Sabitlenmiş Tweet

தமிழகத்தில் அரசியலில் நேர்மையை விரும்புகிறவர்கள் அனைவரின் தேர்வு அண்ணாமலை அவர்கள் தான்.
நேர்மையுடன் அறிவாற்றல், சிந்தனை திறன் மிக்கவர்.
அதனால் தான் அன்னக்காவடிகளாய் இருந்து அரசியலில் நுழைந்து ஊழலோ ஊழல் என்று செய்து நூறு கோடி ஆயிரம் கோடிகள் மூட்டை கட்டி வைத்திருக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலை அவர்களை ஒருபோதும் பிடிக்கவே பிடிக்காது. எப்படியாவது அவரை தமிழக சாக்கடை அரசியலில் இருந்து விலக்கி விட பார்க்கிறார்கள்.
பவன் கல்யாண் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்டையாக பேசக்கூடியவர்.
அண்ணாமலை அவர்களை பற்றிய அவரின் கணிப்பு மிகச் சரியானது.
நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்த இந்த உலகத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.
ஆனால் தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்களை ஆழமாக நம்புகிறார்கள்.
அதனால் வரும் காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு ஆலமரம் போல உருவெடுப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மக்களின் சக்தியே ஒரு மாபெரும் தலைவனை உருவாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நேர்மையான அரசியல் வேண்டும் என்பதற்கு அண்ணாமலை அவர்கள் லட்சம் - கோடி விதைகளை ஏற்கனவே. விதைத்து விட்டார்.
அவைகள் வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் தூரமில்லை.
தமிழ்




















