செந்தமிழன் சீமான்

3.3K posts

செந்தமிழன் சீமான் banner
செந்தமிழன் சீமான்

செந்தமிழன் சீமான்

@Seeman4TN

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg

தமிழ்நாடு Katılım Haziran 2023
7 Takip Edilen89.6K Takipçiler
Sabitlenmiş Tweet
செந்தமிழன் சீமான்
மாசி 09, 21-02-2026 அன்று மாலை திருச்சி ஆலம்பட்டிபுதூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற, மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு! youtube.com/live/L1jTEUpXu… youtube.com/live/z35tEkvD3…
YouTube video
YouTube
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
52
602
1.6K
33.2K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜா.கமலேஷ் அவர்களின் தந்தை ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
1
22
81
999
செந்தமிழன் சீமான்
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் நிர்வாகி அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்கள் அன்னைத் தமிழ் காக்க தன் இன்னுயிரை இழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ? என்ற புரட்சி பாவலர் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உணர்ச்சிமிகு பாவரிகளுக்கு ஏற்ப தாய் மொழிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தலையை கொடுத்தேனும் அதனை தடுத்து நிறுத்துவதுதான் தமிழர் மரபு என்றபோதிலும், அத்தகைய ஈகத்தால் வரும் இழப்பினை ஏற்க மனம் மறுக்கிறது. வலிக்கிறது! சகோதரர் சிவா திலீபன் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து இந்தியைத் திணிக்கும் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக இன்னும் வலுவான பற்பல வீரியப் போராட்டங்களை முன்னெடுத்து, அன்னைத்தமிழை அழியாது காக்கும் அரணாக களத்தில் நின்றிருக்க வேண்டும் என்கிற சிந்தனையே இத்துயர்மிகு சூழலில் உள்ளத்தில் எழுகிறது. இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதையே இனிவரும் தலைமுறையினருக்கும் அறிவுறுத்தலாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மே 17 இயக்கத்தினருக்கும், தமிழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன். தாய்த்தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
17
260
659
15.3K
செந்தமிழன் சீமான்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 தரவிறக்கம் செய்ய makkalarasu.com #NTKManifesto2026 #நாம்தமிழர்_ஆட்சிவரைவு
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
24
415
822
8.3K
செந்தமிழன் சீமான்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு – 2026 நூல் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு பங்குனி 05 (19-03-2026) காலை 10 மணி முதல் சென்னை கிண்டி-கத்திப்பாறை சந்திப்பில், அண்ணா சாலையில் அமைந்துள்ள லீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) உண்டுறை விடுதி அரங்கில் நடைபெற்றுவருகிறது. youtube.com/live/XWs0Nbr2l…
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
7
284
548
5.1K
செந்தமிழன் சீமான்
🔴 தற்போது நேரலையில் நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு-2026 வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு 19-03-2026 | சென்னை - கிண்டி twitter.com/i/broadcasts/1…
தமிழ்
13
218
372
3.3K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி அ.அறிவழகன் அவர்களின் தாயார் அம்மா பத்மாவதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா பத்மாவதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
7
58
169
3.9K
செந்தமிழன் சீமான்
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள். வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம். எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம். எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம். donate.naamtamilar.org/election_campa… திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! புரட்சி எப்போதும் வெல்லும்! நம் வெற்றி அதைச் சொல்லும்! நம் இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
314
921
2.2K
69K
செந்தமிழன் சீமான்
‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. 1920 முதல் 1970 வரையிலான தமிழ்ச் சிறுகதைகளின் அரை நூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்திய ‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ நூல், நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் நிமிர்வையும் காட்டும் காலப் பெட்டகமாகும். சிறந்த இலக்கியப் படைப்புக்கான உயரிய சாகித்திய அகாடமி விருதினைப் பெறும் அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
