Tamil Maanila Congress - Moopanar

966 posts

Tamil Maanila Congress - Moopanar banner
Tamil Maanila Congress - Moopanar

Tamil Maanila Congress - Moopanar

@TMC_Moopanar

Katılım Nisan 2024
1 Takip Edilen153 Takipçiler
Tamil Maanila Congress - Moopanar
"தேர்வு எழுதும் மாணவர்கள் தைரியத்தோடும், நம்பிகையோடும் தேர்வு எழுதுங்கள் வெற்றி நிச்சயம்" நீட் தேர்வு எழுதும் மாணவ செல்வங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan வாழ்த்து மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) இன்று இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. கடந்த தேர்வின் போது நடைபெற்ற தேர்வுதாள் கசிவு குளறுபடியால், தற்பொழுது மீண்டும் நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மனத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் தேர்வு எழுதவும். நீட் தேர்வை பொறுத்த வரை இந்த ஆண்டு தேர்வு எழுதி வெற்றிபெறாதவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆகையால் தேர்வு பயத்தால் தவறான முடிவை எடுப்பது சரியல்ல. ஒரிரு நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்கொலை பிரச்சனைக்கு என்றும் தீர்வாகாது. தேர்வு எழுதும் மாணவர்கள் நம்பிக்கையோடு, தைரியத்துடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி கிடைக்கும். உங்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் இத்தேசத்தில் பரந்து விரிந்துள்ளது. இத்துறையில் இல்லையென்றாலும் எத்துறையிலும் சாதிக்கலாம். அதற்கான சூழலை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்சதேவையில்லை. விடா முயற்சியோடு முயன்றால் வெற்றி நிச்சயம். தங்கள் கனவுகள் நிறைவேற மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #NEET #neetexam #NEETStudents #NEETSuccess
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
17
Tamil Maanila Congress - Moopanar
தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்" த.மா.கா. கோரிக்கை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இன்னலை போக்குவதற்கு தமிழக அரசு சார்பில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பதிவு செய்யப்பட்டு 1975-ஆம் ஆண்டு அரசு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என்பது விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்து, அவற்றை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, பின்னர் பொது விநியோக திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது. கடந்த 50 வருடத்திற்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த தானியங்களை முறையாக பராமரிக்காமல் வீணடித்து அவற்றின் தரம் குறைவாகவே மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதுதான் காலத்தின் கொடுமை. ஆட்சி மாற்றம் எத்தனை ஏற்பட்டாலும் இந்த காட்சி மட்டும் மாறவில்லை. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்மணிகள் முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொறு விவசாய பருவத்திற்கும் எவ்வளவு டன் நெல் விளையும் என்று தெரியும். ஆனால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றை சேமிக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை அரசு உருவாக்காமல் இப்பது ஏன்?. கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் உங்களுக்கு தெரியவில்லையா.? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசுகள் செய்த தவறை தற்பொழுதுள்ள த.வெ.க அரசும் தொடரக் கூடாது. நாட்டிற்கே சோறுபோடும் விவசாயிகளின் நலனில் அக்கரையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அங்கு உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு ஏற்ப பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)சார்பாக கேட்டுகொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #நெல்சேமிப்புமையம் #நெல்சேமிப்பு #நவீனநெல்சேமிப்பு #நெல்மூட்டைசேமிப்பு #நெல்கொள்முதல் #PaddyStorage #PaddyStorageCenters #TamilNaduPaddy #FarmerWelfare #RiceStorage #PaddyProcurement
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
16
Tamil Maanila Congress - Moopanar
தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்" த.மா.கா. கோரிக்கை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இன்னலை போக்குவதற்கு தமிழக அரசு சார்பில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பதிவு செய்யப்பட்டு 1975-ஆம் ஆண்டு அரசு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என்பது விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்து, அவற்றை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, பின்னர் பொது விநியோக திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது. கடந்த 50 வருடத்திற்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த தானியங்களை முறையாக பராமரிக்காமல் வீணடித்து அவற்றின் தரம் குறைவாகவே மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதுதான் காலத்தின் கொடுமை. ஆட்சி மாற்றம் எத்தனை ஏற்பட்டாலும் இந்த காட்சி மட்டும் மாறவில்லை. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்மணிகள் முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொறு விவசாய பருவத்திற்கும் எவ்வளவு டன் நெல் விளையும் என்று தெரியும். ஆனால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றை சேமிக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை அரசு உருவாக்காமல் இப்பது ஏன்?. கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் உங்களுக்கு தெரியவில்லையா.? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசுகள் செய்த தவறை தற்பொழுதுள்ள த.வெ.க அரசும் தொடரக் கூடாது. நாட்டிற்கே சோறுபோடும் விவசாயிகளின் நலனில் அக்கரையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அங்கு உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு ஏற்ப பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)சார்பாக கேட்டுகொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #நெல்சேமிப்புமையம் #நெல்சேமிப்பு #நவீனநெல்சேமிப்பு #நெல்மூட்டைசேமிப்பு #நெல்கொள்முதல் #PaddyStorage #PaddyStorageCenters #TamilNaduPaddy #FarmerWelfare #RiceStorage #PaddyProcurement
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
15
Tamil Maanila Congress - Moopanar
தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்" த.மா.கா. கோரிக்கை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழில் இயற்கை சீற்றங்கள் மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் இன்னலை போக்குவதற்கு தமிழக அரசு சார்பில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பதிவு செய்யப்பட்டு 1975-ஆம் ஆண்டு அரசு பொது நிறுவனமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என்பது விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்து, அவற்றை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, பின்னர் பொது விநியோக திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்நிறுவனத்தின் அமுதம் சிறப்பங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது. கடந்த 50 வருடத்திற்கு மேலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த தானியங்களை முறையாக பராமரிக்காமல் வீணடித்து அவற்றின் தரம் குறைவாகவே மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதுதான் காலத்தின் கொடுமை. ஆட்சி மாற்றம் எத்தனை ஏற்பட்டாலும் இந்த காட்சி மட்டும் மாறவில்லை. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல்மணிகள் முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாமல் வீணாகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொறு விவசாய பருவத்திற்கும் எவ்வளவு டன் நெல் விளையும் என்று தெரியும். ஆனால் உற்பத்திக்கு ஏற்ப அவற்றை சேமிக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை அரசு உருவாக்காமல் இப்பது ஏன்?. கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் உங்களுக்கு தெரியவில்லையா.? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அரசுகள் செய்த தவறை தற்பொழுதுள்ள த.வெ.க அரசும் தொடரக் கூடாது. நாட்டிற்கே சோறுபோடும் விவசாயிகளின் நலனில் அக்கரையோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் அங்கு உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு ஏற்ப பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)சார்பாக கேட்டுகொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #நெல்சேமிப்புமையம் #நெல்சேமிப்பு #நவீனநெல்சேமிப்பு #நெல்மூட்டைசேமிப்பு #நெல்கொள்முதல் #PaddyStorage #PaddyStorageCenters #TamilNaduPaddy #FarmerWelfare #RiceStorage #PaddyProcurement
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
11
Tamil Maanila Congress - Moopanar
சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) மாநில செயற்குழு உறுப்பினர் பெரம்பூர் திரு. N.D. சத்தியநாராயணன் அவர்களின் மாமனார் அவர்கள் காலமானதை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் நேற்றைய தினம் (20.06.2026) அன்னாரது இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.. #gkvasan #ஜி_கே_வாசன் #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tamilmaanilacongress #TNPolitics #tamilnadupolitics #tmcfortn
Tamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
13
Tamil Maanila Congress - Moopanar
சென்னையில், மூத்த வழக்கறிஞரும், IJK கட்சியின் நிறுவுனர் திரு. பாரிவேந்தர் அவர்களின் சம்மந்தியுமான திரு. G .இராஜன் உடையார் அவர்கள் உடல்நிலைக் குறைவால் காலமானதை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் நேற்று 18.06.2026 இரவு ராயபேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவர்களது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். #gkvasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #ஜி_கே_வாசன் #tamilmaanilacongress #tamilnadupolitics #TNPolitics
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
27
Tamil Maanila Congress - Moopanar
நேற்று 17.06.2026 மாலை, பாண்டிச்சேரியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொருளாளர் வந்தவாசி திரு. செல்வகுமார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் #ஜி_கே_வாசன் #gkvasan #TNPolitics #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tamilmaanilacongress #tamilnadupolitics
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
2
27
Tamil Maanila Congress - Moopanar
சேலம், மாரமங்களத்துப்பட்டியில், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சேலம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு.K. செந்தில்குமார் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் இன்று 18.06.2026 கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
16
Tamil Maanila Congress - Moopanar
சிவகங்கை வடக்கு மாவட்டத் தலைவர் திரு.R. இராஜலிங்கம் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் இன்று 17.06.2026 கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். #ஜி_கே_வாசன் #tamilmaanilacongress #தமிழ்_மாநில_காங்கிரஸ் #gkvasan #TNPolitics #tamilnadupolitics
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
15
Tamil Maanila Congress - Moopanar
திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையத்தில் மறைந்த த.மா.கா மாநில செயலாளர் கங்கை P.செல்வதுரை அவர்களின் திருவுருவப் படத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் இன்று 16.06.2026 திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சி தலைவர்களும், முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அது சமயம் த.மா.கா(மூ) வின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
24
Tamil Maanila Congress - Moopanar
திருவாரூர், ஆன்மீக ஆனந்த குருகுலத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று 16.06.2026 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று மாணவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டார்கள். அது சமயம் த.மா.கா(மூ) வின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
23
Tamil Maanila Congress - Moopanar
