Jothimani

34.4K posts

Jothimani banner
Jothimani

Jothimani

@jothims

நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 books

Karur,Tamil Nadu Katılım Mayıs 2012
243 Takip Edilen254.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Jothimani
Jothimani@jothims·
உண்மையிலேயே தெருநாய் பிரச்சினையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் இருந்து தெருநாய்களைக் கையாளும் பொறுப்பை விடுவிக்க வேண்டும். தினந்தோறும் தெருநாய்களை கையாள்வதற்குரியோ நிதியோ, பணியாளர்களோ , நிபுணத்துவமோ,கருணையோ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. இதற்கென்று மாநில,மாவட்ட அளவில் தனி நிதி ஒதுக்கீடும், நிபுணத்துவம் கொண்ட தனி அமைப்பும் தேவை. இத்துடன் தன்னார்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் இப்பிரச்சினையை திறம்படக் கையாள முடியும் . நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தங்குமிடங்களை அமைக்க முடியும். தெருநாய்களுக்கு ஊசி போடுவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, உணவளிப்பது, நகர்/ ஊர்ப்புறங்களுக்கு வெளியே தங்குமிடங்களை உருவாக்குவது ( நிலம் ஒதுக்கீடு செய்வது அரசுக்கு ஒன்றும் சிரமமான விசயம் இல்லை) போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் இப்பிரச்சினையை முழுவதுமாகத் தீர்க்க முடியும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் நகர்ப்புற நிர்வாகத் துறையை தன்வசம் வைத்திருப்பதால் இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். அரசு இதை ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) ஏதேனும் ஒரு மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம். கரூர் மாநகராட்சிப் பகுதியில் செய்து பார்க்கலாம் என்கிற யோசனையையும் முன்வைக்கிறேன். இதற்காக எனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ 5 லட்சம் வழங்கவும் தயாராக உள்ளேன். மக்களை தினந்தோறும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினை குறித்து பேசிக்கொண்டே இருப்பதை விட தீர்வை நோக்கி நகர்வது அவசியம். உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையில் மாநில அரசுகள் உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இப்பணியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இப்பிரச்சினையை முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியும். @CMOTamilnadu @TVKVijayHQ
Jothimani tweet media
தமிழ்
10
12
40
19.8K
Jothimani
Jothimani@jothims·
கரூர் மாவட்டத்தின் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து, தங்களது நிலப் பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்தனர். அவர்களின் முகத்தில் தெரிந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் என் இதயத்தை நிரப்பியது. இந்த வெற்றி மக்களுக்கே சொந்தம்! மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு எடுத்த இந்த முடிவுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி. @CMOTamilnadu @KASengottaiyan @RameshOffcl #Karur
Puliyur, India 🇮🇳 தமிழ்
3
18
53
5.2K
Jothimani
Jothimani@jothims·
கரூர் மக்களவைத் தொகுதியின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. ஆனந்த் அவர்களை @BussyAnand நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மிகுந்த கவனத்துடன் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டு, இவை கருத்தில் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்: • மாயனூர் அணையிலிருந்து உபரி நீரைப் பயன்படுத்தி கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குளங்களை நிரப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். • கரூர் மாவட்டத்தில் தாதம்பாளையம், வெள்ளியணை மற்றும் பஞ்சப்பட்டி ஏரிகளுக்கு காவேரி உபரி நீரை கொண்டு சேர்க்கும் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை விரைவாக முடித்து பணிகளைத் தொடங்க வேண்டும். • அரவக்குறிச்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம் கீழ் மற்றும் மேல் ஊராட்சிகளை இணைக்கும் வகையில், நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே காடரம்பம் புதூரிலிருந்து கோட்டப்பட்டி வரை புதிய பாலம் அமைக்க வேண்டும். • திண்டுக்கல் மாவட்டம் குடகனாற்றிலிருந்து காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் தொடர்புடைய வாய்க்கால்களுக்கு முறையான நீர்வரத்து உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். • ஊராட்சி தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தை ₹5,000-லிருந்து ₹10,000 ஆக உயர்த்துதல். • மகளிர் சுயஉதவிக் குழுக்களின் (SHG) வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கூட்டமைப்புகளை (Federations) வலுப்படுத்துதல். • தமிழ்நாடு மக்கள் திட்டமிடல் இயக்கம் (TN People's Planning Initiative) அமைத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 28% மாநில நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் கிராம சபைகளை வலுப்படுத்துதல். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். @CMOTamilnadu #Karur #Dindigul #WaterResources #RuralDevelopment #SHG #PeoplesPlanning #TamilNadu
Jothimani tweet mediaJothimani tweet media
Puliyur, India 🇮🇳 தமிழ்
11
54
364
6.9K
Jothimani
Jothimani@jothims·
