Sabitlenmiş Tweet
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙
179.6K posts

ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙
@Puli_8335
𝐈'𝐦 𝐇𝐞𝐫𝐞 𝐭𝐨 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞 THALAPATHY VIJAY 𝐛𝐲 𝐛𝐨𝐨𝐬𝐭𝐢𝐧𝐠 𝐮𝐩 𝐓𝐡𝐞 𝐓𝐚𝐠𝐬 𝐑𝐞𝐠𝐚𝐫𝐝𝐢𝐧𝐠 𝐡𝐢𝐦 😇 ||| @Actorvijay For Life❤
Katılım Mayıs 2020
3.4K Takip Edilen6.7K Takipçiler
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

#BREAKING || பயிர் கடன் தள்ளுபடி
சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு
பயிர்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம். இந்த தள்ளுபடி மூலம் 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்
01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி
#CropLoan #CMVijay #ThanthiTV

தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ


English
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

3 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள்... நேற்று போராட்டம் நடத்திய நிலையில் இன்று உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்
#Pudukkottai | #Water | #Minister | #PolimerNews
தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது..
தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.
சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.
தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்.
எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!
தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay | #TNDIPR |
@narendramodi | @PMOIndia | @TVKVijayHQ |
@imrajmohan |
1/2



தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay



தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் திரு. தீரஜ் ஜி. இந்துஜா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay

தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay

தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay




தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay


தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 24.05.2026 அன்று நான் மேற்கொண்ட ஆய்வில் திருக்கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் உறையில், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் அடிப்படையில் Bar Code Sticker, தயாரிப்பு தேதி (Mfg Date), காலாவதி தேதி (Exp date) ஆகியவை இடம் பெறாமல் இருப்பது தெரிய வந்தது. சில உணவு பொருட்களின் உறையில் துண்டு சீட்டில் தயாரிப்பு தேதி எழுதி வைக்கப்பட்டும், எந்த வித விவரங்களும் இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் தயாரிப்பு தேதி சில பொருட்களில் துண்டு சீட்டில் கையில் எழுதி வைத்திருந்தது உண்மையான தயாரிப்பு தேதியா என்ற சந்தேகத்தையும் எழுப்பும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக இதை சரியாக கண்காணிக்காத திருக்கோயில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்திட அனைத்து திருக்கோயில் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் குடிநீர் குடிக்க அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட (RO) குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில் TDS (Total Dissolved Solids) அளவானது அனுமதிக்கப்பட்ட அளவில் பராமரிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டு இதனை சரிசெய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் ஆய்வு செய்யப்பட்டு தினசரி 3 முதல் 5 முறை முழுமையாக தூய்மை செய்யப்பட வேண்டும் என்றும் கழிப்பறை தூய்மை செய்வதை கண்காணிக்க, கழிப்பறை வாயிலில் Daily Cleaning Checklist ஒட்டப்பட்டு அதில் தினசரி தூய்மை செய்து, கையொப்பமிட்டு ஆவணப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளிலும், உணவுப் பொருட்கள் விற்பனை போன்ற எந்தவித விடயத்திலும், குறைபாடுகளோ முறைகேடோ இருக்கும் பட்சத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகள் சரியாகவும், தரமாகவும் பக்தர்களுக்கு கிடைப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு உறுதிசெய்யும்.
-
S. ரமேஷ் B.E.,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு.
@TVKVijayHQ | @BussyAnand | @tnhrcedept
தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தியாகராய நகர் தொகுதி மக்களுக்கான அறிவிப்பு:
தொகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு இணையதளம், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் தொடர்பு எண்கள் உங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளை எங்களிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இணையதளம்: tvknammatnagar.in
மின்னஞ்சல்: tvknammatnagar@gmail.com
#TVK @TVKPartyHQ @BussyAnand

தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் கட்டிக் காத்த கட்சியை அடகு வைத்த ஒருவர் இருக்கிறார். தன் சொந்தத் தொகுதியிலேயே, விசில் சின்னத்தைக் கண்டு வீரிட்டு அலறி, தான் வெல்வது கடினம் என்று உணர்ந்து, த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை, பேரம் பேசி ஓரம் கட்டி மறைத்து வைத்த உத்தம புருசர் ஒருவர் இருக்கிறார்.
தீரம் மிக்க சக்தியாக இருந்ததை, தன் சுயநலத்தால், அகம்பாவத்தால், தீர்ந்துபோன சக்தியாக மாற்றிய, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் அப்பழுக்கற்ற தொண்டர்களால் ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்ட ஒருவராக இருப்பவர், தன் நிலை உணராமல் பேசி வருகிறார்.
தீய சக்தியுடன் மறைமுக பேரம் பேசி, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, கள்ளக் கூட்டணி ஆட்சியை அமைக்க இருந்தவர், த.வெ.க.வைப் பார்த்து அவதூறாகப் பேசுவது, எந்த வகை அரசியல் ஒழுக்கம் என்று தெரியவில்லை.
தலைமைக்குத் தகுதி இல்லாததால்தானே கட்சியினர் சரியான தலைமையைத் தேடி நகர்கின்றனர். இதைக்கூட உணராமல், அர்த்தமற்று அவதூறு பேசினால், மக்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களும் நம்பப் போவதில்லை. இந்த யதார்த்தம் புரியாமல் இருந்தால், யார்தான் என்ன செய்ய?
மாபெரும் மக்கள் சக்தி, மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி ஆதரவு பெற்ற த.வெ.க. ஆட்சிக்கு வந்ததைக் கண்டு தீய சக்திக்கும் தீர்ந்துபோன சக்திக்கும், தீரவே தீராத புகைச்சலும் குமைச்சலும் வந்துள்ளன. அதனால்தான் தீய சக்தியின் வார்த்தைகளைக்கூடக் கடன் வாங்கிப் பேசி, தங்கள் கள்ளக் கூட்டை வெளிப்படுத்தி அகப்பட்டுள்ளார், இந்த எடுபடாத அரசியல் ஆட்டக்காரர்.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மனசாட்சி உள்ள மக்களாட்சி அரசு வெளியிட்டுள்ளது. அதைப் பொறுக்க இயலாமல்தான் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் ஒரே நேரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களை ஏமாற்றிய தீய சக்தியையும் தீர்ந்துபோன சக்தியையும் தூக்கி எறிந்துதான் தூய சக்தியான த.வெ.க.வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இது புரியாமல் இருவரும் கூட்டு சேர்ந்து கும்மியடித்தால் இருவரின் கரகாட்டமும் கலக ஆட்டமும் மேலும் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது உறுதி.
தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |

தமிழ்
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi

This is great news for Tamil Cinema!..Thanks to our honourable CM @TVKVijayHQ anna!❤️🙏🏻
@CMOTamilnadu


English
ᴍʀ. ᴘᴜʟɪ 🐯💙 retweetledi