254
676
6.3K
செந்தமிழன் சீமான்
உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, 'விவசாயி' சின்னத்தில் வாக்கு சேகரித்து, மக்களிடம் இடையறாது பரப்புரையில் ஈடுபட்டு வரும் அன்பு உறவுகள் அனைவருக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். தேர்தல் பரப்புரையில் உங்களின் ஈடு இணையற்ற உழைப்பைக் காட்டும் காணொளிகள் பெருமிதத்தை தருகின்றன. ‘புதியதொரு தேசம் செய்வோம், மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற இலட்சிய முழக்கத்தோடு தாய்த்தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை நிகழ்த்திட, தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. தன்னிகரில்லா தமிழ்த்தேசிய தத்துவத்தோடும், தனித்துவத்தோடும், மக்களின் துணையோடும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு, ஒவ்வொரு தேர்தலிலும் உயர்வதற்கு, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும், ஒப்படைப்பும் அளப்பரியது. போதிய பொருளாதாரப் பலம் இன்றி, போதிய ஊடக வெளிச்சமின்றி, கடுமையான புறக்கணிப்புகளுக்கு நடுவில், ஊண் உறக்கமின்றி, சோர்வுறாது, அயராது களத்தில் புலியெனப் பாயும் உங்களின் கடின உழைப்பும், உறுதியும்தான் நாம் தமிழர் கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக உருமாற்றியது. அரசியல் சூழ்ச்சியால் சின்னம் பறிக்கப்பட்டபோது உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்புதான் நம்மை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்த்தி, விவசாயி சின்னத்தை நமக்கான நிரந்தரச் சின்னமாக்க உற்றதுணையாக நின்றது. ‘அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டும்தான்; அதிகாரம் மிக வலிமையானது’ என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனை அடைந்துவிட்டால் அனைத்தும் மிக எளிமையானது என்கிறோம் நாம். ஆகவே, அங்கீகாரத்தை பெற்ற நாம் தமிழர் கட்சி, அடுத்த படிநிலையாக அதிகாரத்தை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை நெஞ்சில் சுமந்து நிற்கும் எளிய பிள்ளைகளாக, தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் உண்மையும் - நேர்மையுமாக நிற்கும் தமிழ்த்தேசியத் தத்துவக் கூட்டத்திற்கும், ஊழல், லஞ்சம், இலவசம், திரைக்கவர்ச்சி என்று நிற்கும் தீய திராவிடக் கூடாரத்திற்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போர்தான் இந்தத் தேர்தல். வளர்ச்சி அரசியலுக்கும், வெற்று விளம்பரக் கவர்ச்சி அரசியலுக்கும் இடையே நடக்கும் இப்போட்டியில் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, என் அன்புப் பிள்ளைகள் களத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் சந்தித்த அவமதிப்புகள், இழிசொற்கள், துரோகங்கள் யாவற்றையும் துடைத்தெறிய, அதிகாரத்தை வெல்ல வேண்டிய அதிமுக்கிய தேர்தல் இது என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். எனவே, முன் எப்போதும் இல்லாத வகையில் நாம் தமிழர் பிள்ளைகள் தங்களின் முழு ஆற்றலையும் ஒன்றுதிரட்டி, நம் உயிரினும் மேலான தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி, அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துக் களப்பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அதே நேரத்தில், மண்ணையும் மக்களையும் மீட்டுக் காக்க அயராது உழைப்பினை நல்கும் என்னிலும் இளைய என் தம்பி தங்கைகள், பேரன்பிற்குரிய என் பெற்றோர்கள் உள்ளிட்ட என் அன்பிற்கினிய உறவுகளுக்கு அண்ணன் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடு முழுவதும் தற்போது மிகக்கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே இத்தகைய கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், இனி வரும் நாட்களில் இன்னும் வெப்பம் பன்மடங்காக அதிகரிக்கக் கூடும். ஆகவே, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என் அன்பு உறவுகள் காலை நேரத் தேர்தல் பரப்புரையை முற்பகல் 11 மணிக்கு முடித்துவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பின்னர் பகல் உணவையும், போதிய ஓய்வினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச்சரியாக மாலை 4 மணிக்கு அன்பு உறவுகள் மீண்டும் பரப்புரையினைத் தொடங்கி இரவு 10 மணி வரை பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். பரப்புரைக்குச் செல்லும்போது அனைவரும் தண்ணீர் போத்தல்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சிதரும் பழங்களையும், நுங்கு, இளநீர், பதநீர், மோர் உள்ளிட்ட இயற்கைப் பானங்களையும், பரப்புரை