Sabitlenmiş Tweet
தீந்தமிழன்💞
118.1K posts

தீந்தமிழன்💞
@prabha_prt
விவசாயி||வாசகன்||கவிதைகள்||எதிர்காலம் தேடிடும் எளியோன்||தோனி|| தல || அரசியல் நையாண்டி || என் விருப்பம் என் #LIKES.,
Lignite city,Tamilnadu Katılım Aralık 2016
405 Takip Edilen4.5K Takipçiler
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது:
திரைத்துறைக்கு மண்டிக் கிடக்கும் ஏகபோகத்தை
ஒழித்து சமவாய்ப்பு வழங்க சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேல் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களின் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட, விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக் கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் போது முதல் 7 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. முதலமைச்சர் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்தவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மட்டும் தான் ஒற்றைப் பயன் ஆகும்.
தமிழ்த் திரையுலகம் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. அந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து திரையுலகை மீட்டெடுக்க வேண்டும்; ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும்.
வார இறுதி நாள்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் போது, எந்த ஒரு திரைப்படத்திற்கும் 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். திரைத்துறையின் வீழ்ச்சிக்கு நடிகர்களுக்கு அதிக ஊதியம் தருவது தான் காரணம் என்றும், திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவில் 80% நடிகர்களுக்கு மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையை மாற்றி நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi

பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
தமிழ்
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi
தீந்தமிழன்💞 retweetledi






















