Sridhar Subramaniam

2.9K posts

Sridhar Subramaniam banner
Sridhar Subramaniam

Sridhar Subramaniam

@sridharfc

Writer, Thinker, Feminist, Political Philosopher, Human Rights Advocate, Atheist

India Katılım Temmuz 2009
69 Takip Edilen11.2K Takipçiler
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
புனித வெள்ளி என்றாலே எனக்கு டோனால்ட் டிரம்ப்தான் நினைவுக்கு வருகிறார். காரணம், 2020ல் புனித வெள்ளி அன்று 'Happy Good Friday' என்று டிவிட்டரில் பதிவிட்டார். 'அதில் என்ன தப்பு?' என்று நினைப்பவர்களுக்கு அப்போது நான் எழுதிய விளக்கத்தை மீள்பதிவிடுகிறேன். ========= Good Fridayவுக்கு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். ஏனெனில் இது பிரியாணி செய்து கொண்டாடும் பண்டிகை கிடையாது. இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். தங்களின் பாவங்களுக்காக கர்த்தர் சித்ரவதைப்பட்டு சிலுவையில் மரித்த நாளை கிறித்துவர்கள் உலகெங்கும் சோக நிகழ்வாகவே அனுசரிக்கிறார்கள். அன்றைக்கு பிரார்த்தனைகள், தியானம், உபவாசம் என்றுதான் கழிப்பார்கள். It's a day of solemn reflection. எனவே, இந்த தினத்தில் வாழ்த்து சொல்வது மோசமான விஷயம். It's in poor taste. ஞாயிற்றுக் கிழமைதான் இயேசு உயிர்த்தெழுகிறார் என்பதால் உண்மையான கொண்டாட்ட தினம் அன்றுதான். ஞாயிறு அன்று 'Happy Easter' என்று வாழ்த்து பகிர்வார்கள். விருந்துகளுடன் கொண்டாடுவார்கள். 2016 தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் செய்த முழக்கங்களில் ஒன்று கிறித்துவ மதத்தை அமெரிக்காவில் மீட்டு நிறுத்துகிறேன் என்பதுதான். அவருக்குத் தொடர்ந்து அதிக வாக்குகள் கிடைப்பதும் 'பைபிள் பெல்ட்' என்று அழைக்கப்படும் தீவிர கிறித்துவர்கள் வாழும் மாகாணங்களில்தான். அந்த ரேஞ்சுக்கு கிறித்துவத்தை போற்றுவதாக பீற்றிக் கொள்ளும் தலைவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லை என்பதுதான் இங்கே மேட்டர். (11 ஏப்ரல் 2020) ========= எனவே டிரம்ப் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய புனித வெள்ளி நல் வாழ்த்துகள். Happy Good Friday to all the fans and followers of Donald Trump.
தமிழ்
3
8
61
12.8K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
ஐஐடியில் ஒரு அறிவீனம் ========================== . கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 250ஆவது நிகழ்ச்சி ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி பேசி இருக்கிறார். அந்த உரையைக் கேட்டேன். 'நியூட்டனின் அறிவியல் பார்வை' எழுத்தறிவற்ற பார்வை என்றுதான் ஆரம்பிக்கிறார். ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி தியரியை எடுத்துக் கொள்கிறார். அந்த ஃபார்முலாவில் ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் தவறு செய்திருக்கிறார். காரணம், இந்தப் பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்கிறார். இப்படியே அவரது உரை போகிறது. பல்வேறு வரலாற்று அறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று பலரையும் சாட்சிக்கு அழைக்கிறார். எதற்கு? வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் சொன்னவைதான் சாட்சாத் சத்திய உண்மை! இந்தப் பிரபஞ்சம் குறித்த உபநிடதப் பார்வைதான் உண்மையான பார்வை! இதைத்தான் உலகின் பெரிய அறிவியல் அறிஞர்கள் எல்லாருமே சொல்கிறார்கள்! இந்த விக்ஸ்சைத்தான் 35 நிமிடங்கள் சுற்றிச் சுற்றிப் பேசுகிறார். சரி, அவர் சொல்வதில் என்ன பிரச்சினை? பார்ப்போம்: உபநிடதங்கள் சிலவற்றில் இந்தப் பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம் குறித்த மாபெரும் ஆச்சரியப் பார்வைகள் இருக்கின்றன, என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. சொல்லப் போனால் தோற்றம் குறித்து உலகெங்கும் பண்டைய சமூகங்கள் உருவாக்கிய வேறு எந்தக் கதையையும் விட உபநிடதங்கள் சொல்லும் கதைகள் மேம்பட்டவை. Consciousness எனப்படும் தன்னுணர்வு குறித்தும் உபநிடதங்கள் சொல்லும் சில விஷயங்கள் சிலாகிக்கத்தக்கவை. தன்னுணர்வு குறித்த நவீன அறிவியல் பார்வையே, சுமார் 18,19ம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி இயக்க சிந்தனையாளர்கள் மூலம் துவங்கியது. ஆனால் அதற்கு