"குற்றச் செயலுக்கு அடிப்படையாக விளங்கும் போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் #அறிக்கை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3-வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த கொடூர குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். மூன்று வயதே ஆன குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி முள்புதரில் வீசி சென்ற நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சுய நினைவுடன் இருப்பவர்களால் இதுபோன்ற அற்ப செயலில் ஈடுபட முடியாது. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது போதைப் பொருட்கள் பயன்பாடே காரணம். தற்பொழுது தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள்களை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த ஆட்சியில் நடைபெற்றது போலவே இன்றைய ஆட்சியிலும் தொடர்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குற்றசெயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ள நிலையில் மேலும் உள்ள குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு அக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாக இருக்கும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக மூடவேண்டும் என்று தமிழக அரசை, தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பாக கேட்டுக்கொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
18
Tamil Maanila Congress - Moopanar
சென்னை, நீலாங்கரையில் நேற்று மாலை 14.06.2026 நடைபெற்ற த.மா.கா(மூ) மாநில பொதுச்செயலாளர் திரு. S. தினகரன் அவர்களின் சகோதரியின் சதாபிஷேக விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
22
Tamil Maanila Congress - Moopanar
இன்று 14.06.2026, ஞாயிற்றுக்கிழமை, காலை, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் திரு. @GK__Vasan அவர்கள் தலைமையில் சென்னை, எழும்பூர், ஹோட்டல் அசோகாவில் த.மா.கா(மூ) செயற்குழு கூட்டம் தொடங்கியது. தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள். இச்செயற்குழு கூட்டத்தில் த.மா.கா(மூ) வின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டம் இனிதே தொடங்கியது. #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #TamilMaanilaCongress
தமிழ்
0
0
1
39
Tamil Maanila Congress - Moopanar
கோயம்புத்தூரில் இன்று 13.06.2026 நடைபெற்ற கோவை மாநகர் தெற்கு மாவட்ட த.மா.கா(மூ) மாணவரணி தலைவர் திரு. M. விஷ்ணுராம் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
136
Tamil Maanila Congress - Moopanar
தமிழக அரசு - ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் #அறிக்கை தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது. கடலூர் அருகே புதிதாக நான்கு ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதாவது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதால், புதிய கிணறுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் இந்த எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது. ஏனென்றால் விவசாயத் தொழிலுக்கும், காடுகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கடலூர் மாவட்டத்தையும், கடலோர பகுதிகளின் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே தமிழக அரசு கடலூர் மாவட்டப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க விண்ணப்பித்துள்ள ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #ஹைட்ரோகார்பன்திட்டம் #டெல்டாவிவசாயிகள் #HydrocarbonProject #Hydrocarbon #DeltaFarmers #StopHydrocarbon #TamilNaduHydrocarbon #ONGCProtest
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
38
Tamil Maanila Congress - Moopanar
தேனி, கொடைக்கானல் பிரிவு ரோடு, காட்ரோட்டில் உள்ள மறைந்த திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டிற்கு இன்று 12.06.2026 சென்று அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet mediaTamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
30
Tamil Maanila Congress - Moopanar
தேனி மாவட்டம் போடியில் இன்று 12.06.2026 நடைபெற்ற திரு. ராமர் Ex.MC அவர்களின் இல்லத் திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் . #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #TamilMaanilaCongress
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
1
24
Tamil Maanila Congress - Moopanar
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) செயற்குழு கூட்டம் வருகின்ற 14.06.2026 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் அழைப்பு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 14.06.2026, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. எனது தலைமையில் சென்னை, எழும்பூர், ஹோட்டல் அசோகாவில், காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இயக்கத்தின் இந்த முதல் கூட்டத்தில் இயக்கம் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். த.மா.கா(மூ) வின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு இயக்கத்தின் தொடர் பயணத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
14
Tamil Maanila Congress - Moopanar
தமிழக அரசு – இன்று ஜூன் 12 - மேட்டூர் அணையை திறக்காததால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan அவர்கள் #அறிக்கை. ஜூன் 12 ஆம் தேதி வழக்கம் போல் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் விவசாயிகள் பயனடைவார்கள். இந்த வருடம் இன்று ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்பதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காரணம் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் குறுவை சாகுபடியை செய்ய முடியும். இல்லையென்றால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். குறிப்பாக மேட்டூர் அணையின் நீரை நம்பித்தான் நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களில் பயிரிட்டு சாகுபடி செய்ய முடியும். ஆனால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் குறுவை சாகுபடி பெரிதளவு பாதிக்கப்பட்டு, நெல் விளைச்சல் பெருமளவு குறையும். மேலும் நீண்ட கால பயிர்களை விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூர் அணையின் காவிரி நீர் தேவை. மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த நேரிட்டால் நிலத்தடி நீர்மட்ட சரிவும் ஏற்படும். மேலும் அதிகப்படியான மின்சாரப் பயன்பாடும், மின் வெட்டும் விவசாயத் தொழிலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இச்சூழலில் மேட்டூர் அணையின் நீரை நம்பியிருக்கும் டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்களுக்கும் உதவிடும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். #ஜி_கே_வாசன் #GKVasan #தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress #TVKGovt #மேட்டூர்அணை #மேட்டூர் #MetturDam #Mettur #KaveriDam #FarmersWelfare #DeltaIrrigation #TamilNaduDam #WaterReserve
Tamil Maanila Congress - Moopanar tweet media
தமிழ்
0
0
0
50