பேரலை

43.8K posts

பேரலை banner
பேரலை

பேரலை

@YEM_AAR

#Athiest | #Periyar | @AsiriyarKV | @periyar_vision alt id 👉@YEM_AAR13 ⚫ 📌https://t.co/pNSkKKTGyo

TN Union of India Katılım Şubat 2021
298 Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
பேரலை
பேரலை@YEM_AAR·
#ஆழ்ந்தஇரங்கல் #வீரவணக்கம்
பேரலை tweet media
QME
0
0
0
52
பேரலை
பேரலை@YEM_AAR·
#ஏமாற்றம்
TN NEWS LIVE@TNNEWSLIVE_

அரசு சிறப்பு பேறுந்து மேற்கொள்ளாதால் சுற்றுலா பயணிகளிடம் மோதல் @CMOTamilnadu கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பேருந்து சேவையை முறையாக மேற்கொள்ளாத தமிழக அரசு உதகையில் போதிய சுற்றுலா பேருந்துகள் இயக்கபடாததால் சுற்றுலா பயணிகளிடையே மோதல்.. தொட்டபெட்டா காட்சிமுனையில் சுற்றுபேருந்தில் ஏறுவதில் சுற்றுலா பயணிகளிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர போலீஸ் பாதுகாப்பும் இல்லை என்றும் குற்றச்சாட்டு.