சுமார் 2000 ஆண்டுகள் முன்பே அது பற்றி உபநிடத சிந்தனையாளர்கள் யோசிக்கத் துவங்கி இருக்கின்றனர். இந்த ஆச்சரியங்கள் குறித்து எனது 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன்' புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறேன். ஆனால் அவை வெறும் ஆச்சரிய சிந்தனைகள் என்ற அளவில் மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டியவை. Contemplative Wisdom என்று சொல்லுவார்கள். மானுட ஆழ் சிந்தனையில் உருவான கருத்தாக்கங்கள். இந்த கருத்தாக்கங்கள் சில ஆச்சரியமாக இருந்தாலும் அவற்றை அறிவியல் என்று சொல்ல முடியாது. காரணம் சிந்தனைகளில் நல்ல விஷயங்களும் வரும். மொக்கை விஷயங்களும் வரும். குரூர விஷயங்களும் வரும். தோற்றம் குறித்த அனுமானங்கள், அகிம்சை, என்று சில நல்ல விஷயங்களுடன் கூடவே சாதி, பிராமண உயர்வுவாதம், பெண்ணடிமைத்தனம், தலித் ஒடுக்குமுறை என்று பல குரூரங்களுக்கும் வேதிய பிராமணியம் காரணமாக இருந்திருக்கிறது. பண்டைய இந்தியா குறித்து சிலாகிப்பதில் இதுதான் பிரச்சினை. நான் அடிக்கடி எழுதுவது போல, ஓரளவுக்கு வாழ்வதற்குத் தகுதியானதாக பண்டைய இந்தியா இருந்தது இரு தரப்பினருக்கு மட்டும்தான்: பிராமணர்கள், சத்திரியர்கள். அதிலும் ஆண்கள்தான். மீதி அனைவருக்குமே இந்தியா ஏறக்குறைய நரகமாகத்தான் இருந்தது. அந்த நரகத்தில் இருந்து சும்மா ஒரு ஐந்தாறு பேர் ஏதோ ப்ரில்லியண்ட்டாக சொன்ன சில வரிகளை எடுத்துக் கொண்டு பேசுவதற்கு ஒன்று அறிவிலியாக இருக்க வேண்டும். அல்லது சிந்தனை முழுவதும் குரூரம் நிரம்பி இருக்க வேண்டும். அது ஒரு புறம் இருக்க, அறிவியல் குறித்து குருமூர்த்தி சொல்வதிலும் கூட அண்டா சைஸ் ஓட்டைகள் உள்ளன. உதாரணத்துக்கு ஐன்ஸ்டைன் தனது சமன்பாட்டில் செய்த தவறு பற்றிப் பேசுகிறார். அது cosmological constant எனும் ஒரு மாறிலியைக் கொண்டு வந்தது. அந்த மாறிலி குறித்து ஐன்ஸ்டைன் பேசும்போது 'Greatest blunder of my life' என்று சொன்னார். அது முப்பதுகளில். அப்போது கரும் ஆற்றல், Dark Energy, பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இன்று தெரியும். எனவே நவீன அறிவியல் அந்த மாறிலியை உள்வாங்கிக்கொண்டே இயங்குகிறது. அதாவது ஐன்ஸ்டைன் தவறு என்று சொன்னது தவறே அல்ல. ஐன்ஸ்டைன் சொன்ன அந்த வரி பற்றி நீல் டிக்ராஸ் டைசன் பேசுகையில் 'Einstein's greatest blunder was calling the formula a blunder in the first place!' ஆனால் இந்தப் பின்ணணி குறித்து எதுவுமே தெரியாமல் நியூட்டன் தப்பு செய்து விட்டார், ஐன்ஸ்டைன் தப்பு செய்து விட்டார். அந்தத் தப்புகளை எல்லாம் நமது பண்டைய ரிஷிகள்தான் வந்து சரி செய்து கொடுத்தார்கள் என்ற ரேஞ்சுக்கு குருமூர்த்தி. இடையில் பிக் பேங் நடந்த போது எழுந்த ஒலி 'ஓம்' போலக் கேட்டது, என்றும் சொல்கிறார். அதை நிரூபிக்க ஏதோ ஆடியோ போடுகிறார். ஏதோ சித்தார் ஒலி போலக் கேட்கிறது அது. பிக் பேங்க் நடந்த போது பண்டித் ரவிஷங்கர் அங்கே இருந்தாரா என்று தோன்றியது. சூரியனில் இருந்து வரும் ஒலியை நாசா ரெகார்ட் செய்திருக்கிறது. அது 'ஓம்' என்று கேட்கிறது, எனும் ஒரு போஸ்டரை முன்பு ஒரு முறை கிரண் பேடி பதிந்திருந்தார். அதைப் பலரும் கலாய்க்க ஆரம்பிக்கவே டிலீட் செய்து ஓடி விட்டார். ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிடி தியரி குறித்த குறிப்புகள் ரிக் வேதத்திலேயே இருக்கின்றன என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பண்டைய இந்தியாவின் அறிவியல் திறமை பற்றி பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்களின் உளறல்களைத் தொகுத்தால் ஆயிரம் பக்க புத்தகம் போடலாம். அந்த அளவுக்குப் போகவில்லை எனினும் எனது 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' புத்தகத்தில் ஒரு அத்தியாயம் முழுக்க அவை பற்றிப் பேசி, அவற்றின் அபத்தங்களை விளக்கி இருக்கிறேன். (அத்தியாத் தலைப்பு: ரிக் வேதத்தில் ரிலேடிவிடி) கடைசியாக, தனிப்பட்ட முறையில் அந்த உரை பார்க்கப் பார்க்க ரொம்பப் பரிதாபமாக இருந்தது. எண்பதுகளின் இறுதியில் திருவல்லிக்கேணியில் இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அகப்படும் சிறுவர்களிடம் எல்லாம் பண்டைய இந்தியா பற்றி நீள நீளமாக அளப்பார்கள். ஏழாம் நூற்றாண்டுக்கு முன் ஒரு பொற்காலம் இங்கே