Sabitlenmiş Tweet
RamarAravai
84.1K posts

RamarAravai
@ramaragri
🌱 Plant Doctor | https://t.co/Z6YqEI5JKw (Agri), 👨🎓 MBA 📚 Serving people through knowledge and action. 💜
Aravakurichi, India Katılım Ağustos 2015
1.3K Takip Edilen3K Takipçiler
RamarAravai retweetledi

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை, திமுகவின் ஏமாற்று வேலைகள், தமிழக மக்கள் நலனுக்கான அரசியல் செயல்பாடுகள் குறித்து, @DinamaniDaily நாளிதழுக்கு நான் அளித்துள்ள நேர்காணல்.

தமிழ்
RamarAravai retweetledi

தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிட அயராது உழைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு. @ponbalabjp அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் திருமதி. தமிழரசி அவர்கள் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக ரூ.34.36 லட்சம் சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லகூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் அளவிற்கு ஊழலில் ஊறிப்போன கட்சியாக திமுக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. திருபுவனம் பகுதியில் மக்களுக்கு தேவையான பேருந்து நிலையம் கூட அமைக்க முடியாத கையாலாகாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்துள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலர் அஜித்குமாரை போலியான வழக்கில் கைது செய்து அடித்தே கொன்ற கொடூரத்தை மக்கள் மறக்கமாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். அஜித்குமார் அவர்கள் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை என சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் மோசமான நிலைக்கு சென்றுள்ளதே இதற்கு காரணம். இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரவுள்ள தேர்தலில் தகுந்த பதில் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் உண்மையான வளர்ச்சியுடன் ஊழலில்லாத ஆட்சி அமைந்திட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு. @ponbalabjp அவர்களை மானாமதுரை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பார்கள் என்பது உறுதி. தாமரை மலரட்டும்! மானாமதுரை வளம் பெறட்டும்!




தமிழ்
RamarAravai retweetledi

தீயசக்தி திமுகவின் ஊழல் ஆட்சியை ஒழித்து, மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் களம் காணும் திரு. செல்லூர் ராஜூ அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை எதிர்நோக்கி நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்கள் இதுவரை கண்டிராத மோசமான ஆட்சியை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் திரு. @mkstalin அவர்கள். மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறையின்றி சட்டம், ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறார்கள்.
மதுரையில் ரூ.200 கோடி ஊழல் செய்த புகாரில் மாநகராட்சி மேயரே ராஜினாமா செய்யும் அளவிற்கு மோசமான நிலையை நாம் கண்டோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை தடுத்தது திமுக அரசு. மதுரைக்கு மெட்ரோ தேவை இல்லை, விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) தான் சரியானது என அறிக்கை கொடுத்தது திமுக அரசு. தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரையை கடைசி இடத்திற்கு தள்ளியது திமுக அரசு.
மதுரையின் பெருமையை மீட்கவும், தமிழகத்தில் நல்லாட்சி அமையவும் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில், மதுரை மேற்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. செல்லூர் ராஜூ அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மதுரை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! மதுரை மேற்கு மென்மேலும் வளரட்டும்!




தமிழ்
RamarAravai retweetledi

இன்றைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. தேர்போகி பாண்டி அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
காரைக்குடி நகரம், செட்டிநாடு கலாச்சாரத்தின் தலைநகரம். ஆனால், இங்குள்ள இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை கிடைக்காமல் வெளியூருக்கு செல்லும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு குடும்பம் காரைக்குடியை பிடித்து வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம், அவரது மகன் திரு. கார்த்தி சிதம்பரம் ஆகியோர் காரைக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ திரு. மாங்குடி அவர்கள், தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல், திரு.ப.சிதம்பரம் குடும்பத்தினர் பின்னால் ஒரு உதவியாளராக நிற்கும் அவலநிலையில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி விரட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒன்றுக்கும் உதவாத காங்கிரஸின் அடிமையான திமுக அவர்களுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இது எப்படிப்பட்ட அடிமை கூட்டணி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இப்படிபட்ட மனிதர்களின் கைகளில் காரைக்குடி மறுபடி சிக்கி விடக்கூடாது. காரைக்குடி வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், வளர்ச்சியின் பக்கம் நிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பெற வேண்டும்.
எனவே, காரைக்குடி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. தேர்போகி பாண்டி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! காரைக்குடி மக்களின் கவலைகள் தீரட்டும்! காரைக்குடி வளரட்டும்!