QHT
0
0
1
20
பேரலை retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
-அண்ணே நீங்க பெரிய ஆளுணே... --உனக்கு தெரியுது.... இந்த ஊர் ஜனங்களுக்கு தெரியலையே.... உபயம்: கவுண்டமணி- செந்தில்
தமிழ்
68
536
1.6K
36.2K
பேரலை retweetledi
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
💠கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! 💠‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்’ என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு! 💠ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்! தேர்தல்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை – நியாயமான ஜனநாயக முறையில் நடைபெறுவது வாடிக்கை. அதில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பது எளிதில் முன்கூட்டியே கணிக்க முடியாத புதிராக அமைவதும் அதன் தனித்தன்மையாகும். 💠ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளம் ஆகாது! ஒரு தேர்தல் முடிவுக்குப் பின், மக்கள் வாக்களித்து வேறு ஒரு கட்சியை ஆட்சியில் அமர வைக்கும்போது, (அது முழு அறுதிப் பெரும்பான்மையாக இருந்தாலும் அல்லது கூட்டணி ஆட்சியாக அமைந்தாலும்) முந்தைய அரசின் திட்டங்களையெல்லாம்பற்றி ஆக்கப்பூர்வமற்றோ அல்லது வன்மை உணர்வோடோ அத்திட்டங்களைக் கைவிடுதலோ அல்லது தலைகீழாக மாற்றுவதோ – வீம்பு செய்வதோ ஆரோக்கிய அரசியலுக்கு அடையாளம் ஆகாது! தமிழ்நாட்டில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான த.வெ.க. மற்றும் கூட்டணி ஆட்சிகளின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியில், மிகவும் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய கல்வித் துறையில் (உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை போன்ற முக்கிய துறைகளில்) அரசியல் கண்ணோட்டமின்றி, மக்கள் நலக் கண்ணோட்டமே மேலோங்கி இருக்கவேண்டும். 💠சரியான நிலைப்பாடாகும்! அதில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் மும்மொழித் திட்டத் திணிப்புக்கு, தலையாட்டாது, ஒப்புதல் தராது – ‘‘இருமொழிக் கொள்கையே தொடரும்’’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘‘முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலிருந்த ஆட்சி பின்பற்றிய முக்கிய திட்டமான உலகமே பாராட்டி வியந்த பள்ளி மாணவர்களுக்கான ‘காலை உணவுத் திட்டம்’ இந்த ஆட்சியிலும் தொடரும்’’ என்று, இன்று (25.5.2026) அவர் அறிவித்திருப்பது சரியான நிலைப்பாடாகும்! இது செயற்பாட்டுக்கு வரவேண்டும். நீதிக்கட்சி ஆட்சியில் சர்.பிட்டி தியாகராயர் முதன்முதலில் 1920–1923 காலகட்டங்களில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். அன்றைய அதிகாரம் குறைவாக இருந்த இரட்டை ஆட்சியின் நிதி மறுத்தல் காரணமாகப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, 1954 இல் பதவிக்கு வந்த கல்வி வள்ளல் காமராசர் ஆட்சியில், பகல் உணவுத் திட்டம், மக்கள் திட்டமாக அனைவரின் நிதி உதவி பெற்றுத் தொடங்கியது. பிறகு அரசு கல்வி நிதியளிக்கும் திட்டமாகத் தொடர்ந்தது. ஆட்சிகள் மாறிய நிலையில், தி.மு.க. – அ.தி.மு.க. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். மற்றும் அடுத்து வந்த ஆட்சி மாற்றங்களிலும், இத்திட்டம் நிறுத்தப்படாமல், ‘‘சத்துணவுத் திட்டம், இரண்டு முட்டை (அ) இரண்டு வாழைப்பழம்’’ என்று தொடர்ந்தது. 💠பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்! அதைத் தாண்டி, மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பகல் உணவுத் திட்டத்துடன், ‘‘காலை உணவுத் திட்டத்தையும்’’ கொண்டு வந்ததனால், சிறு குழந்தைகளின் பசி போக்கி, வகுப்புக்குச் சென்று கவனம் செலுத்திப் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவு, குழந்தைகளின் கல்வி மீதான ஈர்ப்பு, வளர்ச்சி, ஏராளமான பிள்ளைகள் தவறாது வகுப்புக்குச் சென்றனர். பிஞ்சு உள்ளங்களுக்கு, பள்ளியும், வகுப்புப் பாடங்களும் விருப்பமிக்கவையாக ஆயின. 💠ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக! இதுபோன்ற திட்டங்கள் அனைத்தையும், புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தொடர்வது மிகவும் தேவையானது. சமூகநீதித் திட்டங்களும் இதுபோல தொடர வேண்டியது முக்கியம். ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக! எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு, பொதுவானவர்களின் சுட்டிக்காட்டலுக்கு ஆளுங்கட்சி ‘அரசியல்’ பதில்கள் தராமல், ஆக்கப்பூர்வ ஆளுமை பதில்களையும், செயல்களையும் செய்வது அதன் முக்கிய பணியாக இருக்கவேண்டும். - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 25.05.2026