கரூர் மாவட்டத்தின் நீண்டகால கனவான விமான நிலையம் (Greenfield Airport) மற்றும் ஒருங்கிணைந்த உலர் துறைமுகம் (Integrated Dry Port) அமைக்கும் திட்டம் குறித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா @Keerthana4VNR அவர்களிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன். இத்திட்டம் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளேன். மத்திய அமைச்சகம் மாநில அரசின் பரிந்துரையை (State Government Recommendation) கோரியுள்ள நிலையில், மாநில அரசு விரைவாக பரிந்துரை வழங்க வேண்டியது மிக அவசியம். சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study), நில அளவீடு, உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவும், மத்திய அமைச்சகத்திடம் முழுமையான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்கவும் கோரியுள்ளேன். கரூர் தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம். விமான நிலையமும் உலர் துறைமுகமும் அமைக்கப்பட்டால், ஏற்றுமதித் துறை பல மடங்கு வளர்ச்சி அடையும். தொழில், வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறையிலும் கரூர் மாவட்டம் புதிய உச்சத்தைத் தொடும். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த முக்கிய திட்டத்தை விரைவில் பரிசீலித்து, மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu #Karur #GreenfieldAirport #DryPort #KarurAirport #KarurDevelopment #TamilNadu #IndustrialGrowth
Jothimani tweet media
Puliyur, India 🇮🇳 தமிழ்
26
70
411
11.5K
Jothimani
Jothimani@jothims·
மேலும் தமிழ்நாட்டிற்கென முழுமையான மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Hygiene) மற்றும் மெனோபாஸ் (Menopause) பராமரிப்பு மாநிலக் கொள்கையை உருவாக்கக் கோரிக்கை. மயிலம்பட்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தக் கோரிக்கை. துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் TAEI வார்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Trauma Centre) உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தக் கோரிக்கை. அய்யலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரிக்கை. இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற வேண்டும் என வலியுறுத்துகிறேன் . மாண்புமிகு அமைச்சர் அவர்களும் விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். @arunraajkg @cmotamilnadu
Puliyur, India 🇮🇳 தமிழ்
0
2
6
836
Jothimani
Jothimani@jothims·
கரூர் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் திரு. கே.ஜி. அருண்ராஜ் @arunraajkg அவர்களுடன் இணைந்து, கரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனை (Old GH) கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தோம். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மிகுந்த பொறுமையுடன் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாகக் கேட்டார். தானே ஒரு மருத்துவர் என்பதால், மருத்துவத் துறையின் நிலவரத்தையும், கரூர் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வலுவான மருத்துவக் கட்டமைப்பு சரியான கைகளுக்கு சென்றுள்ளது என்பதை உறுதியாக உணர்ந்தேன். புதிய மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர், தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை மருத்துவம் & செவிலியர் கல்லூரியாக (Paramedical & Nursing College) மாற்றியமைக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். இக்கல்லூரி நிறுவப்பட்டால்: 1. கரூர் மாவட்டத்தின் இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் உயர்கல்வி பயிற்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். 2. மாவட்டத்தில் நிலவும் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை படிப்படியாக நிவர்த்தியாகும். 3. கரூர் மாவட்டம் சுகாதாரக் கல்வியின் முக்கிய மையமாக உருவெடுக்கும். மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வலுப்படுத்த பின்வரும் முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்: - மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் & அறுவை சிகிச்சை நிபுணர்கள் (4 பணியிடங்கள் - ₹1 கோடி) - 300 படுக்கைகள் கொண்ட CEMONC Block (Comprehensive Emergency Obstetric and Newborn Care) - 200 படுக்கைகள் கொண்ட Super Speciality Block (உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு) - புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையம் (₹35 கோடி) - ₹3.40 கோடி மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
Jothimani tweet mediaJothimani tweet mediaJothimani tweet mediaJothimani tweet media
Puliyur, India 🇮🇳 தமிழ்
5
57
432
17K
Jothimani retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Deeply saddened by the tragic boat capsizing near Phu Quoc Island, Vietnam, carrying Indian tourists. My heartfelt condolences to the families who have lost their loved ones. My thoughts are also with those who are still missing, and with their families enduring an agonising wait. I urge the Government of India and the Ministry of External Affairs to work closely with the Vietnamese authorities to ensure that every possible effort is made in the ongoing rescue operations and that all necessary assistance is extended to the affected families.
