K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

2.4K posts

K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@Ramachandranmla

GOVERNMENT CHIEF WHIP OF TAMILNADU | MEMBER OF LEGISLATIVE ASSEMBLY - COONOOR CONSTITUENCY. [email protected]

Coonoor, India Katılım Haziran 2021
34 Takip Edilen2.5K Takipçiler
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது! சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
209
1.2K
4K
88.7K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் ஆற்றிய உரை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.05.2026 அன்று நடைபெற்ற தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை: என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு. நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு. கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்....96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்...அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்... இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்....இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்......கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை.... நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான். இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க. அதுமட்டுமில்ல, “இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு - ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம். நம்ம உழைப்புக்கு கிடைச்ச சான்று! ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு. பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம். இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம். அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLA-க்களை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம். என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன். என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன். இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல. இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது. அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க. கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம். வெற்றி கிடைச்சா அதோட பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏத்துக்குறதுல எந்த தப்பும் இல்ல. அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல பழி போடாதீங்க. எல்லாரும் என்ன சொல்றாங்க? அப்படி செஞ்சிருக்கலாம், இப்படி செஞ்சிருக்கலாம், அது நடக்கல, இது நடக்கல, அவரு கண்டுக்கல, இவரு கண்டுக்கல-னு பழி போடுறாங்க. தயவு செஞ்சு இனிமே அதை பண்ணாதீங்க. தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது... இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க. எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். இதை ஆய்வு செஞ்சாகணும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கு. எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும். இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை.. இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்... முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்.... அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும். முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும். அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும். அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன். அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க. கழக உடன்பிறப்புகள் கிட்டயும் கருத்து கேக்க போறேன். உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி ’வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும். கழகம், இந்த தேர்தல்ல செஞ்ச தவறு-னு நீங்க எதை நினைக்கிறீங்க? நம்ம கிட்ட என்ன மாற்றத்தை எதிர்பார்க்குறீங்க என அதுல எல்லாரும் சொல்லலாம். இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன். அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது. கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல. இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு. இதை நான் கடந்த ஐந்தாண்டுகள்ல பல முறை வலியுறுத்துனேன். குறிப்பா, காணொலிக் கூட்டங்கள் நடத்தும்போது, சோஷியல் மீடியாவோட ரீச் பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும். தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல. பொதுக்கூட்டம், திண்ணைப் பிரசாரம், பத்திரிகை, நாடகம், சினிமா, டி.வி.-னு கால மாற்றத்திற்கேற்ப, அனைத்து தளங்களையும் கொள்கையை விளக்கும் பிரச்சாரக் களமா வெற்றிகரமா பயன்படுத்துன இயக்கம் நம்ம இயக்கம். அதை மனசுல வெச்சிட்டு, இனி வரும் காலத்துல நம்ம பிரச்சார ஸ்டைல், நடத்தைகள், செயல்பாடுகள் எல்லாத்தையும் மாத்திக்கணும்.முன்னாடி டீக்கடையில உக்காந்து பேசிட்டிருந்த நம்ம அரசியலை, இப்ப சோஷியல் மீடியால பேசியாகணும். நேத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிச்ச ஆளும்கட்சிக்கு, மெஜாரிட்டி இல்லனாலும், நம்ம கூட்டணிக் கட்சிகளை வெச்சும் – அ.தி.மு.க.வை உடைச்சும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க. அதிமுக ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கனு சொல்லவே தேவையில்ல. இந்த நிலைமையில, அடுத்து என்ன நடக்கும்னு உறுதியா சொல்லவே முடியாது. நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான - திறமையான - கட்சியா நாம செயல்படணும். நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா, கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும். நாம தொடங்கிய உட்கட்டமைப்பு பணிகளை, குறித்த காலத்துல கட்டி முடிக்கிற வரைக்கும் நாம அழுத்தம் கொடுத்துட்டே இருக்கணும். சட்டமன்ற உறுப்பினர்களா இருக்க கூடியவங்களை ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோட ஷார்ப்பா பேச சொல்லியிருக்கேன். வெற்றியோ, தோல்வியோ - எல்லாரும் வாக்காளர்களைச் சந்திச்சு நன்றி சொல்ல சொல்லியிருந்தேன். இன்னும் அதை முழுசா செஞ்சு முடிக்காதவங்களையும் முடிக்க சொல்லுங்க.நாம மக்கள் கூடவே இருக்கணும். விரைவுல கட்சியை சீரமைச்சு, புது எனர்ஜி கொடுப்போம். இனிமே, ரொம்ப கவனமா, எல்லா விஷயங்களையும் செய்யணும். எல்லா நிர்வாகிகள் கூட்டத்துலயும் நான் வலியுறுத்தி பேசுறது, நிர்வாகிகள் ஒற்றுமைதான். இப்பவாச்சும், கோஷ்டி அரசியலை விட்டுட்டு, எல்லாரையும் அரவணைச்சு போங்க. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா - வெற்றி என்பது சாத்தியம் இல்ல. நம்ம கட்சி வீக்கா இருக்கும் பகுதிய பாருங்க, அங்க நிர்வாகிகளுக்குள் மோதல் இருக்கும்.நம்ம கட்சி தோற்ற தொகுதிலயும் நிர்வாகிகளின் ஒற்றுமை இல்லாம இருக்கும். அதையெல்லாம் நீங்களே நேர்ல போயி, கவனிச்சு சரிசெய்யுங்க. என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் - அடிமட்ட நிர்வாகிகள் - முழுப்பங்களிப்பைத் தரும் வகையில நாம அவங்களை தயார் செய்யணும். மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல.அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது.எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம். நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும். குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான்,இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது. ஒரு தேர்தல்ல தோற்ற நாம் - மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க. இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான். வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம். தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம். நன்றி வணக்கம்! *** #DMK
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
38
366
769
