ARUL Rathinam

12.3K posts

ARUL Rathinam banner
ARUL Rathinam

ARUL Rathinam

@arulgreen

Environmentalist, works @PasumaiEarth #PasumaiThaayagam Movement #Chennai, India #COP31 #ClimateAction #Biodiversity #SaveTamilNaduWetlands

Chennai, India Katılım Kasım 2009
890 Takip Edilen23.5K Takipçiler
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
“பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களிடையே நேரடியாகக் கருத்துக் கேட்பதற்காக தனி இயக்கம் நடத்தப்படும்" - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவிப்பு... #PMK #AnbumaniRamadoss
ARUL Rathinam tweet mediaARUL Rathinam tweet mediaARUL Rathinam tweet media
தமிழ்
0
17
52
938
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
"21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பதை ஒழித்தல்: பாமகவின் நெடுநாள் கோரிக்கை" "21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை. டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க தடை" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்க தக்கது. தமிழ்நாட்டில் இந்த விதி கடந்த 20 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், அதனை அரசு நடைமுறை படுத்தவில்லை. 26.08.2008 ஆம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட "தமிழ்நாடு அரசிற்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை" ஆவணம் - "மதுவாங்கும் வயதை 25ஆக அதிகரித்து" அதனை உறுதியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்தியது. சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பாமக வலியுறுத்தும், அந்த சட்ட விதியை செயலாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத் தக்கது. இதனை உறுதியாக செய்து காட்ட வேண்டும். மேலும், வயதுவரம்பை 25ஆக உயர்த்த வேண்டும். படம்: 26.08.2008 பாமகவின் மாற்று மது ஒழிப்புக் கொள்கை #TASMAC #PMK #AnbumaniRamadoss #cmvijay
ARUL Rathinam tweet mediaARUL Rathinam tweet mediaARUL Rathinam tweet mediaARUL Rathinam tweet media
தமிழ்
1
20
45
825
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி அவர்களது உணர்ச்சிகரமான, ஆக்கபூர்வமான பேச்சு நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து பாமக விலகல் (abstaining from voting) #AnbumaniRamadoss #PMK #sowmiyaanbumani #CMJosephVijay
தமிழ்
1
21
79
880
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
"சமூகநீதி கணக்கெடுப்பு (சாதிவாரி சர்வே) நடத்த வேண்டும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். சந்துக் கடைகளை மூட வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும் கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும்" -பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி அவர்கள் பேச்சு #AnbumaniRamadoss #PMK #sowmiyaanbumani #CMJosephVijay
ARUL Rathinam tweet media
தமிழ்
0
18
48
573
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
"717 மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத் தக்கது: மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்!" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை --------------- தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலம் என்ற உன்னத இலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக இது அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய் அவர்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4765-லிருந்து 4048 ஆக குறையும். உண்மையாகவே இது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை தான். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட மூன்று அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். முதலமைச்சர் அவர்கள் நேற்று என்னை சந்தித்த போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் ஒரு மாணவனை சக மாணவர்கள் மது போதையில் குத்தி படுகொலை செய்தது தொடர்பான அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தேன். மது போதையை ஒழிக்க வேண்டியதன் தேவையை முதலமைச்சர் அவர்களும் உணர்ந்து மதுக்கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 8,000-க்கும் கூடுதலாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் வாயிலாக பாதியாக குறைக்கச் செய்த பா.ம.க., இந்த நடவடிக்கையால் மேலும் மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது. ஒரு மாணவன் பள்ளிக்கு செல்ல ஒன்று முதல் 2 கி.