நிலவியது. முஸ்லிம்களும், நேருவும், காங்கிரசும் வந்து அதை எல்லாம் நாசம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்ப்பார்கள். அதை எல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போய்க் கொண்டிருப்போம். இன்றும் அதே டெய்லர், அதே வாடகைதானா என்பது ஆயாசமாக இருந்தது. அதாவது நான் பார்த்தே 35 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சில் எந்த அறிவு வளர்ச்சியும் நடக்கவில்லை என்பது தெரிகிறது. சொல்லப் போனால் 100 ஆண்டுகளிலும் அவர்களின் அறிவு ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை என்பதைத்தான் குருமூர்த்தி இந்த உரையில் நிரூபித்திருக்கிறார். மண்புழுக்கள் கேட்பதற்குக் கூடத் தகுதியில்லாத உரையைப் பேசுவதற்கு ஐஐடி மெட்ராசிலேயே மேடை போட்டுக் கொடுக்கப்படுகிறது. பேசுவது ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அதை விட முக்கியமாக, பிராமணர் என்பதைத்தவிர அவருக்கு வேறு என்ன சிறப்புத் தகுதி இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஐஐடி மெட்ராசுக்கு வன்மையான கண்டனங்கள். இந்த அறிவீனக் கொடுமையில் இருந்து நவீன இந்தியா மீண்டு வரட்டும். மீண்டு செக்யூலரிசம், அறிவியல், மற்றும் மானுடவியல் பாதைக்குத் திரும்பி முன்னேறட்டும். - ஸ்ரீதர் சுப்ரமணியம் (பி.கு. அந்த அறிவீன உரையின் லின்க்கைப் பகிர விரும்பவில்லை. ஆர்வமிருப்பவர்கள் 'Thuglak Editor S Gurumurthy Speech | 250th Anniversary of Muthuswami Dikshitar | IIT Madras IKS' என்று யூடியூபில் தேடிப் பார்த்து ரசிக்கலாம்.)
தமிழ்
21
65
155
13K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
கேரளாவில் தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை ஒன்றில் பாஜக ரப்பர் ஸ்டாம்பு இடம் பெற்றிருப்பது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அதை 'Clerical Error' என்று தேர்தல் கமிஷன் விளக்கி இருக்கிறது. இந்த செய்தி படித்ததும் வேறு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கம்பெனியில் ப்ராஜக்ட் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் கூட வேலை செய்த சக ப்ராஜக்ட் மேனேஜருக்கு ஒரு deliverable க்ளையண்ட்டுக்கு அனுப்ப வேண்டி இருந்தது. அவர் அவசரமாக வெளியீருக்குப் போக வேண்டி இருந்ததால், ஆஃபீசில் இருந்த என்னை அவர் சார்பில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். நானும் ஓக்கே என்று சொல்லி அவரிடம் ஈமெயில் பாஸ்வேர்டு எல்லாம் வாங்கிக் கொண்டேன். அவரது மாட்யூல் ரெடி ஆனதும் சர்வரில் போட்டு, அவர் ஈமெயிலில் லாகின் செய்து அழகாக ஒரு டெலிவரி ஈமெயில் எழுதி விட்டேன். ஆனால் மெயிலின் அடியில், Thanks and regards Sridhar என்று எழுதி Send பண்ணி விட்டேன்! அவர் அடுத்த நாள் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு என்னைத் திட்டினார். சுற்றறிக்கையில் பாஜக ரப்பர் ஸ்டாம்பும் கூட நான் செய்த மாதிரி ஒரு 'க்ளெரிகல் எர்ர'ராக இருக்க வாய்ப்பிருக்கிறது! - ஸ்ரீதர் சுப்ரமணியம்
தமிழ்
6
16
74
9.3K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
இன்று உலக நாத்திக தினமாம். நாத்திகத்துக்கென்று பிரத்தியேகமாக ஒரு தினம் தேவையா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் அதன் தோற்றம், மாற்றங்கள், உயிரின் தோற்றம் குறித்தெல்லாம், அம்புலிமாமா புத்தகங்களைத் தாண்டி நாம் யோசிக்கும் ஒவ்வொரு தினமும் நாத்திக தினம்தான். அந்த அம்புலிமாமா புத்தகங்கள் சொன்ன கதைகளை வைத்து மதங்கள் முன்னெடுக்கும் வன்முறைகள், பெண்ணடிமைத்தனங்கள், மனித உரிமை மீறல்கள், விலங்குரிமை மீறல்கள் அனைத்தையும் கேள்வி கேட்கும் ஒவ்வொரு தினமும் நாத்திக தினம்தான். 'அந்தப் புக்குல அப்படிப் போட்டிருக்கிறது உண்மைதான். ஆனால் அதைத்தான் யாரும் இன்னிக்கு ஃபாலோ பண்றதில்லையே? அப்புறம் உனக்கு என்ன பிரச்சினை?' என்று புனித நூல்களுக்கு நம்பிக்கையாளர்கள் முட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு நாளும் நாத்திக தினம்தான். எனவே, அறிவியல் சார்ந்து, நவீன மனித உரிமைகள் போற்றி வாழ முனையும் ஒவ்வொருவருக்கும் உலக நாத்திக தின நல் வாழ்த்துகள். - ஸ்ரீதர் சுப்ரமணியம் #ReligionIsPoison Non-Statutory Warning: Religion is Injurious to Society.
