Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)@BS_Prasad
1991ம் வருடம், அப்போ எனக்கு 5 வயது, நர்சரி ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த வருடம் தான் நாட்டோட 10வது லோக்சபாவுக்கான தேர்தல் நடந்தது. எங்களுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் (அப்போது அது நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி) பாஜக சார்பாக அவர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
1996ம் வருடம், அப்போது நான் 5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். 11வது லோக்சபாவுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம். மனம் தளராத அவர் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். ஆனால் தோல்வியுற்றார்.
1998ல் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், அதே அவர் பாஜக சார்பாக அதே தொகுதியில் போட்டியிட்டு 3வது முறையாக தோல்வியுற்றார்.
1999ம் ஆண்டு நாட்டின் 12வது லோக்சபாவுக்கான தேர்தல் நடைபெற்றது. அதிலும் அதே அவர் அதே தொகுதியில் பாஜக சார்பாக (திமுகவுடன் கூட்டணி அமைத்து) போட்டியிட்டார். ஆனால் இம்முறை அவர் வெற்றிபெற்றார். மத்திய இணை அமைச்சரும் ஆனார்.
2004ம் வருடம் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவரே போட்டியிட்டார். ஆனால் இம்முறை தோல்வியுற்றார்.
2006ம் ஆண்டு கல்லூரி முடித்து நான் வேலைதேடி சென்னை வந்தேன்.
2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் அவரே போட்டியிட்டார். இம்முறை முதன்முறையாக நானும் அவருக்கு வாக்களித்தேன். ஆனால் இம்முறையும் தோற்றார்.
10 வருட காங்கிரஸ் ஆட்சிக்கு பின் 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல். மோடியை பிரதமர் வேட்பாளராக இறக்கியது பாஜக. தமிழகத்தில் தேமுதிக தலைமையில் பாஜக, மதிமுக, பாமக மேலும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து களம்கண்டது. அந்த தேர்தலிலும் வழக்கம்போல ஐயா தான் கன்னியாகுமரி பாஜக வேட்பாளர். மோடி அலையும், கூட்டணியும் (பாஜக மீது இன்றுள்ள வெறுப்பு பரப்பப்படாத காலம் என்பதும் ஒரு காரணம்) சேர்ந்து அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார், அமைச்சரும் ஆனார்.
2019ம் ஆண்டு எனக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகளும் இருந்தாள். அந்த பாராளமன்ற தேர்தலிலும் கன்னியாகுமரியில் அவரே போட்டியிட்டு தோல்வியுற்றார்.
2021 வசந்தகுமார் இறந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலிலும் அவரே போட்டியிட்டு, வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்திடம் தோல்வியை தழுவினார்.
2024ம் ஆண்டு, எனக்கு இரண்டாவது மகளும் பிறந்து மூத்தவள் இரண்டாம் வகுப்பிற்கும் போய்விட்டாள். அந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 10வது முறையாக கன்னியாகுமாரி தொகுதியில் அவரே போட்டியிட்டு தோல்வியுற்றார்.
சற்றும் மனம்தளராத அவர் 2029ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகிவருகிறார்.
***********************************************
எனது கேள்விகள் என்னவென்றால்...👇👇
1. எனது தாத்தா, எனது அப்பா, நான் என மூன்று தலைமுறைகளாக அவருக்கே வாக்களித்துள்ளோம். எனது அடுத்த தலைமுறையும் அவருக்கேதான் வாக்களிக்க வேண்டுமா?
2. அவர் வீடு வீடாக சென்று கட்சியை வளர்த்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் மட்டும்தான் அந்த மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கட்சியை வளர்த்தாரா?
3. அண்ணாமலை சுயநலனுக்காக கட்சியில் இருந்தார் என்று சொல்கிறவர்கள், 35 வருடமாக ஒரு தொகுதியில் தன்னை தவிர யாருக்கும் வாய்ப்பு வழங்காமல் தொண்டர்களின் உழைப்பை தொடர்ந்து தனிமனிதனாக உறிஞ்சிக்கொண்டிருக்கும் இவரை பொதுநலவாதி என்று சொல்வார்களா..?
4. கன்னியாகுமரி போன்று பாஜக நன்கு வேரூன்றிய மாவட்டத்தில் கூட 3 தலைமுறைகளாக இன்னொரு வேட்பாளரை அடையாளம் காணமுடியவில்லையா? இல்லை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா..?
5. தொடர்ந்து வெற்றி பெறுகிறவர் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் 10 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே (கஜினி முகமதுக்கே டஃப் கொடுப்பார்) வெற்றி பெற்றிருக்கிறார், அதுவும் கூட்டணி அமைத்து. திமுகவில் ஒரு குடும்பத்தை தாண்டி யாரும் வளரமுடியாது என்பதை போல இந்த மாவட்டத்தில் இவரை தாண்டி யாரும் வளர முடியாதா?
6. சரி கட்சியையாவது வளர்த்தாரா என்றால் அதுவும் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்திலுள்ள 6ல் 5 தொகுதிகளில் பாஜக மூன்றாவது இடம். (நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான பாஜக வேட்பாளர்கள் ரேஸில் ஐயாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது)
7. சரி கட்சியிலாவது இவருக்கு நல்ல பெயர் இருக்கிறதா என்று விசாரித்தால்... கீழ்நிலை கட்சி நிர்வாகிகள் முதல் கட்சித்தொண்டர்கள் வரை பக்கெட், அண்டா, குண்டா என எடுத்து இவரை கழுவி ஊற்றுகிறார்கள்.
8. ஹிந்துத்துவம், கொள்கை, சித்தாந்தம் என்கிற பெயரில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கட்சியும், கன்னியாகுமரி மாவட்ட தொண்டர்களும் இவரை தலையில் தூக்கி சுமக்கவேண்டும்..?