Sabitlenmiş Tweet

ஆகச்சிறந்த நிகழ்ச்சி!
எப்படி, எதில் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை... முதலில் நன்றியை தெரிவித்துவிடுவோம்.
அரை நூற்றாண்டாக உலகமெங்கும் வாழும் தமிழர்களை தனது இசையால் தாலாட்டி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், @CMOTamilnadu
நிகழ்வுக்கு உடன் உழைத்த மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! @Udhaystalin
நிகழ்ச்சி பார்வை
சிம்பொனி இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசு சார்பில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. அதற்கான சாட்சி இந்த குறும்படம்.
அந்த பணிகளில் ஏற்கனவே இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் — இந்த குறும்படம் பார்க்கும் போது குறைந்தது 15 நாட்கள் எடுத்து முழுமையாக்கப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது.
பஞ்சு அருணாச்சலம் பாத்திரத்தில் அவருடைய மகன் சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடித்திருப்பது வேற லெவல்!
தமிழக அரசின் விருந்தோம்பல்
சிம்பொனி கலைஞர்களை வரவேற்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அவர்களுக்கு முந்தைய நாளே துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று சிறப்பு விருந்து மற்றும் பரிசுகளை அளித்தார்.
யோசித்துப் பாருங்கள் — ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் நேரடியாக வந்து உரையாடி சென்றது அந்த கலைஞர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தந்திருக்கும்!
அதுமட்டுமல்ல, நிகழ்ச்சி நடந்த நேரு அரங்கத்துக்கே காலையில் துணை முதல்வர் உதயநிதி வந்து அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
அவர் தான் முதல்வர்
நிகழ்ச்சி மாலை 5.30க்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வரின் கான்வாய் சரியாக 5.10க்கு நேரு ஸ்டேடியம் வந்தது.
நேரடியாக அரங்கத்துக்குள் செல்லாமல் முதலில் சிறப்பு விருந்தினர் அறைக்குச் சென்று கமல், ரஜினியை சந்தித்தார் முதல்வர்.
அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் அறைக்கு சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் நடந்தே அவரை அழைத்து வந்தார்.
(முன்பும் பல நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன்: முதல்வர் உடன் வந்த மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதம். கான்வாயில் வந்த மூத்த அமைச்சர் துரைமுருகனை இருக்கைக்கு அழைத்து செல்லுமாறு அமைச்சரிடம் கூறுவது,
ஒரு நடிகர் முதல் வரிசைக்கு வந்தால் எழுந்து நின்று கை கொடுத்து வரவேற்பது... அந்த மரியாதை எப்போதும் கண்ணில் படும்.)
முதலில் முதல்வர் தொகுத்த இசை நிகழ்ச்சி தொடங்கியது. ஐந்து பாடல்கள் சென்ற பின், இளையராஜாவின் நேரம் அதிகமாகிறது என்று நினைத்து “இப்போவே முடிப்போமா?” எனக் கேட்டபோது,
“இல்லை இல்லை, தொடரட்டும்” என்று முதல்வர் கூறினார். உடனே உதயநிதியையும் அழைத்து கேட்டார். பாடல் நிகழ்ச்சி முழுமையாக தொடர்ந்தது.
இசையின் அனுபவம்
சிம்பொனி இசை நிகழ்ச்சியை நேரடியாக கேட்கும் அனுபவம் ஒப்பில்லாதது. அதனால் media ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
நேரில் கேட்ட பலாயிரக்கணக்கான பார்வையாளர்கள் சிலாகித்து பேசினார்கள்.
விரைவில் open ground-ல் மீண்டும் நிகழ்த்தப்படும் என்று இசைஞானி அறிவித்துள்ளார்.
Media Coverage
முன்பெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தால் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒரு சேனல் மட்டும் exclusive எடுத்து ஒளிபரப்பும், அல்லது பிரபல தொலைக்காட்சிக்கு உரிமையளித்துவிடுவார்கள்.
ஆனால் நேற்றைய நிகழ்ச்சி — அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப media out தலைமைச் செயலகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Digital media க்காக DIPR-ன் YouTube சேனலில் logo இல்லாமல், pure raw out கொடுக்கப்பட்டது.
(raw out என்பது — முதல்வரின் படமோ, நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு பேனரையோ வீடியோ மீது overlay செய்யப்படாமல், சுத்தமான காட்சி அளிப்பது.)
இளையராஜாவின் உணர்வு
இளையராஜா பேசும்போது, “ஒரு இசைக் கலைஞனுக்காக அரசு சார்பில் இப்படிப் பட்ட பாராட்டு விழா உலகின் எங்கும் நடக்கவில்லை. என்று நன்றி தெரிவித்தார்.
நேற்று இரவு இளையராஜா நிம்மதியாக தூங்கியிருப்பார்.
"கலைஞரின் மகன் நடத்தும் அரசு, ஒரு இசை கலைஞருக்கு விழா எடுக்கவில்லை என்றார் தான் ஆச்சர்யம்"
நன்றி முதல்வரே! @mkstalin
கபிலன் S
ஊடகவியலாளர்
Shruti.tv
#Ilaiyaraaja #Ilaiyaraaja75 #MaestroIlaiyaraaja #SymphonyConcert #TNCMStalin #UdhayanidhiStalin #TamilNaduGovernment #Rajinikanth #KamalHaasan #MusicLegend #TamilCinema #Maestro #Respect #Tribute
#இளையராஜா #இசைஞானி #இளையராஜா75 #முதல்வர்_ஸ்டாலின் #உதயநிதி_ஸ்டாலின் #தமிழ்நாடு #பாராட்டு_விழா #Symphony #TamilMusic #Legend
தமிழ்




























