
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில், இன்று (26.3.2026) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தஞ்சை மத்திய மாவட்டம், அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி அவர்கள் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏழுப்பட்டி ஜி.பாலு, அம்மாபேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கோவிந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் என்.ஏ.பட்டாபிராமன், சரத்குமார், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சி.புருஷோத்தமன் - துணைச் செயலாளர் அன்பன்தமிழ், வழக்கறிஞர் அணி எஸ்.பிரபு, ஆசிரியர் கே.சந்திரமோகன், எஸ்.பாலமுருகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகன், எம்.எல்.ஏ., தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்.பி., பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தார்.
***
#DMK

தமிழ்



















