krish retweetledi
krish
4.9K posts

krish
@krish45809
Msc Environmental Science, M.Phil, Phd in progress. i'm working as an environmental manager. old I'd was suspended. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
kallakurichi Katılım Ekim 2025
101 Takip Edilen33 Takipçiler
krish retweetledi
krish retweetledi

🔸இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து
நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர்
தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்!
🔸ஜனநாயக மரபுப்படி தனிப்பெரும்பான்மை இல்லாவிடினும்
அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவிருக்கும்
த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்துவிட்டன.
சாதனைகளைச் சரித்திரமாக நாளும் நிகழ்த்திக் காட்டியது தி.மு.க. ‘திராவிட மாடல்’ ஆட்சி. ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கேள்விக்குறியாக்கிய தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்த, மீண்டும் பழைய வர்ண தர்மத்திற்கே வகை செய்யத் துடிக்கும் நிலைகளை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டு திக்கெட்டும் பாராட்டப் பெற்ற ஆட்சி – எதிர்க்கட்சியாக அமர வைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு வாக்காளர்கள் தந்த அதிர்ச்சியான முடிவுகள் என்பது உண்மை என்றாலும், இது முதிர்ச்சியான முடிவுகள் அல்லவே என்று உலகம் கேள்வி எழுப்பும் நிலைதான். என்றாலும், மக்கள் நாயகமான ஜனநாயகத்தில் பல நேரங்களில் இப்படிப்பட்ட தேர்தல் தீர்ப்புகள் வருவது உண்டு.
🔹ஜனநாயகத்திற்கான தனித்தன்மையாகும்!
சில நேரங்களில், நீதிமன்றத் தீர்ப்புகளே கூட ஏற்க முடியாத வகையில், நல்ல தீர்ப்புகளாக அமையாதபோதுகூட, அதனை ஏற்பதுதான் முறையானது என்ற உண்மைபோல, மக்கள் மன்றத் (தேர்தல்) தீர்ப்பையும் ஏற்பதே ஜனநாயகத்திற்கான தனித்தன்மையாகும்.
அதன்படி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சிறந்த நடிகர் என்று திரையுலக நாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனநாயக மரபுக்கேற்ப நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றம் என்ற பெயரில் இது நிகழ்ந்திருந்தாலும், திரைக் கவர்ச்சி – அதுவும் இளையர்களின் மோகத்தின் அறுவடையாகும் இது, ஒரு கவர்ச்சிப் புயலாகி, தமிழ்நாட்டில் அடித்துள்ளது!
தேர்தல் அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம்!
இதில் மிகப்பெரிய விபரீதம், ‘ஓர் ஆட்சியின் சாதனைக்குப் பரிசு தோல்விதானா?’ என்ற கேள்விக்கு எளிதான பதில் கிடைக்க காலம் மக்களை காத்திருக்கச் செய்கிறது!
மக்களின் விருப்பம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம்.
2 ஆண்டுகால கட்சியின், நிறுவனராக, ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்ட நிலை இனி மாறி, மற்றவர்களின் கேள்விகளுக்கு, குறிப்பாக தி.மு.க.வும், அரசியல் தெளிவுள்ள அறநெறியாளர்களும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்த ஜனநாயகத் தீர்ப்பின்மூலம் தள்ளப்பட்டு இருக்கிறார் முதலமைச்சராகவிருக்கும் த.வெ.க. தலைவர்!
🔸 நீண்ட அனுபவத்தினைப் பெற்று உழைப்பின்
உருவமாகத் திகழுபவர் மானமிகு மு.க.ஸ்டாலின்!
நேர்மையும், நெஞ்சுரமும், அரசியலில் வெற்றி நீண்ட அனுபவத்தினைப் பெற்று உழைப்பின் உருவமாக இன்றும், நாளையும் உள்ள தி.மு.க.வின் தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தத் தோல்வி கண்டு சிறிதும் சோர்வடைந்து சுருண்டு விடவில்லை.
இளைஞராக இருந்து பொதுவாழ்வில் ஈடுபட்ட காலம் முதலே நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் அவர்! தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும், முழுமையாக முடிவுகள் வெளிவரும் முன்பே மூலையில் முடங்கிப் போகாமல், அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று (4.5.2026) மாலையே வந்து, அந்தத் தோல்வியை வெற்றியாக்கும் மனத்திண்மையுடன் சுருக்கமும், உருக்கமுமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (குறள் 580)
என்பதற்கேற்ப, அவருக்கே உரித்தான ஒப்பற்ற பரிபக்குவமான அந்த அறிக்கை அவரது உணர்வுகளின் பண்பாடாக அமைந்துள்ளது.
இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம்!
‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன், தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே, இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி – தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காக சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்’’ என்று பிரகடனப்படுத்தியுள்ளார்!
(1/2)
தமிழ்
krish retweetledi

திமுக கூட்டணி உடையாமல் தவெக ஆட்சி சாத்தியமா?
#Vijay #DMK #DMKledAlliance #TVK #TNPolice #VijayHouse #TVKVijay #TVKChiefVijay #ElectionResults #Election2026 #NewsTamil24x7
தமிழ்
krish retweetledi

#மக்கள்தீர்ப்பு | கன்னியாகுமரியில் ஒரே ஒரு தொகுதிகளில் கூட தவெக வெற்றி பெறவில்லை!
#SunNews | #TNElectionWithSunNews | #ElectionResults2026

தமிழ்

@venkkiram @VetriKondanPDKT இவரை போல ஒரு நாகரிக அரசியல் தலைவரை தமிழ்நாட்டுக்கு கிடைத்தது வரம்.
தமிழ்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எத்தனையோ நெகிழ்ச்சியான தருணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் நாம் வாழும் காலத்தில், இது ஒரு மிக முக்கியமான, மனதை எளிதில் உருக்கும் நிகழ்வாகும். வீர வணக்கம் வீர வணக்கம் என்ற முழக்கத்துடன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சலி - பார்த்தவர்களை உணர்ச்சிவசப்படுத்தும் தருணம்.
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, ஒரு சக தமிழனாக என் மனமார்ந்த நன்றிகள். தோழமை அரசியலில், கட்சிகளைத் தாண்டிய மரியாதையிலும், இந்திய அளவில் எடுத்துக்காட்டாக திகழ்வது திமுகதான்.
#MKStalin #DravidaMunnetraKazhagam #DMKForEver
தமிழ்

#JUSTIN || விஜய் எங்கள் வீட்டு பிள்ளை; அவர் நல்லபடியாக ஆட்சியமைக்கட்டும் - பிரேமலதா | #TVKVijay | #TVK | #Vijay | #Premalatha | #DMDK | #PolimerNews

தமிழ்
krish retweetledi
krish retweetledi

@DocRGM_ @SaraVellore தலைவர் கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்ல செல்கிறார் விரைவில் அது தான் அந்த மக்களுக்கு செருப்படியா இருக்கும்.
தமிழ்
krish retweetledi
krish retweetledi

