
“என்னுடைய பெயரிலோ, என்னுடைய மனைவி பெயரிலோ, என்னுடைய பிள்ளைகள் பெயரிலோ நேரடியாக ஒரு கல்குவாரி கூட இல்லை” — அப்பாவு சொல்கிற இந்த ஒரு வரி கேட்க நல்லா இருக்கும். ஆனால் மக்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு இதுல பதில் இருக்கா? அப்பாவு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் நின்றவர்கள் யார்? சங்கரநாராயணன், அடை மிதிப்பான் குளத்தில் நாலு பேர் நசுங்கி உயிரிழந்த கல்குவாரியின் ஓனர். அடுத்ததாக நிற்பவர் கிரகாம் பெல், SAV என்னும் நிறுவனத்தின் உடைய அதிபர், ராதாபுரம் தொகுதியில் இயங்கும் பெரும்பான்மையான கல்குவாரிகள் இவரது நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கிறது, கூகுள் மேப்பை திறந்து பார்த்தாலே கல்குவாரிகள் மேலே "SAV ப்ளூ மெட்டல்ஸ்", என்று பெயர் போட்டு இருப்பது தெரியவரும். ஆக இவர்கள் இருவரும் சாதாரண நண்பர்கள் மாதிரி பக்கத்தில் நிற்பது ஒரு சாதாரண காட்சி இல்ல; அது அதிகாரமும், பணமும், கல்குவாரி தொழிலும் எப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை காட்டும் சின்னம். மிஸ்டர் அப்பாவு, கல்குவாரி நேரடியாக உங்கள் பெயரில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆதரவாளர்கள் மூலம் நடத்தலாம், பினாமிகள் மூலம் நடத்தலாம், நண்பர்கள் மூலம் நடத்தலாம். அவர்கள் தொழில் நடத்துவார்கள், நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள், பாதுகாப்பு, அமைதி எல்லாம் கிடைக்கச் செய்வீர்கள். அதற்கான கமிஷன், மாமுல் எல்லாம் திரும்பி வரும் , இது இப்போ அரசியல் பேசாத பள்ளிக்குழந்தைகளுக்குக் கூட தெரியும் விஷயம். அப்படியிருக்க, “என் பெயரில் இல்லை” என்று சொல்லி ஏன் தப்பிக்க முயற்சி? ராதாபுரம் தொகுதியில் சுமார் 40 கல்குவாரிகள் இயங்குகிறது. சட்டப்படி 72 அடி ஆழம் வரை தான் அனுமதி. ஆனால் அந்த வரம்பை மீறி பல இடங்களில் தோண்டப்பட்டு வருகிறது என்பது உண்மை. இது வெறும் விதிமுறை மீறல் இல்லை, இது உயிர் ஆபத்து. மண் சரிவு, விபத்து, தண்ணீர் ஆதாரம் அழிவு எல்லாமே இதோட சேர்ந்து வரும். இங்கே ஒரு உண்மையான மக்களாட்சி பிரதிநிதி என்ன செய்ய வேண்டும்? “என்னுடைய தொகுதியில் 72 அடியை மீறி இயங்கும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக நிறுத்துவேன், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன்” என்று சொல்லி நிறுத்தி இருக்க வேண்டும். அதுதான் பொறுப்பு. அதுதான் நேர்மை. ஆனால் அது நடக்கவில்லை. ஏன்? ஒரு சாதாரண மகன் கூட இப்போ கேட்கிறான், “செய்தா, பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சங்கரநாராயணனும் கிரகாம் பெல்லும் உங்கள் தேர்தல் செலவுக்கு பணம் எங்கிருந்து தருவார்கள்?” என்று. மக்கள் இப்போ புரிந்து கொள்ள வேண்டியது “என் பெயரில் இல்லை” என்று சொல்வதை விட, “என் தொகுதியில் சட்டத்துக்கு புறம்பாக ஒரு கல் குவாரி கூட இயங்காது” என்று நிரூபிப்பவர்களுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுக கூட்டணி வேட்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் வேட்புமன் தாக்கல் செய்த அடுத்த நாளில் ஓப்பனாகவே சொல்லிவிட்டார், சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் கல் குவாரிகள் இழுத்து மூடப்படும் என்று.. எனவே மக்கள் புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கான நபர் யார் என்பதை...