தமிழ்
0
22
46
1.3K
பேரலை retweetledi
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை! வன்மையான கண்டனத்திற்குரியது! கோவையில், கடந்த 21.5.2026 அன்று மாலையே ஒரு சிறு பெண் காணாமற் போனார் என்ற புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த சிறு பெண் (10 வயது) கடத்தப்பட்டதோடு, இரு மனித மிருகங்களால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட் டுள்ளார். சூலூருக்கு அருகில் உள்ள கண்ணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குளக்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் அந்தப் பச்சிளம் பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது என்ற கொடுஞ் செய்தியைப் படிக்கும்போது, நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்! கடந்த மூன்று வாரங்களாகவே ஆங்காங்கு நடைபெற்ற கொலைகளும், சட்டம் – ஒழுங்குக்கு சவால் விட்ட நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. இதே காரணத்தை முந்தைய தி.மு.க. ஆட்சி மீது குற்றஞ்சாட்டித்தான் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான கட்சி, ஆட்சியைப் பிடித்தது என்பது உலகறிந்த உண்மை. முதலமைச்சர் உடனடியாக காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளை அழைத்து கலந்தாலோசித்து, குற்றம் புரிந்த அந்தக் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, மிகக் கடுமையான – உச்சக்கட்டத் தண்டனையைப் பெற்றுத் தரும் வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசர, அவசியமாகும்! இதுபோன்ற நிகழ்வுகள் இதுவே கடைசியானதாக இருக்கவேண்டும் என்பதால், மக்கள் பாதுகாப்புக்கு  சட்டம் – ஒழுங்குக்கு உள்பட்ட பணிகள் முழு வீச்சில்  முடுக்கிவிடப்பட வேண்டும். - கி.வீரமணி   தலைவர், திராவிடர் கழகம் 24.5.2026            சென்னை #SaveChildren
தமிழ்
0
44
82
2.2K
பேரலை retweetledi
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
🔹மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! 🔹கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூரில் மே 31 அன்று எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்! காவிரியின் பாதையில் இந்தியாவின் மிகப்பெரிய அணைக் கட்டுகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணை 1931 இல் கட்டப்பட்டு ஏறத்தாழ 12,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. அதன் பிறகு 1960 முதல் 1980 வரை அடுத்தடுத்து கபினி, ஹேமாவதி, ஹரங்கி, சுவர்ணாவதி ஆகிய பெரிய அணைகள் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரின் வரத்து குறையத் தொடங்கியது. 🔹60 ஆண்டுகளுக்கும் மேலான உரிமைப் போராட்டம்! அதிக மழை வெள்ளம் என்றால் மட்டும் அணையைத் திறந்து விடுவதும் (Drainage outlet), மற்ற நேரங்களில் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிய அளவைக் கூட வழங்க மறுப்பதுமாக கருநாடகத்தை ஆளும் எந்தக் கட்சியின் அரசாக இருந்தாலும் நடந்து கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சித்த சூழலில் தான், இதற்கொரு நடுவர் மன்றம் அமைத்துத் தீர்வு காணவேண்டுமென்று திராவிடர் கழகம் முன்மொழிந்து, ஏராளமான போராட்டங்களுக்குப் பிறகு அது அமைக்கப்பட்டு, அதன் தீர்ப்பு நெடுங்காலம் தள்ளிப் போடப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தின் மூலமும் தமிழ்நாட்டின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க. என  ஆண்ட கட்சிகள் இரண்டும், அதன் தலைவர்களும் வேண்டிவற்றைச் செய்து நமது உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர். காவிரிப் பிரச்சினைக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் வெளிவந்து, இப் பிரச்சினை ஒரு வழியாக ஓய்ந்தது என்ற நிலையில் தான் புதிதாக மேகதாது அணை கட்டுகிறோம் என்றொரு பிரச்சினையைக் கிளப்பினர் கருநாடக அரசியல்வாதிகள். காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று அங்கிருக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இவ் விவகாரத்தில் முந்துவது யார் என்றே இதை அரசியல் பிரச்சினையாக்கி உள்ளனர். தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் ஒக்கேனக்கல்லுக்கு 15 கிலோ மீட்டர் முன்பு ராம்நகர் மாவட்டம், ஆடு தாண்டும் காவிரி என்னும் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்ற இந்தப் பரிந்துரையை வைத்து கடந்த 11 ஆண்டுகளாக அங்கு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவிரியில் இரண்டு மாநிலங்களும் புதிதாக எந்த அணை கட்டுவதாக இருந்தாலும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை ஏற்கெனவே இருக்கிறது. மேகதாது அணை திட்டத்திற்குத் தன்னிச்சையாக சுற்றுச் சூழல் அறிக்கை தயாரிக்கும் முயற்சி, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் கடந்த காலங்களில் கருநாடக அரசுகள் முயற்சித்த போது தமிழ்நாடு சட்டரீதியாக முறையிட்டுத் தடுத்துள்ளது. 