Karu.Prabhakaran

6.1K posts

Karu.Prabhakaran banner
Karu.Prabhakaran

Karu.Prabhakaran

@karuprabhakaran

தமிழக மக்களின் தன்னுரிமைக்காக போராடுவது-விவசாயம்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு-இயற்கை வளங்களை பாதுகாத்தல்

Katılım Aralık 2016
70 Takip Edilen4.9K Takipçiler
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
தமிழ்நாட்டில் இந்த தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தவுடன் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத முதல்வர் விஜய் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பொறுப்பில் உள்ளனர். செங்கோட்டையன் போன்ற சில அனுபவமிக்க நபர்கள் மட்டுமே அவர்களுடன் இருக்கின்றனர். ஆகையால் இந்த புதிய ஆட்சிக்கு மக்கள் போதிய அவகாசம் வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. முதல்வரே தனியாக அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதல்ல. சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டமும், அரசு நிர்வாக அமைப்பும் எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்து செயல்படும். ஆனால் நடைமுறையில் பணக்காரனுக்கு தண்டனை தாமதமாகவும், ஏழைக்கு உடனடியாகவும் கிடைக்கிறது என்பதே மக்களின் வேதனை. இன்று மக்கள் ஏன் மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக – அதிமுக ஆட்சிகளின் மீது இருந்த அதிருப்தியிலிருந்து மக்கள் இப்போது தான் சற்றே மூச்சுவிடத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக பல முக்கிய பிரச்சினைகளுடன் போராடி வருகிறது: • காவிரி நீர் பிரச்சினை • முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை • வேலைவாய்ப்பு இல்லாமை • விவசாய சிக்கல்கள் • மின்சார மற்றும் விலை உயர்வு பிரச்சினைகள் • குடிநீர் தட்டுப்பாடு • NEET மற்றும் கல்வி சிக்கல்கள் • மொழி மற்றும் மாநில உரிமை பிரச்சினைகள் • சாதி மற்றும் சமூக அநீதி • மீனவர் வாழ்வாதார பிரச்சினைகள் • ஊழல் மற்றும் அரசியல் பணப் பேரம் • சுற்றுச்சூழல் பாதிப்புகள் • சாலை, போக்குவரத்து மற்றும் சுகாதார குறைபாடுகள் • TASMAC மற்றும் போதைப்பொருள் பாதிப்புகள் இந்த பிரச்சினைகள் இன்று உருவானவை அல்ல. பல தசாப்தங்களாக மக்கள் போராடி வரும் வாழ்வுரிமை பிரச்சினைகள். இந்த மண்ணின் உரிமைக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த எண்ணற்ற தமிழ்த்தேசிய போராளிகள் — அண்ணன் தி.வேல்முருகன் உள்ளிட்ட பலர், மேலும் கம்யூனிச சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் எத்தனையோ போராளிகள் — தெருக்கு தெரு “ஜோக்கர்” திரைப்படக் கதாநாயகனைப் போல மக்களுக்காக பைத்தியமாய் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரியணையில் அமர வேண்டியவர்கள் இவர்கள்தான். ஆனால் இத்தனை ஆண்டுகள் போராடிய ஆயிரக்கணக்கான போராளிகள் தேர்தலில் நின்றபோது, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஓட்டுகள் மட்டுமே அளித்து மக்கள் அவர்களை புறக்கணித்த வரலாறையும் இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. கேரளாவைப் போல இந்த மண்ணுக்காக போராடியவர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களித்திருக்க வேண்டும். இந்த ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தது பெரும்பாலும் விஜய் என்ற ஒற்றை நபரின் மீது வைத்த நம்பிக்கையால்தான். மீதமுள்ள பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன் நிர்வாக அனுபவம் இல்லை. ஆகையால் மக்கள் முன்னால் முதல்வர் சொல்வதைப் போல குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மாற்றம் ஒரே நாளில் வராது. மக்கள், அரசு, போராளிகள் — மூவரும் ஒன்றாக செயல்பட்டால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் வலுப்படும்.
