Senthil Jagannathan
16 posts



அகரம் பவுண்டேஷன் வெளியீடாக வெளிவரும் எனது இரண்டாவது நூல் "கதைகளில் பேசும் குழந்தைகள்" இன்று சிவகுமார் கல்வி & அறக்கட்டளை விருது விழாவில் திரு. சிவகுமார், பேராசிரியர் திரு.கல்யாணி, திரு.சூர்யா, திரு.கார்த்தி, ஆகியோரால் வெளியிடப்பட்டது❤️ அனைவருக்கும் நன்றிகள்!




மனிதர்கள் பேசப் பழகிய காலத்தில் முதலில் தோன்றிய பேச்சுமொழி இலக்கியம், ‘கதை’யாகவே இருந்திருக்கக் கூடும்! கதைகளின் வழியேதான் அனுபவ அறிவும், நீதிநெறியும் அடுத்த தலைமுறைக்குப் பகிரப்படுகிறது. இலக்கிய வாசிப்பையும், எழுத்தாளர்களையும் குழந்தைகளின் உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக 'கதைகளில் பேசும் குழந்தைகள்!' தொடர் ‘யாதும்’ மாத இதழில் வெளிவந்து @agaramvision அகரம் பவுண்டேஷன் வெளியீடாக தற்போது நூல் வடிவம் பெறுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் @SenthilJwriter அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கதைகளின் வாயிலாக அற விழுமியங்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் குழந்தைநேய எழுத்தாளர்கள், கதைச் சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், நன்றியும்.! agaram.in/kathaikal-pesu…










