வன்னியின் மைந்தன்

33.5K posts

வன்னியின் மைந்தன் banner
வன்னியின் மைந்தன்

வன்னியின் மைந்தன்

@vanni8

உன் வலி உன்னை சார்ந்தவர்களுக்கு புரியும் ஆனால் உன் வலியை உன்னைத் தவிர வேறு யாராலும் உணர முடியாது #JusticeForTamilGenocide

வன்னி Katılım Kasım 2022
2.5K Takip Edilen2.5K Takipçiler
Sabitlenmiş Tweet
வன்னியின் மைந்தன்
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இனவாத அரசால் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள் 1956-2009 (பகுதி 01) 1:-இக்கியாகலை படுகொலை 05.05.1956 150பேர் உயிரிழப்பு 2:-1956 இனப்படுகொலை 01.05.1958 300க்கு மேல் உயிரிழப்பு 3:-தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1977 9பேர் உயிரிழப்பு
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
3
76
148
20.9K
வன்னியின் மைந்தன்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாக இந்து நிருபர் மீரா சிறினிவாசன் அவர்களது கேள்விக்கு இராணுவத்தின் கட்டளை தளபதி தான் பொறுப்பு எனக்கூறி தப்பித்த கோட்டாபய ராஜபக்சேவின் எள்ளி நகையாடி சிரிப்போடு அந்தப் பெண் பத்திரிக்கையாளரையும் அச்சப்படுத்திய கோட்டாபய ராஜபக்சே இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனக்குத் தெரியாது எனக்கூறி தப்பிக்க முடியாது
தமிழ்
0
0
0
10
வன்னியின் மைந்தன்
கிளிநொச்சியில் நாளைய தினம் (29.03.2026) முன்னாள் போராளிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ள சந்திப்புக்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதை எமது போராளிகளுக்கு அறியத் தருகின்றோம் எம்மை தொடர்பு கொண்டு பலர் இது பற்றி கேட்டு இருந்தீர்கள் அந்த வகையில் இது போராளிகளை சிலர் பிரித்தாள்வதற்காக தங்கள் சுய அரசியல் இலாபத்துக்காக சில போராளிகளை வைத்து இவ்வாறான ஏற்பாடுகளை செய்வதாகவே நம்மால் அறிய முடிகிறது எனவே இதனை உணர்ந்து போராளிகள் அவதானத்துடன் செயல்படுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் போராளிகள் என்றும் தனித்துவமானவர்கள் என்பதனை என்றும் அனைத்து சூழ்நிலையிலும் வெளிப்படுத்துவோம் மேலும் இது பற்றிய விரிவான தகவல்களுடன் பின்னர் பதிவிடுகிறோம் நன்றி போராளிகள் நலன்புரிச் சங்கம்
வன்னியின் மைந்தன் tweet mediaவன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
0
0
2
92
வன்னியின் மைந்தன்
இது தமிழர்களின் மூச்சடங்கிய நிலமல்ல தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் இடமாகவே இருக்கும் நந்திக்கடலின் அலைகளில் மூச்சுக்காற்றாய் வாழும் உயிரிழந்த தமிழர்களின் கனவுகள் மேய்ப்படும் வலி சுமந்த நாட்கள் முள்ளிவாய்க்கால்
தமிழ்
0
7
15
160
வன்னியின் மைந்தன் retweetledi
சுப.தனசேகரன்
த. வி. பு இயக்கத்தின் மனித உணர்வுகள், மரபுநெறி என போராளிகளுக்குள் நடந்த திருமணங்கள் பற்றிய அறிய தகவல்களை தாங்கி வரும் இந்த தொகுப்பு தேவர் அண்ணா அவர்களின் குறிப்பிலிருந்து நகலாக்கம் செய்யப்பட்டவை. மேலும் அங்கு நடந்த திருமணங்கள் எவ்வாறு மிகுந்த கவனத்துடன், கண்காணிப்புடன், ஈன்றோர், ஆன்றோர் சம்மதத்துடன் நடந்தது என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையேல் தலைவரின் தம்பி என்றும் தலைவருக்கு மிக நெருக்கமானவன் எனவும் உள அச்சமின்றி தினம் ஒரு திருமணம் அல்லது தொடர்புடைய வஞ்சனைகள் செய்யும் கயவர்களின் சிறுமைத்தனம் ஒப்பீட்டளவில் நிராகரிக்கப்படாமல் தமிழர் அறநெறி தர்மங்களை மறந்த மடையர்களாக, மேற்சொன்ன செயல்களை செய்வோரை இகழ்ந்து புறந்தள்ளாமல், புகழ்ந்து பின் தொடர்வது அவசியமா என சுயபரிசோதனை செய்ய முடியும். இதோ அந்த தகவல்கள் 👇 த*மிழீழ வி*டுதலைப் பு*லிகளின் நிர்வாக காலத்தில் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழு ஒன்றும் செயற்பட்டு வந்தது. தேசியத்தலைவர் அவர்களால் இந்த திருமண ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.இதில் ஐவர் இடம் பெற்றிருந்தனர். திருவாளர்கள் அன்ரன் பாலசிங்கம்,பா.நடேசன்,புதுவை இரத்தினதுரை,தேவர் அண்ணா மற்றும் பெண் போராளிகளான அக்காச்சி,சீதா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் தலைவராக திரு.