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
0
40
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
“தமிழக அமைச்சரவையில் ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ‘சமூக நீதித்துறை’ என்ற புதிய துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதியதாக அமைச்சராக பொறுப்பேற்கும் அண்ணன், தமிழினப் போராளி வன்னியரசு அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர் முன்னேற்றப் பாதையில் தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.” @VanniTamizhVCK #cmvijay #tngovt #tnminister #vanniyarasu
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
0
35
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
“நாங்கள் பதினைந்து ஆண்டுகளாக பேசிய கருத்துகளை, இன்று ஒற்றை அதிகாரம் ஒவ்வொன்றாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆதிகுடிகளுக்கு முதல் அங்கீகாரம் கிடைக்கிறது. சனாதனம், சாம்பிராணி போன்ற பழைய அரசியல் வாதங்களின் தாக்கம் குறைந்து வருகிறது. அதிகாரம் மிக வலிமையானது. அதை அடைந்துவிட்டால் பல மாற்றங்கள் எளிதாக நிகழும். எனக்கும் விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் குடும்ப ஆட்சி, குருநில மன்னர்களைப் போல 75 ஆண்டுகளாக மாவட்டம், ஒன்றியம், நகரச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு இன்று சிறிது மூச்சுவிடும் நேரம் கிடைத்திருக்கிறது. ஆகவே பாராட்டுக்கள். தவறு என்றால் சுட்டிக்காட்டுவோம்; சரி என்றால் வாழ்த்துவோம். இது ஒரு நாளில் ஏற்பட்ட மாற்றமல்ல. விஜய் மக்களை மாற்றவில்லை; மக்களுக்கு தேவையான மாற்றத்தை, மக்களே விஜய் மூலம் செய்து கொண்டிருக்கிறார்கள்.” @actorvijay @cmtamilnadu
Karu.Prabhakaran tweet mediaKaru.Prabhakaran tweet media
தமிழ்
0
0
2
103
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
என் அன்புத் தந்தைக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்… ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் அப்பா… உங்கள் நினைவுகள் மட்டும் நேற்றுதான் பேசிச் சென்றதுபோல் இருக்கிறது. காலம் நகர்ந்தாலும், உங்கள் அன்பின் தடங்கள் மட்டும் என் மனதில் அழியாமல் நிற்கிறது. தோளில் தூக்கி உலகம் காட்டியவர் நீங்கள், விழுந்தபோது கைப்பிடித்து எழுப்பியவர் நீங்கள். இன்று நீங்கள் அருகில் இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவுகளோடு தான் வாழ்கிறேன். கண்கள் தேடுகிறது உங்கள் முகத்தை… மனம் தேடுகிறது உங்கள் அன்பை… உங்கள் குரலும், பாசமும், அன்பும் இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. காலம் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது, ஆனால் உங்கள் பிரிவு வலி மட்டும் குறையவில்லை. விண்ணில் நட்சத்திரமாக இருந்தாலும், என் வாழ்வில் என்றும் ஒளியாக இருப்பவர் நீங்கள். நினைவுகள் மட்டும் சொல்லுகிறது — "அப்பா இன்னும் எங்களோடு இருக்கிறார்..." என்றும் நினைவில் என் அன்புத் தந்தை கருணாகரன் 🌹
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
0
80
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