தமிழ்
0
3
19
696
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை புதுப்பிக்கும். மனதைத் தெளிவாக்கும். வாழ்வை மாற்றுக் கண்ணோட்டங்களில் பார்க்க வைக்கும். புத்தனுபவங்களைக் கொண்டு உங்கள் வாழ்வை செறிவாக்கும். விடுமுறையே இல்லாத வாழ்க்கை மோசமானது. உங்கள் மூளையை துருப்பிடிக்க வைத்து விடும். உங்கள் முடிவுகள் மோசமானவையாக, அறிவீனம் கொண்டவையாக வெளிப்படும். என்னை நம்பவில்லையேல் இதோ ஒரு உதாரணம்:
Sridhar Subramaniam tweet media
தமிழ்
8
14
74
6.6K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்: கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான். பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள். கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம். அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர். அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது. காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது. காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை. வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம், அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'. ஒப்பீட்டில் இப்படி யோசித்துப் பாருங்கள்: இந்தியாவில் புரட்சி ஒன்று நடக்கிறது. அது வெற்றி பெற்று இந்து மதவாதிகளின் கையில் ஆட்சி போகிறது. தேர்தல் எதுவுமின்றி காஞ்சி சங்கராச்சாரியார் இந்தியாவின் ஜனாதிபதியாகி விடுகிறார். நிரந்தர ஜனாதிபதி. அவர் கை காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர். பிரதமருக்கு நிர்வாகப் பொறுப்புகள் தாண்டிப் பெரிய அதிகாரம் இருக்காது. ஆட்சிப் பொறுப்பேற்றதுமே அரசியல் சாசனம் தூக்கி எறியப்பட்டு, மனுஸ்மிருதியின் பரிந்துரைகளை ஒட்டிய புதிய சாசனம் அமலுக்கு வருகிறது. அசைவம் உண்பது சட்டவிரோதமாகிறது. மத மாற்றப் பிரச்சாரங்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகின்றன. பெண்களுக்கு சொத்துரிமை போகிறது. விதவை மறுமணம் தடை செய்யப்படுகிறது. சூத்திரர்களுக்கு அரசுப் பதவிகள் கிடையாது என்று சட்டம் அரங்கேறுகிறது. நகரங்களில் வசிக்கும் தலித்துகள் காலி செய்து நகரத்துக்கு வெளியே உள்ள வீடுகளுக்குக் குடியேற வேண்டும் என்று அரசாணை வெளியாகிறது. நாத்திகர்கள் சிறைப்படுத்தப்படுகிறார்கள். பள்ளிகளில் சரஸ்வதி பிரார்த்தனையுடன் நாள் துவங்குகிறது. இவற்றை எதிர்த்து சூத்திரர்கள், பெண்கள், தலித்துகள் போராட்டம் மேற்கொள்கிறார்கள். அவற்றைப் பெரும் குரூரத்துடன் அரசு ஒடுக்குகிறது. ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் கொலையுறுகிறார்கள். லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள். இது போதாது என்று உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்று சங்கராச்சாரியார் கூக்குரலிடுகிறார். லட்சக்கணக்கான போராளிக் குழுக்களை பயிற்சி கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து எல்லை கிராமங்களுக்கு அனுப்புகிறது அரசு. ஸ்கூல் பிரேயர் முடிந்ததும் 'பாகிஸ்தானை அழிப்போம்' என்ற கோஷம் முடித்து பிள்ளைகள் வகுப்புகளுக்குப் போகிறார்கள். மேலே சொன்னது உங்களுக்கு எவ்வளவு நாசகரமாகத் தோன்றுகிறது? இதுதான் ஈரானில் கடந்த 45 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சங்கராச்சாரி = கமேய்னி. மனுஸ்மிருதி = ஷரியா. பாகிஸ்தான் = இஸ்ரேல். தலித், சூத்திரர்கள் = சிறுபான்மையினர். இந்து நாத்திகர்கள் = முஸ்லிம் நாத்திகர்கள். இதுதான் ஆயதொல்லாக்களின் ஈரான். 45 ஆண்டுகள் தொடர் பிரச்சாரத்திலும் அடக்குமுறையிலும் இதற்கு மக்களின் ஆதரவு இல்லை. கணக்கற்ற சர்வேக்கள் நமக்கு சொல்வது இதுதான். ஒரு ஆய்வின்படி ஈரானின் மக்கள்தொகையில் 73% செக்யூலர் அரசு வேண்டும் என்கிறார்கள். சுமார் 22% மக்கள் எந்த மதத்தையும் சாராமல் வாழ விரும்புகிறார்கள். 