
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான திரு.கே.ராஜன் அவர்கள் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
1980 முதல் தமிழ் சினிமாவில் இடம்பிடித்த முதுபெரும் தயாரிப்பாளரின் எதிர்பாராத இத்தகைய முடிவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

தமிழ்