“நான் மரணத்தை மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் தழுவிக் கொள்கிறேன். என் தலைவனின் தலைமையில் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த மாபெரும் மக்கள் புரட்சி ஒருநாள் எம் இலட்சியத்தை நிறைவேற்றும். எம் மக்களின் விடிவிற்காக, அவர்களின் மீது கொண்ட அசையாத நம்பிக்கையுடனும் தாளாத பாசத்துடனும், நான் 651வது விடுதலைப்புலியாக என் தோழர்களை நோக்கி மெதுவாகப் போய்க் கொண்டிருக்கிறேன்.” — தியாக தீபம் இ.திலீபன் 🕯️ மே–18 | இனப்படுகொலை நினைவு நாள் மறக்கப்பட்ட வரலாறுகள் இல்லை… மறைக்கப்பட்ட கண்ணீர்கள் இல்லை… இரத்தத்தில் எழுதப்பட்ட எம் இனத்தின் வலிகளும், தியாகங்களும் தலைமுறைகள் கடந்து நினைவில் நிற்கும். எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் நீங்காத கனத்த இதயத்துடன் வீரவணக்கம். நினைவில் கொள்வோம்… மறக்க மாட்டோம்… மீண்டும் நடக்க விடமாட்டோம்! வீரவணக்கம் கரு.பிரபாகரன்
தமிழ்
0
0
1
71
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
🕯️ மே–18 | இனப்படுகொலை நினைவு நாள் மறக்கப்பட்ட வரலாறுகள் இல்லை… மறைக்கப்பட்ட கண்ணீர்கள் இல்லை… இரத்தத்தில் எழுதப்பட்ட எம் இனத்தின் வலிகளும், தியாகங்களும் தலைமுறைகள் கடந்து நினைவில் நிற்கும். எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் நீங்காத கனத்த இதயத்துடன் வீரவணக்கம். நினைவில் கொள்வோம்… மறக்க மாட்டோம்… மீண்டும் நடக்க விடமாட்டோம்! வீரவணக்கம் கரு.பிரபாகரன் #May18 #இனப்படுகொலைநினைவுநாள் #வீரவணக்கம் #NeverForget
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
1
1
42
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
ஜெ. மறைவிற்குப் பிறகு சசிகலாவிற்கு எடப்பாடி என்ன செய்தாரோ, அதே அரசியல் இன்று எடப்பாடியையே சுற்றி வருகிறது. அரசியலில் செய்த வினை, ஒருநாள் செய்தவரையே வந்து சேரும். “தன் வினை தன்னைச் சுடும்” — காலம் கொடுக்கும் மிகப் பெரிய பதில் இதுதான்.
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
0
40
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
🔥 தன்னை நம்பியவர்களை அரியணை ஏற்றினார் முதல்வர் ஜோசப் விஜய்..! 🔥 ⚡ தன்னை நம்பியவர்களை வைத்து சுகபோக வாழ்க்கை நடத்தி, உடன் நின்றவர்களையே கழற்றி விட்டார் சீமான்..! அதனால் தான் சீமானை கழற்றி விட்டார்கள் மக்கள்..! 😎 🗳️ “எனக்கு ஓட்டெல்லாம் வேண்டாம்… பிரார்த்தனை செய்தால் போதும்…” என்று சொன்னார் சீமான்… அதனால் மக்கள் சீமானுக்கு பிரார்த்தனை செய்து விட்டு, திரு. விஜய்க்கு ஓட்டு போட்டுவிட்டனர்..! 🔥✌️ “THAT SHALL YOUR HONOR…” 😃 #TVK #JosephVijay #தமிழ்தேசியம் #விஜய் #அரசியல்மாற்றம்
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
1
38
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
மே 18 தமிழீழ இனப்படுகொலை நாள் எங்கள் மண்ணை எரித்தாலும் எங்கள் இனத்தை அழித்தாலும் எங்கள் வரலாற்றை அழிக்க முடியாது! முள்ளிவாய்க்காலின் இரத்தம் இன்னும் இந்த மண்ணில் காயவில்லை... இலட்சக்கணக்கான உயிர்களின் குரல் இன்னும் நீதியை கேட்டு முழங்குகிறது! மறக்கமாட்டோம்! மன்னிக்கமாட்டோம்! தமிழர் இனத்தின் உரிமைக்காக என்றும் எழுச்சியுடன் நிற்போம்! ✊🕯️ “ஒரு இனத்தின் கண்ணீருக்கு ஒருநாள் வரலாறு பதில் சொல்லும்!” #May18 #TamilGenocide #முள்ளிவாய்க்கால் #தமிழீழம் #JusticeForTamils