2009 முதல் சமீபம் வரை மொத்தம் எட்டுப் பெரிய போராட்டங்கள் அங்கே அரங்கேறி இருந்திருக்கின்றன. லட்சக்கணக்கான பேர்கள் அதில் கொலையுண்டிருக்கிறார்கள். ஜனவரியில் அரங்கேறிய அரசுக்கெதிரான போராட்டத்தில் மட்டுமே 35,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 'ஜின்-ஜியான்-ஆசாதி', 'பெண்கள்-வாழ்க்கை-விடுதலை' எனும் கோஷத்துடன் போராட்டங்கள் அங்கே சென்ற ஆண்டு அரங்கேறின. அவற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலையுண்டார்கள். இதெல்லாம் போதாது என்று ஈரானின் பொருளாதாரம் மண்ணைக்கவ்விக் கொண்டிருக்கிறது. Hyperinflation எனப்படும் அதீத பணவீக்கம் விலைவாசியை வானுக்கு அனுப்பி இருக்கிறது. ஒரு பிரட் பாக்கெட் ஐந்து லட்சம் ரியால் வரை விற்கிறது. சமீபத்தில் ஈரான் ஒரு கோடி ரியால் நோட்டை அடித்து வெளியிட்டிருக்கிறது! இந்தப் பின்னணியில்தான் இந்தப் போர் நடக்கிறது. போரைத் துவக்கியது ஒரு குரூரக் கோமாளிதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் போர் துவக்கப்பட்டது ஒரு குரூர சித்தாந்தவாதிக்கு எதிராக என்பதைத்தான் நாம் இங்கே கவனிக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள்: இந்தியாவின் சர்வாதிகாரி சங்கராச்சாரிக்கும் அவர் ஆட்சிக்கும் எதிராக அமெரிக்கா போர் தொடுக்கிறது. அதில் சங்கராச்சாரி கொலையுறுகிறார். அப்போது உங்களில் எத்தனை பேர் அவர் ஃபோட்டோவை முகப்புப் படமாக வைத்து துக்கம் அனுசரிப்பீர்கள்? மனுஸ்மிருதியைப் போற்றும் இந்துத்துவர்கள் அனுசரித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். இந்து மதவாதத்துக்கு எதிராக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் இடதுசாரிகள் செய்தால்? போலவே, ஷரியா எனும் பண்டைய குரூரங்களைப் போற்றும் மதவாதிகள் கமேய்னியை முகப்புப் படமாக வைத்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். மதவாதத்தை கசப்புணர்வுடன் அணுகும் இடதுசாரிகள் செய்தால்? நீங்கள் இந்துத்துவத்துக்கு எதிராக இயங்குவது உண்மையாக இருந்தால் ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகவும் இயங்கித்தான் ஆக வேண்டும். சொல்லப்போனால் இன்னும் கூடுதல் வீரியத்துடன் இயங்க வேண்டும். காரணம், மோடி அரசு போல நூறு மடங்கு மோசமானது கமேய்னி அரசு. மாறாக, அமெரிக்க எதிர்ப்புக்காக கமேய்னியைப் போற்றிக் கொண்டிருந்தால், மோசமான ஒரு பாசாங்குத்தனத்தையோ அல்லது அறிவீனத்தையோ வெளிக்காட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். - ஸ்ரீதர் சுப்ரமணியம் #ReligionIsPoison Non-Statutory Warning: Religion is Poisonous to Society.
Sridhar Subramaniam tweet mediaSridhar Subramaniam tweet mediaSridhar Subramaniam tweet mediaSridhar Subramaniam tweet media
தமிழ்
22
12
34
6.5K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
நிலைப்பாடுகள் ================= . 'உங்களை நோக்கி ஒற்றைக் கேள்வி: ஈரான் மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடா!? அல்லது இஸ்ரேல், அமெரிக்கா மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடா!?' ...என்று Yusuf Yusuf கேட்டிருக்கிறார். பதில் எழுத முயன்று கொஞ்சம் நீளமாகப் போனதால் தனிப் பதிவாக எழுதுகிறேன். பெரும்பாலான உலக நாடுகளை 'மனிதாபிமானமற்ற நாடு' என்று பொதுப்படுத்திச் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஆஃப்கானிஸ்தான், வட கொரியா, சவுதி அரேபியா என்று ஒரு சில நாடுகளை மட்டுமே தெளிவாக சொல்ல இயலும். பாகிஸ்தானைக் கூட நான் இந்த லிஸ்டில் சேர்க்க மாட்டேன். So, not Iran, Israel or the US. ஈரானைப் பொருத்தவரை அது மனிதநேயம் நிரம்பிக் கிடக்கும் மக்கள் கொண்ட நாடு. ஆனால் மதத்தினை சாசனமாகக் கொண்ட நாடு, an Islamic Theorcracy. என்று கண்டிப்பாக அடையாளப்படுத்த முடியும். அவர்களும் அதை ஆட்சேபிக்க மாட்டார்கள். அந்த மதவாதம்தான் அவர்களின் மனித நேயத்தை மறைத்து நிற்கிறது. உலகெங்கும் மதவாதம் எங்கெல்லாம் தழைக்கிறதோ அங்கெல்லாம் மானுடம் அழிபடும். அந்த சமூகம் நசிவுறும். இதில் விதிவிலக்கே கிடையாது. அடுத்ததாக, அமெரிக்கா. இதையும் மனிதாபிமானமற்ற நாடு என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஏகாதிபத்தியத்தைப் போற்றும் தேசம். அந்த ஏகாதிபத்திய தாகம் கூடுதலாக இருக்கும் சில தலைவர்கள் அவ்வப்போது தலைமைப் பொறுப்பில் ஏறும் போது வன்முறையும் கூடுதலாக அங்கே வெளிப்படும். ரேகன், ஜார்ஜ் புஷ் சீனியர், புஷ் ஜூனியர், என்று பட்டியல் போகும். தற்போது உள்ள அதிபர் டிரம்ப் அதையும் தாண்டிப் புனிதமான ஆசாமி. வரலாற்றில் மிக அரிதாகத் தோன்றும் குரூரக் கோமாளிகளில் முதன்மையானவர். அப்படிப்பட்டவரின் ஆட்சியில் அமெரிக்காவின் தரம் முன்பை விட மேலும் கீழே போய்க் கொண்டிருக்கிறது. அவரின் கோமாளித்தனத்துடன் ஒரு குறைப்பட்ட மதவாதமும் அவரிடம் தலை தூக்குகிறது. They become potent combination. கடைசியாக இஸ்ரேல். அது தன்னைச் சுற்றிலும் கொடும் எதிரிகளைக் கொண்டுள்ள நாடு. அந்த எதிரிகள் வேறு எந்த தேசமும் காணாத