தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️

1.2K posts

தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ banner
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️

தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️

@SenganthalV

தமிழரே தமிழரை ஆளட்டும்

Katılım Mart 2024
184 Takip Edilen354 Takipçiler
Sabitlenmiş Tweet
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
இதுவரை 39 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் புகைப்படங்கைளை வைத்து முகப்பு படம் உருவாக்கி இருக்கிறேன் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் புகைப்படத்தை தனிச்செய்தியிலோ பகிரியிலோ அனுப்பினால் இது போன்று செய்து தருகிறேன் பகிரி - 8428602181 facebook.com/share/p/19i2mt…
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet mediaதமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet mediaதமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet mediaதமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet media
தமிழ்
0
78
186
2.6K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
இத்தகைய சூழலில், தமிழ்த்தேசியத்தை பேசும் எவராயினும், அவர் உடன் நிற்பது கடைமையாகிறது. I Stand With You Anna! விடுங்க. பார்த்துக்கலாம்…!
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet media
தமிழ்
3
92
427
2.5K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ retweetledi
நெல்லை செல்வின்
நாம்தமிழர் விவசாயி சின்னத்திற்கு வாக்கு செலுத்திய சொந்தங்கள் ✋🏻 ஆர்டி பண்ணுங்க.. என் குடும்ப வாக்குகள் 4 ✅ #வெல்வான்_விவசாயி
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
47
1.3K
2.1K
22.9K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ retweetledi
SKETCH_ Hyped For கர
என் வாக்கு NTK- க்கு தானு சொல்றவங்க RT பண்ணுங்க ...!
SKETCH_ Hyped For கர tweet media
தமிழ்
18
970
1.3K
13.5K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ retweetledi
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..! நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்! மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது. எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன். நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம். வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில் நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet mediaநாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi tweet media
தமிழ்
22
572
1.1K
23K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
தமிழ்த்தேசிய தலைவர் பெருமாவீரன் மேதகு பி*ர*பா*க*ர*ன் அவர்களுக்கு வாக்கு இருக்கா? ஈழ அரசியலுக்கு ஓட்டு இருக்கா னு கேட்ட தேடுவியர்களின் கனிவான கவனத்திற்கு தமிழர் தாய் நிலத்தில் ஈழ அரசியலுக்கும் மேதகுவிற்கும் தான் வாக்கு அந்த அரசியலை உருவாக்கியவர் அண்ணன் சீமான்
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet media
தமிழ்
0
0
1
18
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
இந்திய அரசியல் வரலாற்றிலையே இனத்துக்காக கூடுற கூட்டம் நாம்தமிழர்கட்சிக்கு மட்டும் தான் #வெல்வான்_விவசாயி
தமிழ்
1
26
76
283
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
அதென்னடா HAPPY PUTHANDU... உன்னோட RELIANCE வணிக வளாகம் அமெரிக்காவுல இருக்கா? தமிழ் புத்தாண்டு என்று போட்டால் உங்களுக்கு என்ன குறைந்து போய்விடுமா?? அதுவும் இந்தி எழுத்து போல ஆங்கிலத்தில் போடுவது அயோக்கிய பயலுகளா. இடம் : சேலம், ரிலையன்ஸ் வணிக வளாகம் (RELIANCE MALL) #reliance
தமிழ்
8
155
449
13.9K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
காரைக்குடியில் வாக்கு இயந்திரத்தில் அண்ணன் சீமானுக்கு இரண்டாம் இடம் ❤️🔥 #சீமானின்_காரைக்குடி #வெல்வான்_விவசாயி
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet media
தமிழ்
1
13
41
255
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ retweetledi
செந்தமிழன் சீமான்
தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்! தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகும் தமிழ்நாடு காவல்துறையினர் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாது, மனச்சான்று இன்றி அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது வெட்கக்கேடானது. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல தேடித்தேடி வேட்டையாடுவது கொடுங்கோன்மையாகும். அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால், சட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும். உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனிதத் தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "ரி001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 23.01.26 அன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பனைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, பொய் வழக்கு புனைந்து கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 20ஆம் நாள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்ததோடு ‘ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் அமரவைத்ததோடு, பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ பொய் வழக்கு புனைந்தனர். அதிகார மமதையோடு காவல்துறை நிகழ்த்திய அக்கொடுமைகளை அப்போதே நான் கடுமையாக கண்டித்ததோடு, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும் பனைத் தொழிலாளர்களை விடுவிக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்து, பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக கட்சியினர்தானே? பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக போராடி, அவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒற்றைப் பெரும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது. (1/2)
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
11
746
1.3K
19.5K
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️
காரைக்குடியில் அண்ணன் சீமானின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! #வெல்வான்_விவசாயி
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ tweet media
தமிழ்
0
10
47
223
தமிழன் நெஸ்டர் தமிழ்நாடு 🎙️ retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
சீமான் வெல்ல வேண்டும் என்பதற்காக காரைக்குடியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை -தவாக தலைவர் வேல்முருகன் . மகிழ்ச்சி அண்ணா @VelmuruganTVK
தமிழ்
215
701
3.3K
125.1K