19.9K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும். ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
தமிழ்
178
2.6K
11.8K
320.2K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (07-05-2026) தீர்மானங்கள் தீர்மானம் : 1 தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் - இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது. பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம், என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம். தீர்மானம் : 2 கழகத் தலைவருக்கு நன்றி 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கடந்த ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர் நம் தலைவர் அவர்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தினார்கள். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது. ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும். கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். தங்களில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார் தலைவர் அவர்கள். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார் தலைவர் அவர்கள். சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும். தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார் தலைவர் அவர்கள். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். இலட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் தலைவர் அவர்களின் சாதனை ஆகும். இத்தகைய பெருமைமிகு தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "இப்படி ஒருவரைத் தலைவராகப் பெற என்ன தவம் செய்தோம்?" என்று பெருமைப்படும் வகையிலான நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீர்மானம் : 3 தலைவருக்கு அதிகாரம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. தீர்மானம் : 4 காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும். காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி! அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ***
DMK tweet media
தமிழ்
99
811
2.7K
207.3K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @K_M_RajuDmk அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். உறுதியாக நின்று #Delimitation என்ற சதியை முறியடித்து வென்றுள்ள கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான கொள்கை கூட்டணி வரும் தேர்தலில் வெல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினோம். மதவாத சக்திகளிடமிருந்தும் சுயநல அடிமை கூட்டத்திடமிருந்தும் தமிழ்நாட்டை காத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு குன்னூர் மக்களிடம் கேட்டுக்கொண்டோம். வெல்வோம் இருநூறு, படைபோம் வரலாறு! #TNWillFightTNWillWin #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
17
350
694
8.4K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்! #VoteForDMK
தமிழ்
94
707
705
9.7K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
75
624
624
7.1K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
மணப்பாறை, திருவரங்கம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார். தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
48
540
603
6.3K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Arsenal is here. தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்! பயன்படுத்திக்கொள்ள: votefordmk.in Use it. Amplify it. Own the narrative. #VoteForDMK
M.K.Stalin tweet media
200
2.3K
3.7K
175.4K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! பழனிசாமி அவர்களே தலைவரின் கலைஞரின் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதி கிடையாது, எந்தவித யோக்கியதையும் கிடையாது. #SayNoToNDA
தமிழ்
134
1K
1.1K
15.1K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! #VoteForDMK
தமிழ்
126
818
782
10.1K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
131
1K
1K
10.6K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள ஆறு படிக்கட்டுகள்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
110
926
929
9.3K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்! ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது. இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #VoteForDMK
தமிழ்
139
1.1K
1K
15.5K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK
DMK@arivalayam·
தி.மு.கழக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய 10 இலட்சம் மடிக்கணனிகளை வழங்கி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது! திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄 #VoteForDMK
தமிழ்
115
1.1K
1.4K
19K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு, வரும் தேர்தலிலும் பெருவெற்றியைத் தரும்! ⚠️ தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த அனைவரும் சேர்ந்து அமைத்துள்ளதுதான் NDA கூட்டணி. பா.ஜ.க. உள்ளே புகுந்த எந்த மாநிலமும் வளர்ந்ததில்லை என்பதுதான் அவர்களின் ஒரே record! ⚠️ #NEET, #CAA, #NEP, #கீழடி, கோவை - மதுரை மெட்ரோ மறுப்பு, வரிப்பகிர்வில் வஞ்சனை என இவர்களிடம் இருப்பதெல்லாம் துரோகப் பட்டியல்தான்! 🌄 ஆனால், நம்மிடம் இருப்பது சொல்லித் தீராத சாதனைப் பட்டியல், இன்னும் நாம் செய்யவுள்ள வாக்குறுதிகளின் பட்டியல். 🌄 #DravidianModel வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டுச் சொல்வோம்! #DMKManifesto2026 அறிவிப்புகளை வீடுதோறும் கொண்டுசேர்த்து வெல்வோம்! #ErodeWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
169
1.7K
3K
53.6K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Lok Poll
Lok Poll@LokPoll·
The most wanted #TamilNadu Survey is Out! Here’s the vote share & seat projection from our mega ground survey: ▪️DMK+ 181–189 | 40.1% ▪️ADMK+ 38–42 | 29% ▪️TVK 8–10 | 23.9% ▪️NTK 00 | 4.9% ▪️Others 00 | 2.1% Sample size: 1,17,000 (≈500 per constituency) Methodology: Stratified Random Sampling More coming soon: Most Preferred CM face, regional breakdowns & deeper insights. Stat tuned! #AssemblyElections2026 #Elections2026 #TamilNaduElections #TNElection2026 #AssemblyPolls
Lok Poll tweet media
English
600
1.9K
4.2K
636.7K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்! 🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன். பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way! 🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும். 🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit! #TiruchiWithDMK #VoteForDMK
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
209
1.8K
2.9K
35.1K
K Ramachandran- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @evvelu அவர்களுக்கு, இன்றைய தினம் வள்ளுவர் சிலை அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தோம். 🌟பள்ளி மாணவர்களுக்கு- 'காலை உணவுத் திட்டம்' , 'இல்லம் தேடி கல்வி', 🌟 கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு- 'புதுமைப் பெண்' , 'தமிழ்ப் புதல்வன்' , லேப்டாப் திட்டம், 🌟 இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு - 'நான் முதல்வன்', 🌟 பெண்களுக்கு- 'விடியல் பயணம்', 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' என அனைத்து தரப்பினருக்கும் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு வழங்கிவரும் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டு, #Superstar தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினோம். தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு அடகுவைக்கத் துடிக்கும் முரட்டு அடிமைகளின் சூழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது! தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
88
875
1.8K
22K