இடை வேளைகளில் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் நம்முடைய கருத்துகளையும், கொள்கைகளையும், ஆட்சி வரைவு திட்டங்களையும் கொண்டுசென்று வாக்குகளைப் பெறுவதில் காட்டும் வேகத்தையும், அக்கறையையும் உங்களின் உடல்நலனை கவனித்துக்கொள்வதிலும் காட்ட வேண்டும். அடுத்து வரும் 35 நாட்களும் களத்தில் இடையறாது பணியாற்ற உடல்நலன் சீராக இருப்பது மிக மிக அவசியம். நான் எப்போதும் சொல்வதுபோல, ‘நம்முடைய பாதுகாப்பே, நாம் பெரிதும் நேசிக்கும் நாட்டின் பாதுகாப்பு’ என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். முறையான திட்டமிடல், எளிதான பயணம், சீரிய செயல் இவையே, நம் கடின உழைப்பின் பயனை முழுமையாகப் பெற உதவிடும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வழிதான், அது கடின உழைப்பு மட்டுமே! உங்களின் உடல்நலப் பாதுகாப்பு கடின உழைப்பினை செலுத்த வழிவகுக்கும்! உங்களின் சோர்வில்லாத கடின உழைப்பு உறுதியாக நம்மை வெல்ல வைக்கும்! புரட்சி எப்போதும் வெல்லும்! நம்முடைய வெற்றி அதனைச் சொல்லும்! இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! நாம் தமிழர் ! அன்பின் நெகிழ்வுடன் உங்கள் அண்ணன் சீமான்
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
39
694
1.4K
25.1K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - திருவாடானை சட்டமன்றத் தொகுதி, மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி செல்வக்கனி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த செல்வக்கனி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி செல்வக்கனி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
60
141
2.2K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வே.அனந்தகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, மாணவர் பாசறையில் களப்பணியாற்றிவந்த வே.அனந்தகுமார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்புத்தம்பி வே.அனந்தகுமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
3
68
164
2.6K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் ஐயா ம.மதியழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
39
91
1.7K
செந்தமிழன் சீமான்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு 14-03-2026
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
26
451
1.7K
25.9K
செந்தமிழன் சீமான்
இந்தியாவின் அதி உயரிய இலக்கிய விருதான, ஞானபீடம் விருதினை இவ்வாண்டு பெறுவதற்கு தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம், ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன். பல்லாயிரம் ஆண்டுகால மரபு செய்யுட்பாக்கள் உயிர் கொள்ளும் அடைகாப்பு..! நூற்றாண்டு கண்ட புதுக்கவிதைப் பூக்கள் நடை பயிலும் குயில் தோப்பு..! மரபு கவிதை விதிகள் மீறாமலும் புதுக்கவிதை மரபுகள் மாறாமலும் தீந்தமிழ் திரையிசைப் பாடல்கள் ஈன்று தரும் இனிய யாப்பு..! கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி, கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதி, வடுகப்பட்டி முதல் வால்கா வரையில் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வடித்து தமிழ் இலக்கியப் பீடத்தில் பேரரசனாய் வீற்றிருக்கும், முத்தமிழ்ப்  பேரறிஞர் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மணிமகுடத்தில் ஒளிவீசும் வைரமாய் ஞானபீடம் விருது எந்நாளும் மின்னிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! @Vairamuthu
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
9
194
665
9.3K
செந்தமிழன் சீமான்
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும்! இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது, நோன்பு காலம் என்றும் பாராமல் அநியாயப் போரைத் தொடுத்த அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வருவது வெட்கக்கேடானது. வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் பசிக்காகத் தொடங்கப்பட்ட இந்த அநியாயப் போர், ஆதரவளித்த வளைகுடா நாடுகளை நேரடியாகவும், போரோடு தொடர்பில்லாத உலகின் ஏனைய நாடுகளை மறைமுகமாகவும் பாதிக்கத் தொடங்கியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. இக்கொடும் போரினால் ஒவ்வொரு நாளும் கேட்கும் மக்களின் மரண ஓலம் மிகுந்த துயரத்தைத் தருகிறது. போரினால் பாதிக்கப்படும் இருநாட்டு மக்களும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வால் தவித்துவரும் காட்சிகள் மிகுந்த வேதனைக்குரியவை. அதே சமயம் போருக்கு தொடர்பில்லாத உலகின் ஏனைய