாய் இருந்தது, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனக் காட்டியது, எக்கச்சக்கமாக இல்லாவிட்டாலும் வேகப்பந்து வீசி நம்மால் சாதிக்க முடியும் என பலர் வர உந்து சக்தியாக இருந்தது, இப்போது கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஒரு காரணமாய் இருந்தது என கபில்தேவின் சாதனைகள் பல. ஆனால் குயுக்தி, குள்ளநரித்தனம் எதுவுமில்லாத சுத்த வீரனான கபில்தேவிற்கு எந்த பெரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவரின் விளையாட்டே அப்படித்தான் இருக்கும். என் திறமைக்கு நான் பந்து வீசுகிறேன், நீ ஆடிப்பார். பந்தைப் போடுகிறாயா எப்படி அடிக்கிறேன் பார் என்றே இருக்கும். எதிர்மறை வியூகங்கள், எதிர் அணியை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களை செய்யாமல் கிரிக்கெட்டை நேசித்து ஆடிய வீரன் கபில்தேவ். இப்போது கூட இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைத் தொடரின் எல்லா போட்டிகளையும் காண Golden Ticket ஐ கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத அமிதாப் பச்சனுக்கு கொடுக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவிற்கு உலக கோப்பை என்ற ஒன்றை முதன்முதலில் வாங்கித்தந்த கபிலுக்கு பாராமுகம் காட்டுகிறது. நெஞ்சுக்கு பவுன்சர் போட்டால், குழி தோண்டி படுத்துக் கொள்கிற பேட்ஸ்மென்கள் இருந்த காலத்தில், பவுன்சரைக் கண்ட உடன் மாதக்கடைசியில் ஒன் வேயில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவரைக் கண்டால் எப்படி ட்ராபிக் கான்ஸ்டபிளுக்கு கண்கள் மின்னுமோ, அதுபோல் கண்கள் மின்ன, ஓரடி பின் சென்று, வலது காலால் மைதானமே அரை இன்ச் உள்ளே போகும் படி ஆக்ரோசமாக அழுத்தி, இடது காலை தூக்கி நடராஜர் நர்த்தனம் போல் நிறுத்தி சண்ட மாருதமாய் பேட்டை சுழற்றுவார் கபில்தேவ். அப்போது ஸ்கொயர் லெக்கிற்கும் பைன் லெக்கிற்கும் இடையே எத்தனை பீல்டர்களை நிறுத்தினாலும் பந்து அவர்களை முறியடிக்கும். அந்த நேரத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தில் கபில்தேவிற்கு ஓரிடம் இருக்குமே அதை எந்த நிர்வாகமும் அவருக்கு கொடுத்து விட முடியாது. #Parcel_tea
தமிழ்
163
547
1.7K
206.7K
Dinesha Ravichandran retweetledi
Sonia Vimal
Sonia Vimal@NameisSoni·
தமிழ் பட பேய்கள் எல்லாம் தூக்கு போட்டு சாவுங்கள்.. 🥵
தமிழ்
40
990
2.7K
215.1K
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
TN 55 N 0552 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து அது 8.45pm க்கு பயணிகளை (10 பேர்) ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டது. புனல்குளத்தில் 2 பயணிகளை இறக்கி விட்டு புறப்பட்டது. டிரைவர், கண்டக்டர் இருவரும் காக்கி சீருடையில் இருந்தார்கள்.
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
53
540
1.8K
183K