யார் எழுதிய பதிவு இது?
WhatsApp-ல் வலம்வருகிறது.
தவெக ஆட்சி அமைக்க,
மேலதிகமாக 13 பேர் ஆதரவு தேவை
13 பேரை நேரடி அரசியல் எதிரியான திமுக கூட்டணியில் இருந்து விலை கொடுத்து வாங்க முடியாது.
அது நடக்கவும் நடக்காது.
அல்லது கொள்கை எதிரியான பாஜக கூட்டணியில் இருந்து விலை கொடுத்து வாங்க அதுவும் முடியாது.
காரணம் பாஜக 1 இடம்தான்.
மற்ற கட்சிகள் பற்றி கீழே கொடுத்துள்ளேன்.
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன?
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக் கட்சியாக 107 இடங்களை மட்டுமே த.வெ.க. வென்றுள்ளது.
அதிலும் த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார்.
அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 106 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும்.
அதிலும் ஒரு சீட் குறைந்து 105-ஆக குறையும்.
எனவே த.வெ.க. கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 13 இடங்கள் வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில்: (திமுக: 60)
காங்கிரஸ்: 5
வ. கம்யூனிஸ்ட்: 2
மா. கம்யூனிஸ்ட்: 2
தேமுதிக: 1
இயூமுலீக்: 2
விசிக: 2
இடங்கள் கிடைத்துள்ளன.
அதிமுக கூட்டணி: (அதிமுக: 46)
பாமக: 5
பாஜக: 1
அமமுக: 1.
இடங்கள் கிடைத்துள்ளன.
பிரதான கட்சிகளான
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை தவிர்த்து,
அதிலுள்ள மற்ற கட்சிகள் ஆதரவு கணக்கு பார்த்தால்:
திமுக கூட்டணியில்:
இயூமுலீக் 2 போகவே போகாது.
அப்போ அங்க மிச்சம் இருப்பது 12 தான்.
இன்னும் 1 குறையுது.
அப்படியானால்
பாஜக கூட்டணியில் 7 தான் இருக்கு.
இது கூட கூட்டணி வச்சா 6 குறையுது.
ஒன்னு:
தேமுதிக வாய் இருக்கே,
அத சேர்த்தா 3 மாசம் கூட ஆட்சி தாக்கு பிடிக்காது.
விசிக பிஜேபி இருக்கும் இடத்தில் இருக்காது.
பாஜகவும் காங்கிரஸும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்?
மாணிக் தாக்கூர் பேச்ச இங்குள்ள காங் கேட்க மாட்டாங்களே
சோடேங்கரை சொடக்கு போட்டு அனுப்பிடுவாங்க.
ஒருவேளை ராகா
மானமாவது மரியாதையாவது என்று வழக்கம் போலவே தவறான முடிவு செய்தால் பின் விளைவுகள் பெருத்த செய்கூலி சேதாரத்தை கொடுக்கும்.
ஏற்கனவே தீதீ மம்தா வெறில இருக்கா!
அவர்களென்ன அதிமுக அமமுக மாதிரி மானங்கெட்டவர்களா?
ஒரே இடத்தில் இருக்க?
ம.தி.மு.க.விற்கு 2 இடங்கள் கிடைத்திருந்தாலும்,
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருப்பதால்,
அவர்கள் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர்
நாளை வரவுள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு 2 வழிகளில் ஒன்றை கவர்னர் தேர்வு செய்வார்.
அதன்படி,
அதிக இடங்களில் வென்றுள்ள கட்சியான த.வெ.க. தலைவரை அழைத்து,
பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பை வழங்குவார்.
இதற்கு ஒரு வாரம் வரை அவகாசம் தரப்படலாம்.
இல்லாவிட்டால்,
மற்றொரு வாய்ப்பாக,
த.வெ.க. தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களை அந்தந்த கட்சிகளிடம் இருந்து பெற்று, கவர்னரிடம் வழங்க வேண்டும்.
118 இடங்களுக்கு மேல் ஆதரவு கடிதம் கிடைத்திருந்தால்,
ஆட்சி அளிக்கும் உரிமையை த.வெ.க.வுக்கு கவர்னர் வழங்குவார்.
ஆனால் அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.விற்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காது.
2-வதாக அதிக இடங்களை வென்றுள்ள கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பளிப்பார்.
அவர்கள் அதற்கு தயார் இல்லை.
ஏற்கனவே எதிர்கட்சியாக அமர முடிவு செய்து அறிவித்தும் விட்டார்கள்.
இதன் காரணமாக:
6 மாதங்கள் கவர்னர் ஆட்சியை தமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
அதன் பின்னர் அடுத்த சட்டமன்ற தேர்தல் முழுமையாக நடைபெற வாய்ப்பு வரலாம்.
அதற்குள் நம்ம ஜண்டா சாணக்கியர்
என்ன தக்காளி தொக்கா?
அவர் பங்குக்கு என்னென்ன கணக்குகள் போடுறாரோ!
1. அதிமுகவை ஓடிப்போய் ஆதரவு கொடுக்கச் சொல்லி அனுப்பிவிடலாம்.
2. அதிமுகவிலிருந்து 3 ல் 2 பங்கு 32 சூப்பர் பார்டிகளை (அடிமைகள் என்று நான் குறிப்பிடவில்லை) உடைத்தெடுத்து ஆதரவு கொடுக்க சொல்லலாம்.
3. எஸ்பிவேலுவை துணை முதல்வர் ஆக்கலாம்.
அல்லா தான் அறிவான்.
ஆனால் பெருத்த பணம் புழங்கும் மாநிலமாக தமிழ் நாடு மாறலாம்.
“சிறியோர் செய்த வெள்ளாமை
விளைஞ்சாலும் வீடு வந்து சேறாது”
என்ன அருமையா பெரியவங்க சொல்லி இருக்காங்க.
தமிழ்
krish retweetledi
krish retweetledi

🔴மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அங்கு மம்தா பானர்ஜி போன்று வேடமடைந்த நபரை கயிறால் கட்டி தாக்கி இழுத்து சென்ற பாஜக தொண்டர்கள்
#WestBengal #PoliticalViolence #MamataBanerjee #Spark
தமிழ்
krish retweetledi

விசிக தலைவர் திரு.திருமாவளவன் MP அவர்களின் அறிக்கையில் (05-May-2026) இருக்கும் முக்கியமான செய்திகள்!
1. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது.
2. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும்.
3. 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.
4. ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது.
5. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
6. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை.
இதில் சில கேள்விகள்!?
ஆட்சியமைப்பதற்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத வண்ணம் மக்கள் முடிவெடுக்க முடியுமா? வெற்றி? தோல்வி? முடிவெடுக்கும் மக்கள் இப்படியும் முடிவெடுப்பார்களா?
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும்.
அப்படி என்றால்!? என்ன அர்த்தம் ? விஜய்க்கு மக்கள் சொன்ன செய்தியா இது ?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. counting க்கு இரு நாட்கள் முன்பு திமுக கூட்டணி 200 இடங்கள் வெல்லும் என்றே நீங்கள் சொன்னீர்கள்!
மொத்தத்தில் நேற்று ராகுல் இன்று நீங்கள்!
சற்றும் வருத்தம் இல்லை!
மிக்க நன்றி அண்ணா நாங்களும் ஆட்சிக்கு வருவோம்!
தமிழ்














