VASUGI BHASKAR

1.6K posts

VASUGI BHASKAR banner
VASUGI BHASKAR

VASUGI BHASKAR

@bhaskarvasugi

Katılım Eylül 2008
206 Takip Edilen12.4K Takipçiler
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
வானம் கலைத் திருவிழா - Mark Your Clendar😍 ஏப்ரல் மாதம் நடக்கும் நிகழ்வுகளின் தேதி மற்றும் இடம். மேலதிக தகவல்கள் விரைவில்💙
VASUGI BHASKAR tweet mediaVASUGI BHASKAR tweet media
தமிழ்
0
3
18
742
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
வானம் கலைத் திருவிழா, ஏப்ரல் முழுவதும் 💙🌸 Full schedule soon!
VASUGI BHASKAR tweet media
தமிழ்
0
13
33
899
VASUGI BHASKAR retweetledi
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
Madras Screenplay discussion session with Director Pa.Ranjith is happening on Neelam books tomorrow.. People who are interested to interact with @beemji on #Madras , do participate makkale!! 💙
தோழர் ஆதி tweet media
English
0
6
48
2.3K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
சென்னை வாழ்வியலை மறுகட்டமைப்பு செய்த மாபெரும் படைப்பான மெட்ராஸ் திரைப்படத்தின் அனுபவங்களை வாசகர்களின் கேள்விகளுடன் பகிர்ந்துக் கொள்ள வருகிறார் இயக்குநர் பா. இரஞ்சித். அன்புடன் அழைக்கிறோம்💙 நாளை மாலை 6 மணி, நீலம் புக்ஸ்
VASUGI BHASKAR tweet media
தமிழ்
0
0
10
207
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
'பஹிஷ்கிரித் பாரத்' நூல் முன்பதிவுத் திட்டம் 'பஹிஷ்கிரித் பாரத்', பாபாசாகேப் அம்பேத்கரால் 1927-1929 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இதழ். மராத்தியில் வெளிவந்த இந்த இதழின் கட்டுரைகள் முழுத் தொகுப்பு வடிவில் முதன்முறையாகத் தமிழில் வெளிவரவிருக்கிறது. மொத்தம் நான்கு பாகங்களாக, நேர்த்தியான வடிவமைப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. பக்கங்கள்: 1200 நூலின் விலை ரூ. 1500, முன்பதிவுத் திட்டத்தில் ரூ. 999 (கொரியர் கட்டணம் உட்பட.) முன்பதிவுத் திட்டத்தின் மூலம் நூலைப் பெற விரும்புவோர் போஸ்டரில் உள்ள QR Code மூலம் பணம் செலுத்தி, அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி செலுத்தப்பட்ட விவரத்தையும், உங்கள் முகவரியையும் (+91 6369825175) இந்த Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.
VASUGI BHASKAR tweet mediaVASUGI BHASKAR tweet media
தமிழ்
2
7
36
4.3K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
சரிந்து போன செல்வாக்கை மீட்டெடுக்க எல்லா வழியிலும் முயன்ற வைரமுத்துவுக்கு ஞானபீடம் ஒரு புதிய ஒளி. துரதிர்ஷ்டவசமாக ஞானபீடத்தின் செல்வாக்கு சரிந்திருக்கிறது.
தமிழ்
13
49
187
13.4K
VASUGI BHASKAR retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது. “அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர். இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும். @Neelam_Culture
தமிழ்
105
787
2.4K