அலாதியானவர்கள். இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைபவர்கள். ஒப்பீட்டளவில் பாகிஸ்தான் கூட இந்தியாவை வரைபடத்தில் இருந்து அழிக்க வேண்டும் என்று நினைக்கும் நாடு அல்ல. அவர்களிடம் கஷ்மீரைக் கொடுத்துத் தொலைத்து விட்டால் நம்முடன் நட்பு நாடாகக் கூட மாறி விடுவார்கள். சீனாவும் அதே போலத்தான். போலவே வட கொரியா தென் கொரியாவை அழிக்க நினைப்பதில்லை. ஈரானை அழிக்க சவுதி முனைவதில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இஸ்ரேலின் எதிரிகள் வேற மாறி! From the River to the Sea என்று அறிவித்து இஸ்ரேலை முழுவதுமாக அழித்துப் போட முனைபவர்கள் அதன் எதிரிகள். உலகில் மொத்தம் 29 நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலை சுற்றி உள்ளவை என்பது தற்செயல் அல்ல. அந்த அழிவு நோக்கத்துக்காக அந்த நாடுகள் தங்களது மதத்தில் இருந்து போதனைகளை வேறு எடுத்துக் கொண்டு தம் அழிவுச் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றன. அந்தக் கொடூர சூழலில் இஸ்ரேல் தனது இருத்தலியலுக்காக பலவித தந்திரோபாயங்களை மேற்கொண்டு தப்பித்துக் கடக்க வேண்டி இருக்கிறது. தவிர பல நாடுகளையும் போல அங்கேயும் டிரம்ப், கமேய்னி போன்ற குரூரத் தலைவர்கள் தோன்றுகிறார்கள். Unfortunately, நேதன்யாஹூவும் அப்படிப்பட்ட ஒரு தலைவர். ஊழல், வன்முறை, யூத அடிப்படைவாதம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டவர். அவரைக் கட்டுப்படுத்த முனைந்த இஸ்ரேலிய சுப்ரீம் கோர்ட்டையே வலுவிழக்க முனைந்தவர். அவரது அடாவடி செயல்கள் காரணமாக இஸ்ரேல் முழுக்க 2023ல் அவருக்கு எதிரான போராட்டங்கள் துவங்கிப் பரவின. அந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால், நேதன்யாஹூ பதவியிழந்து இன்னேரம் வரலாற்றில் இருந்து காணாமல் போயிருப்பார். சொல்லப் போனால் நேதன்யாஹூ ஹமாஸ்சுக்கு நன்றிக் கடன்பட்டவராக இருக்க வேண்டும். ஹமாஸ் தாக்குதல் நடவாமல் இருந்திருந்தால் நேதன்யாஹூ அதிகாரத்தில் இருந்திருக்க மாட்டார். சவுதி-இஸ்ரேல் ஒப்பந்தம் அரங்கேறி இருந்திருக்கும். பிராந்தியத்தில் கொஞ்சம் அமைதி திரும்பி இருந்திருக்கும். டிரம்ப் எனும் கோமாளி மறுபடி ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இருந்திருந்தால் நேதன்யாஹூவுக்கு இப்படிப்பட்ட ஆதரவு கிடைத்திருக்காது. போலவே, ஈரானில் கிளம்பிய ஹிஜாப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்காமல் பெண்களுக்கு அந்த அரசு உரிமைகள் கொடுத்திருந்தால், கமேய்னிக்கு எதிரான போராட்டங்களை நசுக்காமல் கமெய்னி பதவியிறங்கி இருந்திருந்தால் அவர்களைத் தாக்க அமெரிக்கா தயங்கி இருந்திருக்கும். இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கல்களை வைத்துதான் வரலாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் அந்த நிலைப்பாடு, இந்த நிலைப்பாடு என்று எடுக்க முனைவது இயலாத காரியம். இஸ்லாத்தினால் உந்தப்பட்டவர்கள், அல்லது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்டவர்கள் ஈரான் பக்கம் நிற்கிறார்கள். இந்துத்துவ நிலைப்பாடு கொண்டவர்கள் அமெரிக்காவின் பக்கம். எனக்கு டிரம்பிடம் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஈரானின் இஸ்லாமிய மதநாயகம், Islamic Theocracy, பற்றிப் படிக்க பக்கம் பக்கமான புகார்கள் உள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்பு உணர்வு நேதன்யாஹூவின் கீழ் குரூர உணர்வாக மாறி விட்டது பற்றிய புகார்கள் உள்ளன. இதில் எந்தப் பக்கம் நிற்பது? - ஸ்ரீதர் சுப்ரமணியம்
தமிழ்
20
7
25
4.2K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
நன்றி தமிழ் இந்து.
Sridhar Subramaniam tweet media
தமிழ்
1
1
11
354
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
இந்தியாவில் பெண்களை சாதாரணமாக அணுகலாம். உங்களின் துறை செல்வாக்கை வைத்து அவர்களை வளைக்கலாம். பிளாக்மெயில் செய்து தன் வழிக்குக் கொண்டு வரலாம். எதிர்க்கும் பெண்களின் கேரியரை காலி செய்யலாம். யாராலும் எதுவும் செய்து விட முடியாது. உங்களுக்கு கட்சி அரசியல் செல்வாக்கு இருந்தால் இன்னும் விசேஷம். அந்தப் பெண்களின் புகார்களையெல்லாம் உடைத்துப் போட்டு முன்னேறலாம். அவ்வளவு ஏன், இந்தியாவின் ஆகப்பெரிய விருதுகளைக் கூட கைப்பற்றலாம். சமூக ஊடகங்களில் புலம்பிக் கொண்டிருப்பதைத்தவிர பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்கு வேறு வழியிருக்காது. ஆம்பளைன்னா சும்மாவா? - 'ஒரு ஆணியவாதியின் டயரிக் குறிப்பு' எனும் நூலில் இருந்து.