மீ பயணிக்க நேரிடும் போது, குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும் இந்த துணிச்சலான நடவடிக்கை பயனளிக்கும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சமூகநீதி வழங்க முடியும். அதே நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 4765 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், அவற்றைக் கடந்து மாநிலம் முழுவதும் சந்துக்கடைகள் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுக்கடைகள் செயப்பட்டு வருகின்றன. இவை தவிர மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்ட மதுக் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவர் நினைத்தால் அடுத்த 2 நிமிடங்களில் மதுவை வாங்கிக் குடிக்க இந்தக் கட்டமைப்பு தான் காரணமாக உள்ளது. சந்துக் கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக 717 மதுக் கடைகளை மூட முதலமைச்சர் ஆணையிட்டாரோ, அந்த நோக்கத்தை அடைய முடியாது என்பது திண்ணம். மது போதையின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும். மதுவுக்கு அடிமையான இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அதிலிருந்து மீட்காவிட்டால், அவர்கள் வெகுதூரம் பயணித்து சென்றாவது மதுவைக் குடிக்கத் துடிப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். #PMK #AnbumaniRamadoss #CMJosephVijay#tasmac
ARUL Rathinam tweet media
தமிழ்
0
17
32
582
ARUL Rathinam retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
74
4.2K
20.4K
152.2K
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
இது ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்... பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் இன்று தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். பாமகவுக்கும், பாமகவின் கூட்டணிக்கும் வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்காகவும் அவர் சேவையாற்றுவார். வஞ்சிக்கப்பட்ட மக்களின் பேசப்படாத உரிமைகளை பேசுவதற்கு யாருமற்ற நிலை இனி இல்லை. தமிழ்நாட்டின் மிக முக்கியமான, ஆனால், அதிகம் கண்டுகொள்ளப்படாத சிக்கல்களை வலியுறுத்த ஆளே இல்லை என்கிற நிலையும் இனி இருக்காது. முனைவர் சௌமியா அன்புமணி, முனைவர் கணேஷ் குமார், திரு. ச. சிவக்குமார், திரு. க. வைத்தி இவர்கள் 4 தனிநபர்கள் அல்ல. மாபெரும் மக்கள் கூட்டத்தின், ஒரு தேசிய இனத்தின் அடையாளம். பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் அமைப்பில் ஆளும் கட்சியை விட, எதிர்க்கட்சிகளின் கடமையே முதன்மையானது. அந்தக் கடமையை இவர்கள் உறுதியாக நிறைவேற்றுவார்கள். சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து மக்களின் உரிமைக்கான போராட்டம் இனி தொடரும். வெகு விரைவில் வெற்றிகளும் கிடைக்கும். #PMK #AnbumaniRamadoss
ARUL Rathinam tweet media
தமிழ்
0
32
116
1.4K
ARUL Rathinam retweetledi
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்ற 17வது பேரவையில் தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது.! #AnbumaniRamadoss #sowmiyaanbumani #Dharmapuri
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
79
373
3.7K
60.6K
ARUL Rathinam retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! தமிழ்நாட்டின் 12-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும். த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.
Dr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
28
411
1.7K
76K
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
“தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்!” - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை -------- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். #PMK #AnbumaniRamadoss
ARUL Rathinam tweet media
தமிழ்
1
11
37
407
ARUL Rathinam retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து! தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ
தமிழ்
264
4.3K
21.8K
328.1K
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
