

YOGESH KABIRDOSS
4.5K posts




எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி – புதுக்கோட்டை சாலையில் TVS டோல்கேட் முதல் திருச்சி விமான நிலையம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த செய்தி மூலம் எனது கவனத்திற்கு வந்தது. அந்த பகுதியில் உள்ள பழைய போக்குவரத்து தடுப்புகள் (Barricades) பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபாயகரமான நிலை உருவாகி வருவதாகவும், மேலும் விமான நிலையம் சுவர் ஓரமாக உள்ள சாலை பகுதியில் போதிய வெளிச்ச வசதி இல்லாததும் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்சி மாநகர காவல் ஆணையருடன் கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு, பழைய போக்குவரத்து தடுப்புகளை புதிய பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் கொண்ட தடுப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு காவல் ஆணையர் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், விமான நிலையம் சுவர் அருகே உள்ள பகுதியில் குறைவான வெளிச்ச வசதி இருப்பதை சரிசெய்ய, திருச்சி மாநகராட்சி ஆணையருடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூடுதல் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளார். இந்த பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Times of India நாளிதழுக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது கோரிக்கையை உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இரவு நேரங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 02.03.2026 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #timesofindia





