thiru manikkavasagam retweetledi

ஜானகி எம்.ஜி.ஆர் முன்னாள் முதல்வர் என்பதால் மெரினாவில் இடமில்லையா என்று கேட்கும் எடப்பாடியாரே, ஜானகி அம்மையார் எதனால் முன்னாள் முதல்வர் ஆனார்?
ஜானகி அம்மையாரைக் கொலை செய்ய ஜெ.ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரிவால்வரோடு சட்டப்பேரவைக்கு வந்ததாக அன்றைய சபா நாயகர் பி.எச்.பாண்டியன் குற்றம் சாட்டினாரே? நினைவு இருக்கிறதா?
"அன்னையை வெளிநாட்டுக்கித் துரத்த அடங்காப்பிடாரி சதி" ஜானகி அம்மையாரை நாட்டைவிட்டே துரத்தத் திட்டம் போட்டார் ஜெயலலிதா என்று வலம்புரி ஜான் குற்றம் சாட்டினாரே? நினைவு இருக்கிறதா?
"புரட்சித் தலைவத் அமைத்த கழகத்தைக் காப்பது அடங்காப்பிடாரியின் நோக்கம் அல்ல" என்று முன்னள் அமைச்சர் க.ராசாராம் காட்டமாகப் பேட்டி கொடுத்தாரே? நினைவு இருக்கிறதா?
"புரட்சித் தலைவர் உயிரோடு இருந்தபோதே அவருக்கு விரோதமாக மத்திய அரசிடம் மகஜர் கொடுத்தவர் இந்த நீலி" என்று காளிமுத்து எழுதினாரே? நினைவு இருக்கிறதா?
இதுவெல்லாம் அதிமுக ஏடான "அண்ணா" இதழில் வந்தவை தான்!
இன்னும் ஜானகி ராமச்சந்திரன் தரப்பு உங்கள் ஜெ. அணி மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எல்லாம் இருக்கிறது. இப்போது திடீரென்று ஜானகி ராமச்சந்திரன் மீது உங்களுக்கு பாசம் பீறிட்டுக் கிளம்பக் காரணம் என்ன?
ஜானகி அம்மையாரை அரசியலில் ஓரங்கட்டிய துரோக வரலாறு கொண்டவர் தானே நீங்கள். முதலில் ஜானகிக்கு துரோகம், பிறகு ஜெவுக்கு, பின்னர் சசிகலாவுக்கு, பின் பன்னீர்செல்வத்துக்கு, பின் செங்கோட்டையனுக்கு, பின் யாரோ?
அரசியலில் எதிரணியை ஓரம் கட்டுவோர் உண்டு. உடன் இருப்போரையும் வளர்த்துவிட்டோரையுமே காலில் விழுந்து காலி செய்வது @EPSTamilNaduக்கே உரிய தனித்துவமான துரோக வரலாறு.




தமிழ்



























