Sabitlenmiş Tweet
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு
1.7K posts

வெல்வோம் 200 படைப்போம் வரலாறு
@ksundarmla
K.Sundar | Member of Legislative Assembly Uthiramerur Constituency | Kanchipuram DMK District Secretary
Uthiramerur, Tamilnadu Katılım Nisan 2020
744 Takip Edilen12.9K Takipçiler
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

வெற்றி நிச்சயம்! விழிப்புடன் இருப்பது அவசியம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாக்குப்பதிவு நாள் விழிப்புணர்வு மடல்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீகாரைப் போல தமிழ்நாட்டையும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பா.ஜ.க தலைமையில் அ.தி.மு.க. இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு.
மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவாரூரில் மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். ஏப்ரல்21 அன்று உங்களில் ஒருவனான நான் போட்டியிடும் என் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்திருக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு - கலந்துரையாடல், சாலை வலம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் நீள அகலத்தின் பரப்புக்கு இணையாக உங்களில் ஒருவனான என்னுடைய பயணமும் அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்புத் திட்டங்களான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற ஏராளமான திட்டங்களை மக்களே என்னிடம் எடுத்துச் சொன்னதுடன், 2026 தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மாதம்2000 ரூபாய் உரிமைத் தொகை, இல்லத்தரசி திட்டத்தின் 8000 ரூபாய் கூப்பன், விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன மோட்டார் பம்பு, கல்லூரிகளின் செயற்கை நுண்ணறிவுக் கல்வி, நான் முதல்வன் திட்டத்தில் இளைய தலைமுறைக்கு திறன் பயிற்சியுடன், வேலை கிடைக்கும் வரை ஊக்கத் தொகை போன்ற வாக்குறுதிகளையும் மக்களே நினைவுபடுத்தி வரவேற்று மகிழ்ந்தனர்.
நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள், தி.மு.க போட்டியிடும் தொகுதிகளிலும், தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் கடுமையாக உழைக்கின்றனர். தோழமைக் கட்சியினரும் கழகம் போட்டியிடும் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல்23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.
ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை (BLA 2) நியமித்து, பத்து உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் (BLC) அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும்BDA-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் கழக உடன்பிறப்புகள்.
அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை.
அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (War Room) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். கழகத்தின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
கழகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
வாக்கு பதிவன்று BLA 2 மற்றும்BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17C-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.
வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்CU, பேலட் யூனிட்BU, வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்தVVPAT ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்
மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜெண்ட் பங்கேற்பதுடன், , VVPAT காகிதச்சீட்டுகளைEVM எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் “ZERO” என்று காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளைத் தனியாக பிங்க் காகித கவரில் (PPS) வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பம் இட வேண்டும்.
வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கையையும்(CU+BU+VVPAT எண்கள் போன்றவை) இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.
வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில்Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும்.
கடைசியாக, படிவம் 17C நகல் பெற்று CU + BU + VVPAT இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு(Strong Room) மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம்17C நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். மென்நகலினை(Soft Copy) தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் கழகத்தினர் கண்ணியமான முறையிலும், கவனமான வகையிலும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான திராவிட மாடல்2.0 ஆட்சி அமைவதற்கான களம். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒருசேர வீழ்த்துகிற களம். வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே!
விழிப்புடன் பணியாற்றி வெல்வோம் ஒன்றாக!
அன்புடன்
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2057
சித்திரை 09
22-04-2026.

தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தமிழ்நாடு வெல்லும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#DMKSweeping2026

தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. நம் மாநிலத்தின் ஜனநாயக குரலை முடக்க முயற்சிக்கிறது.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகுதி எண்ணிக்கைகளைக் குறைக்கும் முயற்சி அரங்கேறுகிறது. பாச பாஜகவுக்கும் அடிமை அதிமுகவுக்கு நாம் சரியானப் பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA



தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

பாஜகவும், அதிமுகவும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதற்காக திட்டம் போடுகிறார்கள். தமிழ் மண்ணின் மாநில உரிமைகளை நாங்கள் எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தமிழ்நாட்டில் சங்கி கூட்டத்தையும், அடிமை கூட்டத்தையும் நுழையவிட்டால் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மீண்டும் திராவிட மாடல் அமைய வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

எல்லோருக்கும் எல்லாம்!
தடையற்ற பயணம், சமமான வசதிகள்.
இதுவே சமூக நீதியின் நிஜமான வெற்றி!
@refaisultan 🖤❤️
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தை 1949 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ அரசியல் புயல்களுக்கு மத்தியில் திமுகவை கட்டிகாத்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துத்தை முன்னிறுத்தி செயல்படும் தி.மு.கழகத்தை இன்று வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிசா எனும் நெருப்பாற்றில் நீந்தி கரையேறிவர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கழகத் தலைவர் பொறுப்பு வரை படிப்படியாக முன்னேறிய செயல்வீரர் ஆவார்.
பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டின் மண் - மொழி -மானம் காக்க தந்தை பெரியாரின் கொள்கைச் சுடர் ஏந்தி தன் இலட்சிய பயணத்தில் பீடுநடை போடும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களோடு கரம் கோர்த்து நின்று தமிழ்நாட்டைக் காப்போம்!
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் பாஜக-வுடன் கைகோர்த்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் அதிமுக-விற்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம்! மதவாத அரசியலை முறியடிப்போம்!
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு.@KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

உழைப்புக்கு என்றும் பலன் உண்டு என்பதற்கு இவரே சாட்சி!
பள்ளிக்கூடம் முதல் சட்டமன்றம் வரை தொடரும் பயணம்..
விரைவில் சம்பவக்காரர்..
#ஒரேதலைவன்
#OraeThalaivan
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு!
மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
தமிழ்
வெல்வோம் 200 படைப்போம் வரலாறு retweetledi

தமிழ்நாட்டின் வளர்ச்சியே இலக்கு! கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள் நாமக்கல், குமாரபாளையம், பவானி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த தருணங்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
தமிழ்
