💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖
31.6K posts

💖 இயற்கையின்💞இளவரசி💖
@_ilavarasi
💞 வீட்டுக்கு செல்லமான #இளவரசி 💞 /🌱இயற்கையோடு வாழ விரும்புபவள் ☔ / 💚 மனிதம் காப்போம்💚| Dr.APJ ❤️|👉 #SєєMy_líkєs✍ | #ilavarasi_Twts | иσ ∂м мsg 🗡️|
🇸🇬 SG ❤️ Katılım Mayıs 2016
184 Takip Edilen21.3K Takipçiler
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

எப்பவோ கேட்டது !! நன்றி பிரதமர் @narendramodi அவர்களுக்கு !
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳@tskrishnan
சார் …அப்படியே அந்த லெய்டன் செப்பேடுகளையும்
தமிழ்
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது, வரவேற்போம்!
விரைவில் தமிழகம் வரவேண்டும், வலியுறுத்துவோம்!
சு. வெங்கடேசன் எம்.பி.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட கொடை உத்தரவு, முதலில் ஓலையில் எழுதப்பட்டுப் பின்னர் இராஜேந்திர சோழனால் செப்பேட்டில் பதிக்கப்பட்டது. அதுவே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் செப்பேடு’ என்று அழைக்கப்படுகிறது.
சைவ சமயத்தின் தீவிரப் பற்றாளர்களாக விளங்கி, பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழ மன்னர்கள், பௌத்தப் பள்ளிகளுக்கும் பெரும் கொடை வழங்கினார்கள் என்பதும்; சோழ நாட்டில் குடியேறியிருந்த வெளிநாட்டு பௌத்த வணிகர்களின் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே பன்னாட்டு வணிகம் செழிக்கும் என்ற சோழர்களின் பொருளாதாரத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகவும் இந்த ஆனைமங்கலம் செப்பேடு விளங்குகிறது.
டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக நாகப்பட்டினம் இருந்த காலத்தில், இந்தச் செப்பேடு கிறித்தவ மறைப்பணியாளர்களால் பாதுகாக்கப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வரலாற்றுப் பெட்டகம் மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக எழுந்தது. இந்த பின்னணியில், யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சாரப் பொருட்களை மீட்டெடுக்கும் குழுவின் (ICPRCP) 24-ஆவது கூட்டத்தில், இச்செப்பேடுகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முன்வைத்தது.
தொடர்ந்து பல ஆண்டுகள் வலியுறுத்தியதன் பயனாக, நேற்றைய தினம் இந்தியப் பிரதமரிடம் இந்தச் செப்பேடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நாட்டு அரசுகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்று ஆவணத்தை அறிவுசார் பணிக்கான ஒத்திசைவோடு, தொடர்ந்து பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எமது நன்றி!
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மீட்டுவரப்பட்ட 656 தொல்பொருட்களை டெல்லியில் உள்ள “புரானா கிலா” கோட்டையில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. அவற்றுள் பெரும்பான்மையானவை பொதுமக்களின் பார்வைக்குக் கூட காட்சிப்படுத்தப்படவில்லை.
ஆனைமங்கலம் செப்பேட்டிற்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது. தமிழக மற்றும் இந்திய வரலாற்றின் சர்வதேச பரிமாணத்தை, மதம் சார்ந்த அரசியல் போக்கிற்கு மாற்றான பன்மைத்துவ அரசியல் மாண்பை, உள்ளூர் அரசாட்சியின் தேர்ந்த கட்டமைப்பு விபரங்களை ஒருங்கே பறைசாற்றும் இந்த ஆவணம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தமிழக அரசும் உரிய முன்முயற்சி எடுக்க வேண்டும்.
சோழர்களின் வழித்தோன்றல் மரபைத் தெளிவுறக் கூறும் “அன்பில் செப்பேடு” இந்திய அரசின் தொல்லியல் துறையால் (ASI) பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க செப்பேடு இப்போது எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறை சார்ந்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் 300 ஆண்டுகளாக நமது வரலாற்று ஆவணத்தைப் பாதுகாத்து வைத்துள்ளன. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையோ நமது சிறப்புமிக்க வரலாற்று ஆவணத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. இதனை மீட்க ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்படுவது வெறும் செப்பேடு அல்ல... செம்மாந்த தமிழக வரலாற்றின் ஆகச்சிறந்த ஆவணமாகும்! அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், அவர் பின்பற்றும் ஒற்றை மத அரசியலுக்கு எதிராகப் பன்மை மத ஒழுங்கைப் பேணிக்காத்த சோழர்களின் ஆகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகும்!
வரலாறே வருக!
@PMOIndia
@MinOfCultureGoI
@ASIGoI
@LeidenUniv
@UNESCO
@CMOTamilnadu
@TVKVijayHQ
#ஆனைமங்கலம்செப்பேடு / #AnaimangalamCopperPlates
#சோழர்வரலாறு #CholaHistory
#தமிழகவரலாறு
#TamilHistory
#SaveTamilHeritage




தமிழ்
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும். இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்!
கழகத் தலைவர் அண்ணன் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ் நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம். அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்! அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்.
@mkstalin


தமிழ்
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

GHOST AIRPORTS | Modi Govt built seven airports in Uttar Pradesh, but six of them are lying unused. No airline is operating from these airports.
The whole game is about Infra building, pocketing commission. Contractors are making tons of money, so are the BJP leaders. Modi's personal fund is flush with cash estimated up to 50,000 Crores.
English
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

💥 ₹400 CRORE BRIDGE TURNS TO RUBBLE IN JUST 4 YEARS — Another INFRA SCAM!
They Looted ₹400 CRORE of YOUR Money to build the Vana Railway Overbridge on Jabalpur–Bhopal NH-45.
Result?
Collapsed like a House of Cards in 4 PATHETIC years.
Traffic Dead. Lives at Risk.
This is CRIMINAL NEGLIGENCE + CORRUPTION on Steroids!
Who Signed Off on this Junk?
Who Pocketed the Crores?
Heads MUST roll NOW!
#ModiHaiTohMumkinHai #Israel #WomenEmpowerment
English
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

Deleting tweets doesn’t change reality @AshwiniVaishnaw - you have made India a laughing stock. Quit the chair if you can’t do your job. Maybe join Galgotia as Professor of Spin?

English
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi

திருச்சி சங்கம் ஹோட்டல்,ஒன்ற ஏக்கர் அரசு இடம்,குத்தகை முடிஞ்சும் காலி பண்ண மனசும் இல்ல, வரியும் கட்டல! கடைசில அரசு கோர்ட்ல கேஸ் போட்டு நிலத்த கையகபடுத்தி பைன கட்ட வச்சிச்சு..
கல்வி தந்தை ஊழலை ஒழிச்ச லட்சணம் இது, உக்காருங்கடா .
PttvOnlinenews@PttvNewsX
ஊழல் செய்ய ஐஜேகே அனுமதிக்காது - ரவி பச்சமுத்து #IJK | #IJKMaanaadu | #Paarivendhar | #RaviPachamuthu | #Election2026
தமிழ்
💖 இயற்கையின்💞இளவரசி💖 retweetledi






