தமிழ்
RamarAravai retweetledi

தமிழகத்தின் வளர்ச்சியும், தமிழக மக்கள் நலனுமே கொள்கை என கொண்டு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் திரு. @AnanthAyyasamy அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தங்களின் சுயநலத்திற்காகத் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும் இந்த கமிஷன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண்.84-யில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என கூறியது. கடந்த 5 ஆண்டுகளில், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கத் துப்பில்லாத திமுக அரசு, வீரகேரளம்புதூர் பகுதியில் இரட்டை குளம் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. அதனால் 48 குக்கிராமங்களும், 15 கிராம பஞ்சாயத்துகளும் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளின் கண்ணீருக்கு வரவிருக்கும் தேர்தல் பதில் சொல்லும்.
வாசுதேவநல்லூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறவும், வளர்ச்சியடைந்த வாசுதேவநல்லூர் உருவாகவும், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. ஆனந்தன் அய்யாசாமி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். திமுகவின் காட்டாட்சி ஒழியட்டும்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! வாசுதேவநல்லூர் வளரட்டும்! (1/2)




தமிழ்
RamarAravai retweetledi

தேர்தல் கருத்து கணிப்பு நடத்துப்பவர்கள் கொஞ்சம் கவனியுங்கள், தேர்தலுக்கு முன், பின் என்று கருத்து கணிப்பு எடுப்பதற்கு பதிலாக அண்ணாமலை பிரச்சாரத்திற்கு முன், பிரச்சாரதிற்கு பின் கருத்து கணிப்பு பாருங்கள் #annamalai


தமிழ்
RamarAravai retweetledi

Met Sendamangalam @AIADMKOfficial
candidate Thiru Chandrasekaran Ex MLA & @GanapathyK8512 anna
at namagiripettai today. A Humble and energetic leader. Wished him all the best 🙏🏽🙏🏽🙏🏽
Election fever at its peak ! Will share my views (from the ground )later !

English
RamarAravai retweetledi
RamarAravai retweetledi

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றிடவும், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேற செய்யவும் உறுதி கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் திரு. @AmmanKArjunan அவர்களை ஆதரித்து புலியகுளம் விநாயகர் கோயில் முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கரூரில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை அறிந்து பயந்து, பத்து ரூபாய் புகழ் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கோவைக்கு ஓடி வந்திருக்கிறார். அவருக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறது? ஊழல் புகாரில் சிக்கி 477 நாட்கள் சிறையில் இருந்தது, ஒவ்வொரு தேர்தலின் போதும் பொய்யான வாக்குறுதி கொடுத்து, தோல்வி பயத்தில் தொகுதி மாறி மாறி போட்டியிடுவது, 5 கட்சிகள் மாறி அரைவேக்காட்டு அரசியல் செய்வது இவைதான் திரு. செந்தில் பாலாஜி அவர்களின் தகுதிகள்.
அரசியலில் இருக்கவே தகுதி இல்லாத திரு. செந்தில் பாலாஜி அவர்களை படுதோல்வி அடைய செய்யவும், கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மோசமான ஆட்சியை இனியும் தொடர விடக்கூடாது என்ற முடிவோடும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.
வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்களின் ஆதரவையும், பேரன்பையும் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @AmmanKArjunan அவர்களை கோவை மக்கள் மகத்தான வெற்றிப்பெற செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! கோவை மென்மேலும் வளரட்டும்!




தமிழ்
RamarAravai retweetledi

RamarAravai retweetledi

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக உதகமண்டலம் தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற, மாபெரும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினேன்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது, 511 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த திமுக, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட வெறும் 70 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால், முதல்வர் @mkstalin அவர்கள், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகாலம் இருண்ட ஆட்சியை கொடுத்த திமுகவை, மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர தமிழக மக்கள் விடமாட்டார்கள். படுகர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து கிடைத்திட திமுக அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வருகிற மே 4 ஆம் தேதி, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, படுகர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்தை பெற்று தர தேசிய ஜனநாயகக் கூட்டணி உரிய நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.
காட்டாட்சியை கட்டவிழ்த்து, உதகமண்டலத்தின் வளர்ச்சியை முடக்கிய திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.போஜராஜன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதகை மக்கள் வெற்றிப்பெற வைப்பார்கள் என்பது உறுதி.
இந்நிகழ்வில், @BJP4TamilNadu நீலகிரி மாவட்ட தலைவர் அண்ணன் திரு. தருமன் அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் திரு. மோகன்ராஜ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தமிழ்
RamarAravai retweetledi

அண்ணாமலை அவர்கள்தான் கூட்டனிக்கு பிரச்னை அவர தலைவர் பதவில இருந்து தூக்கிட்டு இன்று கூட்டணி முடிவு பண்ணி தொகுதி பாங்கிடு வரை அண்ணாமலை அவர்களை கட்சி கண்டு கொள்ளவில்லை இப்போது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அண்ணாமலை அவர்கள் மீது ஒரு பாசம் வந்து விட்டது 😂🤣🤣 #annamalai #Bjp

தமிழ்
RamarAravai retweetledi
RamarAravai retweetledi

ஒட்டு மொத்த அதிமுக அண்ணாமலை அவர்களை நம்பித்தான் இன்று வாக்கு சேகரிப்பில் உள்ளது காரணம் இளைஞர்கள் ஒட்டு அண்ணாமலை அவர்கள் வந்தால் தான் என்பது கள நிலவரம் #annamalai



தமிழ்








