Radha Kumar

11.9K posts

Radha Kumar banner
Radha Kumar

Radha Kumar

@Radhakumar5

மாவட்ட அமைப்பாளர் DMK Medical wing Virudhunagar south Consultant Medical gastroenterologist, Radha Hospital RAJAPALAYAM https://t.co/jl4DPNnfnf

Tamil Nadu, India Sumali Mayıs 2012
3K Sinusundan3K Mga Tagasunod
Naka-pin na Tweet
Radha Kumar
Radha Kumar@Radhakumar5·
Radha Kumar tweet media
ZXX
8
13
139
10K
Radha Kumar
Radha Kumar@Radhakumar5·
வாக்களிப்பீர் உதயசூரியன்
தமிழ்
0
0
0
2
Radha Kumar nag-retweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! #TNwillFightTNwillWin
தமிழ்
5
124
179
1.3K
Radha Kumar nag-retweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தர்மபுரியில் பொதுமக்களுடன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு! திராவிட நாயகர் மாணவர்களிடம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
தமிழ்
4
89
200
1.2K
Radha Kumar nag-retweet
மரங்கொத்தி Woody
அந்தச் சிறுமியின் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. இவ்வளவு சிறிய வயதில் அத்தனை மக்கள் கூட்டத்திற்கு முன்னால் பயமின்றிப் பாடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது. மேடையில் அவர் காட்டிய அந்தத் தன்னம்பிக்கை அவரை ஒரு முடிசூடா ராணியாக மாற்றியுள்ளது. #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
தமிழ்
1
22
57
675
Radha Kumar nag-retweet
Office of PTR
Office of PTR@OfficeOfPTR·
“மதுரை மண்ணின் மைந்தர், இந்த மண்ணிலே கழகத்தை கட்டி காத்த நமது ஐயா பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களின் மகன் என்பதை இந்தக் கணம் வரை தனது செயல்பாடுகளால் நிரூபித்து வரும் செயல்பாட்டாளர் மீண்டும் மதுரை மத்தியில் களம் காண்கிறார்... டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பதை தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், பிளவுவாத பா.ஜ.கவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிடி மண் கூட கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக இருக்க வேண்டும்.” மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மேலமாசி வீதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் @ptrmadurai அவர்களை ஆதரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் எழுச்சி உரை.
தமிழ்
1
20
41
337
Radha Kumar nag-retweet
Asaaltu
Asaaltu@vel_novak·
சுந்தர் சி தேர்தல்ல நிக்குறது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனா, எதிர் வேட்பாளர் என்ற ஒரே காரணத்துக்காக, தனக்கு எந்த தகுதியும் இல்லைன்னும் தெரிஞ்சும் கூட, .... பல தகுதிகள் வாய்ந்த பிடிஆர் அவர்கள் மேல தனி மனித தாக்குதல் நடத்தலாம்னு சுந்தர் சி என்னைக்கு ஆரம்பிச்சாரோ, அன்னைக்கே மதுரை மக்கள் முழிச்சிக்கிட்டாங்க இனிமேல் இந்த ஆள் எடுக்குற படத்தைக் கூட மதுரைக்காரன் எவனும் பாக்க மாட்டான் 👎 குஷ்பு-க்கு பாஜக-ல சீட் கொடுக்க முடியாதுன்னு வெளிப்படையா சொல்ல முடியாத பாஜக, இந்த டம்மி கட்சியை மிரட்டி குஷ்பு சார்பா அவங்க கணவருக்கு சீட் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்திருக்குனு குழந்தைக்கு கூட தெரியும் இப்படி ஓசி சீட் வாங்கினப்போவே சுந்தர் சி-க்கு இவ்வளவு எகத்தாளம் இருந்தா 3 தலைமுறை அரசியல்வாதியான பிடிஆர்-க்கு எவ்வளவு மக்கள் செல்வாக்கு இருக்கும் 💪 மதுரை மக்கள் டெபாசிட் கூட வாங்க விடாம சுந்தர் சி-யைத் தோற்கடிக்கணும் 👍 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
4
35
77
3.4K
Radha Kumar nag-retweet
Chocks
Chocks@chockshandle·
மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வு PTR ஒரு நண்பருடன் உரையாடியபோது, மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வு PTR என்பதற்கான நறுக்கென்ற விளக்கத்தை அவர் கூறினார். அந்த விவாதத்தை இங்கே சுருக்கமாக பதிவு செய்கிறேன். மதுரை மத்திய தொகுதி வாக்காளர்களுக்கு முன்னால் இன்று இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. முதலாவது தேர்வு 🔽 "நிர்வாகம், பொருளாதாரம், தொழில்நுட்பம்" ரீதியாக ஆழ்ந்த அறிவு பெற்ற, உலகின் முன்னணி நிறுவனங்களே வியந்து பாராட்டும் ஒரு ஆளுமை. 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் அமைச்சராகவும் பணியாற்றியவர். அந்தக் காலங்களில், அவர் தனது கடமைகளை நேர்மையுடனும் திறமையுடனும் ஆற்றியதால், அவருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டும் மதுரை மக்களின் மனதிலோ, ஏன், அவர்களின் கனவிலோ கூட எழுந்ததில்லை. தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை வேண்டும் என்று பாஜக முயற்சித்த சமயத்தில், தேசிய ஊடகங்களில் திமுகவின் முகமாகத் திகழ்ந்த அவர், பல்வேறு ஊடக விவாதங்களில் பங்கேற்று பாஜகவால் முன்வைக்கப்பட்ட வாதங்களை திறம்பட எதிர்கொண்டு முறியடித்து, அதன் மூலம் பாஜகவின் முகமூடியை அம்பலப்படுத்தியவர். தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தபோது மற்றும் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்று மக்கள் நலத்திட்டங்களை