அன்ரன் பாலசிங்கமும்,தேவர் அண்ணாவும் செயற்பட்டனர். திருமண வயதை அடைந்த போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் பங்காற்றிய ஆண்,பெண் போராளிகளுக்கு திருமண ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கினை மேற்கொண்டு வந்தது. காதல் திருமணங்களும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிட்ட அம்சமாகும். ஆண் போராளிகள் 28 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும்,பெண் போராளிகள் 23 வயதை பூர்த்தி செய்தவர்களாக வரும் இருத்தல் முக்கியமானது. போராளிகள் தமக்கிடையே காதல் ஏற்படுமாயின் அது பற்றிய விபரத்தினை எழுத்து மூலம் துறைப் பொறுப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். துறைப்பொறுப்பாளர் அதனை ஏற்பாட்டுக் குழுவின் பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். திருமண ஏற்பாட்டுக் குழு கூடிய அதைப்பற்றி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த பின் அந்த விபரத்தை தேசியத்தலைவருக்கு அனுப்பி வைக்கும். தேசியத்தலைவர் அவர்களது அங்கீகாரம் கிடைத்தபின் ஆண்,பெண் போராளிகளின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண சம்மதத்தோடு திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்யும். திருமண நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் குறைந்த அளவிலான உறவினர்கள், அத்தோடு துறை சார்ந்த போராளிகளும் கலந்துகொள்ளும் நிகழ்வாக அந்த திருமணம் இடம்பெறும். வி*டுதலைப்பு*லிகளால் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களில் தாலி அணிதலும் முக்கியமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. தங்கத்திலான தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருக்கும். வழமையாக திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையிலேயே இந்தத் திருமண நிகழ்வுகள் இடம்பெற்றன.சில மூத்த தளபதிகளின் திருமணங்களில் தேசியத் தலைவரும் திருமதி மதிவதனி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். நிதர்சனம் பகுதியில் கடமை புரிந்த தவா,எழில் ஆகியோர் களுக்கிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. தவா அவர்கள் இவ்விடயத்தை திருமண ஏற்பாட்டுக் குழுவுக்கு அறியத் தந்தார். குழுவில் அங்கம் வகித்த புதுவை இரத்தினதுரையும் நானும்(தேவர் அண்ணா) தவா,எழில் ஆகிய இருவரையும் அழைத்துப் பேசினோம். அப்போது எழிலனின் பெற்றோர் த*மிழீழ மண்ணில் இருக்கவில்லை. அவரது மாமியார் மானிப்பாயில் இருப்பதாக எழில் தெரிவித்தார். புதுவை அவர்களும் நானும் சென்று மாமியாரைச் சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறி அவர் மூலம் பெற்றோருக்கும் அறியத்தரப்பட்டு தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியோடு அந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றது. இதே விதமாக இன்னும் சில போராளிகளின் திருமணங்களும் நாம் போராளிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களோடு கலந்து பேசி அனைவரினதும் பூரண சம்மதங்களுடன் இடம்பெற்றிருக்கின்றன. பு*லிப்போராளிகளது திருமணங்களுக்கு தமிழீழ திருமண பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருமண ஏற்பாட்டுக் குழுவின் தலைமையில் சபையினர் முன்பாக ஆணும் பெண்ணும் உறுதிமொழிகளைக் கூறி கையொப்பங்கள் இடப்பட்டு சாட்சிகளின் ஒப்பங்களோடு அவை அங்கீகரிக்கப்பட்டன. இவர்களுக்கு திருமணம் முடிந்தபின் குடும்ப பராமரிப்பு இறுக்கமான நிதியை மாதாமாதம் இயக்கத்தின் நிதிப் பிரிவு வழங்கி வந்தடையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். "மக்கள் தான் பு*லிகள், பு*லிகள் தான் மக்கள்" ஒழுக்க சீலர்கள்.! தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.!
சுப.தனசேகரன் tweet media
தமிழ்
0
8
26
589
வன்னியின் மைந்தன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொன்விழா தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒற்றைத் துப்பாக்கியோடு தொடங்கி மாவீரர்களின் அர்ப்பணிப்போடு நிழல் அரசு நிறுவி தமிழரின் தாகத்தை உலகுக்கு உணர்த்திய மாபெரும் போராட்டத்தின் பொன்விழா உயிரையே கொடையாக்கி இரத்த மழையில் குளித்து நெருப்பாற்றை நீந்திக் கடந்து தமிழரின் தாகத்திற்காகத் தங்கள் இன்னுயிரைகளை ஈகம் செய்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் வழியில் அவர்களின் தியாகத்தில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே இன்னுயிர் ஈந்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகளின் சாட்சியாக இந்தப் பொன்விழாவை உலகத் தமிழர்கள் அனைவரும் சேர்த்து போற்றுவோம் #தவிபு50 (1976-2026)
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
0
10
29
360
வன்னியின் மைந்தன் retweetledi
Saba Krish
Saba Krish@sabas_kris0712·
தேசிய தலைவர் எந்த பத்திரிகைக்கு எப்போது? இந்த பதில் சொன்னார். தேசிய தலைவரை யார் பேட்டி கண்டவர்? தமிழீழ விடுதலை போராட்டத்தின் இருண்ட பகுதி என தேசிய தலைவர் குறிப்பிட்டது இந்திய வல்லாதிக்க இராணுவ ஆக்கிரமிப்பை மட்டுமே. அவர் யாரையும் துரோகி என குறிப்பிட்டு சொல்வதில்லை. தயவுகூர்ந்து எழுந்நமானமாக அவர் பெயரை போட்டு எழுதாதீர்கள். #மேதகு
kathir Eelam Thayagam@VithuVithu79447

