K.K.Selvakumar

607 posts

K.K.Selvakumar banner
K.K.Selvakumar

K.K.Selvakumar

@KKSelvakumaroff

நிறுவனர்- தலைவர்|வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்| தமிழர் தேசம் கட்சி

Katılım Mayıs 2020
9 Takip Edilen6.7K Takipçiler
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்று வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் நின்ற பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! உங்கள் அடுத்தகட்ட கல்விப் பயணம் இன்னும் சிறக்கட்டும்!... அதே சமயம்,எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராத அல்லது தற்காலிகமாகத் தேர்ச்சி பெறத் தவறிய மாணவச் செல்வங்களே... இந்த ஒரு தேர்வு முடிவு உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையோ, உங்கள் தனித்திறமையையோ ஒருபோதும் தீர்மானிக்காது. உலகில் சாதித்த பல சாதனையாளர்கள் பள்ளிக்கூடத் தேர்வுகளில் வென்றவர்கள் அல்ல; வாழ்க்கைத் தேர்வுகளில் வென்றவர்கள்! அன்பான பெற்றோர்களே!.. இந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை உங்களின் ஒப்பிடுகளோ அல்லது கோபமோ அல்ல. "பரவாயில்லை மகனே/மகளே, நான் இருக்கிறேன்... உன்னால் முடியும்" என்ற உங்களது ஆறுதல் வார்த்தைதான். அவர்களுக்குப் பக்கபலமாக நில்லுங்கள். விதை கீழே விழுவது அழிவதற்கல்ல... மரமாக முளைப்பதற்கே!..தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அடுத்த அடி எடுத்து வைப்போம். நாளை நமதே!
தமிழ்
2
12
21
276
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி ஆகாஷ் டெலிசன் கடந்த மார்ச் 5-ஆம் தேதி, ஒரு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினரால் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய கொடூரமான தாக்குதலால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மார்ச் 8-ஆம் தேதி தம்பி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக, எதிர்காலக் கனவுகளோடு படித்துக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவனின் உயிர், காவல்துறை அராஜகத்தால் பறிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. தம்பி ஆகாஷ் டெலிசனின் படுகொலைக்கு நீதி கேட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 73 நாட்களாகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், தங்களது பிள்ளையை இழந்து, நீதிக்காக, உறவினர்களும், பொதுமக்களும் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறார்கள். இந்த நீதிக்கான தொடர் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு, எனது ஆதரவை முழுமையாகப் பதிவு செய்தேன். மக்கள் சக்தியின் இந்த நியாயமான போராட்டம் நிச்சயம் வெல்லும்! போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். தம்பி ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை விரைவாக நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். அதிகார பலமும், அராஜகமும் ஒருபோதும் நீதியை விலைபேசிவிட முடியாது. தம்பி ஆகாஷ் டெலிசனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை, எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும்!.. தமிழர் ஆட்சி கழகத்தின் தலைவர் சகோதரர் திரு. எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களும் உடனிருந்தார்!..
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
2
17
27
585
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
கிராமப் பகுதிகளில், அனுமதியின்றி மதுபானம் விற்பவர்கள் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!.. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் 500 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் டாஸ்மாக் மது பான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழர் தேசம் கட்சி வரவேற்கிறது.இது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. குடிபோதைக்கு அடிமையானவர்கள், மது பிரியர்கள் எவ்வளவு தூரத்தில் கடை இருந்தாலும் அங்கு சென்று மது அருந்துவார்கள். இன்றைக்கு கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சட்ட விரோத செயல்களுக்கு காரணமாக இருப்பதே கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்தான். கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முத்தரையர் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கக் கடிய பகுதிகளில் தங்கு தடை இல்லாமல் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுகிறது. இதனால் முத்தரையர் சமுதாய மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக முழுவதும் அனுமதி இன்றி கூடுதல் விலைக்கு மது பானம் விற்கும் கும்பலை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!... @CMOTamilnadu
K.K.Selvakumar tweet media
தமிழ்
1
21
40
898
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 10.05.2026,ஞாயிற்றுக்கிழமை - தமிழக முன்னாள் முதல்வர்,திராவிட முன்னேற்றக் கழக தலைவர் @mkstalin அவர்களையும், தமிழக முன்னாள் துணை முதல்வர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களையும், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினேன்!..
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
6
67
528
26.1K
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும். @arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம். அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!.. அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் தனிப்பெரும் அடையாளம் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம். தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..
K.K.Selvakumar tweet media
தமிழ்
11
36
62
2.3K
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் சவால்களை எதிர்கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும், பகிர்வுகளும்! உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திட்டமிட்ட படிப்பு இன்று அழகான வெற்றியாகக் கனிந்திருக்கிறது. இந்தத் தருணம் உங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசு. உயர்கல்வியில் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து சாதனைகள் புரிய வாழ்த்துகள். இது உங்கள் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே, எல்லைக் கோடு அல்ல. இன்னும் பல சிகரங்கள் உங்களை எதிர்நோக்கி இருக்கின்றன! எதிர்பார்த்த முடிவு கிடைக்காத, மாணவச் செல்வங்களே!.. ஒரு தேர்வுத் தாள் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது. தோல்வி என்பது சிறிய "தடைக்கல்லே" தவிர "முடிவல்ல". உலகில் சாதனை படைத்த பல மனிதர்கள் பள்ளிக் கல்வியில் சறுக்கியவர்கள்தான். உடனடித் தேர்வுகள் மூலம் உங்கள் மதிப்பெண்களை உயர்த்தவும், தேர்ச்சி பெறவும் இன்னும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை ஒளிந்திருக்கும். மதிப்பெண்கள் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் கருவியல்ல. "விழுவதெல்லாம் எழுவதற்குத் தான்; தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி!" எனது அருமை பெற்றோர்களே!.. மதிப்பெண்கள் குறைவாக எடுத்த அல்லது தேர்ச்சி பெறாத பிள்ளைகளைத் தயவுசெய்து மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவை உங்களின் ஆறுதலும், அரவணைப்பும் மட்டுமே. அவர்களின் தன்னம்பிக்கை சிதையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீண்டும் எழுந்து வரத் தோள் கொடுங்கள். நமது மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்!