English
287
2.3K
10.1K
411K
Jothimani retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Deeply saddened by the passing of S. Janaki ji, the Nightingale of South India. For generations of Indians, her voice was the soundtrack of love, devotion, joy and longing. Performing in multiple languages with extraordinary grace, she united people across regions through the universal language of music. My heartfelt condolences to her family, friends and millions of admirers.
Rahul Gandhi tweet media
English
181
1.3K
6.3K
163.3K
Jothimani retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
पिछले सप्ताह हुई UGC-NET परीक्षा को लेकर सामने आए गंभीर आरोप बेहद चौंकाने वाले हैं। NEET पेपर लीक के कुछ ही हफ्तों बाद अब खबरें आ रही हैं कि - - UGC-NET परीक्षा से ठीक पहले 100 पन्नों की एक PDF प्रसारित हुई। - यह PDF उस question paper setting की है, जो सिर्फ़ NTA के पास उपलब्ध होती है। - PDF के लगभग 90 सवाल Sociology के असली प्रश्नपत्र से मेल खाते हैं। - वही प्रश्नपत्र ₹2.25 लाख में बिहार, उत्तर प्रदेश, हरियाणा, दिल्ली और राजस्थान में बेचा जा रहा था। - इसी नेटवर्क ने CSIR-NET, HTET और ADA जैसी आगामी परीक्षाओं के प्रश्नपत्र उपलब्ध कराने का भी दावा किया। NEET और NET में बार-बार सामने आए घोटालों के बाद भी मोदी सरकार आंखें मूंदकर सो रही है, क्योंकि लाखों छात्रों की रात-रात जागकर की गई सालों की मेहनत उनके लिए कोई मायने नहीं रखती। सारा देश जानता है कि प्रधानमंत्री और शिक्षा मंत्री से किसी भी तरह की जवाबदेही या कार्रवाई की उम्मीद बेकार है - न जांच होगी, न छात्रों को न्याय मिलेगा। बदलाव का एकमात्र औज़ार हमारी सम्मिलित आवाज़ है - देश भर के छात्रों की गूंज, जो भारत में शिक्षा revolution लाकर रहेगी।
Rahul Gandhi tweet media
हिन्दी
589
6.8K
16.6K
487.6K
Jothimani
Jothimani@jothims·
தனது இசையால் தலைமுறைகளை இணைத்த எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தனித்துவமான குரல், அளப்பரிய உணர்வுவெளிப்பாடு, மொழிகளைக் கடந்த இசைப் பயணத்தின் வழியே கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத இடம்பிடித்தவர் எஸ். ஜானகி அம்மா. அவரது குரல் எண்ணற்ற மனிதர்களின் மகிழ்ச்சியிலும், கண்ணீரிலும், நினைவுகளிலும் கலந்திருக்கிறது.காலங்கள் மாறினாலும், அவரது பாடல்கள் எண்ணற்ற இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இசைக் கலைஞர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jothimani tweet media
தமிழ்
1
10
39
2.4K
Jothimani
Jothimani@jothims·
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்
1
3
26
4K
Jothimani retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"அகதிகளாக மாறும் நிலை இருந்தது" ஜோதிமணி கருத்து கரூர் மாவட்ட மக்கள் அகதிகளாக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயரும் சூழல் இருந்ததாகவும், தற்போதைய அரசு அதை புரிந்துகொண்டு சரிசெய்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார். #Jothimani #Congress #Karur #DMK #TamilNaduPolitics #TNPolitics #PoliticalNews #BreakingNews #TamilNews #ThanthiTV
தமிழ்
3
4
16
5K
Jothimani
Jothimani@jothims·
வியட்நாமின் Phu Quoc Island-க்கு அருகே இன்று இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஸ்பீட் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பழனி அருகே சிவகிரிப்பட்டியைச் சேர்ந்த மொபைல் டீலர் முருகபிரபு (43) உயிரிழந்தார். இந்த இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் விரைவான குணமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தைரியமும் வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். #vietnamtragedy
Puliyur, India 🇮🇳 தமிழ்
0
7
45
