Pottachi
360 posts

Pottachi retweetledi

கள யதார்த்தம் என்ன தெரியுங்களா?
நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்து விடுவார் என கருதி யாரும் வாக்களிக்கவில்லை!
எல்லோரும் திமுகவுக்கு தானே போடுவார்கள் நாம் விஜய்க்கு போடலாம் ஓர் 20 தொகுதியாவது வரட்டும் என்கிற எண்ணத்தில் தான் வாக்களித்திருக்கிறார்கள்!
இப்படி இதையே எல்லோரும் நினைத்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது தான் கொடுமை!!
இப்போது எளிய உழைக்கும் மக்களில் இருக்கிற பெண்கள் ஏக்கத்துடன் சொல்கிறார்கள்..,
" ஸ்டாலின் வரமாட்டாரா அந்த 8000 ரூபாய் கூப்பன் வராதா?"
எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள்!
"அட, அது கூட போகட்டும் உரிமை தொகை 15 ஆம் தேதி வந்துவிடுமா?" என அப்பாவியாய் கேட்கிறவர்களும் உண்டு.
என்னவென்று சொல்வது???
அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படுகிற சம்பளப் பணம் கூட ஒரு 4 மணி நேரம் 5 மணி நேரம் தாமதமாகவோ கூட வரும்.
ஆனால் மகளிர் உரிமைத் தொகை 15ஆம் தேதி காலை 10 மணிக்கு மிகச் சரியாக பெண்களின் வங்கி கணக்கில் வந்து சேரும்.
இந்தப் பணத்தை எதிர்பார்த்து நம் பெண்கள் காத்திருப்பார்கள் என கண்ணும் கருத்துமாக தன் மேற்பார்வையிலேயே இதை பின்பற்றி வந்தவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
தேர்தல் காலத்தில் யாராவது வழக்கு போட்டு தடுத்து விடுவார்களோ என கருதி 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி அடுத்து நாங்கள் பதவியேற்கும் வரை சிக்கனமாகவும் கவனமாகவும் செலவிடுங்கள் என அறிவுறுத்திய அண்ணனாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னாரே...
பட்ட காயம் ஆறவில்லை!
உங்கள் மீதும் கோபமில்லை!!
வாக்களித்த உரிமைத் தொகையை அரசு உங்களுக்கு தராமல் இருக்க முடியாது, அதற்கான சட்டப் பாதுகாப்பை செய்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேண்டுமானால் தற்குறிகள் பொறுப்பற்று தாமதப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
களத்தில் போராடி பெற்றுத் தர நாங்கள் இருக்கிறோம்.
உங்களுக்காக எங்கள் தலைவர் இருக்கிறார்.
உங்களுக்காக திமுக இருக்கிறது!!

தமிழ்
Pottachi retweetledi
Pottachi retweetledi
Pottachi retweetledi

