// ஓர் பத்திரிகையாளரின் கேள்விக்கு தமிழீழத் தேசியத்தலைவர் கூறியது // வினா? உங்கள் போராட்ட காலத்தில் இருண்ட பக்கம் என்னது? பதில்- நான் பெரிதாக நம்பியிருந்த என் ஆரம்பகால தோழர்கள் துரோகிகளாக மாறியது.

தமிழ்
2
4
21
944
வன்னியின் மைந்தன் retweetledi
Saba Krish
Saba Krish@sabas_kris0712·
அப்பு இப்ப பூநகரி குத்தரிசியும், மல்லாகம் கத்தரி பிரட்டலோட செம வெட்டு ! தம்பன் நம்ப கம்பனா? 😜
Saba Krish tweet media
தமிழ்
0
2
13
345
அர்ஜுன் தமிழீழவன் (Arjun)
இவனுங்க வட கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் போர் உருவாக்காம அடங்க மாட்டானுங்க போல 😂😂
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) tweet media
தமிழ்
50
60
704
36.8K
வன்னியின் மைந்தன்
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27.03.2026) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் கடந்த (20.03.2026) மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசமான நெல்லிக்காடு வயல் வெளி பாழடைந்த கிணற்றில் கொலைவெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆம் கிராமத்து பெண்ணுக்கு நீதி வேண்டியும் கொத்தியாபுல பெண்ணை அதே கிணற்றில் கொலை கார கும்பல் வீசியது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதிட வேண்டாம் எனவும் இனிமேலும் இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது
தமிழ்
0
2
5
141
வன்னியின் மைந்தன்
அன்று தமிழீழ மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படைகள் தங்களுக்கு கிடைக்கிற ஓய்வூதியம் நலன்புரிக் கொடுப்பனவுகள் எல்லாம் காணாது எண்டு இன்று தெருத் தெருவாக ஊர்வலம் நடத்துகின்றார்கள் அப்பவே கௌதம புத்தர் சொன்னவர் செய்யிற பாவங்கள் திரும்பி வரும் எண்டு புத்தர் சொன்னதை கேட்டியளோ புத்தாமாரே? அந்த நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் செய்த பாவங்கள் இப்ப உங்களுக்கு திரும்பி வந்திருக்குது அவ்வளவுதான் புத்தாமாரே
Tamil Guardian@TamilGuardian

🚨 Sri Lanka's war criminals want welfare Former Sri Lankan troops, including personnel from the Special Task Force (STF), and several military welfare associations took to the streets of Colombo last week, staging a protest near Fort Railway Station to demand legal rights and financial benefits for those injured during the armed conflict. Read more ⬇️ tamilguardian.com/content/sri-la…