🔹உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி... மேகதாது அணைத் திட்ட அறிக்கையை 2018இல் மத்திய நீர்வள ஆணையத்திடம் கருநாடக அரசு தாக்கல் செய்தது, இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு நீதிமன்றம் சென்றது. திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கருநாடகா அனுமதி கேட்டது. கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த 2025 நவம்பரில் இது தொடர்பாக ஆணையிட்ட உச்சநீதிமன்றம், ‘‘காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்றால் தான் கருநாடகா அடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலை நாட முடியும். எனவே, இன்னும் இரு ஆணையங்களும் அது குறித்து முடிவெடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை” என்பதாகத் தீர்ப்பு வழங்கியது. கருநாடக அரசு அடுத்தடுத்து மேற்கொளும் நகர்வுகளுக்குத் தடை விதிக்காமலும், இப் பிரச்சினையை நீட்டிச் செல்லும் வகையிலும் இத் தீர்ப்பு அமைந்துவிட்டது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்த சூழலில், கடந்த ஏப்ரல் 15 அன்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. அதன் தீர்ப்பு விவரம், நேற்று (23.5.2026) தான் இணையத்தில் வெளியாகி உள்ளது. “காவிரி தொடர்பான இரு ஆணையங்களும் எந்த முடிவும் எடுக்காத நிலையில் இப்போதும் அதைத் தடுப்பதற்கான தேவை எழவில்லை” என்று கூறிதான் உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது. (1/n)
தமிழ்
5
33
64
2.1K
பேரலை retweetledi
Dr. Gomathi Ph.D
Dr. Gomathi Ph.D@Greatgo1·
ஆன்மீகம் எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை பேசுவதை எழுத்தாளர் ஜெயமோகன் நிறுத்தவேண்டும். எருக்கு நஞ்சால் அவ்வப்போது பலருக்கு உடல்நலக் கேடு வருகிறது. சித்த & நாட்டு மருத்துவம் பக்கவிளைவுகள் அற்றது என் தவறான கருத்தையும் உடைத்திருக்கிறேன் இந்த காணொளியில். @senthazalravi
Dr. Gomathi Ph.D tweet media
தமிழ்
1
5
12
303
பேரலை retweetledi
Dr. Gomathi Ph.D
Dr. Gomathi Ph.D@Greatgo1·
அறிவியலுக்கு புறம்பான செய்திகளை ஆன்மீக கதைகளாக பரபுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். "எருக்கு செடியின் பால் சித்தர்களுக்கான அமுது" என்கிறார் "முழுமையறிவு " எனும் பக்கத்தில். CMC hospital, ஆய்வுக்கட்டுரை மூலம், எருக்கின் நஞ்சு பற்றி விளக்கியிருக்கிறேன். youtu.be/8FCei8Gc3zs
YouTube video
YouTube
தமிழ்
5
49
76
5.5K
பேரலை retweetledi
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
வணங்குகிறேன் தாயே🙏🙏 ஒரு தாயின் அன்பு நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர்நாடியாக அமைந்தது ❤️✨ தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, மீரா ஜ்வாலா குட்டா, (நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் மனைவி)தன் குழந்தைக்குத் தேவையானதை விட அதிக தாய்ப்பால் சுரப்பதை உணர்ந்தார். அதை வீணாக்குவதற்குப் பதிலாக, உயிர் பிழைக்கப் போராடும் குழந்தைகளுக்கு இந்த விலைமதிப்பற்ற "திரவத் தங்கத்தை" தானம் செய்ய அவர் முடிவு செய்தார் 👶🍼 அவர் அரசு மருத்துவமனைகள் மற்றும் பால் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 30-50 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்தார், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 600 மில்லி லிட்டரை வழங்கினார். அமிர்தம் அறக்கட்டளை மூலம், சென்னை எழும்பூரில் உள்ள NICU-வில் உள்ள குழந்தைகளுக்கும் அவர் ஆதரவளித்தார் 🙏💖 தங்கள் தாயை இழந்த அல்லது போதுமான பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு, அவரது கருணை ஒரு வரமாகவும், வாழ்க்கையில் ஒரு இரண்டாவது வாய்ப்பாகவும் அமைந்தது. உண்மையில் மிகவும் போற்றுதலுக்குரிய தானம்🙏🙏
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. tweet media
தமிழ்
15
68
394
72K
பேரலை retweetledi
Cockroach is Back
Cockroach is Back@Cockroachisback·
This account @ Cockroach4India is a fake account created by BJP IT Cell and impersonating to be Cockroach Janta Party. Please report. Original accounts are @CJP_2029 @Cockroachisback