“சித்திரை முழுநிலவு: 2025 பகைகள் ஒழிந்தன! 2026 பணிகள் காத்திருக்கின்றன!” சித்திரை முழுநிலவு பெருவிழா - தமிழர் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஒரு சிறப்புமிக்க திருவிழா ஆகும். தமிழ்நாட்டில் அறுவடைக்கு பின்னாலான ஓய்வு காலத்தில் இவ்விழா வருகிறது. ஐங்குறுநூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இது இந்திர விழாவாக போற்றப்படுகிறது. “சிலப்பதிகாரம் - இந்திரவிழவு ஊர் எடுத்த காதை!” சிலப்பதிகாரத்தில் "இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில்" சித்திரை முழுநிலவு விழா விரிவாக கூறப்பட்டுள்ளது. அதில் பசி, பிணி, பகை நீங்குவதற்கான விழாவாக இது போற்றப்பட்டுள்ளது. "‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும்" (சிலப்பதிகாரம் 5: 70) (பொருள்: பெரு நிலத்தை ஆளும் மன்னனின் நிலப் பரப்பு முழுவதும் பசி, பிணி, பகை ஏதும் இல்லாமல் நீங்கி, மழையும், வளமும் சுரக்கும்படிச் செய்ய வேண்டும் - என்று வேண்டி பெண்கள் குலவை ஒலி செய்தனர்.) “மணிமேகலை - விழாவறை காதை!” மணிமேகலையில் "விழாவறை காதையில்" நாட்டின் மக்கள் எல்லோரும் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் விழாவாக இந்திர விழா குறிப்பிடப்படுகிறது! "பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்" - மணிமேகலை (70-72) (பொருள்: பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் முரசறைந்து தெரிவித்தான்.) இதே மணிமேகலையில் - இந்திர விழாவின் போது மக்கள் மாறுபட்ட கருத்துகளை விவாதிக்கலாம் என்றும், அதே நேரத்தில் எல்லா பிரிவினரும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்" - மணிமேகலை (60-63) (பொருள்: குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள்.) ------------- “வன்னியர் இளைஞர் பெருவிழா” தமிழ் மன்னர்களால் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரையில் கொண்டாடப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவை, மாமல்லபுரம் கடற்கரையில் மீண்டும் கொண்டாடும் மரபை மருத்துவர் அய்யா அவர்கள் தோற்றுவித்தார்கள். அவரது உத்தரவின் கீழ் மாவீரன் குரு அவர்கள் பல ஆண்டுகள் இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 2025ஆம் ஆண்டில் தமிழ்நாடே வியக்கும் வகையில் பல லட்சம் இளைஞர்களை திரட்டி, மாநிலங்கள் கடந்து, நாடுகள் கடந்து தலைவர்களை கூட்டி, நவீன அறிவியல் நுட்பங்களை பயன்படுத்தி பழமை வரலாற்றின் தொடர்ச்சியை மாபெரும் பெருவிழாவாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சாதித்து காட்டினார்கள்! “பெருமிதமும் சோக முடிவும்” பசி, பிணி, பகை நீங்கும் நோக்கில் பழந்தமிழர் இந்திர விழா நடந்தது. அதனுடன் வஞ்சிக்கப்பட்ட மக்களின் விடுதலை நோக்கத்தையும் இணைத்து சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. ஆனால், இந்த நோக்கங்கள் எதுவுமற்று நம்முடனே நெடுங்காலம் பயணித்த வஞ்சகக் கூட்டத்தினர் ஒருசிலர் எல்லாவற்றையும் சிதைத்த நிகழ்வாக 2025 சித்திரை மாநாடு முடிவுற்றது. ஒருவருடைய கை விரலைக்கொண்டு அவரது கண்ணையே குத்துவது போன்று, எந்த மாமனிதர் ஒரு இனத்தின் விடுதலைக்கு வழிகாட்டினாரோ, அந்த மாமனிதரையே சதிகாரர்கள் அதே இனத்துக்கு எதிரான ஆயுதமாக மாற்றிய கொடுஞ்செயல் கடந்த ஆண்டு நடந்தது! “உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.” - திருக்குறள் (813) (பொருள்: பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்) திருவள்ளுவர் குறிப்பிட்டது போன்ற ஒருசில நபர்கள், தனக்கும் தனது குடுபத்தினருக்கும் பெரும் பணமும் பதவியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இனத்திற்கே பேரழிவை ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்தனர். அந்தச் சதிகாரக் கும்பலால் 2025 சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா, ஒரு சோக நிகழ்வாக முடிந்தது. உற்சாகத்தோடு ஓடிவந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் பெரும் துன்பத்தை சுமந்து வீடு திரும்பினர். ------------- “அடுத்தது என்ன?” “உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.” - திருக்குறள் (890) (பொருள்: உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.) துரோகக் கும்பலுடன் இணைந்து பயணிப்பது இனி ஒருபோதும் நடக்காது. 2025 ஆம் ஆண்டில் சதிகாரர்கள் தொல்லை ஒழிந்துள்ளது. மருத்துவர் அய்யா அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த மாபெரும் இயக்கத்தை தொடங்கினார்களோ, அந்த நோக்கத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் வென்றெடுப்பதற்காக 2026 ஆம் ஆண்டில் பாடுபடுவோம். அதற்கு உறுதியேற்கும் தருணமாக இந்த சித்திரை முழுநிலவு நாள் அமையட்டும். #VanniyarReservation #AnbumaniRamadoss #vanniyar
ARUL Rathinam tweet media
தமிழ்
1
29
105
1.8K
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
