Sabitlenmiş Tweet
DMK NRI Wing
4.2K posts

DMK NRI Wing
@DMKNRIWing
The Official X handle of DMK NRI Wing.
Katılım Ocak 2021
111 Takip Edilen21.7K Takipçiler


DMK NRI Wing retweetledi

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்!
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi

தமிழ்
DMK NRI Wing retweetledi

இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.
#StopHindiImposition #SaveTamilLives
தமிழ்
DMK NRI Wing retweetledi

கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்ற சமயத்தில் நான் உட்பட பலருக்கும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி பதவிக் காலம் நிறைவுற்றது. அதற்கும் மூன்று நாட்கள் முன்னதாக ஜூலை 21 ஆம் தேதியன்று அப்போதைய மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பொதுவாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் முடித்து செல்லும் போது துணை ஜனாதிபதி தனது இல்லத்தில் உறுப்பினர்களுக்கு விருந்தலித்து நினைவுப் பரிசு வழங்கி வழியனுப்பி வைப்பது மரபு. ஆனால் எங்களுக்கும் முன்பே துணை ஜனாதிபதி ராஜினாமா செய்துவிட்டதால் வழியனுப்பி வைக்கும் விழா மரபின்றியே எங்கள் பதவிக் காலம் நிறைவுற்றது.
இந் நிலையில் புதிதாக பொறுப்புக்கு வந்த மேதகு.சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது ஓய்வு பெறும் உறுப்பினர்களோடு கடந்த முறை ஓய்வு பெற்றவர்களையும் இணைத்து வழியனுப்பும் விழா நடத்த முடிவு செய்து எங்களையும் அழைத்து இருந்தார்.
இன்று ( 18/03/26) மாலை டில்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுப் பரிசைப் பெற்றுக் கொண்டேன். பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அய்யா அவர்களுக்கும் மாண்புமிகு.துணை முதல் அமைச்சர் அவர்களுக்கும் என் வாழ்நாள் நன்றியை உரித்தாக்குகிறேன் 🙏


தமிழ்

ஒவ்வொரு தமிழருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கருத்தியலில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்வரை, இங்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆளும்.
விரைவில் வருகிறது திராவிட மாடல் 2.0 ஆட்சி!
#VoteForDMK
தமிழ்

இந்த கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும்வரை உங்கள் அப்பனே வந்தாலும் உங்களால் இங்கு வெல்ல முடியாது.
எங்கள் மண்ணில் நாங்கள் தான் வெல்வோம் 🖤❤️
#SayNoToNDA
தமிழ்

தமிழ்நாட்டுக்கு வேண்டிய நிதி, மெட்ரோ போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்கள் என எதையும் தராத ஒன்றிய பாஜக அரசு, நமக்குத் தந்ததெல்லாம் நீட் தேர்வு, ஆளுநர் மூலம் குடைச்சல், இந்தித் திணிப்பு, மிரட்டிப் பார்க்க ரெய்டுகள் ஆகியவை தான்.
நாம் கேட்பதற்கெல்லாம் NO சொல்லும் NDA கூட்டணிக்கு தமிழ்நாடும் NO தான் சொல்லும்!
#SayNoToNDA
தமிழ்

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான, நிதானத்துக்குப் பெயர்போன இந்த சண்முகம் பெண்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசுவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.
"பெண்களுக்கு பாதுகாப்பில்லை" என்று கூறி மக்களை ஏமாற்றுவதற்காக அதிமுக நடத்திய போராட்டத்தில், "எனக்கு நடிகை வேண்டும் என்பதுதான் கனவு. அதை முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?" என்று பேசியுள்ளார் சண்முகம்.
இவர் இவ்வாறு நிதானம் இல்லாமல் அசிங்கமாகப் பேசுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசும்போது "திமுக ஆட்சியில் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்" என்று மிகக் கேவலமாகப் பேசியிருந்தார்.
பெண்களை மிகவும் மதிக்கும் கட்சி என்றும், ஒரு பெண்ணைத் தலைவராக ஏற்றிருந்த கட்சி என்றும் கூறிக்கொள்ளும் அதிமுக, சண்முகம் போன்றவர்களைப் பெண்களுக்கு எதிராக இப்படித் தொடர்ந்து பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்?
பெண்களின் பாதுகாப்பை உண்மையில் உறுதிசெய்பவர் யார் என்பதை தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் அறிந்திருப்பதால் தான், தொடர்ந்து திமுகவையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களையும் வாக்களித்து தேர்ந்தெடுத்து, பழனிசாமிக்கு தோல்விகளையே பரிசாக அளிக்கின்றனர்.
சண்முகம் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும், பெண்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும், அவர் மீது எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன?
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழ்
DMK NRI Wing retweetledi

கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கழக அணி வெற்றி பெறுவதற்கு கழகத் தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
ஒன்றிணைந்து செயல்படுவோம், களத்தில் வென்றெடுப்போம்.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!




தமிழ்
DMK NRI Wing retweetledi

உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.🖤♥️
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!
#VoteForDMK


தமிழ்

10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரையே காலி செய்த பாஜகவுக்கு, பாதம் தாங்கி பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம்?
இந்தியாவிலேயே பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் நம் தலைவர் அவர்கள் தான் 🖤❤️
#VoteForDMK
தமிழ்

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவு, இந்த இயக்கம் தொடங்கியது முதல் உண்டான உறவு.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தலைமுறை தலைமுறையாகத் தொடரும் உறவு 🖤❤️
#VoteForDMK
தமிழ்
DMK NRI Wing retweetledi

#WATCH | Chennai | On the announcement of dates of polls in 5 states/UTs, Former DMK MP MM Abdulla says, "We are already prepared... DMK is always in election mode and always been working for elections... The coalition and other processes have already been started by DMK. Manifesto can be expected in another 2 days..."
English
DMK NRI Wing retweetledi

இஸ்லாமியர்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்!
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான்!
கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சென்னை அமைந்தகரையில் இன்று (15-03-2026) நடத்திய ‘பேரன்பின் ஈகைப் பெருவிழா – புனித ரமலான் நோன்பு திறப்பு’ நிகழ்வில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இந்தப் புனித ரமலான் மாதத்தில், கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நடத்தும், இந்த பேரன்பின் ஈகைப் பெருவிழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தம்பி சுபேர் கான் அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். தந்தைக்குத் தப்பாத பிள்ளையாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான், அவரின் தந்தை முன்னாள் அமைச்சர் நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருமை அண்ணன் ரகுமான் கான் அவர்களின் சட்டமன்றப் பேச்சுகளை எல்லாம், ‘இடிமுழக்கம்’ எனும் தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தார். அதை நான்தான் வெளியிட்டேன். கழகப் பணி, மருத்துவச் சேவை இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கும், இந்த நிகழ்ச்சியை அவருடன் சேர்ந்து ஒருங்கிணைத்த சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவைச் சேர்ந்த உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
ஈகைப் பண்பும், அடுத்தவர்களுக்கு உதவும் மனமும், அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்தும் சமநெறியும் கொண்ட - தூய இஸ்லாமிய சொந்தங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய ரமலான் நல்வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்த இயக்கம் தொடங்கியது முதல் உண்டான உறவு! கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலம்தொட்டு, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இப்போது நான் என தலைமுறை தலைமுறையாகத் தொடரும் உறவு, இந்த உறவு! அதன் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நபிகள் நாயகம் அவர்களின் 1,500-ஆவது பிறந்தநாள் விழாவில் நான் கலந்து கொண்டு பேசினேன். இந்த உறவு இணைபிரியாமல், காலம்காலமாக தொடரும். நம்மை யாராலும், ஒருநாளும் பிரிக்க முடியாது!
உங்களில் ஒருவராக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். உங்களுக்கான பல நலத்திட்டங்களை அவரின் ஆட்சிக் காலங்களில் கொண்டு வந்தார். அவரின் வழியில் நடக்கும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், சிறுபான்மையினருக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் என்பது, மிக மிகப் பெரியது. எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியாத அளவுக்கு, அந்த சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது. நேரத்தின் அருமை கருதி, அதையெல்லாம் நான் விளக்கமாகப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்!
கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் நாள் கும்பகோணத்தில் நடைபெற்ற மஹல்லா ஜமாத் மாநில மாநாட்டில் நான் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த மாநாட்டில் எடுத்து வைத்த கோரிக்கைகளை எல்லாம் நான் ஏற்றுக் கொண்டு, அதில் ஐந்து சிறப்பு அறிவிப்புகளை நான் வெளியிட்டேன்.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், உங்களுக்கு எப்போதெல்லாம் என்ன தேவைப்பட்டாலும், அதை அறிவித்துச் செயல்படுத்துவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
நம்முடைய திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்! மகளிர் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த ஜமாத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கைதட்டி அதை வரவேற்றார்கள். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது! அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும்!
அனைவரும் சொன்னார்கள்... தேர்தல் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த மேடையையே பாருங்கள்... இசுலாமிய மக்களுக்கான அனைத்து அமைப்புகளும் ஒன்றாக - ஒற்றுமையாக கூடி, பேரன்பின் ஈகைப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அனைத்துச் சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு, இதுபோன்று இருந்ததா என்றால், இல்லவே இல்லை. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது தி.மு.க. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம்! ஏன், இந்திய நாட்டுக்கும் அவசியம்!
ஆனால், அப்படியே இதற்கு நேர்மாறான நிலைமை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது! அண்மையில், அசாம் மாநில முதலமைச்சரே இஸ்லாமியர்கள் பற்றி எப்படியெல்லாம் வெறுப்பை விதைத்தார் என்று விளக்கமாகச் சொல்லி, இந்த மேடையின் மாண்பை நான் குறைக்க விரும்பவில்லை. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பார்க்காமல் தாக்குதலை நடத்துகிறார்கள்!
இப்படி நாடு முழுவதும் நடக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை பற்றி, இன்றைக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் எதாவது கருத்து சொன்னாரா? திருவாளர் பழனிசாமி அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம்... அ.தி.மு.க. என்ற கட்சியுடன் சேர்த்து, உங்கள் மனசாட்சியையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டீர்களே! அதுதான் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான வெறுப்பு நெருப்பை தூண்டிவிட்டு, அதில் குளிர்காயும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி அவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்?
பழனிசாமி மட்டுமல்ல, நாட்டில் இப்படித்தான் பலரும், நோன்பு திறக்கும் ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஃபோட்டோக்கு போஸ் குடுத்துவிட்டு, பா.ஜ.க. மூலமாக இஸ்லாமியர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான்! தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடுகிறோம். சட்டமன்றத்தில் இருந்து தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஏன், நீதிமன்றப் படியேறி வழக்கு தொடுக்கிறோம்! அதனால்தான், சிறுபான்மையின மக்களும் என்றைக்கும் தி.மு.க.வுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் காப்பாற்றப்பட - சிறுபான்மையின மக்களும் பெரும்பான்மையின மக்களும் சகோதரப் பாச உணர்வுடன் பழகும் பண்பாடு தழைக்க - இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர வேண்டும்! அதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய நாளில் உங்களின் ரமலான் பெருநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் அரவணைக்கும் அன்பால் வெல்வோம் ஒன்றாக!
நன்றி, வணக்கம்!




தமிழ்
DMK NRI Wing retweetledi

நமது மொழி, நமது இனம், நமது உரிமை!
டெல்லியின் அதிகாரத் திமிரையும் மொழித் திணிப்பையும் தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மாநில உரிமைகளை அடகுவைக்காத கம்பீரமான தமிழ்நாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்த, தமிழர்களின் எஃகுக் கோட்டையாக விளங்கும் கழகத்தின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்.
#VoteForDMK

தமிழ்
DMK NRI Wing retweetledi
DMK NRI Wing retweetledi

"I am a product of #நான்_முதல்வன்" - சுப்பிரமணிய பாரதி
🔷 கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம்.
🔷 ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
🎓 #நான்_முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் #UPSC குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி அவர்கள்.
🌟 இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு! வளமான இளைய தமிழ்நாடு!
🌟 நமது #DravidianModel அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும்! வெற்றிக் கதைகள் மேலும் உயரும்!
தமிழ்