பாஜக குறைத்து மதிப்பிட்டபோது, அவை இலவசங்கள் அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முதலீடுகள் என்று அனைத்து தேசிய விவாதங்களிலும் பேசி தமிழ்நாட்டின் மாண்பை காத்தவர். சனாதன கருத்துக்களை திணித்து, ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களை பிரிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து திறம்பட குரல் கொடுப்பவர். அவர் மதுரை மத்திய தொகுதி மக்களின் சொத்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சொத்து. தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும், தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாஜக தீங்கு செய்ய நினைக்கும் போதெல்லாம் அரணாக நின்று காத்தவர். அவர் தான் மண்ணின் மைந்தர் PTR! இரண்டாவது தேர்வு 🔽 அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்; ஆயினும், நிர்வாகம் மற்றும் கலை ஆகிய இரு தளங்களிலும் திரைத்துறையை மேம்படுத்துவதை விட, பணம் ஈட்டுதல் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதிலேயே தனது முதன்மையான கவனத்தைச் செலுத்தி வந்துள்ளார். இதன் விளைவாக, தனது திரைப்படங்களின் வாயிலாக தமிழ் சமூகத்திற்குப் பயனுள்ள எந்தக் கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை. மேலும், இப்போது திடீரென அரசியலுக்கு வந்திருக்கும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறை பல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் எங்கும் தலைகாட்டவில்லை. திருட்டு விசிடி பிரச்சனை பெரிதாக இருந்த காலத்தில் பல கலைஞர்கள் கருத்து தெரிவித்திருந்தபோதும், அதைப் பற்றி இவர் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அதன் பின்னர் திரைத்துறையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன; அவற்றைப் பற்றியும் இவர் எந்தக் கவலையும் வெளிப்படுத்தவில்லை, கருத்தும் தெரிவிக்கவில்லை. அவ்வளவு ஏன்? அவரது மனைவி கற்பு குறித்து தவறாகப் பேசியபோது, மாதர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அப்போது கூட இவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எப்போதும் தன்னுடைய பிம்பம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக பதுங்கிக் கொள்பவர். எல்லோருக்கும் நல்லவனாக, எந்த கருத்தும் சொல்ல மாட்டேன் என்று ஒளிந்திருப்பவர் தான் இவர். தன்னைச் சார்ந்தவர்களுக்கு அல்லது தன் துறைக்கு பிரச்சனை எழும் போது, தனது கருத்தை பட்டவர்த்தனமாக சொல்ல முன்வர வேண்டும். ஆனால் அத்தகைய எந்த பண்பும் இவரிடம் இல்லை. தமிழ்நாட்டின் DNA-வாக செயல்படும் மதுரையில், அனைவரும் ஒருவரையொருவர் அரவணைத்து, தாயாகவும் பிள்ளையாகவும், அண்ணனாகவும் தம்பியாகவும் வாழும் பண்பு உள்ளது. ஆனால் மதுரையில் மத நல்லிணக்கம் நிலவக் கூடாது என்று பாஜக துடிக்கிறது. அதற்கு ஏதுவாக இவர் ஆர்எஸ்எஸ்–பாஜகவின் முகமூடியாகவே இணங்கிச் செயல்படக்கூடியவர். மதுரைக்கு தொடர்பில்லாத, எந்தவித அரசியல் தெளிவில்லாத, மக்களுக்காக இதுவரை எந்தக் குரலும் எழுப்பாத, பாஜக சொன்னால் எதையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவே இவர் இருப்பார். அவர் தான் சினிமா சங்கி Sundar C! முடிவாக 🔽 நிர்வாகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், மக்கள் நலத்திட்டங்கள், அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டு, எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், தமிழ்நாட்டின் மாண்பை காத்து வரும் PTR அவர்களே மதுரை மத்திய தொகுதி மக்களின் தேர்வாக இருக்கும், இருக்கிறது, இருக்க வேண்டும். #VoteForDMK #VoteForPTR 🖤❤️
Chocks tweet media
தமிழ்
35
99
277
10.5K
Radha Kumar
Radha Kumar@Radhakumar5·
நேற்று தலைவர் M. K. Stalin அவர்கள் Delimitation பத்தி ஒன்றிய அரசு எதிர்த்து வீடியோ வெளியிட்டு இந்த மசோதாவை எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தது தாங்க முடியாமல் எதிர் கட்சிகள் ஒரு Fake card முதன் முதலில் அன்புமணி இராமதாஸ் அதை வைத்து பதிவு போட ஹக்கா முதற்கொண்டு அடியாட்கள் அதை எடுத்து பரப்ப, விறு விறுவென்று விகடன் வரை உண்மை எதுவென்று அறியாமல் களத்தில் இறங்க தன்னுடைய தொண்டர்கள் இறந்த நிகழ்ச்சிக்கு கூட அறிக்கை விடாத தவெக தலைவர் வரை இந்த நிகழ்ச்சி குறித்து திமுகவை குறை கூறி மொத்த பொய்களையும் பரப்பி விட்டு மெதுவாக இந்த செய்தி உண்மை இல்லை, இவ்வாறு கட்சியை தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டது தவறு தான் என்று இந்த செய்தியை பாலிமர் வெளியிட்ட பிறகு இந்த பதிவின் ஆரம்பத்தில் இருந்தே திமுக வை திட்டிட்டு இருந்தவர்கள் இதை வெளியிட்டு மன்னிப்பு கேட்பார்களா? பொய் செய்தியை வைத்து கழகத்தையோ கழக செய்திகளையோ முடக்க முடியாது. இந்த செய்தி உண்மை என்றால் டோக்கன் அச்சடித்து கொடுத்தவர்களை கண்டித்து தலைவர் ஐடியில் இருந்து முதல் பதிவு வந்து இருக்கும். அறிவாலயம் மற்றும் தலைவர் ஐடியில் எந்த பதிவும் இல்லையெனில் அது பொய் செய்தி என்றே உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்கள் அறிந்து கொள்ளவும். இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலம் #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Radha Kumar tweet media