நாடுகளில் வாழும் மக்களும் எரிபொருள் இன்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பரிதாபகரமானதாகும். ஈரான் நாட்டு உச்ச தலைவர் மதிப்பிற்குரிய மாவீரர் அயத்துல்லாஹ் கொமைனி அவர்களை அநியாயமாக கொன்று, அந்நாட்டின் மீது திணித்த அநீதியான போரினை, இறையாண்மையைக் காக்கும் வலுவான எதிர்ப்புப்போராட்டத்தால், உலக நாடுகளின் மீதான போராக மாற்றியுள்ளது ஈரான் பெருந்தேசம். ஈரான் முதுகில் விழும் ஒவ்வொரு அடியும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் மீதும் விழும் அடியாக மாறியுள்ளது. வளைகுடா நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாக முடங்கி, ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டாலர் வர்த்தகம் நட்டமாகி, அந்நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. போரினை கண்டிக்காது அமைதி காத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் பெரும் இன்னலுக்கு ஆளாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் மீதான அநியாயப் போரினைக் கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப்போரின் குற்றவாளிகள்தான். நடுநிலைமை என்ற பெயரில் அமைதி காப்பதும் ஆபத்தானதாகும். உலகில் எங்கு அநீதி நடந்தாலும், அதை யார் செய்தாலும் நீதியின் பக்கம் நின்று கண்டிக்க வேண்டியது எந்த அளவிற்கு முதன்மையானது என்பதை இப்போரின் மூலம் உலக நாடுகள் உணர்ந்திருக்கும். கண்முன்னே நடக்கும் அநீதியைக் கண்டு, இதுவரை இருந்ததுபோல் இனி உலக நாடுகள் கண்டும் காணாமல் இருந்திட முடியாது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. அத்தகைய ஒரு பாடத்தை ஈரான் பெருந்தேசம் இப்போரின் மூலம் உலகிற்கு புகட்டியுள்ளது. இனியேனும் உலக நாடுகள் தங்கள் தவறை உணர்ந்து ஈரான் மீதான அநீதியான போரினை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். உடனடியாக அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளிடம் ஈரான் மீதான போரினைக் கைவிட ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில், முதன்மையாக உள்ள இந்தியப் பெருநாடு, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் தமக்குள்ள நல்லுறவினை பயன்படுத்திப் போர் நிறுத்தம் ஏற்படவும், மீண்டும் அமைதி திரும்பவும் வழிவகுக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவகங்கள் முடக்கம் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கு நியாயத்தின் பக்கம் நின்று அமைதிக்கான முன்முயற்சியை எடுப்பது ஒன்றே ஒற்றைத் தீர்வாகும். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
23
379
777
11.6K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் மாவட்ட மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா ம.மதியழகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
1
44
138
2.5K
செந்தமிழன் சீமான்
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26 இரவு 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும், சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியும் அதிர்ச்சியையும், பெரும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்ற அளவிற்கு, ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்வும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்துக்குரியது. பட்டப்பகலில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடு புகுந்து தாக்குதல், சாலையில் செல்வோர் மீது தாக்குதல், சிறு வியாபார கடைகளைத் தாக்கி உடைப்பது, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் கட்டுக்கடங்காத கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் என மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத அளவிற்கு தமிழ்நாடு மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. பள்ளி சிறுமிகள் முதல், 80 வயது பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெருந்துயரங்கள் நாளும் அரங்கேறுகின்றது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுநிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், அதன் பிறகும் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காததே கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அவலம் நிகழ காரணமாகியது. அதன் பிறகும் திமுக அரசின் தொடர் அலட்சியமே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தையும், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும், தற்போது மதுராந்தகத்தில் 16 வயது சிறுமியும், சென்னையில் 22 வயது கல்லூரி மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்தேற காரணமாகும். திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட போகிறார்களோ என்ற பேரச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்காமல் இந்த குற்றங்களை ஒழிக்கவே முடியாது. மதுவையும், போதைப்பொருட்களையும் ஒழிக்கக்கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மதுவை விற்கும் அரசால் குற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டு இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? இதுதான் பெண்களின் வாழ்வை முன்னேற்றும் திமுக அரசின் செயல்முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? தேர்தல் அறிவிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கூட்டணி பேரத்தில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காட்டாதது ஏன்? கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்குகள் எத்தனை? அவற்றில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? எத்தனை வழக்குகள் கைவிடப்பட்டன? போக்சோ குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய வழக்குகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பம் என்பதிலிருந்தே அந்த சட்டத்தையும், பெண்களின் பாதுகாப்பையும், மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு. 1000, 2000, 2500 என்று உரிமைத்தொகை தரும் திராவிட கட்சிகள் பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் அறிவிக்காதது ஏன்? பெண்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் உறுதிப்படுத்துவதே பெண்களுக்கு வழங்கும் உண்மையான உரிமையாகும். ஆகவே, விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை புரிந்து படுகொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி மற்றும் மதுராந்தகம் அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியையும், சென்னை அடையாறில் கல்லூரி மாணவியையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுங் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய - மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
33
640
1.1K
21.2K
செந்தமிழன் சீமான்
அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள் தனன்யா அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால்[Spinal Muscular Atrophy – SMA (Type 2)] பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு, முற்றிலும் குணமடைய தேவைப்படும் மருந்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் & துர்காதேவி இணையர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நோய் தீர்த்து உயிர்காக்கும் ஊசியை செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாக்க முடியும். சிறிய வயதில் கொடுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அன்புமகள் தனன்யாவிற்கு நடப்பு மார்ச் மாதத்திற்குள் மருந்தினை செலுத்திட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், விரைந்து 9 கோடி ரூபாய் திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை உள்ளது. பிஞ்சு குழந்தையின் உயிர் காத்திட மருத்துவ நிதியுதவிக்கான திரள் நிதி பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து அன்புமகள் தனன்யாவை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் மருந்தின் விலை எளிய மக்களால் செலுத்த முடியாத வகையில் 9 கோடி ரூபாய் என்ற அளவில் பெருந்தொகையாக இருப்பதை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு அரசு மருத்துவத்திற்கான முழு செலவையையும் ஏற்கும் சிறப்பு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். தேவையற்ற இலவசங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை வீணடிக்கும் தமிழ்நாடு அரசு, ஏதுமறியா பிஞ்சு குழந்தைகளின் இன்னுயிர் காக்கும் இத்தகைய இன்றியமையாத மருத்துவச் செலவினை ஏற்பதில் எவ்வித தயக்கமோ, காலதாமதமோ செய்திடாது விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். வங்கி கணக்கு விபரம்:- Ac No: 8215828115 INDIAN BANK Ac Name: H D DHANANYA IFSC CODE: IDIB000M318 MICR CODE: 611019011 GPAY : 84380 04274 தொடர்புக்கு: 9789514174
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
12
601
896
15.3K
செந்தமிழன் சீமான்
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் அக்ரம்கான் மற்றும் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் இன்று 11-03-2026 நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்தித்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சிக்கு தங்களது இயக்கங்கள் சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
26
610
1.6K
30.5K