K.K.Selvakumar tweet media
தமிழ்
1
22
31
502
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நத்தம் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்குகளை அளித்த வாக்காளர்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறீர்கள். அந்த ஒவ்வொரு வாக்குக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். மக்களின் தீர்ப்பை நான் முழு மனதுடன் ஏற்கிறேன். வெற்றி தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; ஆனால் மக்களுடனான எனது பிணைப்பு நிரந்தரமானது. வெயில், மழை பாராமல் வீதி வீதியாகச் சென்று நீங்கள் செய்த பிரச்சாரம் வீண் போகாது. இந்தத் தோல்வி ஒரு தற்காலிகமான பின்னடைவே தவிர, நமது லட்சியப் பயணத்தின் முடிவல்ல. தோல்வியிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்; இன்னும் வீரியத்தோடு மக்கள் பணியாற்றுவோம். "விழுவது என்பது வீழ்ச்சியல்ல... மீண்டும் எழுவதே எழுச்சி!" என்றும் உங்களுடன்... தேர்தல் முடிந்தது, ஆனால் இந்த மண்ணுக்கான எனது கடமை இன்னும் முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக, மக்களின் குரலாக நான் எப்போதும் களத்தில் நிற்பேன். உங்களின் இன்ப துன்பங்களில் நான் என்றும் ஒரு பங்காளியாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். நமக்கு வாக்களித்தவர்களுக்கும், மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கும் சேர்த்து உழைப்பதே நமது அறம். கண்ணியமான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை உரித்தாக்குகிறேன்!...
K.K.Selvakumar tweet media
தமிழ்
4
25
53
858
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
"உலகை இயக்குவது இயந்திரங்கள் மட்டுமல்ல, அந்த இயந்திரங்களை இயக்கும் வியர்வை துளிகளும்தான்!" மே 1 - நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் உழைப்பின் மேன்மையை போற்றும் திருநாள். எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வென்ற வீர வரலாற்றை நினைவுகூரும் நாள் இது. இன்று நாம் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தியாகம் மறைந்திருக்கிறது. உழைப்பு என்பது வெறும் வருமானத்திற்கான வழி மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் அடையாளம். நேர்மையான உழைப்பும், தளராத விடாமுயற்சியும் ஒருவனை சிகரத்திற்கு கொண்டு செல்லும். "வியர்வை சிந்தியவனின் வெற்றியை காலம் ஒருபோதும் மறைப்பதில்லை." இந்த இனிய நாளில், உழைப்பாளர்கள் அனைவருக்கும், உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உழைப்போம்! உயர்வோம்! உலகை வெல்வோம்!
K.K.Selvakumar tweet media
தமிழ்
2
14
28
534
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கட்டனார்பட்டியில், வனஜா ஃபயர் வொர்க்ஸ் என்கின்ற பெயரில், இயங்கிவந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 நபர்கள் உயிரிழந்தனர்! இதனையடுத்து, அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று, சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழர் தேசம் கட்சி வழிவகை செய்யும் எனவும் உறுதியளித்தேன்!..
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
4
18
26
717
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
சனநாயகத் திருவிழாவில் பங்கேற்ற அன்பு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, நத்தம் சட்டமன்ற தொகுதி, வேட்பாளராகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில், தங்களின் பொன்னான வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடும் வெயில், நீண்ட வரிசை என எதையும் பொருட்படுத்தாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நம் மாநிலத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் காட்டிய ஆர்வம் மெச்சத்தக்கது. வாக்களிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது நம் சமூகத்தின் மீதான நமது பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்ட உங்களின் செயல் போற்றுதலுக்குரியது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. உங்களின் நம்பிக்கை, எங்களின் உறுதி! தேர்தல் என்பது வெறும் வாக்குகளைச் சேகரிக்கும் களம் மட்டுமல்ல; அது மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையையும், அளித்த ஆதரவையும் ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்! வாக்களித்தவர்கள் மட்டுமன்றி, இந்தத் தேர்தல் களம் சிறப்பாக அமைய பாடுபட்ட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகள். இனி வரும் காலங்களில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம்!
தமிழ்
1
15
23
526
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
"எனது வாக்கு, எனது உரிமை! இன்றைய நாளை ஒரு பொறுப்புள்ள குடிமகனாகத் தொடங்கியதில் பெருமை கொள்கிறேன்!..
K.K.Selvakumar tweet media
தமிழ்
5
35
137
2.1K
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 20.04.2026, ஞாயிற்றுக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.ப.அப்துல் சமது அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக #ஆதரிப்பீர்_உதயசூரியன்
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
1
24
36
578
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 18.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மணிமாறன் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக #ஆதரிப்பீர்_உதயசூரியன்
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
3
26
43
536
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 18.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.S.கிருத்திகா தங்கபாண்டி அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக #ஆதரிப்பீர்_உதயசூரியன்
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
1
22
32
395
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமயம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.ரகுபதி அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக #ஆதரிப்பீர்_உதயசூரியன்
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
2
20
32
415
K.K.Selvakumar
K.K.Selvakumar@KKSelvakumaroff·
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.காதர்பட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக #ஆதரிப்பீர்_உதயசூரியன்
K.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet mediaK.K.Selvakumar tweet media
தமிழ்
1
26
36
506