seLVàâ
12.8K posts


#தூய_ஆட்சி பேசும் விஜய்: வரி ஏய்ப்பு செய்யவா ரசிகர் மன்றங்களை பயன்படுத்தினார்? #தவெக தலைவரும் நடிகருமான விஜய் @TVKVijayHQ அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் தூய ஆட்சி தருவதாக பிதற்றி வருகிறார். சினிமா பஞ்ச் டயலாக் போல தீய ஆட்சி- தூய ஆட்சி என உரத்து பேசுகிறார். ஆனால், தூய ஆட்சி தருவதற்கு முதலில் நடிகர் விஜய் அடிப்படையில் தூய்மையானவரா? வரி ஏய்ப்பு மூலம் அரசாங்கத்தை ஏமாற்றுவது அதுவும் தனது ரசிகர் மன்றத்தை வரி ஏய்ப்புக்காக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. சமீபகாலமாக, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் ரசிகர் மன நிலையிலேயே இருக்கிறார்களே தவிர, அரசியல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. அதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று தவெக @TVKPartyHQ சார்பில் திரு.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையே சான்று. சமீபத்தில், நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் நான் பங்கேற்ற போது,நடிகர் விஜய் திட்டமிட்டு செய்த ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து பேசிய போது தவெக நிர்வாகிகள் இல்லை இல்லை என கோபப்பட்டனர். இதோ ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறேன். வரி ஏய்ப்பும் ஊழல் வகை தான். இதோ நடிகர் விஜய் செய்த ஊழல் 1... கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த ’புலி’ திரைப்படம் அக். 1ஆம் தேதி வெளியானது. அதற்கு முதல் நாள் செப். 30ஆம் தேதி நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் புலிபடத்தின் தயாரிப்பாளர்கள் இடங்களில் வரி ஏய்ப்பு சந்தேகத்தில் வருமானத்துறை சோதனை நடத்தியது. அச்சோதனையின் போது, புலி படத்திற்கு சம்பளமாக ரூ.16 கோடிக்கான காசோலையோடு ரூ.5 கோடியை பணமாக பெற்றதாக அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார் விஜய். 2015-16 நிதியாண்டில் கூடுதலாக ரூ.10 கோடியுடன் மொத்தம் ரூ.15 கோடியை பணமாக பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். காசோலைக்கு மட்டுமே மூலத்தில் வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தது(TDS). பணமாக பெற்ற தொகை கணக்கில் காட்டப்படாததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கையை 29.07.16ல் தாக்கல் செய்யும் போது, 2015ல் அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்த பணமாக பெற்ற ரூ.15 கோடியை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.35,42,91,890-ஐ வருமானமாக கணக்கு காண்பித்தார் விஜய். அதில் செலவுகளாக, சொத்துக்களுக்கான தேய்மானமானம் - ரூ.89,07,814 & ‘பட வெளியீடு & ரசிகர் மன்ற செலவுகள்’ எனும் தலைப்பில் - ரூ.2,92,44,825 இரு கணக்குகள் காட்டப்பட்டுள்ளதை வரி மதிப்பீட்டு அதிகாரி ஏற்க மறுத்து விரிவான விளக்கத்தை நடிகர் விஜயிடம் கோரினார். புலி பட தயாரிப்பு நிறுவனம் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை ரொக்கமாக தந்த ரூ.5 கோடியில், விஜய் ரசிகர் மன்றங்களின் உறுப்பினர்களுக்கு ரூ.2 கோடியை தயாரிப்பு நிறுவனமான SKT Studios தந்துவிட்டது. பாக்கி ரூ.92,44,825-ஐ ரசிகர் மன்ற செலவுகளுக்கு தானே பணமாக கொடுத்தாக விளக்கம் அளித்தார் விஜய். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மதிப்பீட்டு அதிகாரி, தேய்மானமாக சொல்லப்பட்ட தொகையில் 20 சதவிகிதத்தையும் (ரூ.17,81,562), தயாரிப்பு நிறுவனம் மன்ற உறுப்பினர்களுக்கு தந்ததாக சொன்ன ரூ.2 கோடியையும், அதே மன்றங்களுக்கு விஜய் தந்ததாக சொன்ன தொகையில் 70 சதவிதத்தையும் (ரூ.64,71,377) வருமான வரி கணக்கிற்குள் கொண்டு வந்தார். மொத்தம் ரூ.38,25,44,829 வருமானத்துக்கான வரியையும், வருமானத்தை மறைத்ததற்கு தனியே அபராதத்தையும் கட்டும்படி 30.12.2017ல் விஜய்க்கு உத்தரவிட்டார். தேய்மான தொகையை வருமான கணக்கில் சேர்த்ததை மட்டும் தவிர்த்து, ரசிகர் மன்ற செலவுகள் தொடர்பான உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறையில் 25.01.2018ல் மேல்முறையீடு செய்தார் விஜய். விஜய் வீட்டில் நடந்த சோதனையில் கண்டறியப்பட்டு, அவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட கணக்கில் வராத ரொக்கம் ரூ.5 கோடியின் ஒரு பகுதி தான், ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தந்த ரூ.2 கோடி என்ற விஜயின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது கணக்கில் காட்டப்படாத பணமாக இருந்தாலும், ஒரே பணத்திற்கு இருமுறை வரிவிதிக்க முடியாது என்பதே. வரி மதிப்பீட்டு அதிகாரி கணக்கில் எடுத்துக்கொண்ட 70 சதவிகிதத்திலிருந்து குறைத்து 50% மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கே வருமான