
ஏப்ரல் -7 உலகச் சுகாதார தினம்- ஜி.கே.மணி
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
"நோய் வருமுன் காப்போம் "
உடல் நலம், மனநலம், சமூகநலம் ஆகிய மூன்றும் அடங்கியதே ஆரோக்கிய வாழ்வு.
தற்போது சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளைகள் பாதிக்கும் நோய், புற்றுநோய் போன்றவை அதிகரித்து வருகிறது.
முறையற்ற- ஒவ்வாத உணவு முறை, உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், அவசரம், கோபம் போன்றவற்றால் நோய் பாதிப்பு அதிகம். இதில் விழிப்புணர்வும் அக்கரையும் தேவை.
இது உலகச் சுகாதார நிறுவனத்தால் 1948ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகச் சுகாதார தினத்தில் நாம் ஒவ்வொருவரும் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரை மனித உயிர்காக்க சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு கிடைக்கின்ற சுகாதார வசதி சாதாரண கிராமத்தில் வாழும் ஏழைக்கும் தரமான சுகாதார வசதி இலவசமாக செய்ய வேண்டும்.
பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்று வாழ வேண்டும். நோய் வரும் முன் காக்க தக்க நடவடிக்கை வேண்டும். தரமான மருத்துவ வசதியை அரசு அனைவருக்கும் இலவசமாக வழங்க உறுதிசெய்ய வேண்டும்.

தமிழ்




