109.9K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கோவில் நகையை திருடியதாக விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்டார். நேற்று நகை திருடுபோன வழக்கில் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கு திரும்ப பெறப்பட்டு விட்டது. உண்மையில் ஒரு பொய் வழக்கு திரும்ப பெறப்பட்டு இருக்கிறது. இதற்கு விலையாக ஒரு அப்பாவி கொல்லப்பட்டு இருக்கிறார். அஜித்குமார் கொலை செய்யப்பட்டு முதல்வர் போன் போட்டு சாரி கேட்ட பிறகு இரண்டு லாக்கப் மரணம் நடந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் சைக்கோக்களாக நடந்துகொண்ட காவல்துறையினரை கூட திமுக அரசு நல்லபடியாக பார்த்துக்கொள்கிறது. தமிழ்நாட்டில் நடந்துக்கொண்டிருப்பது முழுமையான போலீஸ் ஆட்சி!
தமிழ்
7
103
239
19.4K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
காங்கிரசை RSS இன் பி டீம் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் பினராயி விஜயன். பின் பாரதிய ஜனதாவின் பி டீம் என்றும் ஓரிரு வருடங்களுக்கு முன் சொன்னார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அதே பொருளில் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. கேரளாவில் இருவரும் மாறி மாறி ஆட்சி அமைத்தவர்கள், அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும் கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது. ஆகையால் ஒருவரை ஒருவர் இப்படி சாடித்தான் ஆக வேண்டும். இதில் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் பாவனையோடு திமுக காரராகவே வாழ்பவர்களுக்கு கருத்து சொல்ல ஏதேனும் இருக்கிறதா தெரியவில்லை. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடிக்க வேண்டியதில்லை, எதிர்க்கட்சியாக கூட இருக்க வேண்டியதில்லை. எதிரணியில் நின்று விமர்சித்தாலே இங்கே ஒவ்வொரு திமுக காரரும் மதிமாறனை போலத்தான் கம்யூனிஸ்டுகளை பேசுவர். தோழமை கட்சிகளுக்குக்குள் நிலவும் இந்த முரணில் சுவாரசியமான முரண் கலைஞரோட முரண் தான். திட்டுவதை எல்லாம் திட்டு விட்டு 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்' என்று சொல்லி விடுவார்.
தமிழ்
4
9
53
8.6K
VASUGI BHASKAR retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
//26வது காவல் மரணம். தலித் வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் (26) மானாமதுரை காவல்துறையினர் சித்திரவதையால் இன்று (08.03.2026) மரணம். வழக்கறிஞர் ஹென்றி திபேன் கண்டனம்.//
தமிழ்
18
323
518
23.5K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
Director Pa Ranjith questions law and order referring to Nanguneri and Sivaganta caste atrocities Mother of Nanguneri sickle attack victim, who is grieviously injured, dies due to severe mental distress Tirunelveli rural police book 11 cases against those spreading caste-based hatred newindianexpress.com/states/tamil-n
VASUGI BHASKAR tweet media
English
0
24
47
2.9K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் நீலம் இதழில்: 1. மார்ச் தலையங்கம் theneelam.com/neelam-march-e… 2. சந்தனமாரி: வேதி வினைஞியின் வாழ்க்கை - கோ. ரகுபதி theneelam.com/dalit-women-se… 3. எப்ஸ்டீன் கோப்புகள்: அதிகாரத்தைப் பாதுகாக்கும் மௌனம் - கவிதா முரளிதரன் theneelam.com/epstein-files/
VASUGI BHASKAR tweet media
தமிழ்
0
0
8
305
VASUGI BHASKAR retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
//தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன//
pa.ranjith@beemji

பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள். நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. 1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும். சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture

தமிழ்
2
34
98
11.4K
VASUGI BHASKAR retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
பெருகும் சாதிய வன்முறைகள்: சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து பகுதியில் 02.03.2026 அன்று ஒன்பது பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது. அதில் சம்பவ இடத்திலேயே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜான் மார்க் (41) என்பவரும், வட மாநிலத் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு சாதிகளிலிருந்து ஐந்து பேர் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 21 வயதிற்குட்பட்டவர்கள். நெஞ்சை உறைய வைக்கும் இச்சம்பவம் நம் நினைவுகளில் இருந்து மறைவதற்கு முன்பே சிவகங்கை இடைக்காட்டூரில் ராசு என்பவர் மீது வாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோசமான கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு கொடூரச் சம்பவம் பேசுபொருளாக இருக்கும் அதே நேரத்தில் அடுத்தடுத்து நிகழும் சாதிய வன்முறைகள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறையும், திமுக அரசும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் சின்னத்துரை என்கிற பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்த சக மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்குற்றச் செயலில் தொடர்புடைய இரண்டு சிறார்கள் அதாவது, முதன்மைக் குற்றவாளிகள் தற்போதைய பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2025 வரை மட்டுமே திருநெல்வேலி மாவட்டத்தில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே கொலை, கொலைவெறித் தாக்குதல் என 10 கொடூரச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இக்குற்றச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் பள்ளி - கல்லூரி மாணவ வயதில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பாபாசாகேப் அம்பேத்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் சுவரோவியங்கள் மீது பெட்ரோல் குண்டு எறிந்த மூவரில் இருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 20 வயது. இச்சம்பவத்தின் பின்னணியிலும் சமூகவலைதள மோதலும், ரீல்ஸும் காரணமாக இருந்திருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்த கொடூரக் குற்றங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் சாதாரணர்கள். தாம் யாரால் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதைக் கூட சிந்திக்க முடியாமல் இளம் வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பொருளாதார பின்புலமில்லாதவர்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், அடுத்த வன்முறைக்கான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அரசுக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. 1. அரசியல் நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் சாதிப் பெருமிதத்தை வீரமாக்கும் கலாச்சாரப் பிம்பங்கள், சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புணர்வு அரசியல் ஆகியவை கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2. சாதி ஆதரவு மனப்பான்மைக்கும் சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களுக்குமான வேறுபாட்டை விளக்குவதற்காக சமூகநீதி - வரலாறு - பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 3. மேடைப் பேச்சுகளிலும், கலை - இலக்கியம் - சினிமா உள்ளிட்ட வெகுஜன ஊடகங்களிலும் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் நிலைபெறச் செய்யப்படும் சாதியப் பெருமைகளால் உருவாகும் விளைவுகளை விமர்சனப்பூர்வமாக அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 4. இளைஞர்களிடம் பரவிவரும் சாதிய மனநிலையைக் கட்டுப்படுத்த அரசு கல்வி நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து விழிப்புணர்வு வகுப்புகள், சமூக நல்லிணக்கக் கூட்டங்கள் மூலம் அவர்களுடனான தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்த வேண்டும். சாதி என்பது சமூக அரசியலுக்காகவும், தேர்தல் அரசியலுக்காகவும் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுவதற்கு முன்னரே பலியிடப்படும் அப்பாவி இளைஞர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் சமூகத்தின் பல தளங்களில் வேலை செய்கிறவர்களை ஒருங்கிணைத்து நீண்டகால நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கோருகிறது. @Neelam_Culture
pa.ranjith tweet mediapa.ranjith tweet mediapa.ranjith tweet media
தமிழ்
76
573
1.6K
86.2K
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
“வெகுஜன இதழ்கள் நமக்காக சில பத்திகளை மட்டுமே ஒதுக்குவார்கள், நம் பிரச்சினைகளை நாம் விரிவாக பேச நமக்கான பத்திரிக்கை வேண்டும்” இதைச் சொல்லித்தான் பாபசாகேப் தொடர்ந்து இதழ் நடத்தினார். அதில் ஒரு இதழ் 'பஹிஷ்கிரித் பாரத்' தமிழில் முதல் முறையாக நீலம் வெளியிடுகிறது❤️ மொழிபெயர்ப்பு: சிவசங்கர் எஸ்.ஜே
VASUGI BHASKAR tweet mediaVASUGI BHASKAR tweet media
தமிழ்
1
13
47
3.6K
VASUGI BHASKAR retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
"வெறும்" போதை திமிரில் அல்ல சாதி திமிரில்...
Thinakaran Rajamani tweet media
தமிழ்
10
110
307
11.9K
VASUGI BHASKAR retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
📚‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா நீலம் புக்ஸ் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர்கள் சாலை செல்வம், வயலட் மற்றும் உதவிப் பேராசிரியர் பிரபாகர் ஆகியோர் நூல் ஆய்வுரை வழங்கினார்கள். நூலாசிரியர்,ஓவியர் அந்தோணி குருஸ் அவர்கள் ஏற்புரையாற்றினார்.🎈✨ @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial
Neelam Publications tweet mediaNeelam Publications tweet mediaNeelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
1
2
18
404
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
நேர்மையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் வெகுஜன மக்களிடம் ஏகோபித்த மரியாதையை பெற முடியாது. அதிகாரத்தாலும் பணத்தாலும் அடைய முடியாத இடம் அது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் நம்மை தக்க வைத்துக் கொள்ளும் சூட்சுமங்கள் மாறிக்கொண்டே இருக்கும் உலகில், இந்த லாப-நட்டக் கணக்குகளை பொருட்படுத்தாது இயங்கும் மனிதர்கள் அபூர்வம். இன்றைய இந்திய அரசியலை வடிவமைத்த இரு நூற்றாண்டு போராட்டங்களின் அடையாளமாக நம்மிடையே இருந்த கடைசி மனிதர் ஐயா நல்லகண்ணு. உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார். செவ்வணக்கம்🙏
VASUGI BHASKAR tweet media
தமிழ்
0
10
51
672