வரித்துறை முன்வைத்த வாதங்களை பார்ப்போம்.. விஜய் வீட்டில் 2015ல் வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.5 கோடி கண்டறியப்பட்டு, அதனை அவரும் ஒப்புக்கொண்ட பின்னர், பின்யோசனையாக (afterthought), மன்ற செலவுகளுக்கு தனது சம்பளத்திலிருந்து ரூ.2 கோடியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செலவிட்டதாக இப்போது விஜய் சொல்வது நம்பமுடியாத கதை, ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும், முந்தைய கணக்கீட்டு ஆண்டுகளில் 2013-14: ரூ.5,05,019 2014-15: ரூ.4,76,440 2015-16: ரூ.7,24,971 என ரசிகர் மன்ற பட வெளியீட்டு செலவுகள் கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் ரூ.92,44,825 செலவாகியுள்ளதாக சொல்கிறார் விஜய். இதற்கு உரிய விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை என்று வருமான வரித்துறை வாதிட்டது. இந்த இரு மேல்முறையீட்டு வழக்குகளிலும், தான் நேரடியாக மன்றங்களுக்கு ரொக்கமாக தந்ததாக சொன்ன ரூ.92,44,825-க்கு உரிய கணக்கு தாக்கல் செய்ய முடியாததற்கு விஜய் சொன்ன காரணம்: பேனர். கட்-அவுட் கட்டுவதற்கும், பூஜை செய்வதற்கும், இனிப்புகள் & பரிசுப் பொருட்கள் தருவதற்கும், கேஸ் பலூன், மாலை, ஆரத்தி, பால் அபிஷேகம், மலர்கள் உள்ளிட்ட செலவுகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களின் குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் கொடுப்பது போன்றவற்றில் செலவிடப்பட்டது. அந்த குறிப்பிட்ட ஆண்டில் பட வெளியீட்டின்போது ரசிகர்களின் அனைத்து செலவுகளையும் முடிந்தளவு தானே ஏற்றுக்கொள்ள விஜய் விரும்பியதால், இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தார். மேலும், விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை அந்த பட்டியலில் உள்ள ரசிகர்களுக்கு தந்ததாக ஒப்புக்கொண்டு கடிதம் அளித்துள்ளது. அந்த கடிதத்தை வருமான வரித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் தரப்பு வாதிட்டது. சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் கண்டறியப்பட்ட பின்னர், ரசிகர் மன்ற செலவுகளாக அதனை நடிகர் விஜய் கணக்கு காட்டிய ரூ.2,92,44,825-ல் 50% மட்டுமே செலவாக கணக்கிட்டு, மீதமுள்ள 50%க்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று 22.12.2021ல் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த கட்டத்தில் தான் 10.08.2022ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார் நடிகர் விஜய். அதன் வழக்கு எண்: WP-21006/2022. கணக்கில் காட்டப்படாத பணம் மீது அபராதம் விதிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை, அதற்குரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் நடத்தப்படவில்லை. அதனால் அபராதம் விதித்தது செல்லாது என்று தான் நீதிமன்றத்தை விஜய் அணுகினார். 2022ல் விசாரித்த நீதிபதி Dr.அனிதா சுமந்த் வருமான வரித்துறை அபராதம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதித்தார். 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பை தான் கடந்த 6.2.26ல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அளித்தார். கணக்கில் காட்டப்படாத பணம் மீது வருமான வரித்துறை விதித்த அபராதம் குறித்து விஜய் தரப்பு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடுகிறார். நடிகர் விஜய் கணக்கில் காட்டாத பணத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதம், உரிய சட்டவிதிகள் சொல்லும் காலவரையறைக்குள் தான் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விஜயின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். காலவரையறை தொடர்பான வாதத்தை தவிர்த்து வேறு ஏதேனும் வாதங்கள் இருந்தால், உரிய சட்ட அமர்வில் மனுதாரர் தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று விரிவாக தீர்ப்பளித்துள்ளார். நடிகர் விஜயின் புலி படத்தை தயாரித்து, சம்பளமாக விஜய்க்கு ரூ.16 கோடி காசோலைகளுடன் கணக்கில் வராமல் ரொக்கமாக ரூ.5 கோடியை தந்து, அதில் விஜய் அளித்த ரசிகர் மன்ற உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தவர்களுக்கு ரூ.2 கோடியை தனியே தந்த SKT Studios, அன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜயின் மேனேஜராக இருந்த திரு.பி.டி.செல்வக்குமார் நிர்வகித்தது. இந்த வழக்கையும் அதில் வைக்கப்பட்ட வாதங்ளையும் உற்று கவனித்தால், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனமாக பயன்படுத்தி வந்துள்ளாரா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இது குறித்து நடிகர் விஜய் வாய் திறப்பாரா? அடுத்த ஊழல் பட்டியல் நாளை தொடரும். - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 27.2.2026