"நம்பிக்கை நாயகன் சித்தராமையா! நம்பிக்கை துரோகி மு.க. ஸ்டாலின்!" - கர்நாடகாவின் சித்தராமையா உள் ஒதுக்கீடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் போது, தமிழ்நாட்டின் மு.க. ஸ்டாலின் மட்டும் ஏமாற்றியது ஏன்? (நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை) 👇👇 தமிழக சமூகங்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்போம் என 2021 தேர்தல் அறிக்கையில் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண்: 336). ஆனால், அதனை நிறைவேற்ற அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்பட்டமாக நம்பிக்கைத் துரோகம் செய்தார். ஆனால், கர்நாடக சமூகங்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்போம் என 2023 தேர்தல் அறிக்கையில் சித்தராமையா வாக்குறுதி அளித்தார் (Sarvarigu Samapalu - Equal Share For All). அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளார். "விரிவான பின்னணி:" தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது போன்றே, கர்நாடக மாநிலத்தில் SC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்டகாலமாக உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த கட்சிகள் உள் ஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், மு.க. ஸ்டாலின் துரோகம் செய்தார். சித்தராமையா துரோகம் செய்யவில்லை! ----------- நம்பிக்கை நாயகன் சித்தராமையா கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினர் வலங்கை சாதிகள், இடங்கை சாதிகள், நாடோடி சாதிகள் என மூன்று பிரிவுகளாக உள்ளனர். இவர்களுள் ஒருசில சாதிகளே பெரும்பான்மை இடஒதுக்கீட்டை எடுத்துக்கொள்வதாக கடந்த 40 ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. 2012 நீதியரசர் சதாசிவா குழு கர்நாடக மாநில SC பிரிவினரின் உள் ஒதுக்கீடு சிக்கலுக்கு தீர்வுகாண 2012-ஆம் ஆண்டில் நீதியரசர் சதாசிவா குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ‘ஒருசில சாதிகளே பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்வதை தடுக்க உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என பரிந்துரைத்தது. எனினும் அக்காலத்தில் SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்ற தடை இருந்ததாலும் (E. V. Chinnaiah v. State of Andhra Pradesh 2005), அறிக்கை போதுமான தரவுகள் அடிப்படையில் இல்லாததாலும் நிறைவேற்றப்படவில்லை. 2024 உச்சநீதிமன்றத் தீர்ப்பு SC பிரிவினரை ஒரே பிரிவாக கருத வேண்டும் எனும் 5 நீதிபதிகள் அமர்வின் 2005 உச்சநீதிமன்றத் தீர்ப்பை, 2024ஆம் ஆண்டில் 7 நீதிபதிகள் அமர்வு மாற்றி எழுதியது (State of Punjab v. Davinder Singh, 2024). SC பிரிவினரை ஒரே பிரிவாக கருத வேண்டாம். அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019 – 2025 நீதியரசர் நாகமோகன்தாஸ் குழு SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வுகான 2019ஆம் ஆண்டில் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இக்குழுவானது போதுமான தரவுகள் அடிப்படையில் உள் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை 2020ஆம் ஆண்டில் அளித்திருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 2024 உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, புதிய சூழலில் பரிந்துரை அளிக்க 2024 நவம்பர் மாதம் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவை மீண்டும் கர்நாடக அரசு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை மார்ச் 2025-இல் சமர்ப்பிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டது. 2025 அவசர சாதிவாரி சர்வே நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவின் 2025 அறிக்கையை மேலும் துல்லியமாக சரிபார்க்கும் நோக்கில், SC பிரிவினரிடையே புதிதாக அவசர சாதிவாரி சர்வே நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது. 2025 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 1 கோடி பேரிடம் வீடுவீடாக நடத்தப்பட்ட அந்த சர்வே அறிக்கை 2025 ஆகஸ்ட் மாதம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2026 ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் குழு கர்நாடக மாநிலத்தில் விரைவில் புதிதாக 56,000 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனத்திற்கு முன்பாகவே SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்பினார் முதலமைச்சர் சித்தராமையா. இதனால் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை 16.04.2026 அமைத்தார். இக்குழு 24.04.2026 அன்று அறிக்கை அளித்தது. உள் ஒதுக்கீடு நிறைவேற்றம் ஷாலினி ரஜ்னீஷ் ஐ.ஏ.எஸ் குழு அறிக்கை பெறப்பட்ட உடனேயே 24.04.2026 அன்றே SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வலங்கை SC சாதிகள்: 5.25% இடங்கை SC சாதிகள்: 5.25% நாடோடி SC சாதிகள்: 4.50% என கர்நாடக SC பிரிவினர் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ----------- மு.க. ஸ்டாலின் செய்த மாபெரும் துரோகம் கர்நாடக மாநிலத்தில் SC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருப்பது போன்றே, தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. தமிழ்நாட்டின் உள் ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என 2021- தேர்தல் அறிக்கையில் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண்: 336). 