Office of Aadhav Arjuna
14 posts

Office of Aadhav Arjuna
@OfficeOfAadhav
Official X handle Maintained by the Office of Thiru. Aadhav Arjuna, | Minister for PWD & Sports Development |MLA – Villivakkam | Government of Tamil Nadu.
Katılım Mayıs 2026
3 Takip Edilen201 Takipçiler

நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (23.06.2026) நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில், ரூபாய் 2 கோடியே 49 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடகள எறிதல் மைதானத்தினை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்

நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று (23.06.2026) நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, மாண்புமிகு அமைச்சர்
திரு. பெ. விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் இன்று (10.06.2026) நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதியில் சென்னை மாவட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயில நியமன ஆணையை பாரா தடகள வீரர் நவீனிற்கு வழங்கினார்கள்.

தமிழ்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @AadhavArjuna அவர்கள் இன்று (10.06.2026) நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுதுறை கீழ் இயங்கும் விளையாட்டு விடுதியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை விளையாட்டு மையத்தில் சேர்ந்து பயில நியமன ஆணையை archery வீராங்கனை ராகவிக்கு வழங்கினார்கள்.

தமிழ்

மாண்புமிகு அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்கள்,
சைலிங் விலைளயாட்டு வீரர் சித்தரேஷ் நடேசன் அவர்கள் உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு Elite திட்டத்தின் கீழ் ரூ. 4.65 லட்சித்திற்ககான காசோலையினை வழங்கினார்.

தமிழ்

மாண்புமிகு அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்கள்,
ஹாங்காங்கில் மே மாதம் நடைபெற்ற ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (CDS) கீழ் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களான திரு. ஜித்தின அர்ஜுனன் (ஆண்கள் நீளம் தாண்டுதல்), செல்வி. சாதனா ரவி (பெண்கள் மும்முறை தாண்டுதல்) மற்றும் செல்வி. ஜி.பாவனா (பெண்கள் 4x100 தொடர் ஓட்டம்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர் அவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், இவர்களுடன் ஆண்கள் 4x400 தொடர் ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. எஸ். ரஞ்சித் குமார் அவர்களுக்கு ரூ. 2 லட்சமும் உயரிய ஊக்கத் தொகையினையும் வழங்கினார்.

தமிழ்

மாண்புமிகு அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்கள்,
பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் திரு.மனோஜ்குமார் அவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாப்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795/- மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினார்.

தமிழ்

மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு நிதியுதவியாக ரூ 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இம்மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்சு பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டி மற்றும் பிரிட்டிஷ் & ஐரிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண மற்றும் பயிற்சிச் செலவுகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் (Elite Sportsperson Scheme) கீழ் இந்நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழ்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. @mansukhmandviya அவர்களை இன்று (03.06.2026) புதுதில்லியில் மாண்புமிகு அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

தமிழ்

ஹாக்கி சங்க நிர்வாகிகள், SDAT உயர் செயல்திறன் ஹாக்கி பயிற்சியாளர் மார்க் வில்லியம்ஸ், டென்னிஸ் சங்க நிர்வாகிகள், ஸ்கை ஈஸ்போர்ட்ஸ் அணி மற்றும் ரோயிங் சங்க நிர்வாகிகள் இன்று SDAT அலுவலகத்தில், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.




தமிழ்

சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்துவரும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய செஸ் வீராங்கனை கிராண்ட்மாஸ்டர் செல்வி. ஆர்.வைஷாலி அவர்களுக்கு, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று வழங்கினார்.

தமிழ்
