

Tiruvannamalai Railway Jn🚇
278 posts

@Tvmalaijunction
TNM Railway Station | PFTR terminal at District HQ | Serving Annamalaiyar Temple pilgrims, students & passengers. #Tiruvannamalai | #SouthernRailway












மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மிக முக்கியமான கட்டம், அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மேற்கொள்ளப்படும் கள ஆய்வு என்பதாகும். எனவே, எல்லா பணிகளின்போதும் நான் தொடர்ந்து கள ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதன்படி, எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை நேற்று (19.05.2026) காலை 9 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை கள ஆய்வு செய்தேன். முதலில், காலை 9 மணிக்கு மாரிஸ் மேம்பால கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன். பணிகள் தாமதமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தியதுடன், அதன் காரணங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தேன். அதிகாரிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் இரயில்வே மேம்பாலப் பணிகளை நிறைவு செய்து, அதன் பின்னர் மாநகராட்சி பகுதியிலான கட்டுமானப் பணிகளையும் முடித்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தனர். இரண்டாவதாக, காலை 10 மணிக்கு டவுண் ஸ்டேஷன் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டேன். அப்போது மின்வாரிய அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அப்பகுதியில் உள்ள மின்சாரக் கேபிள் இணைப்புகள் மற்றும் பிற இடையூறுகள் குறித்து விரிவாக ஆலோசித்தேன். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். மேலும், அடுத்த ஆண்டு ஜூலை இறுதிக்குள் பணிகளை முடித்துவிடுவதாக வாய்மொழி உறுதியளிக்கப்பட்டது. அதனை உடனடியாக நிறைவேற்ற விரைந்து செயல்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவதாக, காலை 11 மணிக்கு அரிஸ்டோ மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தேன். நான்கு மாத தாமதம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இரயில்வே பகுதிப் பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்து, முழு மேம்பாலப் பணிகளையும் டிசம்பர் இறுதிக்குள் நிறைவு செய்வதாக உறுதியளித்தனர். நான்காவதாக, நண்பகல் 11:30 மணிக்கு கிராஃபோர்ட் மற்றும் பஞ்சப்பூர் பகுதியை இணைக்கும் கோரையாறு ஆற்றுப் பாலப் பணிகளைப் பார்வையிட்டு தற்போதைய நிலவரத்தை அறிந்துகொண்டேன். இப்பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இறுதியாக, நண்பகல் 12 மணிக்கு பஞ்சபூரிலுள்ள தேசிய நெடுஞ்சாலையையும் திண்டுக்கல் நெடுஞ்சாலையையும் மற்றும் கரூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு, பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகளை வழங்கினேன். என் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலனுக்காக எனது பணி தொய்வின்றித் தொடரும். அதன் விளைவாக மேற்சொன்ன அனைத்துப்பணிகளும் நல்ல முறையில் விரைவாக நிறைவடைந்து, மக்கள் பயன்பெறும் காலம் தூரமில்லை. அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 20.05.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko




🚆 Tiruvannamalai gets its first dedicated Spl Exp Train! ✅ @RailMinIndia regularises 17291/17292 #Narasapur – #Tiruvannamalai Exp. 📍 Direct connectivity via #Vijayawada, #Nellore, #Tirupati. 🚉 Public req: Provide a stop at #Polur for the benefit of passengers.



Great News!!❤️ Tiruvannamalai receives its First-ever Dedicated Inter-State Express!! Yes, the railway has regularised the Narasapur-Tiruvannamalai Special as the 17291/92 Narasapur-Tiruvannamalai Regular Express👏👏. Thank you @SCRailwayIndia @GMSRailway


















