DMK NRI Wing

4.5K posts

DMK NRI Wing banner
DMK NRI Wing

DMK NRI Wing

@DMKNRIWing

The Official X handle of DMK NRI Wing.

Katılım Ocak 2021
116 Takip Edilen23.2K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
English
130
485
2K
0
DMK NRI Wing retweetledi
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
இந்தத் தேர்தலில் கழகத் தலைவர் என்னை முதலில் “நட்சத்திர பிரச்சாரகராக” அறிவித்து பிறகு தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தார்கள். நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் நான்கில் உதயசூரியன் வெற்றி.. சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் தோல்வி. அங்கும் இரட்டை இலைதான் வென்றதே தவிர விசில் அல்ல!! அந்த அளவில் நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் விசிலுக்கு வேலை இல்லாமல் கழகத் தோழர்கள் செய்தது மட்டுமே இந்தத் தேர்தலில் சற்று மகிழ்வான விசயம்.
தமிழ்
22
125
616
13.6K
DMK NRI Wing retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
259
1.8K
4.7K
132.1K
DMK NRI Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
Thanthi TV@ThanthiTV

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv

தமிழ்
202
1.5K
3K
113K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
இவ்வளவு காலம் நாம் பாதுகாத்து வந்த தமிழ்நாட்டின் மாண்புகளை ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கியிருக்கிறோம். ஆதவ் அர்ஜுனாவின் வருகை, தமிழ்நாட்டை மீண்டும் லாட்டரி விற்பனையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அருமையான மாற்றம்! #TVKFails
DMK NRI Wing tweet media
தமிழ்
3
111
204
2.7K
DMK NRI Wing retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களின் குறைகளை தீர்க்க முதல்வரின் முகவரி எனும் தனி துறையை உருவாக்கி முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு அதில் 1.01 கோடி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர். இதை Google செய்தால் கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம். தினம் ஒரு பொய் Narrative பரப்ப வேண்டும் என்று செயல்பட தொடங்கியுள்ள mafia கும்பல் இன்று இந்த துறையை sofa model அரசுதான் உருவாக்கியது போல காலை முதல் பரப்பி சிற்றின்பம் காண்கிறது. உழைக்க ஐடியா இருக்கிறதா அல்லது உங்கள் தலைவரைப் போல உழைக்காமல் பொய் விளம்பரம் மூலமே காலத்தை தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா? #TVKLies
DMK IT WING tweet media
தமிழ்
78
725
1.2K
32.2K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்போம் என்று கூறியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. விஜய்ண்ணா ஆட்சிக்கு வந்தால் ஓவர் நைட்டில் போதைப் பொருள்களை ஒழித்துவிடுவார்கள் என்று வாக்களித்த மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்போம் என்று கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் ஆதவ். 2021ல் திமுக ஆட்சியமைத்ததும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, தண்டனைகளை கடுமையாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை ஜூன் மாதமே தொடங்கினோம். கஞ்சா விற்பவர்களை கைது செய்வது, குண்டர் சட்டத்தில் அடைப்பது, அவர்களது வங்கிக்கணக்குகளை முடக்குவது, சொத்துகளை பறிமுதல் செய்வது என்று தண்டனைகள் கடுமையாக்கப்பட்டது. இந்த பணியினை கூடுதல் காவல் இயக்குநர் கவனித்து தினமும் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தியை முற்றிலும் நிறுத்தவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினரோடும் சேர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்த வரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4 கட்டங்களாக நடத்தப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 2025ல் அரசு வெளியிட்ட அறிக்கைப்படி 2021 முதல் சுமார் 68000 குற்றவாளிகள் மீது சுமார் 46,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 100 டன்னுக்கு மேற்பட்ட கஞ்சா, சுமார் 28 கிலோ ஹெராயின், 4 லட்சம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு எங்களால் குறைக்கப்பட்டது. நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்ற நேரத்தில் கூட, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்தியதாக திமுக அரசை பாராட்டியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. நாங்கள் செய்த எல்லா திட்டங்களையும் மரு வைத்தவன் இந்திரன், மரு இல்லாதவன் சந்திரன் என்பது போல, பெயர் மாற்றி தங்களது பெயரில் செயல்படுத்தும் #SofaModel அரசு, இதையும் அப்படியே அணுகுகிறது. கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று அவதூறு பரப்பி வந்த தவெக்கன்ஸ்-க்கு 'தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி’ மொமென்ட்! தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்கப்படும். முட்டுக்கொடுக்க வழிகளைத் தேடுங்கள். You can bro! #TVKFails
DMK NRI Wing tweet mediaDMK NRI Wing tweet media
Polimer News@polimernews

