#Chidambaram#Nataraja#Temple Margazhi Aruthra Darshan will begin with the flag hoisting on December 25th. Everyone is welcome.
#சிதம்பரம் #நடராஜர் #கோயில் மார்கழி ஆருத்ரா தரிசனம் வரும் டிசம்பர் 25 கொடியேற்றத்துடன் ஆரம்பம் அனைவரும் வாரீர்
#சிதம்பரம் #நடராஜர் கோவிலில் வீற்றிருக்கும் #தில்லை கோவிந்தராஜர் மஹா கும்பாபிஷேகம் முன்னிட்டு தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை மண்டபத்தில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் #அன்னதானம் வழங்கப்பட்டது
@KSRadhakrish இத்துடன் நிறம் மாறும் சிவன் தவக்கோலத்தில் சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார். மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.[1]
நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா.
ஏன் இல்லை....
நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
திருச்சி தாயுமானவர்கோயில், திருச்சி ஆனைக்கா, திருச்சி எறும்பியூர், தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், திருவண்ணாமலைஅண்ணாமலையார் ஆலயம், மதுரை சுந்தரேஷ்வர் ஆலயம், கங்கைகொணடசோழபுர ஆலயம் போன்றவை உலக அதிசயம். நாம் சிவனின் வியாபகத்துள் உள்ளோம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. while I was at Thiruvannamalai Shiv temple, Americans came there to worship. I asked them whether these like of temples could be constructed at present? They replied that it is not possible. God had built these Annamalaiyar Temple like temples .
.....
#சிதம்பரம் #நடராஜர் #கோயில் தெற்கு கோபுரம் அருகே அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னதான கூடத்தில் #சரஸ்வதிபூஜை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
ஶ்ரீ சோபகிருது வருட ஆவணி சதுர்த்தசி மஹாபிஷேகம் முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கால பூஜைகள் 8 மணிக்குள் நிறைவடையும் தொடர்ந்து எம்பெருமான் ஶ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஶ்ரீமந் ஆனந்த நடராஜராஜ மூர்த்தி சிற்சபையில் இருந்து கனகசபை எழுந்தருள்வார், தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறும்