Sabitlenmiş Tweet
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்)
5.6K posts

மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்)
@rssubbu_mdmk
Zonal MDMK IT Wing (Tenkasi and Virudhunagar) belongs to Marumalarchi Dravidiyan ஸ்டாக்
Katılım Aralık 2022
818 Takip Edilen377 Takipçiler
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

அதிமுக வேட்பாளர்: "திமுக கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரன் வெளியூர் ஆளு... அவருக்கு ஓட்டு போடாதீங்க!" 😤
அதே அதிமுக வேட்பாளர் (இன்று): "திருநெல்வேலில இருந்து சாத்தூருக்கு மைகிரேட் ஆன நயினார் அண்ணே... வாங்க வந்து எனக்கு பிரச்சாரம் பண்ணுங்க!" 🤝
நாங்க: "ஏண்ணே... இந்த முரண்பாடு உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?" 😂
வெளியூர்.. உள்ளூர்.. இப்போ என்ன சொல்ல போறீங்க? 🤡
#HypocrisyAtItsPeak #KadayannallurElection #NainarNagendran #MDMK_SocialMedia

தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தி.மு. இராசேந்திரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
#thedebate #Newsupdate #Rajendran #DMK #TNelection2026

தமிழ்

பண்ணையார்கள் வீழட்டும்
பாமரர்கள் வெல்லட்டும் 🔴⚫🔴
PttvOnlinenews@PttvNewsX
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி, திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் #Kadayanallur | #DMK | #TNElection | #ElectionWithPT | #Election2026
தமிழ்

@PttvNewsX பண்ணையார்கள் வீழட்டும்
பாமரர்கள் வெல்லட்டும் 🔴⚫🔴
தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி, திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
#Kadayanallur | #DMK | #TNElection | #ElectionWithPT | #Election2026

தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் உயிர் பாதுகாப்பு முதன்மை – அளுந்தூரில் சுரங்கப்பாதைக்கான என் முயற்சி தொடரும்!
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கடந்த 21.02.2026 அன்று, அப்பகுதியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைக்க சென்றிருந்தபோது, அப்பகுதி மக்கள் ஒரு மிக முக்கியமான பிரச்சினையை முன்வைத்தனர்.
இந்த பகுதி ஒரு முக்கியமான குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதியாக மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தச் சந்திப்பைப் பயன்படுத்தி சாலையை கடக்க வேண்டிய அவசியம் உள்ள முக்கிய இடமாகவும் உள்ளது.
மேலும், அங்கு செயல்பட்டு வரும் பல கல்வி நிறுவனங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினமும் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த சாலையை கடக்கும் போது ஏற்கனவே பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 24.02.2026 அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பினேன்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்தின் இருபுறமும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏற்கனவே சுரங்கப்பாதைகள் உள்ளன என்பதைக் காரணம் காட்டி, புதியதாக ஒரு சுரங்கப்பாதை அங்கு அமைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
ஆயினும், இது ஒரு சாதாரண கோரிக்கை அல்ல, குழந்தைகளின் உயிர் பாதுகாப்பை மட்டுமல்லாமல், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் அனைவரின் பாதுகாப்பையும் சார்ந்த அவசர தேவையாகும்.
St Patrick's மேல்நிலை பள்ளி மற்றும் பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் ஆபத்தான தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க என்னால் இயன்ற அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி, தீர்வு கிடைக்கும் வரை என் முயற்சி தளராது தொடரும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
26.03.2026
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko



தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

இன்று 29.03.2026 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களையும் மற்றும் மாண்புமிகு அன்புச் சகோதரர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்களும், கழக பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்களும் மற்றும் சென்னை மண்டல மாவட்ட செயலாளர்களும் உடன் இருந்தனர்.
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #mkstalin #Udhayanidhi_Stalin




தமிழ்

@PttvNewsX நினைத்தை முடிப்பவர் அண்ணன் @duraivaikooffl
தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் ரஷ்ய அரசால் உக்ரைனுடான போர் முனைக்கு அனுப்பப்பட்டார். அம்மாணவனை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மீட்டது என் பொதுவாழ்வில் நான் மார்தட்டிக்கொள்ளும் சாதனையாகப் பார்க்கிறேன் - மதிமுக எம்.பி.துரை வைகோ
#DuraiVaiko | #MDMK | #Russia | #Ukraine