Cockroach is Back tweet mediaCockroach is Back tweet media
English
172
770
2.7K
118.4K
பேரலை retweetledi
Abhijeet Dipke
Abhijeet Dipke@abhijeet_dipke·
You can hack and withhold the accounts but you cannot hack this movement. We are not going to stop and we will keep raising our voice against this autocracy. Every attack makes cockroaches stronger. We are working on a plan to get this movement to continue sustainably and take it to the next level. Will share more soon! Cockroaches never die! 🪳
Abhijeet Dipke tweet media
English
1.5K
4.7K
20K
342.2K
பேரலை retweetledi
Asiriyar K.Veeramani
Asiriyar K.Veeramani@AsiriyarKV·
அதேநேரத்தில், திரு. அ.மு. ஷாஜகான் அமைச்சரானவுடன், அறையில் ‘துவா’ செய்த நடப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதை இஸ்லாமிய நண்பர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஒரு தவறான நடப்பு– இனி இதுபோன்று நடவாமல் பார்த்துக் கொள்ள முஸ்லிம் லீக் தலைமை அறிவுறுத்தவேண்டும். புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது! வெற்றி போதைதான் ஆட்சிக்கு முதல் எதிரி — எதிர்க்கட்சிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ‘ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சி’ என்ற நிலைப்பாடு எடுத்துள்ள தி.மு.க.வின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு, ஜனநாயகத்தின் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளாமல், ஆளுங்கட்சிக்கு மிகுந்த தன்னடக்கம் தேவை. ஊடகப் பிரிவினரும், அரசியல் முதிர்ச்சி அடையாத சில ‘அவசர’ங்களும், தி.மு.க. கூட்டணியிலிருந்து பலரும் வெளியேறி, அதனை பலவீனமடையச் செய்து, தி.மு.க.வைத் தனிமைப்படுத்திவிட்டதாக ‘அற்ப’ சந்தோஷத்துடன் செய்திகளைப் பரப்புகின்றனர்! 🔹பலவீனமடையாது – ‘பேருரு’ எடுக்கும்! தி.மு.க. ஒருபோதும் இதுபோன்ற மாறுதலால் பலவீனம் அடையாது; மேலும் பலத்துடன், அதன் வளர்ச்சியில் ‘பேருரு’ எடுக்கும் என்பதை அனுபவ அறிவுடையவர்கள் அறிவார்கள். அதன், கடந்த கால சரித்திரம் அதற்குத் தக்க சான்று. பல நேரங்களில், மவுனமான புன்னகை – பல மணிநேர பதற்ற ஆவேச பேச்சின் பதிலைவிட, மிகப்பெரிய சக்தி வாய்ந்தவை! அரசியல் காற்று, ஒரே திசையில் என்றும் அடிப்பதில்லை என்பதை அனுபவத்தால் பழுத்தவர்களுக்கு என்றும் புரியும்! 🔹நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு! விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை என்ற நிலையில், அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்பதில் கவனச்சிதறல்கள் இன்றி நடந்துகொள்ள வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக நடந்துவரும் பண்பாளர் மு.க.ஸ்டாலின் அவர்களது நயத்தக்க நாகரிகத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு ஆகும். - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 23.5.2026
தமிழ்
1
51
112
4.1K
பேரலை retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | கலைமாமணி மு.கலைவாணன் காலமானார்! #SunNews | #Kalaivanan
Sun News tweet media
தமிழ்
5
16
148
7.1K
பேரலை retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருக்கொள்ளிக்காடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். #SunNews | #MKStalin | #Poondikalaivanan | @mkstalin
தமிழ்
40
423
1.1K
61.8K
பேரலை retweetledi
Cockroach is Back
Cockroach is Back@Cockroachisback·
Dharmendra Pradhan must resign!
English
3.1K
18.3K
72.5K
3.5M
பேரலை retweetledi
Abhijeet Dipke
Abhijeet Dipke@abhijeet_dipke·
Action should have been taken against the Education Minister for the paper leak. For the student who lost his life due to the government’s failure. But in New India, action is being taken against the Cockroach Janta Party for demanding accountability.
English
1K
6.3K
28.4K
435.5K
பேரலை
பேரலை@YEM_AAR·
பெற்றோர் உயர்நீதிமன்ற/உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ/வழக்கறிஞராகவோ இருக்கும்போது வாரிசுகள் ஏன் நீதிபதியாகவோ/(அரசு)வழக்கறிஞராகவோ ஆகிறார்கள் ?
Sun News@sunnewstamil

#NewsUpdate | கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகும் சலுகைகள் எதிர்பார்ப்பது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி! #SunNews | #SupremeCourt

தமிழ்
0
1
2
87