தமிழ்
0
3
5
205
வன்னியின் மைந்தன்
எங்களின் அவலக்குரல் அன்று உலகமே வாய் மூடி கண் மூடி காதுகளையும் மூடிக்கொண்டிருந்தது வலி சுமந்த நாட்கள் முள்ளிவாய்க்கால்
தமிழ்
3
67
137
7.3K
வன்னியின் மைந்தன்
மலரும் நினைவுகள் நித்திய புன்னகை அழகன் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் அன்று
வன்னியின் மைந்தன் tweet mediaவன்னியின் மைந்தன் tweet mediaவன்னியின் மைந்தன் tweet mediaவன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
0
4
19
350
வன்னியின் மைந்தன்
இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராகக் கூடாது மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
தமிழ்
0
14
40
536
வன்னியின் மைந்தன் retweetledi
Krishna AMBALAVANAR
Krishna AMBALAVANAR@krishnaambalav1·
பிரபாகரன் ஒரு ஆயுதப் போராட்டத் தலைவர் – சமரசமற்றவர். சீமான் ஒரு ஜனநாயக அரசியல் தலைவர் – வாக்காளர்களை ஈர்க்க வேண்டியவர். இந்த இரு பாதைகளும் இயல்பாகவே முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன. x.com/krishnaambalav…
Krishna AMBALAVANAR@krishnaambalav1