5.6K
Jothimani retweetledi
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
`3,084 ஏக்கர் கோயில் நிலமா? பாஜக-வின் அப்பட்டமான பொய்; இதுதான் நடந்தது..!'- எம்.பி ஜோதிமணி விளக்கம் vikatan.com/government-and…
தமிழ்
4
6
11
1.9K
Jothimani retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
'பிஜேபி சொல்வது பச்சைப் பொய்' மக்கள் நிலம் மக்களுக்கே, கோவில் நிலம் சாமிக்கே. இதில் பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, கரூர் மக்கள் இதனை நம்ப மாட்டார்கள் - MP ஜோதிமணி Karur | Jothimani | TempleLand | HRCE | TamilNaduGovernment #Newstamil24x7 #PropertyRegistration #Patta
தமிழ்
3
2
10
2.1K
Jothimani retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கரூர் மாவட்டமே அகதிகளாக மாறி வேற ஒரு மாவட்டத்திற்கு குடியேற வேண்டிய சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தோம்.. இன்றைய அரசு அதை புரிந்துக்கொண்டு சரி செய்துள்ளது - ஜோதிமணி #Karur | #Congress | #Patta | #MPJothimani | #PolimerNews
தமிழ்
6
37
130
8.5K
Jothimani
Jothimani@jothims·
கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வருவாய்த் துறை மற்று. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்களுக்கும் கரூர் மாவட்ட மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சென்றோம். அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் பிரச்சினையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டார். இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். "ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர் மக்களுக்கு பட்டா போட்டு வழங்கிவிட்டது" என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில், அறநிலையத் துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், சட்டத்திற்குப் புறம்பாக,வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவுத் துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல்,வருவாய்த்துறையிடம் கருத்துக் கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது. சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய்த் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அண்ணன் திரு செங்கோட்டையன் அவர்களது நெடிய அனுபவம் மிகுந்த,விரைவான செயல்பாடுகளையும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பி திரு. ரமேஷ் அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன். கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாகக் கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது. இந்த முயற்சியில் எங்கள் தரப்பு நியாத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்ட வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. முத்துக்குமரன் இ.ஆ.ப மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். @CMOTamilnadu @KASengottaiyan @RameshOffcl
Jothimani tweet mediaJothimani tweet media
தமிழ்
13
116
304
21K
Jothimani retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"கரூரில் மக்கள் நிலம் மக்களுக்கே, கோவில் நிலம் சாமிக்கே.." 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை கரூர் மக்களுக்கு கொடுத்துவிட்டார்கள் என பா.ஜ.க கூறுவது பொய்.. உண்மை என்னவென்று தெரிந்துகொண்டு அவர் பேசவேண்டும் - ஜோதிமணி #Karur | #LandPatta | #TempleLand | #People | #Congress | #BJP | #MPJothimani | #PolimerNews
தமிழ்
5
11
47
11.2K
Jothimani retweetledi
Press Trust of India
VIDEO | Karur: “BJP cannot call Karur residents as 'encroachers'”,says Congress MP Jothimani (@jothims) on Tamil Nadu BJP's allegations of illegal encroachment on temple lands. (Full video available on PTI Videos - ptivideos.com)
English
6
5
11
9K