
டாஸ்மாக்கில் மதுபானம் விற்கும் கடை என்பது பணிபுரியும் இரண்டு பேரால் மட்டும் நடத்தப்பட முடியாது. அவர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் பணிச்சுமை என்பது அந்த ஊதியத்தை விட அதிகம். நாள் முழுக்க விற்பனை, லோடு இறக்குவது, இருப்புக் கணக்கு பார்ப்பது போன்ற பணிகளையும் உள்ளடக்கியது அந்த வேலை. miscellaneous செலவினம் போன்ற கணக்குகள் எழுத நிதி ஒதுக்கீடு கொண்ட அலுவலகம் அதுவல்ல. எனவேதான் இந்த கூடுதல் விலை என்ற நடைமுறையே ஜெயலலிதா இந்த அமைப்பை உருவாக்கிய நாள் தொட்டு நடந்து வருகிறது.
பணியாளர்கள் அவர்களை நிர்வகிக்கும் அலுவலர்கள் என இந்தக் கூடுதல் பணம் உலவுவதே அரசுப்பணியாளர்களுக்குள்ளேதான். இவர்களுக்கிடையிலான இப்படியொரு ஏற்பாட்டை உருவாக்கியதே அதிமுக தான் என்பதால் ஆட்சி மாறினாலும் கூட அவர்கள் வாளாவிருந்தார்கள்.
ஆனால் அந்த பணத்தில் அரசாங்கத்தை நடத்தும் கட்சிக்கே பங்கு போகிறது என்று தேர்தல் மேடைகளில் பாட்டுப்பாடி நடனமாடி ஆட்சிக்கு வந்த கூட்டம் என்பதால் இப்போது கேட்கத்தான் செய்வார்கள்! ஆதவுக்கு பத்து ரூபா ஆனந்துக்கு பத்து ரூபானு அதே சந்தத்தில் பாடி பதில் சொல்வாரா முதலமைச்சர்?
News Tamil 24x7@NewsTamilTV24x7
முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக மது பிரியர்கள் வேதனை.. கண்டுகொள்ளாமல் சென்ற அதிகாரிகள்.. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு #Tirupathur #Tasmac #CMVijay #CMJosephVijay #ViralVideo #Newstamil24x7
தமிழ்