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
2
2
45
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
May 18 Tamil Genocide Remembrance Day Even if our land was burned, Even if our people were destroyed, Our history can never be erased! The bloodshed of Mullivaikkal Has not yet dried on this soil… The voices of lakhs of lives lost Still echo, demanding justice! We will never forget! We will never forgive! We will always rise For the rights of the Tamil people! ✊🕯️ “One day, history will answer For the tears of an entire nation!” #May18 #TamilGenocide #Mullivaikkal #TamilEelam #JusticeForTamils
Karu.Prabhakaran tweet media
English
0
0
1
65
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
என்றும் அவன் நினைவுகள் சில கட்டளைக்குள் என்னை அடக்கி வைக்கிறது..... எமது தேசத்தை உருவாக்க இன்னும் அதற்கான தலைவன் வரவில்லை நிறைவாகும் வரை மறைவாக இரு................ 😓😓😓😓😓
தமிழ்
0
2
5
67
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
சீமானின் கேடுக்கெட்ட கேவலம் கெட்ட பிணம் திண்ணி அரசியலால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை நாசமாகி சிறையிலும் நீதிமன்றத்திலும் நடையாக நடந்து வாழ்க்கையை இழந்தனர் ஆனால் இதுவரை எந்தவொரு சிறிய பதவிக்கு கூட வராத விஜயை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி பேசினர் திமுகவிடம் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக்கொண்டு ஆனால் விஜய் தன்னை நம்பி நின்றவர்களை அதிகாரத்தில் அமர வைத்துவிட்டார் ஆனால் சீமான் இப்போதும் பயிற்சி எடுப்பார் பல ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு தொகுதிக்கு நூறு மாவட்ட செயலாளர் பொறுப்பு தந்து மீண்டும் சிறைக்கு அனுப்புவார் அவ்வளவு தான் சீமானின் அரசியல் எவனுக்கு சாட்டை அடி இருக்கிறதோ இல்லையோ? ஈழத்தை வைத்து ஏமாற்றி பிழைத்த சீமானுக்கும் விடியோ துரைமுருகனுக்கும் சாட்டை அடிதான்.... செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman TVK Vijay @AIHighlight
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
1
2
127
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
🔥 புரட்சியின் தொடக்கம் இதுதான்! 🔥 இந்த தேர்தல் ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு அல்ல… இது ஒரு மக்களின் எழுச்சி! பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிக் கொண்டிருந்த திராவிட கும்பலின் வியாபார அரசியலுக்கு மக்கள் இன்று முடிவுகட்டியுள்ளனர்! 💥 “பணம் தான் ஆட்சி” என்ற மாயையை உடைத்துவிட்டு, எளிய மனிதனும் அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற புதிய நம்பிக்கையை மக்கள் உருவாக்கியுள்ளனர்! ❌ சாத்தியமற்ற வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுபவர்களை மக்கள் நேராக புறந்தள்ளி, உண்மையான மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்! 🚩 இது ஒரு வெற்றி அல்ல… இது ஒரு புரட்சி! 👏 தவெகிற்கு புரட்சிகரமான வாழ்த்துகள்!