#JUSTIN || போதைப்பொருள் விற்றால், வாங்கினால் குண்டர் சட்டம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா | #TVK | #Drugs | #AadhavArjuna | #PolimerNews

தமிழ்
15
231
389
18K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தேர்தல்கள் முடிந்தால் தான் மோடி அரசின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும். நாட்டுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் என பின்னாடியே ஒரு குரூப்பும் வரும். #BJPFails
DMK NRI Wing tweet media
தமிழ்
0
52
70
1.3K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தென்காசியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற திரு. @Rtr_Muthukumar அவர்கள், இன்று சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH-ல் MS பட்டம் பெற்றிருக்கிறார். தன்னுடைய இந்த வெற்றியை நம் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களுக்கு அவர் சமர்ப்பித்துள்ளார். இதுதான் இந்த மண்ணில் திராவிடம் சாதித்தது. திராவிடத்துக்கு என்றும் அழிவே இல்லை!
தமிழ்
6
164
382
4.5K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
கடனில் மூழ்கியதா தமிழ்நாடு? அதிக கடன் வாங்கிய டாப் 5 மாநிலங்கள்: மேற்குவங்கத்தின் கடன் சுமார் ரூ.7.10 லட்சம் கோடி - GSDP ல் 40% கர்நாடகாவின் கடன் சுமார் ரூ.7.64 லட்சம் கோடி - GSDP ல் 24.91% மகாராஷ்டிராவின் கடன் சுமார் ரூ.8.10 லட்சம் கோடி - GSDP ல் 18.3% உத்தரபிரதேசத்தின் கடன் சுமார் ரூ.8.60 லட்சம் கோடி - 23.1% தமிழ்நாட்டின் கடன் கடன் சுமார் ரூ.9.60 லட்சம் கோடி - GSDP ல் 26.4% 2021-ல் அதிமுக ஆட்சியை விட்டு இறங்கும்போது தமிழ்நாட்டின் கடன் 5.78 லட்சம் கோடி தற்போதைய தமிழ்நாட்டின் கடன் 9.60 லட்சம் கோடி தமிழ்நாட்டின் GSDP-ல் 26.4% இந்தக் கடன். 15-வது நிதி கமிஷனின் விதிப்படி தமிழ்நாடு அரசால் 28.7% வரை கடன் வாங்க முடியும். எனவே, தனது சக்திக்கு உட்பட்டே கடன் வாங்கியுள்ளது திமுக அரசு. கடன் உயர மற்றொரு காரணம், திமுக பதவியேற்ற நேரத்தில்: 2021 மே மாதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73 2026-ல் ரூபாயின் மதிப்பு ரூ.95.23 அதேநேரம், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2025-2026 தரவுகளின்படி ரூ.35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 10.83% வளர்ச்சியடைந்துள்ளது தமிழ்நாட்டின் நிதிநிலைமை. மாதம் 1 லட்சம் சம்பாதிப்பவர் 20000 கடன் வாங்குவதற்கும், மாதம் 25,000 ரூபாய் கடன் வாங்குபவர் 20000 கடன் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதில் தமிழ்நாடு முதல் வகை. தமிழ்நாட்டின் கடன் 10.70 லட்சம் கோடியாக உயரும் என்பது இடைக்கால பட்ஜெட்டிலேயே நாங்கள் அறிவித்தது தானே? அதன்பிறகு தானே நீங்கள் தேர்தல் அறிக்கையே வெளியிட்டீர்கள்? இந்த வாக்குறுதிகளைச் சொல்லித்தானே வாக்குகளைப் பெற்று தவெகவை வெற்றிபெற வைத்தீர்கள்? தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகளை செயல்படுத்துவதில் விஜய்க்கு எந்த அளவுக்கு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு செயல்படுத்த வைப்பதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. கடனைக் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்காதீர்கள். சொன்னதைச் செய்து உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மைச் செய்ய முயற்சி செய்யுங்கள். மக்கள் உங்களை தினமும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற நினைப்பு உங்களுக்கு இருக்கட்டும்!
மிஸ்டர் கமாண்டர்@UFTVcommanders