தமிழ்
0
0
0
29
Radha Kumar nag-retweet
Dr P Thiaga Rajan (PTR)
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 77 க்கு உட்பட்ட பகுதிகளில், கழக நாடாளுமன்ற உறுப்பினரும் - கல்வியாளர் அணி செயலாளருமான திருமிகு.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, மதுரை மாநகராட்சியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் பயனாளியான தம்பி விஷ்வா அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு முத்துப்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில், அப்போது ஏழாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த தம்பி விஷ்வாவை சந்தித்த தருணம்தான், மதுரை மாநகராட்சியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து, CSR பங்களிப்புடன் இந்தத் திட்டம் மதுரை மாநகராட்சியின் 28 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சுமார் 1350 மாணவர்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் எடை குறைவாக இருந்த தம்பி விஷ்வாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஊட்டச்சத்து உணவை வழங்கி, அவனது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டு மகிழ்ந்து சைக்கிள் பரிசளித்தேன். இந்த அனுபவமே, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை ஆய்வு செய்து, காலை உணவு திட்டத்தை ஊட்டச்சத்து மிக்கதாக்கும் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. நேற்று விஷ்வாவை மீண்டும் கண்டது, எனது பரப்புரை பயணத்தை ஒரு நெகிழ்ச்சியான தருணமாக மாற்றியது. #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK தரவுகள்(Data PDF): drive.google.com/file/d/1V7eoew…
தமிழ்
11
96
363
11.4K
Radha Kumar nag-retweet
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
சர்வதேச பூங்கா @ thousand lights
2
97
283
5.3K
Radha Kumar nag-retweet
Dr P Thiaga Rajan (PTR)
மதுரை மத்திய தொகுதி வார்டு 55, பேச்சியம்மன் படித்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை | 13/04/2026 “சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 6 சமூக நீதிக்கு அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தி, அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட மகத்தான பணிகளை மேற்கொண்ட நீதிக் கட்சி எனும் மாபெரும் இயக்கத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுயநலத்திற்காக அரசியல் செய்யும் சாதியவாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது! #voteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #naanmaduraikaran_neeyaar
தமிழ்
20
144
383
4.9K
Radha Kumar nag-retweet
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
"எத்தனையோ வருஷங்கள் ஆட்சி. எத்தனையோ ஆட்சிகள நான் பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு ஆட்சிய பார்த்ததே இல்ல. எனக்கு உயிர் பிச்சை கொடுத்து காப்பாத்தீட்டாங்கள்ள. சரி வாழ்ந்து பாத்துறலாம்னு ஒரு நம்பிக்கை" என்று அந்தப் பெரியவர் சொல்லும் போது மனம் என்னமோ செய்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக தனக்கு இதயநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் அரவணைப்பில், இன்று தன் இணையரோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார் அந்த அப்பா. அவருக்குப் பிள்ளைகள் இல்லை. வீட்டில் அந்த சைக்கிள், கட்டில் தவிர எதுவும் இல்லை. ஆனால் வாழ்ந்து பாத்துடலாம் என்ற நம்பிக்கையைத் தந்து அவருக்கு மகனாக நிற்கிறார் @mkstalin. #மக்களைத்_தேடி_மருத்துவம் #திராவிடமாடல்
தமிழ்
4
232
489
8.1K
Radha Kumar nag-retweet
DMK
DMK@arivalayam·
மாங்கனி நகரத்தை வியக்கத்தக்க வகையில் மாற்றிய தி.மு.கழக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
4
68
93
1.6K
Radha Kumar nag-retweet
டீ
டீ@teakkadai1·
தொகுதி மறு வரையறை வந்துவிட்டால் அதில் நமக்கு தேவையான அளவிற்கு/ தென் மாநிலங்களுக்கு தேவையான அளவிற்கு தொகுதிகளை அதிகப்படுத்தாவிட்டால் இந்தியாவில் நாம் இரண்டாம் தர குடிமகன் ஆகிவிடுவோம். வடமாநிலங்களுக்கு மட்டுமே எல்லாவிதமான உரிமைகளும் சலுகைகளும் இருக்கும். தமிழ்நாடு மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். நாம் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில் ஏறிச் சென்று பிழைக்கும் நிலை கூட ஏற்பட்டு விடலாம். அப்போதும் அங்கே அவர்கள் நம்மை இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்துவார்கள். நான் பலமுறை எழுதி இருக்கிறேன். 30 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழர்களை வட மாநிலத்தவர்கள் எப்படி மரியாதை குறைவாக நடத்துவார்கள் உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் என்றெல்லாம். நாம் நன்றாக படித்து பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு மரியாதை வரலாயிற்று. தற்போது அரசியல் ரீதியாக பயனற்ற மாநிலம் ஆகும் பொழுது மீண்டும் இரண்டாம் தர குடிமக்கள் ஆகிவிடுவோம்.
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)@Jasmine01737661

