captain Xavier

144 posts

captain Xavier

captain Xavier

@CaptainMiller_

เข้าร่วม Eylül 2024
3 กำลังติดตาม1 ผู้ติดตาม
captain Xavier รีทวีตแล้ว
Makkalsevai
Makkalsevai@Makkalsevai2·
#BREAKING | TNPSC குரூப் 4 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கிறது - TNPSC தகவல் #SunNews | #TNPSC | #Group4
Makkalsevai tweet media
தமிழ்
0
5
20
768
captain Xavier รีทวีตแล้ว
21 Sparks
21 Sparks@21sparksacademy·
உரத்த குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. #increase_group4_vacancy
21 Sparks tweet media
தமிழ்
6
308
266
8.6K
captain Xavier รีทวีตแล้ว
AravinthKumar DTO
AravinthKumar DTO@Aravinthdto·
குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிப்பிற்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் எனத் தகவல் #Group4 #TNPSC
AravinthKumar DTO tweet media
தமிழ்
5
47
155
5.5K
captain Xavier รีทวีตแล้ว
செந்தமிழன் சீமான்
குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வு மூலம் நடப்பாண்டில் வெறும் 6244 பணியிடங்கள் மட்டுமே நிரப்பும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வந்தால் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது. முந்தைய அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் 3.5 இலட்சம் என்ற அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த இளைஞர்கள் பலரும் அரசுப் பணியில் சேர முயன்று வருவதால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கையும் பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10000 பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. குறைந்தபட்சம் 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த திமுக அரசு, தேர்வு முடிவையும் 8 மாதங்கள் தாமதித்து வெளியிட்டுப் பெருங்கொடுமை புரிந்தது. இதனால் இரவு பகலாக கண்துஞ்சாது படித்து, கடுமையாக உழைத்த அன்புத்தம்பி-தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் ஏறத்தாழ 3.5 இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டுக்கு 10,000 என்றால் எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் திமுக அரசால் வெறும் 20,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். எனில், தேர்தலின் போது திமுக அளித்த இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறது? கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் பன்மடங்கு அதிகம். அரசுத்துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டுமா இல்லையா? கார் பந்தயம் நடத்துவதிலும், காசு வெளியிடுவதிலும் கவனம் செலுத்தும் திமுக அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்தாதது ஏன்? தங்கள் இளைஞரணித் தலைவருக்கு பட்டம் சூட்டி துணை முதல்வராக்க போட்டி போடும் திமுக அமைச்சர் பெருமக்கள், இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறும் போட்டித்தேர்வு பணியிடங்களை அதிகரிப்பதில் அதே அளவு ஆர்வத்தை, அக்கறையை காட்டாதது ஏன்? என்ற கேள்வி ஒவ்வொரு இளைய தலைமுறை பிள்ளைகளிடமும் எழுகிறது. ஆகவே, அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
44
427
736
15.1K
captain Xavier รีทวีตแล้ว
Tamil Janam
Tamil Janam@TamilJanamNews·
குரூப்-4க்கான காலிப்பணியிடங்களை 15,000 வரை உயர்த்துமாறு 2024-ல் குரூப்-4 தேர்வெழுதியவர்கள் கோரிக்கை #TNPSC #TNPSCGroup4 #increase_group4_vacancy #tamilnadu #TamilJanam
Tamil Janam tweet media
தமிழ்
4
118
136
3.6K
captain Xavier รีทวีตแล้ว
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்குமா? – முக்கியத் தகவல் #group4 | #group4exam | #TNPSC | #govtjob | #News18TamilNadu
தமிழ்
45
108
154
10.3K
captain Xavier รีทวีตแล้ว
Dr S RAMADOSS
Dr S RAMADOSS@drramadoss·
அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை: பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப் படுவதாகவும், வழிபாடு நடத்துவதற்கு பதிலாக கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டிய அரசு, இந்த அநீதியை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோயிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது; எந்தக் கோயிலுக்கு அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டோமோ, அதை விடுத்து பக்தர்களே வராத கோயில்களுக்கு அனுப்பப்படுகிறோம்; பரம்பரை அர்ச்சகர்கள் எங்களை அவமானப்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியதாக தி டி.ட்டி நெக்ஸ்ட் (DT Next) இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தால், அவர்களும் பரம்பரை அர்ச்சகர்களுடன் இணைந்து எங்களை அவமானப்படுத்துகின்றனர்; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் புகார் செய்த போதிலும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளால் முடக்கப்பட்டிருந்த இத்திட்டம், வழக்குகள் அனைத்தும் முறியடிக்கப்பட்ட நிலையில், 2021&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14&ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டம் தந்தை பெரியாரின் கனவு என்றும், இதன்மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், பல ஆண்டு போராட்டத்திற்கு பிற அர்ச்சகர் ஆக்கப்பட்ட இடைநிலை சாதியினருக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுத் தர தமிழக அரசு தவறிவிட்டது. இது தான் திமுக அரசின் மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். தமிழக அரசு நினைத்தால், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் தான் கருவறையில் அர்ச்சனை செய்வார்கள் என்று அறிவித்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. இதுதொடர்பாக அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும் அளிக்கப்பட்ட புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம் பரம்பரை அர்ச்சகர்களைக் கண்டு அரசு அஞ்சுவது தான். இப்படிப்பட்டவர்கள் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமானப்படுத்தப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு. இதற்கு பரிகாரம் காணும் வகையில், இன்னும் அதிக எண்ணிக்கையில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமித்து அவர்களுக்கு கருவறையில் பூசை செய்யும் அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
தமிழ்
19
115
244
7.7K
captain Xavier รีทวีตแล้ว
Dr S RAMADOSS
Dr S RAMADOSS@drramadoss·
டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்! தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9&ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11&ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்.@CMOTamilnadu #TNPSC
தமிழ்
57
318
517
16.6K
captain Xavier รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் #AIADMK #EPS #Group4 #Exam
Thanthi TV tweet media
தமிழ்
19
177
233
7.2K
captain Xavier รีทวีตแล้ว
Arivoli a - say No To Drugs & Dmk
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #increase_group4_vacancy #ADMK_TNJ
Arivoli a - say No To Drugs & Dmk tweet media
தமிழ்
3
79
59
910
captain Xavier รีทวีตแล้ว
Mahes vedhavalli #SayYESToWomenSafety
Group 4 : ஆட்சிக்கு வருவதற்காக திமுக சொன்ன அத்தனையும் வார்த்தைகளும் பொய்யா..❓ Group 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய #என்_தலைவன்_எடப்பாடியார் #increase_group4_vacancy @satyenaiadmk @RamaAIADMK @AIADMKOfficial @CTR_Nirmalkumar @AIADMKITWINGOFL
Mahes vedhavalli #SayYESToWomenSafety tweet media
தமிழ்
2
154
126
2.3K
captain Xavier รีทวีตแล้ว
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்களித்த மக்களையும்,கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்த #விடியா_திமுகமாடல் அரசு. #Increase_group4_vacancy
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
45
292
453
6.9K
captain Xavier รีทวีตแล้ว
Arivoli a - say No To Drugs & Dmk
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய #increase_group4_vacancy #ADMK_TNJ
Arivoli a - say No To Drugs & Dmk tweet media
தமிழ்
0
65
48
876