x.com/i/article/2037…

தமிழ்
1
1
5
409
வன்னியின் மைந்தன்
@Perunchithiran4 டேய் புத்தக பூச்சு இந்த வழக்கம் தமிழ் நாட்டிலும் இருக்குடா உங்க திராவிட இனத்திலும் இருக்குடா இதெல்லாம் ஒரு வரலாற்று ஆதாரம் என்று தூக்கிட்டு வரா பாரு எப்படிப்பட்ட தற்குறியா இருப்ப நீ
தமிழ்
0
0
0
1
பெருஞ்சித்திரனார்
@vanni8 இலங்கைத் தமிழர்கள் கேரள நாயர்கள் போல மணப் பெண்ணின் வீட்டில் மணமகன் வாழும் வழக்கம் உண்டு. அந்தமுறை சிங்களவர் மற்றும் வேடரிடம் பெரும்பாலும் இல்லை மாகாவம்ச கதைப்படி சிங்களவர் மற்றும் யக்ஷர்(வேடர்) இந்த இரண்டு இனங்களும் தங்களின் சொந்த சகோதரியை மணந்து உருவானது
பெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet media
தமிழ்
1
0
0
13
வன்னியின் மைந்தன்
இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல இலங்கைத் தீவானது இன்று சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான "சிங்கள தேசம்" என்று முன்னிறுத்தப்பட்டாலும் வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன ஆனால் வரலாற்றை திரித்து பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் உலகின் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் திகழும் தமிழை போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல மொழியியல் ரீதியாக பார்க்கும் போது சிங்களம் என்பது வட இந்தியாவில் இருந்து வந்த பாலி சமஸ்கிரதம் மற்றும் வங்காளப் பகுதியின் மொழிகளுடன் தமிழின் வேர்சொற்களும் பெருமளவில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு மொழியாகும் கி.மு காலத்திலிருந்தே உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் உள்ள நிலையில் சிங்கள மொழிக்கு அத்தகைய நீண்ட நெடிய தனித்துவமான வரலாறு எதுவுமே கிடையாது அது காலப்போக்கில் பல மொழிகளின் கலவையால் உருவானதே தவிர இந்த மண்ணின் ஆதி மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும் சிங்கள இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிக்கு முற்றிலும் முரணானது பொய்யானது பௌத்த நூலான மகாவம்சம் இதற்குப் பதில் சொல்லுகிறது இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைத் தீவில் வந்திறங்கிய போது அவர்களை குவேனி என்னும் இயக்கர் குலப் பெண்மணி வரவேற்றதாக வரலாறு கூறுகிறது விஜயன் வரும் போது இங்கு குவேனி என்ற அரசி வாழ்ந்திருக்கிறார் என்றால் விஜயனுக்கு முன்பே இங்கு ஒரு செழிப்பான நாகரீகம் இருந்துள்ளது குவேனி சார்ந்த "இயக்கர்" மற்றும் "நாகர்" குலங்கள் என்பன தமிழர்களின் ஆதி குலங்களாகும் இவர்களே இந்த மண்ணின் மூத்த குடிகள் எனவே பிழைப்புத் தேடி வந்தவர்களே (விஜயன் வழித்தோன்றல்கள்) தங்களை மண்ணின் மைந்தர்களாக காட்டிக் கொள்வதும் ஏற்கனவே இங்கு ஆண்ட தமிழர்களை அந்நியர்களாகச் சித்தரிக்க முயல்வதும் மாபெரும் வரலாற்று திரிப்பாகும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நினைப்பவர்கள் இன்றும் சாட்சியாய் நிற்கும் வழிபாட்டுத் தலங்களை தொல்லியல் சான்றுகளை மாற்றியமைக்க துடிக்கின்றனர் இதற்குச் சிறந்த உதாரணங்கள் கன்னியா வெந்நீரூற்று அநுராதபுரம் கதிர்காமம் மற்றும் நயினாதீவு போன்ற பல "கதிர்காமம்" இது தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புனித பூமி பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் "கதிர்காமக் கந்தன்" என்று போற்றி வணங்கி வரும் தலம் இது ஆனால் இன்று அது சிங்களமயமாக்கப்பட்டு பௌத்த இடமாகச் சித்தரிக்கப்படுகிறது சிங்கள மொழி அல்லது பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழர்கள் கதிர்காமத்தில் முருகனை வழிபட்டு வந்துள்ளனர் என்பதே உண்மை "நயினாதீவு" (நாகதீபம்) பண்டைய தமிழ் இலக்கியமான மணிமேகலை காப்பியத்தில் "மணிபல்லவம்" என்று குறிப்பிடப்படும் நயினாதீவானது தமிழர்களின் ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த இடமாகும் இங்குள்ள நாகபூசணி அம்மன் ஆலயம் மிகவும் தொன்மையானது ஆனால் இன்று அதனை "நாகதீப விகாரை" என்று முன்நிறுத்தி அங்குள்ள தமிழ்ப் பண்பாட்டை மறைத்து அது பௌத்தர்களுக்கு மட்டுமேயான இடமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன இது போல் பற்பல உள்ளன இவை வெறும் மதத் தலங்கள் மட்டுமல்ல தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்பதற்கான அழியாத வரலாற்று ஆவணங்கள் இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஒரு அரசியல் ஆயுதமாகச் செயல்பட்டு வருகிறது இத்துறையில் திட்டமிட்டே சிங்களவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் அல்லது திரிக்கும் வேலைதள் சூழ்ச்சியாக நடைபெறுகின்றன தமிழர் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுக்களையும் சைவ ஆலயச் சிலிலங்களையும் மறைத்து விட்டு அங்கு புத்தர் சிலை இருந்ததற்கான போலி ஆதாரங்களை வலிந்து நாட்டி நிறுவ முயல்கின்றனர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளை அழித்தாலும் உண்மையை ஒருபோதும் மண்ணிட்டு மூடிவிட முடியாது இன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த பிக்குகளின் தலைமையில் நடைபெறும் நில அபகரிப்புகளும் "புனித பூமி" என்ற பெயரில் நடக்கும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் சாதாரணமானவை அல்ல இவை தமிழர்களின் இருப்பை அழித்து இலங்கையை முழுமையாக ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்றும் கபட எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்
வன்னியின் மைந்தன் tweet media
தமிழ்
2
8
29
735
வன்னியின் மைந்தன்
@Perunchithiran4 டேய் திராவிட புத்தக பூச்சு இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு நீ கண்ட புத்தகத்தையும் படித்து விட்டு அதன் வரலாறு என்று தூக்கிட்டு வராத டா புத்தக பூச்சு
தமிழ்
0
0
0
1
பெருஞ்சித்திரனார்
@vanni8 இலங்கையில் களப்பணி செய்து மானிடவியல் பார்வையில் எழுதப்பட்ட இந்த நூலில் குவேனியின் யக்ஷர்(இயக்கர்) கோத்திரம் இலங்கை வேடர்களுக்கு உரியது எனவும், வேடர்களின் மொழி இந்தோ ஈரானிய மொழிக்குடும்பம் என்ற குறிப்பும் உள்ளது
பெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet mediaபெருஞ்சித்திரனார் tweet media
தமிழ்
2
0
0
13
வன்னியின் மைந்தன்
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலை வழக்கின் மேல்நீதிமன்ற தீர்ப்பு ரத்து கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டமை செல்லுப்படியற்றது 10 வருடங்களுக்கு பிறகு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் இன்று (26} அனுமதி
தமிழ்
0
5
21
354