ஓட்டு மொத்த இந்தியாவும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களால் ஆளப்படும்! அதாவது மொத்த லோக் சபா தொகுதிகள் 850! இதில் பாதி 425 ! 143+52+50+79+76+43=443 இந்த ஆறு மாநிலங்களும் சேர்ந்து, இனி மொத்த இந்தியாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்! இந்த 6 மாநிலங்களை ஒன்றிய அரசு நன்றாகப் பார்த்துக் கொண்டால் போதும்! மீது மாநிலங்கள் பிச்சைதான் எடுக்கணும்! இதில் இன்னும் என்ன கொடுமை என்றால், தென் இந்தியாவின் ஆந்திரா+தெலுங்கானா+கர்நாடகா+கேரளா+தமிழ்நாடு+ புதுச்சேரி மொத்தம் 54+41+49+20+1=165 இந்தியாவின் மொத்த 850 தொகுதியில் தென் இந்தியாவிற்கு வெறும், ஜஸ்ட் 165 தொகுதி மட்டும்தான்! தென் இந்தியா இனி வரி கட்டுவதற்கும், இந்தி படிப்பதற்கும், வட இந்தியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமே! இப்பவே தென் இந்தியாவை வடக்கே காறித் துப்புறான்! இனிமேல் நம் மேல் சாணியை கரைச்சு ஊத்துவான்! சட்டம் போட்டு நமக்குள்ள வேலை வாய்ப்புகள், மருத்துவ, பொறியியல், வேளாண்மை, கால்நடை கல்லூரியின் இடங்கள் வடக்கனுக்கு தாரை வார்க்கப்படும்! சோசியல் சர்வீசுக் கேம்பு, அங்கே சோத்துக்கே வழியில்லே! நமக்கு என்ன இருக்கு! இருக்கே தண்ணியோட செம்பு!