அது இருக்கட்டும் 10 லட்சம் கோடி கடன் எதுக்கு வாங்குனீங்க ?? பாஜக அரசு தமிழகத்திற்கு கடன் தரலை, நிதி தரலை னு 10 லட்சம் கோடி கடன் மட்டும் வாங்கி இருக்கீங்க ... அதுவும் இந்தியா ல இருக்கிற எல்லா மாநிலத்தை விட அதிகம் How is it ?

தமிழ்
8
245
464
17.6K
DMK NRI Wing retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
290
2.6K
6.9K
187.2K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
திருவள்ளூர் அருகே வேலை முடிந்து வீடு திரும்பிய 40 வயது பெண்ணுக்குக் கத்தியைக் காட்டிப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. இதுதான் தவெக அரசு சொன்ன பெண்கள் பாதுகாப்பா? கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி மேடைக்கு மேடை நீலிக்கண்ணீர் வடித்த முதலமைச்சர் விஜய், இப்போது தனது ஆட்சியில் பெண்களுக்கு நடக்கும் இந்தத் தொடர் கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? #TVKFails
தமிழ்
1
56
76
1.2K
DMK NRI Wing retweetledi
ஜெயராமன் திமுக
அப்பாவி குடும்பத்தின மீது கார் ஏற்றி அந்த குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விட்ட TVK நிர்வாகி.
தமிழ்
34
1.6K
2.2K
32.8K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
நாங்கள் கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் ஆட்சியில் இருப்பவர்களால் முடக்க முடியாது. அப்படி முடக்க நினைத்தால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் வரை.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்று பொருள்!
Sun News@sunnewstamil

#BREAKING | திமுகவின் கடும் எதிர்ப்பால் மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! #SunNews | #MagalirUrimaiThogai | #TNGovt

தமிழ்
6
90
166
2.2K
DMK NRI Wing retweetledi
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் 2026-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக! 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றுக! கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ்ச் சுருக்கம் பின்வருமாறு: நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்படி நடப்பது முதல்முறையல்ல, 2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியானது. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது. 2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது. இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது. நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன. இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன். தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும். அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும். தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும். மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும். #DMK
DMK tweet media
தமிழ்
104
632
1.4K
54.3K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | கிருஷ்ணகிரியில் தவெக எம்.எல்.ஏ.க்கு கட்சியினர் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் நகரின் மையப் பகுதியான ரவுண்டனா சாலையில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். #SunNews | #Krishnagiri | #TVK
தமிழ்
29
367
576
16.1K
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
தோல்வியில் துவண்டுவிடாமல், கழகத்தினரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் நம் உயிரினும் மேலான தலைவர் அவர்களின் இந்த முன்னெடுப்பை மனதார வரவேற்கிறோம். கழக உடன்பிறப்புகளே.. மீண்டும் கழகம் வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு நமது சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் என அனைத்தையும் தலைவரிடம் வழங்கி கழக உடன்பிறப்புகளின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வோம். உதயசூரியன் மீண்டும் உதிக்கும்! 🔗: udanpirapinkural.in லிங்கை க்ளிக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் #DMK
DMK NRI Wing tweet media
தமிழ்
2
33
59
939
DMK NRI Wing retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | திமுகவின் கடும் எதிர்ப்பால் மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! #SunNews | #MagalirUrimaiThogai | #TNGovt
Sun News tweet media
தமிழ்
399
1.4K
4.9K
473.5K
DMK NRI Wing retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.5K
5.8K
16.2K
1.2M
DMK NRI Wing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.6K
7.3K
22.9K
1.8M
DMK NRI Wing retweetledi
திமுக மகளிர் அணி
பெண்களின் பாதுகாப்புக்காக திமுக அரசால் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் மீது கூச்சமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டும் #SofaModel அரசு. வெட்கமாகவே இருக்காதா?
TN DIPR@TNDIPRNEWS

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ! #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @tnpoliceoffl

தமிழ்
12
122
207
9.6K