2022 உச்சநீதிமன்றம் தீர்ப்பு MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. போதிய தரவுகளைத் திரட்டி உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கடந்து கர்நாடக SC பிரிவினர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு 01.08.2024 அன்றுதான் வழங்கப்பட்டது) முந்தைய குழுவின் அறிக்கை கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினர் உள் ஒதுக்கீடு குறித்து நீதியரசர் சதாசிவம் குழு, நீதியரசர் நாகமோகன்தாஸ் குழுவினர் விரிவான அறிக்கைகளை அளித்துள்ளது போன்றே, தமிழ்நாட்டில் MBC பிரிவுக்குள் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நீதியரசர் ஜனார்த்தனம் குழு ஏற்கெனவே அறிக்கை அளித்துள்ளது. புதிய குழு அமைப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரான சூழலில் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்கக் கோரி, கர்நாடக மாநிலத்தில் 3 மாதத்தில் நீதியரசர் நாகமோகன்தாஸ் குழு அமைக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 9 மாதங்கள் கடந்த பின்னர் - MBC உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதியரசர் வீ. பாரதிதாசன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் அணையத்திற்கு தமிழ்நாடு அரசு 12.01.2023 அன்று ஆணை பிறப்பித்தது. ஆனால், அதிலிருந்து மூன்றாண்டாண்டுகளுக்கு மேல் ஆகியும் MBC உள்ஒதுக்கீடு குறித்துப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த அறிக்கையும் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. ----------- ஒப்பீடு: நம்பிக்கை நாயகன் சித்தராமையா கர்நாடக மாநிலத்தில் SC பிரிவினருக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தவுடன், முதலமைச்சர் சித்தராமையா நீதியரசர் தலைமையில் குழு அமைத்தார், 1 கோடி பேரிடம் சாதிவாரி சர்வே நடத்தினார். தலைமைச் செயலாளர் தலைமையில் தொழில்நுட்பக்குழு அமைத்து உள் ஒதுக்கீட்டிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்ததார். நம்பிக்கை துரோகி மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் MBC பிரிவினருக்குள் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து 9 மாதங்கள் கடந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியரசர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் 3 மாதத்தில் அறிக்கை கேட்டார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அந்த வரவே இல்லை! கர்நாடக மாநிலத்தில் 633 நாட்களில் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தமிழ்நட்டில் 1489 நாட்கள் கடந்தும் கூட எதுவும் நடக்கவில்லை. #VanniyarReservation #vanniyar
ARUL Rathinam tweet media
தமிழ்
1
27
55
1.1K
ARUL Rathinam
ARUL Rathinam@arulgreen·
“மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு செய்த துரோகமும் - சித்தராமையா கர்நாடகாவில் SC பிரிவினருக்கு அளித்த நீதியும்!” SC பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 633 நாட்களில் முதலமைச்சர் சித்தராமையா உள்ஒதுக்கீடு அளித்துள்ளார். ஆனால், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1488 நாட்கள் கடந்தும் மு.க.ஸ்டாலின் அதனை அளிக்கவில்லை. அதுகுறித்த ஒப்பீடு கீழே: 1. மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாள்: வன்னியர் உள்ஒதுக்கீடு: 31.03.2022 SC பிரிவினர் உள்ஒதுக்கீடு: 01.08.2024 2. உள் ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நாள் வன்னியர் உள்ஒதுக்கீடு: ஜனவரி 2023 SC பிரிவினர் உள்ஒதுக்கீடு: மார்ச் 2026 3. குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாள்: வன்னியர் உள்ஒதுக்கீடு: இதுவரை இல்லை SC பிரிவினர் உள்ஒதுக்கீடு: 24.04.2026 4. உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நாள்: வன்னியர் உள்ஒதுக்கீடு: இதுவரை இல்லை SC பிரிவினர் உள்ஒதுக்கீடு: 25.04.2026 5. உள்ஒதுக்கீடு அளிக்க எடுத்துக்கொண்ட காலம்: வன்னியர் உள்ஒதுக்கீடு: 1488 நாட்கள் கடந்தும் கொடுக்கப்படவில்லை! SC பிரிவினர் உள்ஒதுக்கீடு: 633 நாட்களில் கொடுக்கப்பட்டது. --------------- உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டு, 27 நாட்கள் கடந்தும் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உள் ஒதுக்கீடு அளிக்கவில்லை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1 ஆண்டு, 8 மாதம் 27 நாட்களில் SC பிரிவினருக்கு கர்நாடகாவில் சித்தராமையா உள் ஒதுக்கீடு அளித்தார். இது வன்னியர்களுக்கு முக ஸ்டாலின் இழைத்த அப்பட்டமான துரோகம்! #VanniyarReservation #vanniyar
ARUL Rathinam tweet media
தமிழ்
0
30
62
890