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
0
0
72
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
மக்கள் மாற்றத்தை விரும்பிட்டார்கள் விஜய் விசில் என்ற முகத்திற்கான வாக்கு... பணம்,கோட்டர்,பிரியாணி அனைத்தும் உடைத்துவிட்டது...... வெற்றிக்கழகம் வெற்றி
தமிழ்
0
0
1
84
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நடந்த மிகக் கொடூரமான சம்பவம்! போலி மருத்துவரின் அலட்சியமும் தவறான சிகிச்சையும் காரணமாக, ஒரு பெண் தனது கணவரையும், தனது குழந்தைகள் தந்தையையும் இழந்ததோடு, ஒரு காலையும் இழந்து இன்று நிர்க்கதியாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது ஒரு சாதாரண விபத்து அல்ல — இது ஒரு மனித வாழ்க்கையை சீரழித்த மிகப் பெரிய குற்றம்! இந்த பெண்ணின் நிலையை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், புதிதாக பொறுப்பேற்கவுள்ள தமிழக அரசும் தாமாக முன்வந்து: 👉 உடனடி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் 👉 குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் 👉 சம்பந்தப்பட்ட போலி மருத்துவருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம்! இது ஒருவரின் பிரச்சினை அல்ல — சமூகத்தின் பொறுப்பு! #JusticeForVictim #Dindigul #StopFakeDoctors
தமிழ்
0
8
5
143
Karu.Prabhakaran retweetledi
Velmurugan.T
Velmurugan.T@VelmuruganTVK·
ஆழ்ந்த இரங்கல். பாசறைப் பாணர் என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தாலும் மதிப்பளிக்கப்பட்டு தனது எழுச்சிமிகு இசையாலும் காந்தக் குரலாலும் உணர்வு பொங்கும் வரிகளாலும் தமிழீழ விடுதலை களத்திற்க்கு பெரும் வலுசேர்த்த அய்யா திரு.தேனிசை செல்லப்பா. அவர்கள் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெரும் துயரமும் அடைந்தேன். அய்யா அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கிய நாள் முதலாக குறிப்பாக கடலூரில் நடைபெற்ற முதல் அரசியல் எழுச்சி மாநாடு தொடங்கி சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு வரையில் அதன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியும் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார் அவரது மறைவு தமிழின விடுதலைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் திரு.இளங்கோ. உள்ளிட்ட தேனிசை குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Velmurugan.T tweet media
தமிழ்
8
25
61
1.6K
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
சென்னை–பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள என் அன்பு அண்ணன் பேரறிவாளன் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! 🎉 அரசு அதிகாரங்களால் தவறாக குற்றச்சாட்டப்பட்டு, கொடுஞ்சிறைகளில் துன்பம் அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு, சட்டத்தின் வழியாக நீதி கிடைக்க போராடி, அவர்களுக்கு துணைநின்று காப்பாற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் சமூகப் பணி மேலும் உயர்ந்து, பலரின் வாழ்க்கையில் ஒளி பரப்பட்டும். மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா! 🙏 — அன்புடன் கரு.பிரபாகரன் மாநில அமைப்பு குழு உறுப்பினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Karu.Prabhakaran tweet media
தமிழ்
0
1
6
85
AGARAM VIGNESH
AGARAM VIGNESH@agaram57986972·
தமிழ் மண்ணின் உரிமை காக்க களம் காணும் தளபதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் @karuprabhakaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அதிகாரத்தை எளியோரின் குரலாக மாற்றும் உங்கள் அரசியல் பயணம் தொடரட்டும்!" "கொள்கை உறுதி, தளராத உழைப்பு - இதுவே 1/2
AGARAM VIGNESH tweet mediaAGARAM VIGNESH tweet media
தமிழ்
2
0
2
63
Karu.Prabhakaran
Karu.Prabhakaran@karuprabhakaran·
🚨 பர்கூர் மாற்றத்தின் தொடக்கம்! 🚨 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர், 🔥 தமிழினப்போராளி முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்களின் ஆசிப் பெற்ற நமது வேட்பாளர் 👉 ஆல்பர்ட் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கு இன்று என் பகுதியில் உள்ள கிராமங்களில் 💥வரவேற்பு அளிக்கப்பட்டது! 🙏 🔥 கிராமம் தோறும் மக்கள் சந்திப்பு! 🔥 வீடு வீடாக ஆதரவு பெருக்கு! 🔥 மாற்றத்திற்கான உறுதி! நானும் நேரடியாக கலந்து கொண்டு 💪 தீவிர பரப்புரையில் ஈடுபட்டேன்! 🗳️ வரிசை எண் 5 📸 கேமரா சின்னம் 👉 “உங்கள் வாக்கு – நம் தொகுதி வளர்ச்சி!” 📅 ஏப்ரல் 23 – மாற்றத்துக்கு தயாராகுங்கள்! 🚀 இந்த முறை வெற்றி உறுதி! 📢 அனைவரும் பகிருங்கள்!
தமிழ்
0
0
1
56