தமிழ்
7
99
161
7.8K
Radha Kumar nag-retweet
Revanth Reddy
Revanth Reddy@revanth_anumula·
Dear Thiru @mkstalin You were amongst the first of leaders to foresee this danger and organise leaders of South India at a conclave in #Chennai in March last year. We have to unite against this onslaught on the political rights and protect our voice in Delhi. Let us take inspiration of Babasaheb Dr B R Ambedkar on this most special days to “Educate, Agitate, and Organise”. Together… let us march. #LokSabhaDelimitation
Revanth Reddy tweet mediaRevanth Reddy tweet mediaRevanth Reddy tweet media
English
176
4.1K
12.2K
527K
Radha Kumar nag-retweet
மரங்கொத்தி Woody
ஒரே இலக்கு! நியாயமான பிரதிநிதித்துவமே நமது உரிமை! 💪 நமது போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; அது பாரபட்சமற்ற, நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கானது. 💪 சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வோம். 💪 தமிழகத்தின் குரல் டெல்லியில் ஓங்கி ஒலிக்கவும், நம் மாநில உரிமைகளை நிலைநாட்டவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம். #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன் #TNwillFightTNwillWin
மரங்கொத்தி Woody tweet media
தமிழ்
1
4
5
141
Radha Kumar nag-retweet
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அரசியல் வாழ்வின் ஆகப்பெரும் அர்த்தம் புரியும் தருணங்கள் இவை! அன்று உடைந்த சுவர்களுக்குள் ஒடுங்கிக் கிடந்த கே.வேலாயுதபுரம், சகோதரி ராணியின் குடும்பம், இன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் புரட்சித் திட்டமான 'கலைஞர் கனவு இல்லம்' மூலம் உருவான சொந்த வீட்டில் கம்பீரமாகக் குடியிருக்கிறது. இது வெறும் வீடு அல்ல; ஒரு தாய்க்கு நாம் கொடுத்த வாக்குறுதியின் அடையாளம்!
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
21
303
799
14.5K
Radha Kumar nag-retweet
Dr P Thiaga Rajan (PTR)
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai·
Is he really that hate-filled that he loses rationality? Who "introduced" this bill - calling the Parliament to session w/ 2 days notice - in the middle of TN & WB elections? If we dont react now, then when?🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ This is an existential question for our state. So we must ask every NDA Party & Candidate every day during this election : Where do you stand on this Bill? With Tamil Nadu, or Delhi?
Sumanth Raman@sumanthraman

With the electoral ground not looking good, time to refocus on making Delhi the villain.

English
213
1.4K
4.5K
254.8K
Radha Kumar nag-retweet
S.K.Vijayan 🖤❤️
One of the Best government Hospital in South India 💪🔥🔥🔥🔥🔥🔥🔥 சிறந்த கட்டமைப்பும்,சிறந்த மருத்துவமும் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமையில் கிடைக்கிறது🔥🔥🔥 இந்த 5 வருட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு துறை செய்த சாதனைகள் எண்ணிலடங்காது.🫰🔥 #VoteForRisingSun #VoteForStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் 🌄🖤♥️
தமிழ்
0
72
97
17.6K