தமிழ்
6
9
27
4.3K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
ரொம்ப சிம்பிள்: 1, 5, 3, 4, 6, 2
Sridhar Subramaniam tweet media
தமிழ்
13
0
5
1.4K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
கடவுள் எனும் ஸ்பைடர்மேன் பேசும் விஷயங்கள் குறித்து புத்தகம் படித்த பலருக்கும் பல்வேறு கேள்விகள் இருக்கும். படிக்காதவர்களுக்கும் இருக்கலாம். அந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடம் நேரடியாகக் கேட்பதற்கு நம் இருவரின் நேரம் ஒத்து வராமல் போகலாம். சக சேப்பியன் சிவராமன் (ஹாலாசியன்) இதை ஏஐ மூலம் தீர்க்க முயன்றதில் ஒரு Chatbot உருவாக்கி விட்டார். இந்த Chatbot புத்தகத்தை உள்வாங்கிப் புரிந்து கொண்டு விட்டது. இதனுடன் நீங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உரையாடலாம். புத்தகத்தின் உள்ளடக்கங்கள் குறித்துக் கேள்விகள் கேட்கலாம். சந்தேகங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நிற்க. இதில் புத்தகத்தைப் படிக்க முடியாது. 'புக்கில இருந்து முதல் சாப்டரைக் கொடு' என்றால் கொடுக்காது. இன்னொன்று, இதை நீங்கள் திட்டினால் என்னைப் போல தேமே என்று கேட்டுக் கொண்டிராது. 'கிளம்பு காத்து வரட்டும்,' என்று சொல்லி விடும். ஆனால் முறையான உரையாடல்களுக்குத் தயாரகவே இருக்கும். கூடவே, எழுத்தாளரிடம் நேரடியாகக் கேட்க வேண்டும் என்றாலும் சரி என்று சொல்லி உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்பி வைக்கும். முதல் முறை உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து ஓடிபி போட வேண்டும். இது சும்மா user countடுக்காக மட்டும்தான். வேறு எந்த வகையிலும் நாங்கள் உங்களை ஸ்பாம் செய்யப் போவதில்லை. பாட்டை முயற்சி செய்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். Sivaramanக்கு நன்றிகள். லின்க்: kesbot.web.app
தமிழ்
1
2
12
955
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
Gokul Prasad அவர்களின் பதிவு: ============================== தமிழ்ச் சமூகம் பார்ப்பனர்களை ஏன் வெகுஜன விரோதிகளாகப் பார்க்கிறது என்பதற்குப் பத்ரி சேஷாத்ரி செய்துகொண்டிருக்கும் இண்டக்ஷன் அடுப்புச் சமையல் பதிவுகள் ஒரு உதாரணம். எங்கள் வீடு உட்பட, எனக்குத் தெரிந்த பெரும்பாலான வீடுகளில் இண்டக்ஷன் இருக்கிறது. கேஸ் வராவிட்டால் அதில் சமைக்க வேண்டும் என்ற ஈர வெங்காயம் அனைவருக்கும் தெரியும். அது ஒன்றும் விட்ஜன்ஸ்டைனின் analytical philosophy மூலம் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டிய சிக்கலான பூச்சிக்கணக்குகள் அல்ல. தினம் மூன்றுவேளை சமைப்பவர்களுக்கு உடனடியாக இண்டக்ஷன் அடுப்புக்கு மாற இரண்டு நாள்கள்கூட ஆகாது. ‘நாங்கள் எல்லாம் விவரக்கூந்தல்’ என்றும் ‘அதில்தான் காலங்காலமாகச் சமைக்கிறோம்’ என்பதும் தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் போர் அல்லது எண்ணெய் அரசியலில் இருந்து விஷயத்தைப் பிரித்து, தங்களை உஷார் பேர்வழிகளாகக் காட்டிக்கொள்ள முயலும் எத்தனம் மட்டுமே. மாதா மாதம் வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை மேல் நிறைய கணக்குகளை வைத்திருக்கும் மக்கள் நடுராத்திரியே இண்டக்ஷன் அடுப்புக்கு மாறவேண்டும் என்பது மேட்டிமைத்தனம் அன்றி வேறென்ன? கேஸில் சமைப்பது ஒரு சாய்ஸ். ஸ்ரார்த்தம் முதல் பல காலமாக ரிஷி கோத்திரம் சொல்வதை விடுவதுகூட சாய்ஸ்தான். ஆனால், சிலிண்டரிலிருந்து இண்டக்ஷன் அடுப்புக்கு மாறவேண்டியது என்னமோ நாம்தான் எனக் கூசாமல் பாடமெடுப்பார்கள். அடுத்து, அதில் கொத்தவரங்காய் சௌசௌ சமைப்பது. மாட்டுக்குப் போட்டால் அதுகூட யோசித்து உண்ணும் காய்கறிகளை எல்லாம் பாற்கடலைக் கடைந்தபோது பறந்துவந்த காய்கறிகளாகச் சொல்லி அதனை மொக்கையாகச் சமைப்பது, அதற்கு மற்ற பார்ப்பனர்கள் விமர்சனம் எழுதுவது எனக் கண்றாவியாக இருக்கிறது. இறுதியில் அதனை யாராவது சுட்டிக்காட்டினால், ‘நாங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறோம்’ என்று பெரியாரில் ஆரம்பித்து பிலாக்கணம் வைப்பார்கள். சிவ சிவ!