தமிழ்

@sunnewstamil அன்பு தலைவரின் அயராத பணி
தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி.நட்டா அவர்களின் தலைமையில் 16.12.25 அன்று மாலை நடைபெற்ற காசநோய் இல்லாத இந்தியா (TB Mukt Bharat Abhiyan) இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
18.12.2025
புதுடெல்லி
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko
#TBMuktBharat #UnionHealthMinistry #JPNadda #JPNaddaji




தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

ஏன் தலைவர் வைகோ அவர்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார்
நடைபயணத்திற்கு இத்தனை காரணங்கள் இருக்கிறதா
#வைகோ #DuraiVaiko. #MDMK #mdmkitwing
வைகோ சமத்துவ நடைபயணம்.🔥
@duraivaikooffl
@Vaikooffl
@MinervaRajesh
தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றும் ஒன்றிய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக “விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)” (VB-G RAM G) என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று (16.12.2025) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மகாத்மா காந்தியின் பெயரால் நடைமுறையில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிடும்.
இப்புதிய மசோதா, கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதலாவதாக, தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயரை இத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு, யாருக்கும் புரியாத சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் “விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)” (VB-G RAM G) என்ற புதிய பெயரைச் சூட்டியுள்ளனர். இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பெயரை அகற்றுவது மூலம் ஒன்றிய அரசின் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது.
இரண்டாவதாக, இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், கிராமப்புற ஏழைகளுக்கு கிடைத்து வரும் வேலை உறுதி பெரிதும் பாதிக்கப்படும். தற்போது MGNREGA திட்டத்தில் 100 நாட்கள் வேலை உறுதி அளிக்கப்பட்டு வந்த போதிலும், இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதியை வழங்காததால், பல இடங்களில் 50 முதல் 60 நாட்களுக்கு மேல் வேலை வழங்கப்படுவதில்லை.
ஆனால் பழைய திட்டத்தில் “Demand driven” தேவை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டதிலிருந்து, இப்புதிய மசோதாவில், “Supply driven” ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் அளவுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று மாற்றப்படுகிறது.
இனி, இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டை முடிவு செய்யும் என்பதால், தற்போதைய 50 முதல் 60 நாட்கள் கூட வேலை உறுதியாகக் கிடைக்காத நிலை உருவாகும்.
ஊதிய வழங்கலில் ஏற்கனவே ஒன்றிய அரசின் பங்களிப்பு 100% என்பதிலிருந்து, புதிய மகோதாவில் 60% என குறைக்கப்படுகிறது. ஆதார பொருட்களின் செலவினம், 75% இலிருந்து 60% ஆகக் குறைக்கப்படுகிறது. இதனால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஆண்டுக்கு 4300 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு MGNREGA திட்டத்திற்கான நிதியை படிப்படியாகக் குறைத்து வந்தது. இப்போது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், எதிர்காலத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இந்த திட்டமே ஒழித்துக்கட்டப்படும்.
இத்திட்டம் கிராமப்புற ஏழைகளுக்கு வழங்கப்பட்ட வேலை உறுதியைப் பறிக்கும், மாநிலங்களுக்கு நிதிச் சுமையை கூட்டும். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படும் நிலையில், இது மேலும் ஒரு அநீதியாகும்.
எனவே, இம்மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பழைய, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரிலேயே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, அதற்கான உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
எனவே, இந்த புதிய மசோதா, கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு எதிரான மசோதா; ஜனநாயகத்திற்கு எதிரான மசோதா; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மசோதா; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மசோதா என்று கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இம்மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பி வெளிநடப்பு செய்துள்ளேன்.
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் வழங்கப்பட்ட எனது நேர்காணலை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.12.2025
புதுடெல்லி
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #MGNREGA
தமிழ்

@sathrak1967 அய்யா @SavukkuOfficial சங்கர் பக்கத்துல இருக்கிறது எங்க கட்சி யொட அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர், நீ இந்த ஃபோட்டோ share பண்ணின நோக்கம் என்ன?
தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

திருச்சி
இன்றைய நாளிதழ்களில்....
நம் நாடாளுமன்ற உறுப்பினர் #துரைவைகோ அவர்களின் கோரிக்கை குறித்த செய்தி.
@duraivaikooffl @Vaikooffl @MinervaRajesh


தமிழ்
மதிமுக இணைய தள அணி (விருதுநகர்- தென்காசி மண்டலம்) retweetledi

#DuraiVaiko_MDMK
ஆதாயம் இல்லா மக்கள் பணி
சமரசம் இல்லா மக்கள் நலன்
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை
தமிழ்