தமிழ்
27
128
387
20.2K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
இன்று மாலை 5:30 மணிக்கு அடையார் காந்தி நகர் பக்கம் வாருங்கள். சேப்பியன்களுடன் ஒரு உரையாடல் நடத்தலாம். Backyard, Gandhi Nagar, Adyar facebook.com/thebackyardclan
தமிழ்
0
0
1
451
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
@alagar_raghavan @RodricksPrem உங்கள் ஆலோசனைக்கு நன்றி. பிரச்சினை என்னவெனில், நண்பர் தில்லியில் இருக்கிறார். அங்கு வசிப்பவர்களுக்கு சென்னையில் அரசு சிகிச்சை கிடைக்குமா என்பது தெரியவில்லையே!
தமிழ்
2
1
1
295
Raghavan Alagar
Raghavan Alagar@alagar_raghavan·
@sridharfc @RodricksPrem ஒரு ஆலோசனை சார். இதை தமிழ் நாடு சுகாதார துறை அமைச்சர் க்கு டேக் செய்து விடவும் சென்னை ல உள்ள கலைஞர் பல் நோக்கு மருத்துவ மனை ல சிகிச்சை தருவாங்க. உயர் தர சிகிச்சை தான் சார்
தமிழ்
1
1
1
485
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
என்னுடன் பணிபுரியும் ஒருவரின் தாய் ஷில்பா சித்காரா. அறுபத்தி ஐந்து வயதான அவர்கள் தற்போது ஒரு இக்கட்டான மருத்துவச் சூழலில் போராடி வருகிறார். அவருக்கு Burkitt’s Leukemia எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கான கீமோதெரபி சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு Severe Aortic Stenosis என்ற மிகத் தீவிரமான இதய வால்வு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காக்க TAVI எனப்படும் அவசர இதய வால்வு மாற்று சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சையைத் தொடர வேண்டியது அவசியமாகி இருக்கிறது. புது தில்லி மணிப்பால் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அவசர சிகிச்சை மற்றும் இதர மருத்துவச் செலவுகளுக்குத் தோராயமாக ₹25 லட்சம் தேவைப்படுகிறது. ஒரு குடும்பமாக அவர்களால் திரட்ட முடிந்த தொகையை விட இது மிக அதிகமாக உள்ளது. உங்களது அன்பான பங்களிப்பு ஷில்பா அவர்கள் மீண்டும் நலமுடன் வாழ ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும். ஜிபே/ஃபோன்பே ஐடி: neha.chitkara-1@okaxis இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். யாரேனும் சற்றே அதிக அளவு நிதி உதவி செய்ய விரும்பினால் இன்பாக்ஸ் வரவும். உங்களை என் நண்பருடன் நேரடியாக தொடர்புபடுத்துகிறேன். உங்கள் உதவிக்கு முன்கூட்டிய நன்றிகள். (தேதி: 11-மார்ச்-2026)
தமிழ்
1
55
55
9.6K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
ஒடிஷாவில் பாஜக 2024 ஜூன் மாதம் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் சமீபம் வரை மொத்தம் 54 மதக்கலவரங்கள் அங்கே அரங்கேறி உள்ளன. மொத்தம் 7 பசுக்காவல் படுகொலைகள் நடந்திருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை. ஒடிஷா முதல்வரே சொல்கிறார். எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் முதல்வர் மோகன் சரண் மாஜி இதனைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது அரசே கொடுத்திருக்கும் தரவின்படி மாதத்துக்கு சுமார் 3 கலவரங்கள் ஒடிஷாவில் நடந்து வருகின்றன! இதுதான் பாஜக கொண்டு வரும் மாற்றத்தின் லட்சணம். இந்தக் கலவரங்களைத் தடுக்க அரசு தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மதம் சார்ந்த வன்முறைகளை நிறுத்த ஒரு எளிய வழிமுறையை அவருக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். பாஜக ஆட்சியில் இருந்து இறங்கி விட வேண்டும். அவ்வளவுதான். அடுத்த நாளே வன்முறைகள் நின்று விடும்! சிம்பிள். இந்த கும்பல்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி அங்கலாய்த்துக் கொண்டு தாங்கள் தமிழ் நாட்டை சீர்திருத்துவோம் என்று பீற்றிக் கொண்டிருப்பவர்கள். - ஸ்ரீதர் சுப்ரமணியம் Non-Statutory Warning: Religion is injurious to society. #StayAwayFromBJP #ReligionisPoison
தமிழ்
45
357
761
22.1K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
ஈரான் சிறுமிகள் பற்றிய என் பதிவுகள் இரண்டும் Insensitive என்று நண்பர்கள் பலரும் சுட்டிக் காட்டியதால் அதனை நீக்குகிறேன். போர் மற்றும் அந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியானதும் அது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். அனைவருக்கும் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
தமிழ்
5
1
18
3.1K
Sridhar Subramaniam
Sridhar Subramaniam@sridharfc·
நன்றி ஆனந்த விகடன்.
Sridhar Subramaniam tweet media
தமிழ்
0
4
17
766